search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரணியல், வடசேரியில் 2 கிலோ போதை பொருட்கள்- 1½ கிலோ கஞ்சா பறிமுதல்
    X

    இரணியல், வடசேரியில் 2 கிலோ போதை பொருட்கள்- 1½ கிலோ கஞ்சா பறிமுதல்

    • 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவ டிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கன்னியாகுமரி, நாகர் கோவில், தக்கலை, குளச்சல் சப்- டிவிஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மேற் பார்வையில் 7 தனிப்படை கள் அமைக்கப்பட்டு கண் காணிப்பு பணி மேற்கொள் ளப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இரணியல் அருகே நெட்டாங்கோடு பகுதியில் வீடு ஒன்றில் போதை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று இரவு போலீசார் அந்த வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தி னார்கள்.

    அப்போது வீட்டில் ஒரு கிலோ கஞ்சா மற்றும் 2 கிலோ போதைப் பொருட் கள் இருந்தது கண்டுபிடிக் கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள் விலை உயர்ந்த போதை பொருட்கள் என்று கூறப்படுகிறது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அந்த போதை பொருளை பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். அங்கிருந்த 3 பேரும் சிக்கினார்கள். பிடிபட்ட மூன்று பேரி டமும் போலீசார் விசா ரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் அவர்கள் நரைன் (வயது 34), விமல் (21), அசாருதீன் (29) என்பது தெரிய வந்தது. இவர்களை இரணியல் போலீஸ் நிலை யத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற் கொண்ட னர். கஞ்சா மற்றும் போதை பொருட்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணையில் வெளி மாநிலங்களில் இருந்து வாங்கி வந்து இங்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தெரிவித்தனர்.இந்த கஞ்சா மற்றும் போதை பொருட்கள் சப்ளையில் வேறு நபர்களுக்கு தொடர்பு உண்டா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கஞ்சா மற்றும் 2 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது.

    வடசேரி பகுதியில் போலீசார் ரோந்து பணி யில் ஈடுபட்டபோது சந்தேகப்படும் படியாக நின்ற மூன்று நபர்களை பிடித்து விசாரித்தனர்.அப்போது அவர்களிடம் 450 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவை பள்ளி மாண வர்களுக்கு சப்ளை செய்ய வைத்திருந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து வடக்கு சூரங்குடியைச் சேர்ந்த சிவன், வாழை யத்துவயலை சேர்ந்த ஆதிஸ் (20) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் தெற்குச் சூரங்கு டியைச் சேர்ந்த அரவிந்த் மீது வழக்குப்பதிவு செய்து வடசேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×