search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை"

    • போதை பழக்கங்களில் இருந்து மாணவர்கள் மீண்டு வர விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
    • பள்ளி பருவத்தில் இருந்தே மாணவர்கள் செல்போன் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி நிகழ்ச்சி நாகை மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் நடைபெற்றது.

    கலெக்டர் அருண்தம்பு ராஜ் தலைமையில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் வட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியில் விபத்துக ளால் ஏற்படும் உயிரிழப்புகளை எவ்வாறு தவிர்ப்பது, விபத்து அவசர காலங்களில் நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகள் என்ன போன்ற பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து உலக விபத்து காய தினம் குறித்து விழிப்புணர்வு உறுதி மொழியை கலெக்டர் முன்னிலையில் ஆசிரியர்கள் ஏற்றுக்கொண்டனர்.

    நிகழ்ச்சியில் பேசிய கலெக்டர் அருண் தம்பு ராஜ், போதை பழக்கங்களில் இருந்து பள்ளி மாணவர்கள் மீண்டு வர ஆசிரியர்கள் விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும், பள்ளி பருவத்தில் இருந்தே மாணவர்கள் செல்போன் பயன் பாட்டை தவிர்க்க வேண்டும் என ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும் என்று கூறினார்.

    • கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை.
    • கவியரசன் என்பவரை கைது செய்து 200 கிராம் கஞ்சா பறிமுதல்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    அதன்பேரில், மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று காலை மன்னார்குடி கீழப்பாலம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்குள்ள மீனாட்சியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்ற மன்னார்குடியை சேர்ந்த கவியரசன் (வயது 20) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    • மாணவன் ஒருவரின் தந்தை பேசுவது போன்ற வாட்ஸ் அப் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • இந்த பள்ளியில் படிக்கிற 6-ம் வகுப்பு மாணவன் கூட கஞ்சா அடிக்கிறான்.

    குத்தாலம்:

    தமிழகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இருந்தபோதிலும் சில மாவட்டங்களில் கஞ்சா விற்பனை அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் கஞ்சா பழக்கத்துக்கு மாணவர்கள் சிலரும் அடிமையாகும் அதிர்ச்சி சம்பவமும் அரங்கேறி வருவது வேதனையளிக்கிறது. தற்போது மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வெளியே கஞ்சா அடிக்கும் சம்பவம்சமூக ஆர்வலர்களை பெரும் வேதனைக்கு ஆளாக்கி உள்ளது.

    இது பற்றிய விவரம் வருமாறு:-

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1200 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளி மாணவர்கள் பலர் கஞ்சா பயன்படுத்துவதாக சமீப காலமாக அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்நிலையில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் மாணவன் ஒருவரின் தந்தை பேசுவது போன்ற வாட்ஸ் அப் வீடியோ தற்போது வெளியாகி சக பெற்றோரின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் என் மகனை, சக மாணவர்கள் கஞ்சா சாப்பிட்டு விட்டு தாக்கியுள்ளனர். இந்த பள்ளியில் படிக்கிற 6-ம் வகுப்பு மாணவன் கூட கஞ்சா அடிக்கிறான். 3 ஆண்டுகளாக இது நடக்கிறது. பள்ளிக்கு வெளியே ஒதுக்கபுறமான ஒரு இடத்தில் இந்த செயல்கள் அரங்கேறி வருகிறது என்று மாணவனின் தந்தை பேசுவது போலவும், அதற்கு தலைமை ஆசிரியர், போலீசில் பல தடவை புகார் கூறினோம். அவர்கள் 3 முறை மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்துள்ளனர். பள்ளிக்கூடத்துக்கு வெளியில் சென்று கஞ்சா குடிப்பவர்களை எப்படி கட்டுப்படுத்த முடியும் என்று பதில் அளிப்பதாக அந்த வீடியோ காட்சிகள் அமைந்துள்ளன.

    இந்த வீடியோ மூலம் அந்த பள்ளியில் மாணவர்கள் பலர் கஞ்சா பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டதாகவே அமைந்துள்ளது. இந்த வீடியோ தற்போது வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது.

    இது குறித்து போலீசார் கூறும்போது:-

    மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து வாங்கி வந்து கஞ்சாவை பயன்படுத்துகிறார்கள் என்கின்றனர். இருந்தாலும் வெளிமாவட்டங்களில் இருந்து கஞ்சா கடத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வருவதை தடுக்க அதிரடி சோதனை பணியில் ஈடுபட வேண்டும். அப்படி வெளிமாவட்டங்களில் இருந்து கஞ்சா கொண்டு வருபவர்கள் மீது கடும் நடடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தை கடந்த பிரச்சனை என்பதால் இவ்விவகாரத்தில் திருச்சி மண்டல ஐ.ஜி, தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஆகியோர் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    • 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவ டிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கன்னியாகுமரி, நாகர் கோவில், தக்கலை, குளச்சல் சப்- டிவிஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மேற் பார்வையில் 7 தனிப்படை கள் அமைக்கப்பட்டு கண் காணிப்பு பணி மேற்கொள் ளப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இரணியல் அருகே நெட்டாங்கோடு பகுதியில் வீடு ஒன்றில் போதை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று இரவு போலீசார் அந்த வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தி னார்கள்.

    அப்போது வீட்டில் ஒரு கிலோ கஞ்சா மற்றும் 2 கிலோ போதைப் பொருட் கள் இருந்தது கண்டுபிடிக் கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள் விலை உயர்ந்த போதை பொருட்கள் என்று கூறப்படுகிறது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அந்த போதை பொருளை பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். அங்கிருந்த 3 பேரும் சிக்கினார்கள். பிடிபட்ட மூன்று பேரி டமும் போலீசார் விசா ரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் அவர்கள் நரைன் (வயது 34), விமல் (21), அசாருதீன் (29) என்பது தெரிய வந்தது. இவர்களை இரணியல் போலீஸ் நிலை யத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற் கொண்ட னர். கஞ்சா மற்றும் போதை பொருட்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணையில் வெளி மாநிலங்களில் இருந்து வாங்கி வந்து இங்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தெரிவித்தனர்.இந்த கஞ்சா மற்றும் போதை பொருட்கள் சப்ளையில் வேறு நபர்களுக்கு தொடர்பு உண்டா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கஞ்சா மற்றும் 2 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது.

    வடசேரி பகுதியில் போலீசார் ரோந்து பணி யில் ஈடுபட்டபோது சந்தேகப்படும் படியாக நின்ற மூன்று நபர்களை பிடித்து விசாரித்தனர்.அப்போது அவர்களிடம் 450 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவை பள்ளி மாண வர்களுக்கு சப்ளை செய்ய வைத்திருந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து வடக்கு சூரங்குடியைச் சேர்ந்த சிவன், வாழை யத்துவயலை சேர்ந்த ஆதிஸ் (20) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் தெற்குச் சூரங்கு டியைச் சேர்ந்த அரவிந்த் மீது வழக்குப்பதிவு செய்து வடசேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • செந்தில்நாதன் என்பவர் நேற்றிரவு மது போதையில் அப்பகுதியில் சாலையின் நடுவே நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • அவ்வழியாக வந்த தனியார் மினி பஸ்சையும் நிறுத்தக் கூறி கண்ணாடியை உடைத்து தகராறு செய்துள்ளார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கோவில் பத்து பகுதியை சேர்ந்தவர் செந்தில்நாதன் (வயது 24).

    இவர் நேற்று இரவு மது போதையில் அப்பகுதியில் சாலையின் நடுவே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் வந்த நகர அரசு பஸ்சை நிறுத்தி வைக்குமாறு கூறினார்.

    இதனை அடுத்து பஸ்சை ஒட்டி வந்த பெரம்பூர் தியாகராஜன் (59) பஸ்சை சிறிது நேரம் நிறுத்தினார்.

    பின்னர் பஸ் எடுக்க முயன்ற போது செந்தில்நாதன் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    அப்போது அவர் அரசு பஸ் முகப்பு விளக்கு உடைத்து டிரைவர் தியாகராஜனை காயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    இதில் காயமடைந்த தியாகராஜன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

    அப்போது அவ்வழியாக வந்த தனியார் மினி பஸ்சையும் நிறுத்தக் கூறி கண்ணாடியை செந்தில்நாதன் உடைத்து தகராறு செய்துள்ளார்.

    இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவலின் பெயரில் சீர்காழியின் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செந்தில்நாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • குலசேகரத்தில் 1¼ கிலோ கஞ்சா பறிமுதல்
    • தப்பியோடிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே அனந்தமங்கலம் பகுதியில் பள்ளி கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை சிலர் விற்பதாக புதுக்கடை போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை யடுத்து புதுக்கடை சப்-இன்ஸ்பெக் டர் சேகர் தலைமையில் போலீசார் ரகசியமாக கண்காணித்தனர்.

    அப்போது சந்தேகத் துக்கிடமாக ஒரு மோட்டார் சைக்கிள் அருகில் 5 வாலிபர்கள் நின்றனர். அவர்களை சுற்றி வளைத்தபோது, போலீசை கண்டதும் 3 வாலிபர்கள் தப்பியோடினார்கள். பிடி பட்ட 2 பேர் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.

    விசாரணையில் பிடிபட்டவர்கள் புதுக்கடை அருகே மூன்று மாவு பகுதியைச் சேர்ந்த அகின் (வயது 23), பைங்குளம் பகுதி பிலாக்க விளையைச் சேர்ந்த அஜின் (28) என தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். தொடர் விசாரணையில் தப்பியோடியவர்கள் ராஜா (22), பிரதீப் (22), ஜாண் (21) என தெரிய வந்தது.

    மேலும் பிடிபட்டவர்களி டம் இருந்து 120 கிராம் கஞ்சா, மேலும் நான்கு போதை மாத்திரைகள், கஞ்சா புகைக்க பயன்ப டுத்தும் குழல், 3 செல்போன்கள், மோட்டார் சைக்கிள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. தப்பியோடிய 3 பேரை போலீசார் தேடி வருகின்ற னர்.

    குலசேகரம் சந்தை பகுதியில் நேற்று மாலை தனிப்படை போலீசார் குலசேகரம் போலீசாருடன் இணைந்து சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது சந்தேகம் படும்படி ஒரு வாலிபர் கையில் பையை வைத்துக்கொண்டு பஸ் ஏறுவதற்க்கு காத்து இருந் தார்.

    போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தபோது பையில் 1 கிலோ 300 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது உடனே அந்த வாலிபரை குலசேகரம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தபோது குலசேகரம் வெண்டலிகோடு, மெய்தி ருத்திவிளை, பகுதியை சேர்ந்த மோனிஷ் (26) என்பதும் பட்டதாரி வாலிபர் என்றும் தெரியவந்தது.

    கேரளா எல்லையான ஆறுகாணி பகுதியில் உள்ள ஒரு வாலிபரிடம் இருந்து கஞ்சா வாங்கி வந்து குலசேகரம் மார்த்தாண்டம் பகுதியில் விற்பனை செய்து வந்ததாகவும் விசாரனையில் தெரிய வந்தது. இவரிடம் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள்.

    குளச்சல் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தில்குமார் தலைமையிலான போலீ சார் நேற்று குளச்சல் பகுதியில் தீவிர ரோந்து சென்றனர். லட்சுமிபுரம் தனியார் கல்லூரி அருகில் செல்லும்போது அங்கு 2 இளைஞர்கள் பைக்கை நிறுத்தி விட்டு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தனர்.

    அவர்களை பிடித்து விசாரணை நடத்தியபோது ஒருவர் பள்ளம் அன்னை நகரை சேர்ந்த காட்சன் (18) என்பதும் தெரிய வந்தது. மற்றொருவர் வாணியக்குடியை சேர்ந்த மீன்பிடித் தொழிலாளி ஆரோக்கிய தினேஷ் (22) என்பதும், இவர்கள் இருவரும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்க முயற்சித்ததும் விசார ணையில் தெரிந்தது.

    உடனே போலீசார் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்த 150 கிராம் கஞ்சா பொட்ட லத்தை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்த னர்.

    • நேற்றிரவு சுமார் ஒரு மணிநேரம் குளச்சல் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு
    • மகனின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோரும் அவரை கட்டுப்படுத்த முயன்றனர்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அண்ணாசிலை சந்திப்பு அருகில் மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று மாலை மது அருந்திய 2 வாலிபர்களிடையே தகராறு ஏற்பட்டு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வெளியே வந்த அவர்களிடையே கை கலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஒரு வாலிபரின் சட்டை கிழிந்தது. இதனால் அவர் குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார்.

    அவருக்கு பின்னால் கை கலப்பு செய்த வாலிபரும் சென்றார். இருவரும் அதிக போதையில் இருந்ததால்மறுநாள் காலை வருமாறு போலீசார் கூறினார். சட்டை கிழிந்த வாலிபர் போலீசார் சொல்லுக்கு கட்டுப்பட்டு திரும்பி சென்று விட்டார். உடன் வந்த வாலிபர் காவல் நிலையத்தில் அமர்ந்து போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் ஓரிடத்தில் நிற்காமல் போலீஸ் நிலையத்திற்குள்ளேயே ரகளையில் ஈடுப்பட்டார்.

    அவரை கட்டுப்படுத்திய போலீசாரையும் வாலிபர் தாக்கியதாக கூறப்படுகிறது. போலீசாரின் பிடியில் கட்டுப்படாத அந்த வாலிபர் தொடர்ந்து அங்குமிங்கும் திமிறி கொண்டிருந்தார். விசாரணையில் அந்த வாலிபர் கருங்கல் அருகே மிடாலம் பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்தது. இதற்கிடையே தகவலறிந்த வாலிபரின் பெற்றோர் குளச்சல் போலீஸ் நிலையத்திற்கு விரைந்து வந்தனர். மகனின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோரும் அவரை கட்டுப்படுத்த முயன்றனர்.ஆனால் அந்த வாலிபர் அவரது தந்தையையும் அவதூறாக பேசினார்.

    இதனால் செய்வதறியாத தந்தை வாலிபரை கட்டுப்படுத்தி வீட்டிற்கு அழைத்து செல்ல முயன்றார். இதனால் தந்தை - மகனிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஒரு வழியாக வாலிபரின் நண்பர்களின் உதவியால் பெற்றோர் வாலிபரை ஆட்டோவில் ஏற்றி வீட்டிற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தினால் நேற்றிரவு சுமார் ஒரு மணிநேரம் குளச்சல் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • திடீரென ஒருவருக்கொருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.
    • புனிதனை கடுமையாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே கங்கனபுத்தூர் கிராமத்தில் உள்ள பெரிய தெருவில் வசித்து வருபவர் புனிதன் (வயது35).

    கூலி தொழிலாளி. திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

    புனிதன் நேற்று பணிகளை முடித்துவிட்டு இரவு சக நண்பர்களுடன் தெருவில் மது அருந்தி உள்ளார்.

    அப்போது திடீரென ஒருவருக்கொருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.

    அப்போது அவரின் நண்பர்களான மது போதையில் இருந்த தர்மேந்திரன், ரஞ்சித், பிரசாத் ஆகியோர் புனிதனை கடுமையாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே கீழே மயங்கி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது.

    தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை எஸ்.பி. நிஷா மற்றும் டி.எஸ்.பி. வசந்தராஜ் விசாரணை மேற்கொண்டனர்.

    இதையடுத்து புனிதனின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் புனிதனின் நண்பர்களான துரை மகன் தர்மேந்திரன் (27), பாண்டியன் மகன் ரஞ்சித் (25) மற்றும் பிரசாத் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    புனிதனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அதிராம்பட்டினம் ரெயில்வே கேட்டில் இருந்து சந்தேகத்திற்கு இடமாக ஒரு வாகனம் வருவதைக் கண்டுவாகன த்தை போலீசார்பின்தொடர்ந்து வந்தனர்.
    • போலீசார் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களையும், வாகனத்தையும் பறிமுதல் செய்து 3 பேரையும் பிடித்து வழக்கு பதிவு செய்தனர்.

    மதுக்கூர்:

    சென்னையில் இருந்து கஞ்சா போன்றபோதைப் பொருள் திருத்துறைப்பூண்டிக்கு கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் அதிராம்பட்டினம் நகர போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்பொழுது அதிராம்ப ட்டினம் ரெயில்வே கேட்டில் இருந்து சந்தேகத்திற்கு இடமாக ஒரு வாகனம் வருவதைக் கண்டுவாகன த்தை போலீசார்பின் தொடர்ந்து வந்தனர் அப்போது திடீரென போலீசார்வாக னத்தை மடக்கி சோதனை யிட்டனர்.

    இதில் அதிராம்ப ட்டினம் மேலத் தெரு தமிழ்அன்சாரி (35), கடற்கரை தெரு இன்செத்துல்லா (30), திருத்துறைப்பூண்டி முகமது தாவித் (27) ஆகியோர் கஞ்சா போன்ற போதை பொருட்கள் 3 கிலோ கடத்தி வந்தது தெரிய வந்தது.

    ‌ ‌இதனையடுத்து போலீசார் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களையும், வாகனத்தையும் பறிமுதல் செய்து 3 பேரையும் பிடித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்றைய காலகட்டத்தில் பள்ளி குழந்தைகள் போதை பழக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
    • போதை பொருட்களை சுத்தமாக ஒழிக்கவும், மாணவர்கள் செல்போன்களை தவறாக பயன்படுத்துவதால் ஏற்படும் அவல நிலைமைகளையும் எடுத்துக்கூறி விவரித்தார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விளக்குடி லயன்ஸ் சங்கமும், நம்பிக்கை தொண்டு நிறுவனமும் இணைந்து பள்ளி குழந்தைகளுக்கான போதை பொருள் விழிப்புணர்வு தடுப்பு நிகழ்ச்சியை நடத்தியது. தலைமை ஆசிரியர் முத்துக்குமரன் தலைமை வகித்தார்.

    லயன்ஸ் சங்க தலைவர் செல்வகுமார் மற்றும் நம்பிக்கை தொண்டு நிறுவன இயக்குனர் சவுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருத்துறைப்பூண்டி இன்ஸ்பெக்டர் கழனியப்பன் பேசுகையில், இன்றைய காலகட்டத்தில் பள்ளி குழந்தைகள் போதை பழக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர், இதை தடுத்து நிறுத்தும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்று கூறினார்.

    வழக்கறிஞர் அரசுதாயுமாணவன் பேசுகையில் போதை பொருட்களை சுத்தமாக ஒழிக்கவும், மாணவர்கள் மொபைல் தவறாக பயன்படுத்துவதால் ஏற்படும் அவல நிலைமைகளையும், அதனால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் பிறகு அவர்கள் பெற்றோருடன் காவல் நிலையத்திற்கும், நீதிமன்றத்திற்கும் தொடர்ந்து அலையும் நிலைமையும், சட்டத்தில் மாட்டிக்கொண்டு குடும்பத்தினருடன் வாழ்நாள் முழுவதும் அனுபவிப்பதையும் எடுத்துக் கூறி விவரித்தார்.

    சமூக நலத்துறை ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி சுமிதா பேசுகையில் மாணவர்களுக்கான ஹெல்ப் லைன் நம்பர் 1098 மற்றும் 181 மற்றும் 1447 உதவும் விதம் ஆகியவற்றை எடுத்துக் கூறினார்.

    வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கவுரி பேசுகையில் போதை பழக்கத்தினால் ஏற்படும் உடல்நல, மனநல குறைவு குடும்பத்தின் பாதிப்புகளை கூறினார்.

    நம்பிக்கை மனநல காப்பக திட்ட மேலாளர் விஜயா பேசுகையில் மாணவர்கள் பாதிக்கப்படுகையில் அவர்களின் பெற்றோர்கள் மற்றும் சகோதர சகோதரிகளும் சேர்ந்து பாதிக்கப்படுகி்றார்கள்.

    இதற்கு ஒரே தீர்வு நமது குடும்பத்தில் போதைப் பொருளுக்கு யாருமே அடிமையாகாமல் பார்த்துக் கொள்வது தான் என்றார்.

    தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க பொருளாளர் துரை, ஒருங்கிணைந்த சேவை மைய மூத்த ஆற்றுப்படுத்துனர் மெர்லின், குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் கமலா, வழக்கறிஞர் இன்குலாப், ஆசிரிய ஆசிரியைகள், மனநல காப்பக பணியாளர்கள் சரவணன், சுபா, கௌசல்யா, ஆர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர் பள்ளி மாணவிகள் அனைவரும் நாங்கள் அனைவரும் இதனை கடைப்பிடிப்போம்.

    எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் கண்டிப்பாக எடுத்துச் சொல்லுவோம் என்று கூறினர்.

    • டி.எஸ்.பி. ராஜா தொடங்கி வைத்தார்
    • போலீசார் ஒலி பெருக்கி மூலம் போதைக்கு எதிரான கோஷங்களை வலியுறுத்தி பிரசாரம்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி போலீஸ் உபகோட்டம் சார்பில் போதை இல்லாத மாவட்ட மாக குமரி மாவட்டத்தை மாற்றுவோம் என்பதை வலியுறுத்தி போதைக்கு எதிராக போலீசாரின் இரு சக்கர வாகன பேரணி கன்னியாகுமரியில் நடை பெற்றது.

    கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு அருகில் உள்ள அண்ணா சிலை முன்பு இருந்து போதைக்கு எதிரான இந்த பேரணி புறப்பட்டது.

    இந்த பேரணியை கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து அங்குஇருந்து புறப்பட்ட இந்த பேரணி கன்னியா குமரி போலீஸ் நிலைய சந்திப்பு, சர்ச் ரோடு சந்திப்பு, ரெயில் நிலையம் சந்திப்பு, விவேகானந்தபுரம் சந்திப்பு, சுவாமிநாதபுரம் ஒற்றைப்புளிசந்திப்பு, பழத்தோட்டம் சந்திப்பு, பரமார்த்த லிங்கபுரம்,

    மகாதானபுரம் நான்கு வழி சாலை ரவுண்டானா சந்திப்பு, பஞ்சலிங்கபுரம், மாதவபுரம் சந்திப்பு, ஒற்றையால்விளை, சின்ன முட்டம், விவேகா னந்தபுரம் வழியாக கன்னியாகுமரி காந்தி மண்டபத்தை சென்று அடைந்தது. இந்த பேரணியில் கன்னியாகுமரி போலீஸ் உப கோட்டத்துக்கு உட்பட்ட கன்னியாகுமரி, அஞ்சுகிராமம், சுசீந்திரம், தென்தாமரைகுளம், ஈத்தாமொழி, ராஜாக்க மங்கலம் ஆகிய6போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசார், கன்னியாகுமரி போக்குவரத்து போலீசார் மற்றும் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தை சேர்ந்த பெண் போலீசார் இருசக்கர வாகனத்தில் கலந்து கொண்டு அணிவகுத்துச் சென்றனர்.

    இவர்களது இருசக்கர வாகனத்தில் போதைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கட்ட ப்பட்டுஇருந்தன. மேலும் இந்த பேரணிக்கு முன்னால் போலீஸ் வாகனத்தில் போலீசார் ஒலி பெருக்கி மூலம் போதைக்கு எதிரான கோஷங்களை வலியுறுத்தி பிரசாரம் செய்தபடி சென்றனர்.

    • குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி. யாக மகாலட்சுமி சமீபத்தில் பொறுப்பேற்றார்.
    • இவர் நேற்று குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி. யாக மகாலட்சுமி சமீபத்தில் பொறுப்பேற்றார். இவர் நேற்று குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குமாரபாளையம் பகுதியில் போதை பொருட்கள் விற்பனையை முழுவதுமாக தடுக்க நடவடிக்கை எடுப்பேன். விசைத்தறி, கைத்தறி கூலி தொழிலாளர்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைப்பேன்.

    பொதுமக்கள் உங்கள் பிரச்சினைகளை, சமூக விரோத செயல்கள் குறித்த தகவல்களை என்னிடம் நேரடியாக புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    ×