search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பஸ்சை சேதப்படுத்தி டிரைவர் மீது தாக்குதல்- வாலிபர் கைது
    X

    அரசு பஸ்சை சேதப்படுத்தி டிரைவர் மீது தாக்குதல்- வாலிபர் கைது

    • செந்தில்நாதன் என்பவர் நேற்றிரவு மது போதையில் அப்பகுதியில் சாலையின் நடுவே நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • அவ்வழியாக வந்த தனியார் மினி பஸ்சையும் நிறுத்தக் கூறி கண்ணாடியை உடைத்து தகராறு செய்துள்ளார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கோவில் பத்து பகுதியை சேர்ந்தவர் செந்தில்நாதன் (வயது 24).

    இவர் நேற்று இரவு மது போதையில் அப்பகுதியில் சாலையின் நடுவே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் வந்த நகர அரசு பஸ்சை நிறுத்தி வைக்குமாறு கூறினார்.

    இதனை அடுத்து பஸ்சை ஒட்டி வந்த பெரம்பூர் தியாகராஜன் (59) பஸ்சை சிறிது நேரம் நிறுத்தினார்.

    பின்னர் பஸ் எடுக்க முயன்ற போது செந்தில்நாதன் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    அப்போது அவர் அரசு பஸ் முகப்பு விளக்கு உடைத்து டிரைவர் தியாகராஜனை காயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    இதில் காயமடைந்த தியாகராஜன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

    அப்போது அவ்வழியாக வந்த தனியார் மினி பஸ்சையும் நிறுத்தக் கூறி கண்ணாடியை செந்தில்நாதன் உடைத்து தகராறு செய்துள்ளார்.

    இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவலின் பெயரில் சீர்காழியின் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செந்தில்நாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×