search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதை தகராறில் கூலி தொழிலாளி சாவு- 3 பேர் கைது
    X

    இறந்த கூலி தொழிலாளி புனிதன்.

    போதை தகராறில் கூலி தொழிலாளி சாவு- 3 பேர் கைது

    • திடீரென ஒருவருக்கொருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.
    • புனிதனை கடுமையாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே கங்கனபுத்தூர் கிராமத்தில் உள்ள பெரிய தெருவில் வசித்து வருபவர் புனிதன் (வயது35).

    கூலி தொழிலாளி. திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

    புனிதன் நேற்று பணிகளை முடித்துவிட்டு இரவு சக நண்பர்களுடன் தெருவில் மது அருந்தி உள்ளார்.

    அப்போது திடீரென ஒருவருக்கொருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.

    அப்போது அவரின் நண்பர்களான மது போதையில் இருந்த தர்மேந்திரன், ரஞ்சித், பிரசாத் ஆகியோர் புனிதனை கடுமையாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே கீழே மயங்கி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது.

    தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை எஸ்.பி. நிஷா மற்றும் டி.எஸ்.பி. வசந்தராஜ் விசாரணை மேற்கொண்டனர்.

    இதையடுத்து புனிதனின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் புனிதனின் நண்பர்களான துரை மகன் தர்மேந்திரன் (27), பாண்டியன் மகன் ரஞ்சித் (25) மற்றும் பிரசாத் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    புனிதனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×