search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரியாணி"

    • குடும்பத்துடன் ஓட்டலுக்கு சென்று ஐதராபாத் பிரியாணி சாப்பிட்டனர்.
    • பாகுபலி சாப்பாடு சாப்பிட்டால் ரூ.1 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்படும்

    திருப்பதி:

    ஐதராபாத் பிரியாணி பெயரைக் கேட்டாலே ருசிக்க தோன்றும். சுவையான இந்த பிரியாணியை பலரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.

    இந்த நிலையில் ஐதராபாத்தில் பிரபல ஓட்டல் நிர்வாகம் ஒன்று தற்போது 3 இடங்களில் புதிய கிளைகளை திறந்தது. இங்கு 2 ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டது.

    இதனைக் கண்ட அசைவ பிரியர்கள் ஓட்டல் முன்பு குவிந்தனர். அப்போதுதான் ஓட்டல் நிர்வாகம் ஒரு நிபந்தனையை விதித்தது. அது என்னவென்றால் பழைய 2 ரூபாய் நோட்டுகள் தந்தால் மட்டுமே 2 ரூபாய்க்கான பிரியாணி வழங்கப்படும் என தெரிவித்தது.

    இதனை கேட்ட வாடிக்கையாளர்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர். ஒரு சிலர் தங்கள் வீடுகளில் வைத்திருந்த பழைய 2 ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டு குடும்பத்துடன் ஓட்டலுக்கு சென்று ஐதராபாத் பிரியாணி சாப்பிட்டனர்.

    இது குறித்து ஓட்டல் நிர்வாகத்தினர் கூறுகையில்:-

    பொதுமக்களிடம் இன்னும் பழைய 2 ரூபாய் நோட்டுகள் இருக்கிறதா என்பதை கண்டறிய இந்த நூதன விற்பனையை தொடங்கினோம். இதுவரை எங்களிடம் 120 ரூபாய் மதிப்பிலான 2 ரூபாய் நோட்டுகள் வந்துள்ளன. இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

    எங்கள் உணவகம் சார்பில் 30 நிமிடங்களில் 30-க்கும் மேற்பட்ட உணவுகள் கொண்ட பாகுபலி சாப்பாடு சாப்பிட்டால் ரூ.1 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளோம்.

    இதன் விலை ரூ.1,999 இந்த கட்டணத்தை செலுத்தி 30 நிமிடங்களில் 30-க்கும் மேற்பட்ட உணவுகளை சாப்பிட்டவர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்க பரிசை வழங்கி வருகிறோம். இதுவரை இந்த போட்டியில் 7 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 6 முட்டைகள் கொண்ட பெட்டி 30 ரூபாய்க்கு பதில் 50 ரூபாயாக உயர்ந்துள்ளது.
    • ஓட்டல்களில் சைவ உணவுகளில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை.

    மிச்சாங் புயல் மழை காரணமாக சென்னையில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் அதிக அளவில் கொண்டு வரப்பட்டு கொண்டிருக்கிறது.

    காய்கறி வரத்து குறைந்ததால் பெரும்பாலான காய்கறி விலை உயர்ந்துள்ளது. மழையை காரணம் காட்டி பொருட்கள் எடுத்து வரும் சரக்கு வாகனங்கள் கட்டணத்தை உயர்த்தி உள்ளன.

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி எடுத்து வரும் லாரிகளின் வாடகையும் உயர்த்தப்பட்டுள்ளது. மார்க்கெட்டில் இருந்து சில்லரை வியாபாரத்திற்கு வாகனங்களில் கொண்டு செல்லப்படும் வாடகை கட்டணமும் உயர்த்தப்பட்டிருக்கிறது.

    வழக்கமாக வாடகை கட்டணம் ரூ.500 வசூலிக்கப்படும் இடத்தில் 6 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. அது போல முட்டை விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. 6 முட்டைகள் கொண்ட பெட்டி 30 ரூபாய்க்கு பதில் 50 ரூபாயாக உயர்ந்துள்ளது.

    இத்தகைய காரணங்களால் சென்னையில் சில இடங்களில் உணவு பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளன. சில ஓட்டல்களில் பால் தட்டுப்பாடு காரணமாக டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    ஓட்டல்களில் சைவ உணவுகளில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. ஆனால் அசைவ உணவு கடைகளில் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    குறிப்பாக சிக்கன் பிரியாணி விலை உயர்ந்துள்ளது. வழக்கமாக ரூ.240-க்கு விற்பனையாகும் சிக்கன் பிரியாணி புயல் மழை பாதிப்பால் பொருட்கள் கிடைக்காததால் பார்சலுக்கு ரூ.300 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இதனால் சிக்கன் பிரியாணி விலை சராசரியாக 60 ரூபாய் உயர்ந்துள்ளது.

    • கொலை செய்த இளைஞர் இயல்பாக காணப்பட்டார்.
    • கொலை செய்த நபர் யார் என்றே எனக்கு தெரியாது.

    டெல்லியின் வெல்கம் ஜந்தா மஸ்தூர் காலனியில் சென்று கொண்டிருந்த நபரை வழிமறித்த 17 வயது இளைஞர் கொடூரமாக தாக்கி அவரை கத்தியால் குத்தி கொன்றார். 55 முறை கத்தியால் குத்து வாங்கிய நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    உயிரிழந்தவரிடம் இருந்து 350 ரூபாயை எடுத்துக் கொண்ட இளைஞர், அங்கு வைக்கப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராவை நோக்கி நடன அசைவுகளை செய்துகாட்டி, அங்கிருந்தவர்களையும் மிரட்டினார். இவரின் செயல்கள் அனைத்தும் சி.சி.டி.வி. கேமராவில் பதிவானது. சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததும், போலீசார் சிறப்பு தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.

    மேலும் சம்பவம் நடைபெற்ற இடம் மற்றும் உள்ளூர்வாசிகளிடம் இருந்து பெற்ற தகவல்களை கொண்டு கொலை செய்த இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்டனர். தேடுதல் வேட்டையின் போது கொலை செய்த இளைஞர் இயல்பாக காணப்பட்டதோடு, இரவு உணவை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளார்.

    "கைது செய்யும் போது நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அந்த இளைஞன் தான் செய்த தவறை எண்ணி வருத்தம் கொள்ளாமல், பதட்டமின்றி காணப்பட்டான். சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகாமையிலேயே அந்த இளைஞனை பிடித்துவிட்டோம். மேலும் நாங்கள் அவனை பிடிக்கும்போது, இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தான்," என்று வடகிழக்கு பகுதிக்கான துணை காவல் ஆணையாளர் ஜாய் டிர்கி தெரிவித்தார்.

    கைது செய்யப்பட்ட இளைஞன் தான் கொலை செய்த நபர் யார் என்றே எனக்கு தெரியாது என்றும், பிரியாணி சாப்பிட பணம் இல்லாததால் கொலை செய்தேன் என்று தெரிவித்ததாக காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதிபா மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
    • ஓட்டலை அதிகாரிகள் மூடிய சம்பவம் மலப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஏலூர் பகுதியை சேர்ந்தவர் பிரதிபா. சம்பவத்தன்று இவர் முத்தூரில் உள்ள பரோட்டா கடையில் 4 பிரியாணி பார்சல்கள் வாங்கியிருக்கிறார்.

    அவற்றை குடும்பத்துடன் சாப்பிட வீட்டுக்கு எடுத்து வந்திருக்கிறார். வீட்டில் வைத்து பிரியாணி பார்சல்களை பிரித்த போது, அதில் ஒரு பார்சலில் பிரியாணிக்குள் கோழியின் முழு தலை கிடந்தது. அதனைப்பார்த்து பிரதிபா மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

    பிரியாணிக்குள் கோழி தலை கிடந்தது குறித்து திரூர் நகராட்சியின் உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சம்பந்தப்பட்ட ஓட்டலில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். பின்பு அந்த ஓட்டலுக்கு சீல் வைத்து மூடினர்.

    பிரியாணிக்குள் கோழியின் முழு தலை கிடந்த விவகாரத்தில் ஓட்டலை அதிகாரிகள் மூடிய சம்பவம் மலப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு இல்லாததின் விளைவாக விபத்துகள் ஏற்படுகிறது.
    • நூதன முறையில் வாகன ஓட்டிகளுக்கு சிக்கன் மற்றும் வெஜிடபிள் பிரியாணி வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் மாவட்ட காவ ல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே ஜோதி அறக்கட்டளை மற்றும் தஞ்சை மாநகர போக்குவரத்து பிரிவு சார்பில் நூதன சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இதில் தஞ்சை நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் எம் .ஜி. ரவிச்சந்திரன் தலைமையி லான போக்குவரத்து போலீசார் மற்றும் ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள், அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களை தடுத்து நிறுத்தி அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்கள் ஒவ்வொரு வருக்கும் தலா 1 கிலோ சிக்கன் பிரியாணி , முட்டை, பிரெட் அல்வா உள்ளிட்ட வைகளை சுடச்சுட வழங்கி அசத்தினர்.

    இது குறித்து தஞ்சை நகர போக்குவரத்து இன்ஸ்பெ க்டர் எம். ஜி. ரவிச்சந்திரன் கூறுகையில் , சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலை பாதுகாப்பு குறித்த முழுமையான விழிப்புணர்வு இல்லாததின் விளைவாக விபத்துகள் ஏற்பட்டு பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது .

    இதை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி பொதுமக்களிடம் சாலை விதிகளை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் .

    அதன்படி உலக பிரியாணி தினத்தை முன்னிட்டு ஹெல்மெட் அணிந்து வந்த 50 இருசக்கர வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு சுவையான சிக்கன் பிரியாணி மற்றும் வெஜிடபிள் பிரியாணி வழங்கி நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி னோம்.

    இது போன்ற நூதன சாலை போக்குவரத்து நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும் என்றார் .

    மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்ததற்கு பரிசாக தஞ்சை போக்குவரத்து போலீசார் விலையில்லா பிரியாணி வழங்கியதை பார்த்து வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் ஆச்சர்யமடைந்தனர் .

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் தலைமையில் மேலாளர் ஞானசுந்தரி , மேற்பார்வையாளர் கல்யா ணசுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர் .

    • பிரியாணி சாப்பிட்டுக் கொண்டு இருந்தபோது அதில் பூரான் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • சமையல் அறைக்கு சென்று பார்த்தபோது சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பது தெரிய வந்தது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், பாச தாவாரி பேட்டை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அங்குள்ள சந்திப்பில் உள்ள தனியார் உணவகத்திற்கு சென்றனர்.

    அங்கு தனது குடும்பத்தினருக்கு சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்தனர். பிரியாணி சாப்பிட்டுக் கொண்டு இருந்தபோது அதில் பூரான் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து ஓட்டல் நிர்வாகத்திடம் உங்கள் ஓட்டலில் பூரான் பிரியாணி சமைக்கிறீர்களா என கேள்வி எழுப்பினர். அவர்களின் கேள்விக்கு ஓட்டல் நிர்வாகத்தினர் அலட்சியமாக பதில் அளித்தனர்.

    இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சமையல் அறைக்கு சென்று பார்த்தபோது சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பது தெரிய வந்தது. பிரியாணியில் பூரான் கிடந்தது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.

    பிரியாணியில் பூரான் இருந்த சம்பவம் அசைவ பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    • பாஸ்ட் புட் கடைக்கு சென்று தான் வாங்கி சென்ற பிரியாணியில் வெட்டுக்கிளி இறந்து கிடப்பதாக கூறியுள்ளார்.
    • டேவிட் பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் 4 ரோடு அருகே கேரளா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் பாஸ்ட்புட் உணவகம் நடத்தி வருகிறார்.

    இங்கு பரமத்தியைச் சேர்ந்த டேவிட் (35) என்பவர் தனது வீட்டிற்கு சிக்கன் பிரியாணியை பார்சல் செய்து வாங்கிச் சென்றுள்ளார். வீட்டிற்கு சென்று பிரியாணியை பிரித்து சாப்பிட முயன்ற போது அதில் வெட்டுக்கிளி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் உடனடியாக பரமத்திவேலூரில் உள்ள பாஸ்ட் புட் கடைக்கு சென்று தான் வாங்கி சென்ற பிரியாணியில் வெட்டுக்கிளி இறந்து கிடப்பதாக கூறியுள்ளார். ஆனால் பிரியாணி கடை உரிமையாளர் நீங்களாக வெட்டுக்கிளியை பிரியாணியில் போட்டு கொண்டு வந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து டேவிட் பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் இரு தரப்பினரிடையே பேசி வாடிக்கையாளர் வாங்கிய பிரியாணி பார்சலை நீங்களே எடுத்துச் செல்லுங்கள் நீங்கள் உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் வழங்கி அதை சோதனை செய்யுங்கள் என அறிவுறுத்தினர்.

    இதுகுறித்து பிரியாணி கடையில் இருந்த வாடிக்கையாளர் கூறியதாவது:-

    பிரியாணியில் கிடந்த வெட்டுக்கிளி நன்றாக பிரியாணியில்தான் வெந்துள்ளது தெரிகிறது. சமைக்கும் அடுப்பிற்கு மேலே அதிக வெளிச்சம் கொண்ட எல்.இ.டி., பல்புகளை உபயோகிப்பதால் அதிக வெளிச்சத்தில் அங்கு வரும் பூச்சிகள், வெட்டுக்கிளிகள், மற்றும் பூச்சிகள் விழுந்தாலும் இவர்கள் அதை கவனத்தில் கொள்வதில்லை.

    சாலைகளின் ஓரத்திலேயே அடுப்புகள் அமைத்து சமைப்பதால் ரோட்டில் செல்லும் வாகனங்களில் இருந்து வரும் மாசுக்கள் நிறைந்த புகை, தூசுகள், புழுதி, உணவுகளில் கலக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அடிக்கடி சோதனை மேற்கொள்ள வேண்டும் என கூறினர்.

    • விக்கி மற்றும் எழில் ஆகிய 2 பேர் வந்து பிரியாணியை கடனாக கேட்டு கேட்டு தகராறு செய்துள்ளனர்.
    • கண்ணன் தரப்பினர் விக்கி மற்றும் எழில் மீது தாக்கு தல் நடத்தியதாக கூறப்படு கிறது.

    கடலூர்:

    நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் வட்டம் 29- ல் ஓட்டல் நடத்தி வருபவர் கண்ணன். இவரது ஓட்ட லுக்கு காப்பான்குளம் கிராமத்தை சேர்ந்த விக்கி மற்றும் எழில் ஆகிய 2 பேர் வந்து பிரியாணியை கடனாக கேட்டு கேட்டு தகராறு செய்துள்ளனர். அப்பொழுது கடை உரி மையாளர் ஏற்கனவே வாங்கிய பிரியாணிக்கு பணத்தை கொடுங்கள் என கேட்டுள்ளார். அப்போது ஓட்டல் உரிமையாளருக்கும் விக்கி மற்றும் எழில் ஆகியோருக்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள் ளது. இதனை யடுத்து எழில் கத்தியுடன் வந்து ஓட்டல் கடை உரிமையாளரான கண்ணனை கத்தியால் வெட்டி உள்ளனர்.

    அப்போது அங்கு வந்த கண்ணன் தரப்பினர் விக்கி மற்றும் எழில் மீது தாக்கு தல் நடத்தியதாக கூறப்படு கிறது. இதனால் இரு தரப்பி னரிடையே மோதல் ஏற்பட்டு அனைவரும் கலைந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்தசி.சி.டி.வி. காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைர லாக பரவி வருகிறது. மேலும் இச்சம்பவத்தில் காயம் அடைந்த 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை மேற்கொண்டு வருகின்ற னர். இச்சம்பவம் அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆத்திரம் அடைந்த போதை வாலிபர் பிரியாணி அண்டாவை காலால் எட்டி உதைத்தார்.
    • கவல் அறிந்ததும் கோடம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    போரூர்:

    சென்னை சூளைமேடு அடுத்த பெரியார் பாதையை சேர்ந்தவர் அருண்குமார். கோடம்பாக்கம் அடுத்த டிரஸ்ட்புரம் 2-வது தெருவில் பிரியாணி கடை நடத்தி வருகிறார்.

    இவரது கடைக்கு நேற்று இரவு மதுபோதையில் வந்த வாலிபர் ஓசியில் பிரியாணி பார்சல் தருமாறு கேட்டார். ஆனால் பணம் கொடுத்து வாங்கி செல்லுமாறு அருண் குமார் கூறினார்.

    இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த போதை வாலிபர் பிரியாணி அண்டாவை காலால் எட்டி உதைத்தார்.

    மேலும் கடையில் இருந்த மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டார். இதனை கண்டு ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் அங்கிருந்து வாலிபர் தப்பி சென்று விட்டார்.

    தகவல் அறிந்ததும் கோடம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவை வைத்து ஓட்டலை சூறையாடியது அதே பகுதியை சேர்ந்த ரவுடியான கோவிந்தராஜ் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள். அவர் மீது ஏற்கனவே கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஒரே நேரத்தில் அங்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர்.
    • போலீசார் கூட்ட நெரிசலை ஒழுங்குப்படுத்தினர்.

    கடலூர் :

    10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்கிற வதந்தி மக்களிடையே இன்றும் பல இடங்களில் பரவி நிற்கிறது. குறிப்பாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும், 10 ரூபாய் நாணயங்கள் கடலூர், கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இதனால் மக்கள் இந்த நாணயத்தை வாங்குவதற்கே தயக்கம் காட்டுகிறார்கள்.

    இந்த வதந்தியை மக்களிடம் இருந்து நீக்குவதற்கு, இந்த நாணயத்தை வெளியிட்ட ரிசர்வ் வங்கி, அரசு மற்றும் சில வணிகர்களும் விழிப்புணர்வு பிரசாரங்களை அவ்வப்போது முன்னெடுத்து வருகிறார்கள்.

    இருப்பினும் 10 ரூபாய் நாணயங்கள் கடலூர் மாவட்டத்தில் இன்னும் முழுமையான பயன்பாட்டுக்கு வரவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

    இந்த நிலையில், கடலூர் மாவட்ட மக்களிடையே 10 ரூபாய் நாணயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ராமநத்தம் அடுத்துள்ள புதுக்குளத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர், நேற்று புதிதாக திறந்த பிரியாணி கடையில் 10 ரூபாய் நாணயத்துக்கு சிக்கன் பிரியாணி விற்பனை செய்தார்.

    இதுபற்றி அறிந்தவுடன், அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தங்களது வீட்டில் இத்தனை நாட்களாக தூங்கி கொண்டு கிடந்த 10 ரூபாய் நாணயங்களை எடுத்துக் கொண்டு பிரியாணி கடையை நோக்கி விரைந்தனர்.

    ஒரே நேரத்தில் அங்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்து, பிரியாணியை வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இதுபற்றி அறிந்த ராமநத்தம் போலீசார் அங்கு விரைந்து வந்து, கூட்ட நெரிசலை ஒழுங்குப்படுத்தினர்.

    இதுகுறித்து ரமேஷ் கூறுகையில், நான் சென்னையில் பிரபல நட்சத்திர ஓட்டலில் வேலை பார்த்தேன். அங்கிருந்து சொந்த ஊர் வந்த நான், இங்கு புதிதாக பிரியாணி கடையை திறந்தேன்.

    தற்போது 10 ரூபாய் நாணயம் ஒரு சில கடைகளில் வாங்க மறுத்துவருவதால், அதுபற்றி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தேன். அதன்படி, கடை திறந்து முதல்நாளான நேற்று, 10 ரூபாய் நாணயத்துக்கு பிரியாணி வழங்கினேன். மக்களும் ஆர்வமுடன் வாங்கி சென்றனர் என்றார்.

    • 200 பேருக்கு மட்டுமே வழங்க சிக்கன் பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    • இந்த ஓட்டலில் ஒரு சிக்கன் பிரியாணி ரூ.220-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    கள்ளக்குறிச்சி :

    10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் இருந்தாலும், தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அதனை வாங்க வியாபாரிகள், பஸ் கண்டக்டர்கள் உள்ளிட்டவர்கள் மறுத்து வருகின்றனர். இதனால் 10 ரூபாய் நாணயங்கள் செல்லுமா, செல்லாதா என பெரும்பாலான மக்கள் இன்னும் குழப்பத்திலேயே உள்ளனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி சேலம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் 10 ரூபாய் நாணயத்திற்கு ஒரு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இதனை அறித்த பொதுமக்கள் தங்களது வீடுகளில் வைத்திருந்த 10 ரூபாய் நாணயங்களை தேடி எடுத்தனர். சிலர் தங்களுக்கு தெரிந்த கடைகளுக்கு சென்று 10 ரூபாய் நாணயங்களை வாங்கினர். பின்னர் அவர்கள் அனைவரும் சிக்கன் பிரியாணி வாங்க சம்பந்தப்பட்ட அந்த ஓட்டலுக்கு சென்றனர். பொதுமக்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், அங்கு மரக்கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலை 10 மணி முதலே முண்டியடித்து கொண்டு வரிசையில் நின்றனர்.

    இந்த நிலையில் காலை 11 மணிக்கு ஓட்டல் ஊழியர்கள் பொதுமக்களிடம் 10 ரூபாய் நாணங்களை பெற்று கொண்டு முட்டையுடன் கூடிய சிக்கன் பிரியாணி வழங்கினர்.

    200 பேருக்கு மட்டுமே வழங்க சிக்கன் பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி 200 பேருக்கு மட்டுமே பிரியாணி வழங்கப்பட்டது. இதனால் 100-க்கும் மேற்பட்டவர்கள் பிரியாணி கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    10 ரூபாய் நாணயங்களை வியாபாரிகள் வாங்க மறுத்து வரும் நிலையில் ஓட்டலில் 10 ரூபாய் நாணயத்திற்கு முட்டையுடன் கூடிய சிக்கன் பிரியாணி வழங்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வழக்கமாக இந்த ஓட்டலில் ஒரு சிக்கன் பிரியாணி ரூ.220-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 10 ரூபாய் நாணயங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே நேற்று 10 ரூபாய் நாணயத்துக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டதாக ஓட்டல் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

    • சுதாவிற்கு ராமச்சந்திரன் அங்கிருந்த ஓட்டல் ஒன்றில் பிரியாணி வாங்கி கொடுத்தார்.
    • ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சுதா பரிதாபமாக இறந்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை சேத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி சுதா (வயது 19)நிறைமாத கர்ப்பிணி. இவர் சம்பவத்தன்று பரிசோதனைக்காக கள்ளக் குறிச்சி அரசு மருத்துமனைக்கு தனது மனைவியை ராமச்சந்திரன் அழைத்து வந்தார். அங்கு இருந்த டாக்டர்கள் பிரசவத்திற்கு 20 நாட்கள் இருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் மருத்துவமனையி லிருந்து ராமச்சந்திரன், மனைவி சுதாவுடன் சேத்தூருக்கு செல்வதற்காக கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்திற்கு வந்தனர். அப்போது அலைந்து வந்த கலைப்பினால் சுதாவிற்கு ராமச்சந்திரன் அங்கிருந்த ஓட்டல் ஒன்றில் பிரியாணி வாங்கி கொடுத்தார். பின்னர் சாப்பிட்டு விட்டு இருவரும் அரசு பஸ்சில் கல்வராயன்மலைக்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்தனர். அப்போது சுதா மயக்கம் அடைந்தார். உடனே ராமச்சந்திரன் சுதாவை அரசு சுகாதார நிலையத்தில் சிகிச்சையில் சேர்த்தார்.

    அங்கு சுதாவை பரிசோதித்த டாக்டர்கள் அவரை மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சுதா பரிதாபமாக இறந்தார். பின்னர் சுதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவகல்லூரி மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது. சுதாவுக்கு திருமணமாகி ஓராண்டு ஆவதால், கோட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி சுதாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் சுதா சாப்பிட்ட பிரியாணியால் உயிரிழந்திருக்கலாமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×