search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளச்சல்"

    • வாகன சோதனையில், மது போதையில் வாகனம் ஓட்டி வந்தவர்கள் மீது குடிபோதை வழக்குகள் பதிவு
    • மொத்தம் ரூ.98,500 அபராதமாக விதித்து தீர்ப்பளித்தார்

    குளச்சல் :

    குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின் பேரில் துணை சூப்பிரண்டு தங்கராமன் அறிவுரைப்படி குளச்சல் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் குருநாதன், சிதம்பரதாணு, சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் கள் சுரேஷ்குமார், பாலசெல்வன் உள்ளிட்ட போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    கடந்த 4 நாட்களில் குளச்சல், கருங்கல், இரணியல், தோட்டியோடு பகுதியில் நடத்திய வாகன சோதனையில், மது போதையில் வாகனம் ஓட்டி வந்தவர்கள் மீது குடிபோதை வழக்குகள் பதிவு செய்து, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மது குடித்து வாகனம் ஓட்டிய டிரைவர்கள், இரணியல் குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி அமீர்தீன் முன்பு ஆஜர் செய்யப்பட்டனர். அவர், வழக்குகளை விசாரித்து, குடிபோதையில் வாகனம் ஓட்டிய டிரைவர்களுக்கு அபராதம் விதித்தார். மொத்தம் ரூ.98,500 அபராதமாக விதித்து தீர்ப்பளித்தார்

    • கப்பல் மூலம் தேட முடிவு
    • 16 தொழிலாளர்கள் கடந்த 25-ந்தேதி குளச்சல் மீன் பிடித்துறை முகத்திலிருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    குளச்சல்:

    குமரி மாவட்டம் குளச்சல் துறைமுகத்தெருவை சேர்ந்தவர் பி.ஆரோக்கியம் (வயது 50). இவர் சொந்தமாக விசைப்படகு வைத்து கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இந்த படகில் மாதா காலனியை சேர்ந்த ஆன்றோ (47), அதே பகுதியை சேர்ந்த கே.ஆரோக்கியம் (52), கொட்டில்பாடை சேர்ந்த பயஸ் (54) உள்பட 16 தொழிலாளர்கள் கடந்த 25-ந்தேதி குளச்சல் மீன் பிடித்துறை முகத்திலிருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர். விசைப்படகை பங்குத்தாரர் ஆன்றோ ஓட்டினார். 28-ந்தேதி நள்ளிரவு ஆன்றோ, கே.ஆரோக்கியம், பயஸ் ஆகியோர் சென்ற விசைப்படகு தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடல் பகுதியில் சுமார் 30 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் எதிர்பாராமல் திடீரென கடலில் மூழ்கியது. இதனால் கடலில் உயிருக்கு போராடி கொண்டிருந்த மீனவர்களை அந்த பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற மற்றொரு குளச்சல் படகு அவர்களை மீட்டது.

    இதில் 13 மீனவர்கள் மீட்கப்பட்டனர். இவர்கள் குளச்சல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். மேலும் மாயமான ஆன்றோ, கே.ஆரோக்கியம், பயஸை நீண்ட நேரமாக தேடி வந்த நிலையில், கொட்டில்பாடு மீனவர் பயஸின் உடல் கடந்த 30-ந்தேதி மீட்கப்பட்டது. தொடர்ந்து ஆன்றோ, கே.ஆரோக்கியம் ஆகிய இருவர்களை மீனவர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர். கடந்த 10 நாட்களாக மீனவர் 25 விசைப்படகுகளில் சென்று தேடினர். இவர்களுடன் தூத்துக்குடி கோஸ்டல் கார்டும் மீனவர்களை தேடி வருகின்றனர். ஆனால் 2 மீனவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் கப்பல் மூலம் தேடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக கொச்சி கப்பற்படையிலிருந்து கப்பல் வரவழைக்கப்பட உள்ளது. இதற்கு முன்னோட்டமாக கப்பற்படை அதிகாரிகள் மணப்பாடு கடல் பகுதி விசைப்படகு மூழ்கிய பகுதியில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டனர். கப்பல் தேடும் பணியை தொடங்கும் முன் அங்கு ஆய்வு நடத்தப்படுவது வழக்கம் என மீனவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இன்று அல்லது நாளை கொச்சியிலிருந்து கப்பல் மணப்பாடு கடல் பகுதிக்கு செல்லும் என துறைமுக வட்டாரம் தெரிவித்துள்ளது. 10 நாட்களுக்கு மேலாகியும் கடலில் மாயமான குளச்சல் மீனவர்கள் மீட்கப்படாதது மீனவர்களின் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    • ரவுடி உள்பட 2 பேர் கைது
    • கோவில் அருகே அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளி கணேசன் என்பவர் படுகாயத்துடன் கிடந்தார்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே வெட்டு மடை மேற்கு கடற்கரை சாலையில் இசக்கியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரியாக அதே பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் (வயது 61) என்பவர் இருந்து வருகிறார்.

    இவர் கடந்த சனிக்கிழமை காலை கோவிலுக்கு வந்த போது கோவிலின் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது. குத்துவிளக்கு களும் திருடப்பட்டிருந்தன. கோவில் அருகே அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளி கணேசன் என்பவர் படுகாயத்துடன் கிடந்தார்.

    இதை பார்த்த வேலாயுதம் காயத்துடன் கிடந்த கணேசனை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு சிகிச்சை பலன் இன்றி கணேசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து குளச்சல் போலீசார் விசாரணை நடத்தினர். கொள்ளையர்கள் தாக்குதலில் கணேசன் இறந்திருப்பது தெரியவந்தது.

    இசக்கியம்மன் கோவிலில் கைவரிசை காட்டிய கொள் ளையர்கள், மண்டைக்காடு பகுதியில் உள்ள விநாயகர் கோவில் மற்றும் வெட்டு மடை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஊழியரிடமும் கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்தது. கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவு காட்சிகளை கைப் பற்றி விசாரணை நடத்தினர்.

    அப்போது கொள்ளை யர்கள் உருவம் பதிவாகி இருந்தது. அதை வைத்து விசாரணை நடத்திய போது சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்த உருவம் குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. போலீசார் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில் நேற்று இரவு 2 பேரை போலீசார் பிடித்தனர். பிடிபட்ட இருவரிடமும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணையில் பிடிபட்டவர்கள் குளச்சல் பகுதியைச் சேர்ந்த கவாஸ்கர், குமார் என்பது தெரியவந்தது. இவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கவாஸ்கர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன. ரவுடிகள் பட்டியலிலும் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட கவாஸ்கர், குமாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குளச்சல் கடல் பகுதியில் கடல் திடீர் சீற்றமாக இருந்து வருகிறது.
    • விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள் தொழில் பாதிப்பில்லாமல் வழக்கம் போல் மீன்பிடிக்க சென்றன.

    குளச்சல்:

    குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படுவது வழக்கம். ராட்சத அலைகள் எழுந்து மணல் பரப்பு வரை விழும். இதனால் பாதுகாப்பு கருதி விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று வீசியதால் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள் கரை திரும்பின. இதனால் மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டது.

    தற்போது கடந்த 1-ந்தேதி முதல் மேற்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகளுக்கு 60 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதால் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. ஆனால் பைபர் வள்ளங்கள், கட்டு மரங்கள் வழக்கம்போல் மீன் பிடித்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று காலை குளச்சல் கடல் பகுதியில் கடல் திடீர் சீற்றமாக இருந்து வருகிறது. ராட்சத அலைகள் எழுந்து மணல் பரப்பு வரை விழுந்து செல்கிறது.

    இந்த அலை வெள்ளத்தால் துறைமுக பழைய பாலத்தின் தூண் பகுதியில் ஏற்பட்ட கடலரிப்பு பகுதியில் மணல் குவிந்து உள்ளது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட கடலரிப்பு பகுதியில் மணல் திட்டு உருவாகி உள்ளது. குளச்சல், கொட்டில்பாடு சுற்று வட்டார பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் மணல்பரப்பில் நிறுத்தப்பட்ட பைபர் வள்ளங்களை மீனவர்கள் பாதுகாப்பாக வேறு இடத்திற்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள் தொழில் பாதிப்பில்லாமல் வழக்கம் போல் மீன்பிடிக்க சென்றன.

    • பொதுமக்கள் போராட்ட அறிவிப்பு
    • அப்பகுதிகளுக்கு அணை நீர் செல்லாததால் விவசாயிகள் கவலையடைந்தனர்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே உள்ளது லட்சுமிபுரம் சானல். பேச்சிப்பாறை அணை நீர் இந்த சானல் வழியாக லட்சுமிபுரம், கருமங்கூடல், நடுவூர்க்கரை, மண்டைக்காடு, உடையார்விளை, செம்மண்குளம், அஞ்சாலி, சிராயன்விளை, கோணங்காடு ஆகிய விவசாய நிலங்களுக்கு பாய்ச்சப்படுகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு திறந்து விடப்பட்ட அணை நீர் உடையார்விளை, செம்மண்குளம், அஞ்சாலி ஆகிய பகுதிகளுக்கு செல்லவில்லை. லட்சுமிபுரம் சானலில் குளச்சல் பிரிவு ஷட்டர் திறக்கப்படாததே இதற்கு காரணம் என அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்தனர். தற்போது கோடைக்காலம் தொடங்கிய நிலையில் அப்பகுதிகளுக்கு அணை நீர் செல்லாததால் விவசாயிகள் கவலையடைந்தனர். இந்நிலையில் குளச்சல் பிரிவு ஷட்டரை திறந்து அப்பகுதிக்கு தண்ணீர் விட வேண்டும் என வலியுறுத்தி கல்லுக்கூட்டம் பேரூராட்சி கவுன்சிலர்கள் டோமினிக் ததேயூஸ், ரூபன் பொன்மணி ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் லட்சுமிபுரம் சானல் சந்திப்பில் போராட்டம் நடத்த கூடினர்.

    இது குறித்து தகவலறிந்த பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு அதிகாரிகள் குளச்சல் பிரிவு ஷட்டரை திறந்து தண்ணீர் விட உத்தரவிட்டனர். இதையடுத்து சானல் ஊழியர் குளச்சல் பிரிவு ஷட்டரை திறந்து விட்டார். இதனால் செம்மண்குளம், உடையார்விளை, அஞ்சாலி, சிராயன்விளை, கோணங்காடு ஆகிய பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • புளி பறிக்க ஏறியபோது பரிதாபம்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே பனவிளை தாறாவிளையை சேர்ந்தவர் மிக்கேல் ராஜ் (வயது52). கொத்தனாராக வேலை பார்த்து வந்தார்.நேற்று மதியம் இவர் தனது வீட்டில் நின்ற புளிய மரத்தில் புளி பறிக்க மரத்தில் ஏறினார்.அப்போது எதிர்ப்பாராமல் தவறி கீழே விழுந்தார்.

    இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அப்பகுதியினர் அவரை மீட்டு குளச்சலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டார் என தெரிவித்தனர். இது குறித்து மிக்கேல் ராஜின் மனைவி லதா குளச்சல் போலீசில் புகார் செய்தார்.போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 20 சதவீத தள்ளுபடியில் விற்பனை
    • சப்பல்களுக்கு 15 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற நியூ ஜனதா புட்வேர்ஸ் நிறுவனம் ஐ.எஸ்.ஓ. 9001-2015 தரச்சான்றிதழ் பெற்ற நிறுவனம் ஆகும். நாகர்கோவில் மற்றும் குழித்துறையில் செயல் பட்டு வரும் இந்த நிறுவனத்தில் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் 5 முதல் 30 சதவீதம் வரை தள்ளு படி வழங்கப்படுகிறது.

    நியூ ஜனதா புட்வேர்ஸ், தனது 3-வது புதிய ஷோரூமை குளச்சல் காந்தி ஜங்சன் அருகே அமைத்து உள்ளது. இதன் திறப்பு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்தது. குளச்சல் நகர்மன்ற தலைவர் நசீர் புதிய ஷோரூமை திறந்து வைத்தார். இதில் ஏராளமான வாடிக்கை யாளர்கள் கலந்து கொண்ட னர்.

    விழாவுக்கு வந்தவர்களை நிறுவன உரிமையாளர் கமல் நாசர் மற்றும் ஊழியர்கள் வரவேற்றனர். திறப்பு விழாவை முன்னிட்டு 20 சதவீத தள்ளுபடி வழங்கப்பட்டது.

    நியூ ஜனதா புட்வேர்சில் அனைத்து வகையான உயர்தர சப்பல்கள், ஷூக்கள் 20 சதவீதம் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவி களுக்கான ஷூக்கள், ஷாக்ஸ், வாட்டர் பாட்டில், லஞ்ச் பேக் அனைத்தும் 20 சதவீதம் வரை தள்ளு படியில் விற்பனை செய் யப்படுகிறது.

    மேலும், இங்கு மண மக்களுக்கு தேவையான அனைத்து விதமான சப்பல்களும், கால்வலி, மூட்டுவலி ஆர்த்தோ சப் பல்களும் கிடைக்கும்.

    விகேசி, வாக்கரூ, ஏரோ வாக், இந்துஸ், பாரகான், ஸ்மார்ஸ், நெக்ஸோ போன்ற கம்பெனி சப்பல்களுக்கு 15 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படு கிறது. இதுபோல் சில கம்பெனி பேன்சி சப்பல்க ளுக்கு தள்ளுபடி வழங்க ப்படுகிறது.

    எங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப் பது உங்கள் வருகையே. புதிய ஷோரூமிலும் உங்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என நியூ ஜனதா புட்வேர் உரிமையாளர் கமல் நாசர் தெரிவித்துள்ளார்.

    • வியாபாரிகள் போட்டிப்போட்டு வாங்கி சென்றனர்
    • விசைப்படகுகள் ஆழ் கடல் பகுதிவரை சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன.

    விசைப்படகுகள் ஆழ் கடல் பகுதிவரை சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில் தான் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய் போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும்.பைபர் வள்ளங்கள் காலையில் சென்றுவிட்டு அருகில் மீன்பிடித்து மதியம் கரை திரும்பி விடும்.

    இவற்றுள் நெத்திலி, சாளை போன்ற சிறிய ரக மீன்கள் கிடைக்கும்.கடந்த வாரம் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற 20 விசைப்படகுகள் இன்று காலை குளச்சல் மீன்பிடித்துறைமுகம் திரும்பின. இதில் ஒரு படகில் திரட்சி எனப்படும் 4 ராட்சத திருக்கை மீன்சிக்கியது. அவை தலா 700 கிலோ எடை கொண்டதாக இருந்ததால் இந்த மீன்களை கரை சேர்க்க முடியவில்லை. இதனால் மீனவர்கள் 4 துண்டாக வெட்டி கரை சேர்த்தனர்.

    துறைமுக ஏலக்கூடத்தில் கரை சேர்க்கப்பட்ட இந்த திருக்கை மீனை மீனவர்கள் ஏலம் போட்டு விற்பனை செய்தனர்.வியாபாரிகள் இந்த மீனை போட்டிப்போட்டு ஏலம் கேட்டு வாங்கி சென்றனர்.இந்த வகை மீன்களின் உறுப்புகளிலிருந்து மருந்து பொருட்கள் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிட்டத்தக்கது.

    • அதிர்ச்சியடைந்த பெற்றோர் குளச்சல் போலீசில் புகார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து அபிலாஷை தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே மேற்கு நெய்யூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் மகன் அபிலாஷ் (வயது 15). குளச்சலில் ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.கடந்த 9-ந் தேதி மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த அபிலாஷிற்கு லேசான காய்ச்சல் இருந்த நிலையில் அறையில் படுக்க சென்றார்.

    மறுநாள் காலை பெற்றோர் அறைக்கு சென்று பார்த்த போது அபிலாஷை காணவில்லை. வீட்டிலிருந்த தந்தையின் ஸ்கூட்டர் மற்றும் பீரோவி லிருந்து ரூ.7 ஆயிரம் மற்றும் துணி மணிகளையும் எடுத்துக்கொண்டு மாய மானது தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சிய டைந்த பெற்றோர் அறையை சோதித்து பார்த்த னர். அப்போது அபிலாஷ் எழுதிய கடிதம் சிக்கியது.

    அதில் அன்புள்ள அப்பா அம்மாவுக்கு என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு படிப்பதற்கு விருப்பமில்லை. வீட்டில் என்னை அடிக்கடி படிக்க வற்புறுத்துவதால் வீட்டை விட்டு நான் கண்காணாத இடத்திற்கு செல்கிறேன்.

    என்னை அப்பாவும், அம்மாவும் தேட வேண்டாம். நான் கண்காணாத இடத்தில் ஓர் சிறிய கூலி வேலை செய்தாவது வாழ்கையில் முன்னேறுவேன்.அதனால் என்னை தேட வேண்டாம்.

    நான் இனி இந்த கன்னி யாகுமரி மாவட்டத்திற்கு வரவே மாட்டேன். நீங்கள் என்னை போலீசில் புகார் செய்தால், போலீஸ் என்னை பிடித்தால் நான் வரும் வழியிலேயே இறந்து விடுவேன். அதை மீறி அவர்கள் வீட்டிற்கு அழைத்து வந்தார்கள் என்றால் நான் என் வீட்டிலேயே தூக்கில் தொங்குவேன். எனவே நான் கண்காணாத இடத்தில் போய் எனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்வேன். சாரி என எழுதப்பட்டிருந்தது. இது குறித்து தந்தை சதீஷ்குமார் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அபிலாஷை தேடி வருகின்றனர்.

    • கடற்கரையில் மது அருந்திவிட்டு மது பாட்டில்களை அங்கே போட்டு உடைத்து விட்டு செல்கின்றனர்.
    • உடைந்த மது பாட்டில்கள் கடற்கரைக்கு வரும் பொதுமக்களின் கால்களை பதம் பார்த்து விடுகிறது.

    கன்னியாகுமரி:

    குளச்சல் இயற்கை துறைமுக கடற்கரை பகுதிக்கு மாலை வேளை களில் பொதுமக்கள் பொழுது போக்க மற்றும் காற்று வாங்க வந்து செல்வர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக அதிகாலை மற்றும் இரவு வேளைகளில் அனுமதியின்றி இங்கு மது விற்பனை செய்யப்ப டுவதாக குளச்சல் போலீசா ருக்கு தகவல் கிடைத்தது. மேலும் கடற்கரையில் மது அருந்திவிட்டு மது பாட்டில்களை அங்கே போட்டு உடைத்து விட்டு செல்கின்றனர். உடைந்த மது பாட்டில்கள் கடற்கரைக்கு வரும் பொதுமக்களின் கால்களை பதம் பார்த்து விடுகிறது.

    எனவே அங்கு மது அருந்துபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் குளச்சல் போலீஸ் நிலையம் சார்பில் எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டு உள்ளது. இதில் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி, புனித காணிக்கை அன்னை திருத்தல செயலா ளர் வால்டர், இணை செயலாளர் ரெக்சன், பொரு ளாளர் ஜெயசீலன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    • பங்குமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி சென்றனர்
    • திருவிழா கடந்த 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கன்னியாகுமரி:

    குளச்சல் புனித காணிக்கை அன்னை திருத்தல திருவிழா கடந்த 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து 10 நாட்கள் விழா நடக்கிறது. தினமும் காலை திருப்பலி மற்றும் மாலை 6 மணிக்கு ஜெப மாலை, புகழ்மாலை, நவநாள் மற்றும் இரவு கலைநிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. 7-ம் நாள் நேற்று காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை நற்கருணை ஆராதனை நடந்தது. மாலை 6 மணியளவில் முக்கிய நிகழ்ச்சியான அன்னையின் திருச்சப்பர பவனி மற்றும் மெழுகுவர்த்தி பவனி குளச்சல் புனித மரியன்னை மேல்நிலை பள்ளியிலிருந்து புறப்பட்டு திருத்தலம் சென்றடைந்தது.பவனியின்போது பங்கு மக்கள் உள்பட திரளானோர் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அன்னையின் புகழ்பாடி சென்றனர்.

    பவனியில் வட்டார முதன்மை பணியாளர் பிரான்சிஸ் டி.செய்ல்ஸ், பங்குப்பணியாளர்கள் டைனிசியஸ்,ஜாண் வினோ, விஜின் பிரைட்,அருள் சகோதரிகள் மற்றும் பங்குநிர்வாகக்குழுவினர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து திருத்தலத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. கோடிமுனை பங்குப்பணி யாளர் அருள் சீலன் தலைமையில் ஆலஞ்சி பங்குப்பணியாளர் ஜோசப் அருளுரை ஆற்றினார்.

    8 ம் நாள் (இன்று) காலை நோயாளிகளுக்கான குணமளிக்கும் சிறப்பு திருப்பலி, 9-ம் நாள் காலை திருமுழுக்கு திருப்பலி, இரவு 9 மணிக்கு வாண வேடிக்கை, 10-ம் நாள் காலை திருவிழா முதல் திருப்பலி,8 மணிக்கு பெருவிழா திருப்பலி, கோட்டார் மறை மாவட்ட பொருளாளர் பேரருள் பணி அலோசியஸ் மரிய பென்சிகர் தலைமையில் குழித்துறை மறை மாவட்ட தலைமை செய லர் பேரருள்பணி ரசல் ராஜ் அருளுரை ஆற்று கிறார். 10 மணிக்கு திருக் கொடியிறக்கம்,மாலை 7 மணிக்கு கலை நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

    • 65 கிலோ பறிமுதல்
    • போலீசார் அதிரடி நடவடிக்கை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகி றார்கள்.

    நாகர்கோவில் தக்கலை குளச்சல் கன்னியாகுமரி சப்டிவிஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் மீனா தலை மையிலான போலீசார் அந்த பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை மேற் கொண்டனர். 4கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 40 கிலோ குட்கா புகை யிலை பறிமுதல் செய்யப்பட்டது. கடைகளின் உரிமை யாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    இதேபோல் நாகர்கோ வில் பகுதியில் கடைகளில் விற்பனை செய்ய வைத்திருந்த குட்கா புகையிலையை பறிமுதல் செய்ததுடன் கடை உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    மார்த்தாண்டம் இரணியல் குளச்சல் தக்கலை உள்ளிட்ட பகுதிகளிலும் உள்ள கடைகளிலும் போலீசார் சோதனை மேற்கொண்ட போது தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

    குட்கா புகையிலை விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன் கடையில் இருந்த குட்கா புகையிலை பறிமுதல் செய்தனர். நேற்று ஒரே நாளில் 66 கிலோ புகையிலை பறிமுதல் செய்ததுடன் 24 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.தொடர்ந்து குட்கா புகையிலை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

    ×