search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொங்கல் பண்டிகை"

    • பாரம்பரிய உடை அணிந்து வந்த ஊழியர்கள் சமத்துவ பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.
    • அலுவலக ஊழியர்களுடன் இணைந்து விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று உறி அடித்தார்.

    திருவள்ளூர்:

    தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி பொங்கல் பண்டிகையானது வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

    பாரம்பரிய உடை அணிந்து வந்த ஊழியர்கள் சமத்துவ பொங்கலிட்டு மகிழ்ந்தனர். விழாவில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான கரகாட்டம், தெருக்கூத்து போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனால் ஆட்சியர் அலுவலகம் திருவிழாக்கோலம் பூண்டது.


    மேலும் விழாவில் மேள தாளங்களுக்கு இணங்க ஊழியர்கள் நடனமாடிக் கொண்டிருந்த வேளையில் சற்றும் எதிர்பாராத வகையில் ஆட்சியர் பிரபு சங்கர் குத்தாடம் போட அனைவரும் உற்சாகம் அடைந்தனர். பின்னர் அலுவலக ஊழியர்களுடன் இணைந்து விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற ஆட்சியர் உறி அடித்தார். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா களை கட்டியது.

    • கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக தற்காலிக போலீஸ் நிலையங்களும் ஏற்படுத்தப்படுகின்றன.
    • டிரோன்கள் மூலமாகவும் கண்காணிப்பு பணி மேற் கொள்ளப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னையில் வருகிற 17-ந்தேதி காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவார்கள்.

    இதனை கருத்தில் கொண்டு அங்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, இணை கமிஷனர் தர்மராஜ் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

    மெரினாவில் மட்டும் 3 ஆயிரம் போலீசார் காணும் பொங்கல் அன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 5 துணை கமிஷனர்கள் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.


    கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக தற்காலிக போலீஸ் நிலையங்களும் ஏற்படுத்தப்படுகின்றன. கடற்கரை மணல் பரப்பில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அங்கிருந்தபடியே பைனாகுலர் மூலமாக போலீசார் கண்காணிக்க உள்ளனர். கடலில் குளிக்க தடை விதிக்கப்படுகிறது.

    டிரோன்கள் மூலமாகவும் கண்காணிப்பு பணி மேற் கொள்ளப்பட உள்ளது. சென்னை மாநகர் முழுவதும் மற்ற கடற்கரை பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.

    கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட அனைத்து சுற்றுலா பகுதிகள், பூங்காக்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சென்னை மாநகர் முழுவதும் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    • இயற்கை பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி வந்து உள்ளனர்.
    • சென்னை மாநகரம் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    போகிப் பண்டிகை தினமான நாளை டயர், டியூப் போன்ற பொருட்களை தீயிட்டு கொளுத்த வேண்டாம் என்று மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்று வெளியிட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினைக் கொண்டாடி வந்துள்ளனர். இயற்கை பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி வந்து உள்ளனர். இதனால் காற்று மாசு படாமல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் இருந்து வந்துள்ளது.

    ஆனால் இன்றைய சூழலை எடுத்துக்கொண்டால், போகி பண்டிகையின் பொழுது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயணம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது. போகி அன்று எரிக்கப்படும் பொருட்களால் ஏற்படும் அடர்ந்த புகையின் காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது. சென்னை நகரில் போகி அன்று எரிக்கப்படும் மேற்படி பொருட்களால் புகை மண்டலம் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது.


    பழைய பிளாஸ்டிக் பொருட்கள், டயர் மற்றும் டியூப் போன்றவற்றை எரிப்பதால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இத்தகைய செயல்கள் பொது மக்களிடம் விழிப்புணர்வு இல்லாமையால் ஏற்பட்டு வந்தது. இதனை தவிர்க்க, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கடந்த 19 ஆண்டுகளாக போகி பண்டிகைக்கு முன் பொது மக்களிடைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றது. இதன் காரணமாக கடந்த வருடங்களில் பழைய ரப்பர்பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் டயர், டியூப் போன்றவற்றை எரிப்பது பெரும்பாலும் குறைந்து உள்ளது.

    அதன்படி இந்த சுற்றுச்சூழல் மாசு குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், சென்னை மாநகரம் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    போகிப்பண்டிகையின் போது சென்னை மாநகரத்தின் சுற்றுச்சூழல் காற்று தரத்தினை கண்காணிப்பு செய்யும் பொருட்டு, வாரியம் போகிப்பண்டிகையின் முந்தைய நாள் மற்றும் போகிப்பண்டிகை நாளிலும், 15 இடங்களில் 24 மணிநேரமும் காற்றுத்தரத்தினை கண்காணிக்க காற்று மாதிரி சேகரிப்பு செய்து ஆய்வு செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளது. மேலும் காற்றின்தர அளவுவாரிய இணையதளத்தில்வெளியிடப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • விவசாய பெருங்குடிகளின் நலனை பேணிக் காத்திடவும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்வோம்.
    • தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும், அன்பும் அமைதியும் நிலவி நலமும் வளமும் பெருக வேண்டும்.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை உலகெங்கும் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    எத்தனையோ இன்னல்களை சந்தித்த போதிலும் உலகுக்கே உணவளிப்பதை முதன்மை பணியாக செய்து கொண்டிருக்கும் உழவர் பெருமக்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கும் நமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் வாய்ப்பாக பொங்கல் திருநாள் அமைந்திருக்கிறது.

    இயற்கையையும், உழைப்பையும் போற்றும் உழவர் திருநாளில், நிலத்தை உழுவதில் தொடங்கி சாகுபடி செய்யும் வரை இரவு பகல் பாராது அரும்பாடுபட்டு உழைக்கும் விவசாய பெருங்குடிகளின் நலனை பேணிக் காத்திடவும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்வோம்.

    அறுவடைத் திருநாளாம் இந்த பொங்கல் திருநாளில் தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும், அன்பும் அமைதியும் நிலவி நலமும் வளமும் பெருக வேண்டும் என வாழ்த்தி மீண்டும் ஒரு முறை எனது உள்ளம் நிறைந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    • பிறருக்கு உணவு வழங்கி உண்ண நினைப்பது தெய்வப் பண்பாகும்.
    • அனைத்து மக்களுக்கும் உணவு கிடைத்திட அல்லும் பகலும் அயராது பாட்டுபட்டு வரும் உழவர் பெருமக்கள் தெய்வப் பண்புள்ளவர்கள் ஆவார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில்,

    உலகமெங்கும் வாழுகின்ற தமிழர்கள் அனைவரும் அன்பு பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் தைத் திருநாளாம் பொங்கல் திருநாளில், எனதருமைத் தமிழ் மக்கள் அனைவருக்கும் உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

    மக்கள் அனைவரும் பொங்கல் திருநாளின் முதல் பண்டிகையாக, போகிப் பண்டிகை தொடங்கி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் (உழவர் திருநாள்) என நான்கு நாட்கள் விமரிசையாகக் கொண்டாடி மகிழ்வார்கள்.

    உழவர் பெருமக்கள் இயற்கையின் அருளினாலும், கடின உழைப்பினாலும் விளைந்த நெற்கதிர், கரும்பு, வாழை, இஞ்சி, மஞ்சள் ஆகிய விளைபொருட்களை வைத்தும்; புதுப்பானையில் அரிசியிட்டு பொங்கல் வைத்தும், 'பொங்கலோ பொங்கல்' என்று மகிழ்ச்சிக் குரலிட்டு இறைவனுக்குப் படைத்து வழிபடுவதோடு, தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து பொங்கல் திருநாளைக் கொண்டாடுவார்கள்.

    பிறருக்கு உணவு வழங்கி உண்ண நினைப்பது தெய்வப் பண்பாகும். அனைத்து மக்களுக்கும் உணவு கிடைத்திட அல்லும் பகலும் அயராது பாட்டுபட்டு வரும் உழவர் பெருமக்கள் தெய்வப் பண்புள்ளவர்கள் ஆவார்கள். அத்தகைய உழவர் பெருமக்கள் வாழ்வில் ஏற்றம் பெற்றிட வேண்டும் என்பதற்காக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதை பெருமையோடு நினைவுகூர விரும்புகிறேன்.


    தை பிறந்தால் வழி பிறக்கும்; தடைகள் தகரும்; நிலைகள் உயரும்; நினைவுகள் நிஜமாகும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்து, தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் மக்கள் அனைவரும் உடல் நலத்தையும், மகிழ்ச்சியையும், என்றும் குறையாத அன்பையும் பெற்று வளமோடும், நலமோடும் இன்புற்று வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப்

    பிரார்த்தித்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி, மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

    • பொங்கல் பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்படுகிறது.
    • ஆற்காடு பஞ்சாங்கத்தில் ஜோதிடர் சுந்தரராஜன் அய்யர் கணித்துள்ளார்.

    தமிழர் திருநாளான தை பொங்கல் பண்டிகை நாளை மறுதினம் (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி வீடுகள் தோறும் பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள். பொங்கல் வைக்க நல்ல நேரம் எப்போது என்று ஆற்காடு பஞ்சாங்கத்தில் ஜோதிடர் சுந்தரராஜன் அய்யர் கணித்துள்ளார். சோப கிருதான இந்த ஆண்டு மகா சங்கராந்தி புருஷர் நாம கரணம் துவாங்கினி என்ற பெயரில் ஆண் நாய் வாகனத்தில் வலம் வருகிறார்.

    தை 1-ந்தேதி (திங்கட்கிழமை) சுக்ல பட்சம், சதுர்த்தி, சதய நட்சத்திரம் 2-ம் பாதம் வியதி பாத் நாம யோகம் பத்திரை நாம கரணம் செவ்வாய் ஓரை கூடிய இந்த நாளில் காலை 9.12 மணிக்கு தனுசு லக்னத்தில் செவ்வாய் நவாம்சையில் சித்தயோகத்தில் சூரிய பகவான் மகர ராசிக்கு பிரவேசிக்கிறார்.

    பொங்கல் திருநாளன்று (திங்கட்கிழமை) காலை 6 மணி முதல் 7 மணிக்குள் சந்திரன் ஓரையில் மகர லக்னத்தில் புது பானையில் பொங்கல் வைக்க நல்ல நேரமாகும். இந்த ஆண்டு சித்தயோகத்தில் பிரவேசிப்பதால் எங்கும் நன்மை உண்டாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கோயம்பேடு, கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட 6 பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    • வழக்கமான 2100 பஸ்களும் 1900 சிறப்பு பஸ்களும் இயக்க தயார் நிலையில் உள்ளன.

    சென்னை:

    பொங்கல் பண்டிகை நகர்ப்புறங்களைவிட கிராமப் பகுதிகளில் தான் உற்சாகமாக கொண்டாடப்படும். அதனால் தொழில் மற்றும் வேலை நிமித்தமாக வெளியூர்களில் இருப்பவர்கள் பொங்கலை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

    அந்த வகையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பொங்கலை கொண்டாட நேற்றே பயணத்தை தொடங்கிவிட்டனர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்காக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    ரெயில்கள் அனைத்தும் நிரம்பி விட்டதால் ஏழை, நடுத்தர மக்கள் அரசு பஸ்களை நம்பி உள்ளனர். அவர்கள் நெரிசல் இல்லாமல் பயணம் செய்வதற்கு வசதியாக விரிவான ஏற்பாடுகளை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் செய்துள்ளனர்.

    இன்று முதல் 5 நாட்கள் தொடர் அரசு விடுமுறை கிடைப்பதால் பெரும்பாலானவர்கள் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.

    கோயம்பேடு, கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட 6 பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று எதிர்பார்த்ததைவிட மக்கள் அதிகளவு பயணம் மேற்கொண்டனர். வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்கள் தவிர சிறப்பு பஸ்கள் 1260 என மொத்தம் 3946 பஸ்கள் இயக்கப்பட்டன. இவற்றில் நள்ளிரவு 12 மணி நிலவரப்படி 2 லட்சத்து 17 ஆயிரம் பேர் பயணம் செய்தனர்.

    இன்று முதல் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டதால் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

    இன்று காலையில் இருந்தே பஸ் மற்றும் ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. பகல் நேர ரெயில்கள் அனைத்தும் நிரம்பி சென்றன. சிறப்பு ரெயில்களிலும் நிற்ககூட முடியாத நிலை ஏற்பட்டது. மாலையில் இருந்து மக்கள் கூட்டம் அலை கடல் போல் திரண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


    குடும்பம் குடும்பமாக மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். மக்கள் கூட்டத்தை சமாளிக்க இன்று 4000 அரசு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமான 2100 பஸ்களும் 1900 சிறப்பு பஸ்களும் இயக்க தயார் நிலையில் உள்ளன. அரசு பஸ்களில் பயணம் செய்ய சுமார் 2 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    இதுதவிர 1600 ஆம்னி பஸ்களும் இயக்கப்படுகின்றன. அதில் பயணம் செய்ய 65 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து உள்ளனர். மேலும் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் நிலையங்களில் இருந்து 1 லட்சத்திற்கும் மேலான பயணிகள் பயணம் செய்ய உள்ளனர். முன்பதிவு செய்தும், முன்பதிவு இல்லாத பெட்டிகளில் ஆயிரக்கணக்கானவர்கள் பயணிக்கின்றனர்.

    மேலும் கார், வேன் போன்ற சொந்த வாகனங்களிலும் வெளியூர்களுக்கு புறப்பட்டு செல்கிறார்கள். சென்னையை ஒட்டிய மாவட்டங்களுக்கு இருசக்கர வாகனங்களில் பலர் பகலில் புறப்பட்டு சென்றனர். சென்னையில் இருந்து பஸ், ரெயில், கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு சுமார் 4 லட்சம் பேர் இன்று பயணம் செய்வார்கள் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.

    வெளியூர் பயணம் அதிகரித்துள்ளதால் சென்னையிலும் புறநகர் பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பஸ், கார்களின் சாலைப் பயணம் அதிகரித்துள்ளதால் மதுரவாயல், ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி, பெருங்களத்தூர், கிளாம்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    • ரம்ஜான், தீபாவளி, பொங்கல் மற்றும் திருமண முகூர்த்த காலங்களில் ஆடுகள் விற்பனை களை கட்டும்.
    • வெளிமாநில ஆடு ரகங்கள் எடைக்கு ஏற்ப ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனையானது.

    எட்டயபுரம்:

    தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தை உள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கூடும் இந்த சந்தைக்கு கிராமப்புறங்களில் வளர்க்கப்படும் ஆடுகள் கொண்டுவரப்படும்.

    நெல்லை, மதுரை, திருச்சி, சென்னை, கோவை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகள் வாங்க, விற்க வியாபாரிகள் வருவார்கள். வாரந்தோறும் இங்கு சுமார் ரூ.2 கோடி வரை விற்பனை நடைபெறும்.

    ரம்ஜான், தீபாவளி, பொங்கல் மற்றும் திருமண முகூர்த்த காலங்களில் ஆடுகள் விற்பனை களை கட்டும். இதனால் சுமார் ரூ.6 கோடி முதல் ரூ.10 கோடி வரை விற்பனை நடைபெறும்.

    இந்தாண்டு பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. 16-ம் தேதி இறைச்சி விற்பனை அதிகமாக நடைபெறும்.

    இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று மதியம் முதல் ஆட்டுச்சந்தை களை கட்டியது. தொடர் மழை காரணமாக கடந்த 2 வாரங்களாக ஆட்டுச் சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைவாக வந்த நிலையில் இன்று சந்தைக்கு சுமார் 10 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

    மேலும் கேரளா மாநிலத்தில் இருந்தும் சிலர் கால்நடை வளர்ப்பவர்கள் தங்களது கால்நடைகளை கொண்டு வந்தனர். வழக்கமான நாட்டு ரகங்களுடன் ஹைதராபாத் ரக காது ஆடுகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

    மலப்பாரி, பிட்டெல், சிரோகி, தலைச்சேரி, ஜம்னாபாரி உள்ளிட்ட வெளிமாநில ஆடு வகை ரகங்களும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன.

    10 கிலோ எடை கொண்ட நாட்டு ரக ஆடுகள் ரூ. 9 ஆயிரம் முதல் ரூ. 12 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன. இது கடந்த வாரங்களில் விட சற்று விலை அதிகம் தான் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வெளிமாநில ஆடு ரகங்கள் எடைக்கு ஏற்ப ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனையானது.

    தொடர் மழையினால் கடந்த 2 வாரங்களாக விற்பனை மந்தமாக இருந்த நிலையில் பொங்கல் பண்டிகை வியாபாரம் விறுவிறுப்பாக இருந்ததாகவும், ஆடுகள் வரத்து அதிகமாக இருந்தது.

    கறிக்காக வாங்கும் ஆடுகள் விற்பனை அதிகமாக காணப்பட்டதாகவும், ரூ. 7 கோடி வரைக்கும் இந்த பொங்கல் பண்டிகைக்கு விற்பனை நடைபெற்று இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    கேரளா மாநிலத்தில் இருந்து ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்த கால்நடை வளர்ப்பவர்கள் கூறும்போது, எட்டயபுரம் சந்தையை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்.

    இன்று முதன்முறையாக ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம். இன்றைக்கு கூட்டமும் அதிகமாக உள்ளது. விற்பனையும் நன்றாக உள்ளது என்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொங்கல் வைக்க நல்ல நேரம் எப்போது என்று ஆற்காடு பஞ்சாங்கத்தில் ஜோதிடர் சுந்தரராஜன் அய்யர் கணித்துள்ளார்.
    • சோப கிருதான இந்த ஆண்டு மகா சங்கராந்தி புருஷர் நாம கரணம் துவாங்கினி என்ற பெயரில் ஆண் நாய் வாகனத்தில் வலம் வருகிறார்.

    புதுச்சேரி:

    தமிழர் திருநாளான தை பொங்கல் பண்டிகை நாளை மறுதினம் (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    பொங்கல் பண்டிகையையொட்டி வீடுகள் தோறும் பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள். பொங்கல் வைக்க நல்ல நேரம் எப்போது என்று ஆற்காடு பஞ்சாங்கத்தில் ஜோதிடர் சுந்தரராஜன் அய்யர் கணித்துள்ளார்.

    சோப கிருதான இந்த ஆண்டு மகா சங்கராந்தி புருஷர் நாம கரணம் துவாங்கினி என்ற பெயரில் ஆண் நாய் வாகனத்தில் வலம் வருகிறார்.



    தை 1-ந் தேதி (திங்கட்கிழமை) சுக்ல பட்சம், சதுர்த்தி, சதய நட்சத்திரம் 2-ம் பாதம் வியதி பாத் நாம யோகம் பத்திரை நாம கரணம் செவ்வாய் ஓரை கூடிய இந்த நாளில் காலை 9.12 மணிக்கு தனுசு லக்னத்தில் செவ்வாய் நவாம்சையில் சித்தயோகத்தில் சூரிய பகவான் மகர ராசிக்கு பிரவேசிக்கிறார்.

    பொங்கல் திருநாளன்று (திங்கட்கிழமை) காலை 6 மணி முதல் 7 மணிக்குள் சந்திரன் ஓரையில் மகர லக்னத்தில் புது பானையில் பொங்கல் வைக்க நல்ல நேரமாகும்.

    இந்த ஆண்டு சித்தயோகத்தில் பிரவேசிப்பதால் எங்கும் நன்மை உண்டாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகை கொண்டாட கார், வேன், அரசு மற்றும் தனியார் பஸ் மூலம் பொதுமக்கள் செல்கின்றனர்.
    • இன்று காலை முதல் வாகனங்கள் அதிக அளவில் வருவதால் கூடுதலாக இரண்டு வசூல் செய்யும் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

    மதுராந்தகம்:

    பண்டிகையை கொண்டாட பள்ளி, கல்லூரி, தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தொடர் 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

    தொடர் விடுமுறையின் காரணமாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகை கொண்டாட கார், வேன், அரசு மற்றும் தனியார் பஸ் மூலம் பொதுமக்கள் செல்கின்றனர்.

    சென்னையில் இருந்து சென்னை- திருச்சியின் தேசிய நெடுஞ்சாலையில் வழியாக செல்லும்பொழுது அச்சரப்பாக்கம் அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் செலுத்திய பிறகு வாகனங்கள் அனுமதிக்கப்படுவதால் நீண்ட வரிசையில் காத்திருந்து வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து பாதிப்பும், நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

    நேற்று மாலை முதல் வாகனங்கள் செல்ல ஆரம்பித்தன. வாகனங்கள் அதிகமாக செல்லும்போது சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போது போலீசார் உடனடியாக கட்டணம் இல்லாமல் அனுப்பி வருகின்றனர். தொடர்ந்து இன்று காலை முதல் வாகனங்கள் அதிக அளவில் வருவதால் கூடுதலாக இரண்டு வசூல் செய்யும் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து, இன்று முழுவதும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

    • தமிழக அரசின் நடவடிக்கையால் புதுச்சேரிக்கு குறைவான பன்னீர் கரும்புகளே வந்துள்ளது.
    • பொங்கல் பண்டிகையில் முக்கியமாக படையலில் வைக்கப்படும் கரும்பு புதுச்சேரியில் விளைவிப்பதில்லை.

    புதுச்சேரி:

    பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (திங்கட் கிழமை) கொண்டாடப்படுகிறது.

    விழாவில் புதுபானையில் பொங்கலிட்டு வழிபடுவது வழக்கம். இதில் பன்னீர் கரும்பு, மஞ்சள் முக்கிய பொருளாக இடம் பெறும். இதுதவிர சர்க்கரைவள்ளி கிழங்கு, பிடிகரணை, நாட்டு பூசணிக்காய் பொங்கல் படையலில் வைக்கப்படும்.

    பொங்கல் பண்டிகையில் முக்கியமாக படையலில் வைக்கப்படும் கரும்பு புதுச்சேரியில் விளைவிப்பதில்லை. புதுவையையொட்டியுள்ள தமிழக பகுதியான கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், புவனகிரி, பண்ருட்டி, பாலுார், கண்டரகோட்டை, குறிஞ்சிப்பாடி. நடுவீரப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விளைவிக்கப்படும் பன்னீர் கரும்பை வரவழைத்து வியாபாரிகள் விற்பனை செய்வார்கள்.

    தற்போது பொங்கல் பண்டிகையொட்டி தமிழகத்தில் ரேஷன் கார்டுகளுக்கும் ரூ. 1000 மற்றும் பன்னீர் கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் வழங்கப்படுகிறது.

    இதற்காக தமிழக அரசு விவசாயிகளிடம் இருந்து பன்னீர் கரும்புகளை நேரடியாக கொள்முதல் செய்கிறது விவசாயிகளிடம் கரும்பின் ஒரு உயரத்தை பொருத்து ரூ.36 வரை விலை நிர்ணயித்து பெறப்படுகிறது. பெரும்பாலான விவசாயிகள் தமிழக அரசு அதிகரிகளிடம் பன்னீர் கரும்புகளை விற்பனை செய்துள்ளனர்.

    தமிழக அரசின் நடவடிக்கையால் புதுச்சேரிக்கு குறைவான பன்னீர் கரும்புகளே வந்துள்ளது. இவை உழவர் சந்தை உள்ளிட்ட சில இடங்களில் விற்பனை செய்யப்பட்டது. அங்கு, ஒரு ஜோடி கரும்பு ரூ.150 முதல் 200-க்கு விற்பனையானது.

    பூக்கள் விலையும் அதிகரித்து இருந்தது. சாமந்தி கிலோ ரூ.140 முதல் ரூ.200 வரையிலும், ரோஜா ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. காட்டுமல்லி (காக்கட்டான்) கிலோ ரூ. 700, அலரி பூ கிலோ ரூ. 200-க்கும், அரும்பு கிலோ ரூ. 2000-க்கும், குண்டுமல்லி கிலோ ரூ.2500-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    அதுபோல் மஞ்சள் கொத்தும் விலை அதிகரித்தது. மஞ்சள் கொத்து ஒன்று ரூ.20 முதல் ரூ.40 சர்க்கரை வள்ளி கிழங்கு கிலோ ரூ.50, நாட்டு பூசணிக்காய் கிலோ ரூ.30-க்கு, தேங்காய் ரூ. 15 முதல் ரூ.20-க்கும், முழு வாழை இலை ஒன்று ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கரும்புவரத்து குறைவால் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்றும் நாளையும் கூடுதலாக பன்னீர் கரும்புலோடு வரும்போது, விலை குறைய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பொங்கலை கொண்டாட நேற்றே பயணத்தை தொடங்கிவிட்டனர்.
    • சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்காக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    கிளாம்பாக்கம்:

    பொங்கல் பண்டிகை நகர்ப்புறங்களைவிட கிராமப் பகுதிகளில் தான் உற்சாகமாக கொண்டாடப் படும். அதனால் தொழில் மற்றும் வேலை நிமித்தமாக வெளியூர்களில் இருப்பவர்கள் பொங்கலை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

    அந்த வகையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பொங்கலை கொண்டாட நேற்றே பயணத்தை தொடங்கிவிட்டனர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்காக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், கிளாம்பாக்கத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    பேருந்து முனையத்தில் வைக்கப்பட்டு இருந்த குடிநீரை அருந்திய சிவ்தாஸ் மீனா, பேருந்து முனையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் போதுமானதாக இருக்கிறதா என பயணிகளிடம் கேட்டறிந்தார்.

    ×