search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காணும் பொங்கலுக்கு மெரினாவில் 3 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு
    X

    காணும் பொங்கலுக்கு மெரினாவில் 3 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு

    • கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக தற்காலிக போலீஸ் நிலையங்களும் ஏற்படுத்தப்படுகின்றன.
    • டிரோன்கள் மூலமாகவும் கண்காணிப்பு பணி மேற் கொள்ளப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னையில் வருகிற 17-ந்தேதி காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவார்கள்.

    இதனை கருத்தில் கொண்டு அங்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, இணை கமிஷனர் தர்மராஜ் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

    மெரினாவில் மட்டும் 3 ஆயிரம் போலீசார் காணும் பொங்கல் அன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 5 துணை கமிஷனர்கள் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.


    கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக தற்காலிக போலீஸ் நிலையங்களும் ஏற்படுத்தப்படுகின்றன. கடற்கரை மணல் பரப்பில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அங்கிருந்தபடியே பைனாகுலர் மூலமாக போலீசார் கண்காணிக்க உள்ளனர். கடலில் குளிக்க தடை விதிக்கப்படுகிறது.

    டிரோன்கள் மூலமாகவும் கண்காணிப்பு பணி மேற் கொள்ளப்பட உள்ளது. சென்னை மாநகர் முழுவதும் மற்ற கடற்கரை பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.

    கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட அனைத்து சுற்றுலா பகுதிகள், பூங்காக்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சென்னை மாநகர் முழுவதும் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    Next Story
    ×