என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
போதை தகராறில் கூலி தொழிலாளி சாவு- 3 பேர் கைது
- திடீரென ஒருவருக்கொருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.
- புனிதனை கடுமையாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே கங்கனபுத்தூர் கிராமத்தில் உள்ள பெரிய தெருவில் வசித்து வருபவர் புனிதன் (வயது35).
கூலி தொழிலாளி. திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
புனிதன் நேற்று பணிகளை முடித்துவிட்டு இரவு சக நண்பர்களுடன் தெருவில் மது அருந்தி உள்ளார்.
அப்போது திடீரென ஒருவருக்கொருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.
அப்போது அவரின் நண்பர்களான மது போதையில் இருந்த தர்மேந்திரன், ரஞ்சித், பிரசாத் ஆகியோர் புனிதனை கடுமையாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே கீழே மயங்கி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை எஸ்.பி. நிஷா மற்றும் டி.எஸ்.பி. வசந்தராஜ் விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து புனிதனின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் புனிதனின் நண்பர்களான துரை மகன் தர்மேந்திரன் (27), பாண்டியன் மகன் ரஞ்சித் (25) மற்றும் பிரசாத் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
புனிதனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்