search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோடம்பாக்கத்தில் ஓசியில் பிரியாணி கொடுக்காததால் ஓட்டலை சூறையாடிய ரவுடி
    X

    கோடம்பாக்கத்தில் ஓசியில் பிரியாணி கொடுக்காததால் ஓட்டலை சூறையாடிய ரவுடி

    • ஆத்திரம் அடைந்த போதை வாலிபர் பிரியாணி அண்டாவை காலால் எட்டி உதைத்தார்.
    • கவல் அறிந்ததும் கோடம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    போரூர்:

    சென்னை சூளைமேடு அடுத்த பெரியார் பாதையை சேர்ந்தவர் அருண்குமார். கோடம்பாக்கம் அடுத்த டிரஸ்ட்புரம் 2-வது தெருவில் பிரியாணி கடை நடத்தி வருகிறார்.

    இவரது கடைக்கு நேற்று இரவு மதுபோதையில் வந்த வாலிபர் ஓசியில் பிரியாணி பார்சல் தருமாறு கேட்டார். ஆனால் பணம் கொடுத்து வாங்கி செல்லுமாறு அருண் குமார் கூறினார்.

    இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த போதை வாலிபர் பிரியாணி அண்டாவை காலால் எட்டி உதைத்தார்.

    மேலும் கடையில் இருந்த மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டார். இதனை கண்டு ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் அங்கிருந்து வாலிபர் தப்பி சென்று விட்டார்.

    தகவல் அறிந்ததும் கோடம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவை வைத்து ஓட்டலை சூறையாடியது அதே பகுதியை சேர்ந்த ரவுடியான கோவிந்தராஜ் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள். அவர் மீது ஏற்கனவே கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×