search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆறுமுகநேரியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்-280 பேர் பயன் பெற்றனர்
    X

    ஆறுமுகநேரி பேரூராட்சித் துணைத் தலைவர் கல்யாணசுந்தரம் முகாமை தொடங்கி வைத்தபோது எடுத்தபடம்.

    ஆறுமுகநேரியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்-280 பேர் பயன் பெற்றனர்

    • மருத்துவ முகாமிற்கு ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார்.
    • மருத்துவ முகாமில் 280 பேர் சிகிச்சை பெற்று பயன் அடைந்தனர்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவமுகாம் ஆறுமுகநேரி கா.ஆ. மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் கல்யாணசுந்தரம் முகாமை தொடங்கி வைத்தார். காயாமொழி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பாசி, ஆறுமுகநேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சீனிவாசன் மற்றும் டாக்டர்கள் அம்பிகாபதி, அகல்யா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர்கள் மகராஜன், ஜெய்சங்கர், ஆனந்த ராஜ் உள்ளிட்ட குழுவினர் சிகிச்சைக்கான நடவடிக்கை களை மேற்கொண்டனர்.

    தூத்துக்குடி சுகாதார பணிகளின் துணை இயக்குனர் டாக்டர் பொற்செல்வன், நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன் ஆகியோர் முகாமை பார்வையிட்டனர்.

    இதன் மூலம் 280 பேர் சிகிச்சை பெற்று பயன் அடைந்தனர். இவர்களில் 15 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையின் மேல் சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். ரத்த சோகை, வைட்டமின் குறைபாடுகள், கண் சிகிச்சை, பல் சிகிச்சை மற்றும் நீரிழிவு, இரப்பை, குடல் நோய், சிறுநீரக பரிசோதனை ஆகியவை நடந்தன. இலவச மருந்துகளும் வழங்கப்பட்டன.

    Next Story
    ×