என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோடம்பாக்கத்தில் ஓசியில் பிரியாணி கொடுக்காததால் ஓட்டலை சூறையாடிய ரவுடி
- ஆத்திரம் அடைந்த போதை வாலிபர் பிரியாணி அண்டாவை காலால் எட்டி உதைத்தார்.
- கவல் அறிந்ததும் கோடம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
போரூர்:
சென்னை சூளைமேடு அடுத்த பெரியார் பாதையை சேர்ந்தவர் அருண்குமார். கோடம்பாக்கம் அடுத்த டிரஸ்ட்புரம் 2-வது தெருவில் பிரியாணி கடை நடத்தி வருகிறார்.
இவரது கடைக்கு நேற்று இரவு மதுபோதையில் வந்த வாலிபர் ஓசியில் பிரியாணி பார்சல் தருமாறு கேட்டார். ஆனால் பணம் கொடுத்து வாங்கி செல்லுமாறு அருண் குமார் கூறினார்.
இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த போதை வாலிபர் பிரியாணி அண்டாவை காலால் எட்டி உதைத்தார்.
மேலும் கடையில் இருந்த மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டார். இதனை கண்டு ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் அங்கிருந்து வாலிபர் தப்பி சென்று விட்டார்.
தகவல் அறிந்ததும் கோடம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவை வைத்து ஓட்டலை சூறையாடியது அதே பகுதியை சேர்ந்த ரவுடியான கோவிந்தராஜ் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள். அவர் மீது ஏற்கனவே கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்