search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலியல்"

    • பெண் சுயநினைவின்றி கிடந்த விவகாரத்தில் திடீர் திருப்பம்
    • திருவட்டார் போலீசார் அதிரடி நடவடிக்கை

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே உள்ள கொக்கவிளை பகுதியைச் சேர்ந்த 45 வயது பெண் வீட்டில் ரத்தக் காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

    அந்தப் பெண் சுய நினைவின்றி இருந்ததால், குடும்பத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அந்தப் பெண் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இன்னும் சுயநினைவு திரும்பவில்லை.

    இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் மகள், திருவட்டார் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்ட னர். அப்போது ஒரு வாலிப ரின் நடவடிக்கையில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    அவரை பிடித்து விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாக பேசி உள்ளார். போலீசார் தீவிர விசாரணை நடத்திய போது, அந்த வாலிபர், சுயநினைவின்றி கிடந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதும், அதற்கு அவர் மறுத்ததால் தாக்கி விட்டு சென்றதும் தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து அந்த வாலிபரை போலீசார் கைது செயதனர். விசார ணையில் அவரது பெயர் எட்வின் (வயது 28) என்ப தும், தனியார் மினரல் வாட்டர் கம்பெனியில் வேலை பார்ப்பதும் தெரிய வந்தது. கைதான எட்வின் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலம் வருமாறு:-

    பக்கத்து வீட்டில் வசித்த பெண் மீது எனக்கு மோகம் இருந்தது. சம்பவத்தன்று அந்தப் பெண், உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அலங்காரம் செய்து சென்றார். இதனை பார்த்ததும் எனக்கு அவர் மீது மேலும் ஆசை ஏற்பட்டது.

    அதன்பிறகு நான் மது அருந்தினேன். அந்தநேரத்தில் நிகழ்ச்சி முடிந்து அந்த பெண் வீடு திரும்பினார். அதனை பயன்படுத்தி நானும் வீட்டுக்குள் புகுந்தேன். பின்னர் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

    மேலும் அவர் சத்தம் போட்டதால் கழுத்தை நெரித்தேன்.கட்டிலில் அவரது தலையை மோதிய தில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினார். பின்னர் நான் வீட்டில் இருந்து வெளியேறி விட்டேன்.

    இதற்கிடையில் அவரது கணவர் வந்து மனைவி சுயநினைவின்றி கிடப்பதை பார்த்து அலறினார். நானும் அங்கு சென்று அவருக்கு உதவுவது போல் நடித்தேன். மேலும் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரித்த போது, நானும் அங்கே இருந்து, நகைக்காக தாக்குதல் நடந்திருக்கலாம் என்று கருத்துக்களை தெரிவித்தேன். ஆனால் என் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார், என்னை கைது செய்துவிட்டனர்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    எட்வினை கைது செய்தது குறித்து போலீசார் கூறுகையில், சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய போது, எட்வின் பேசியது மற்றும் அவரது நடவடிக்கைகள் சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் இருந்தது. எனவே அவரை கண்காணிக்க முடிவு செய்தோம். அவருக்கே தெரியாமல், அவரை கண்காணித்தோம். இதில் சந்தேகம் மேலும் அதிகரித்ததால் எட்வினை பிடித்து விசாரித்தோம். முதலில் மறுத்த அவர், பின்னர் உண்மையை ஒத்துக் கொண்டார் என்றனர்.

    • பிளஸ்-1 படிக்கும் 16 வயதுடைய பள்ளி மாணவன் சிறுமியின் வீட்டிற்கு சென்றார்.
    • விசாரணை நடத்திய போலீசார் பள்ளி மாணவன் மீது போக்சோ வழக்குப்பதிவு

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

    இவர்களது தாயார் நாகர்கோவிலில் உள்ள பலசரக்கு கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று காலை வழக்கம்போல சிறுமியின் தாயார் வேலைக்கு சென்றார். வீட்டில் சிறுமி மட்டுமே இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் 16 வயதுடைய பள்ளி மாணவன் சிறுமியின் வீட்டிற்கு சென்றார்.

    அப்போது வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் பள்ளி மாணவன் அத்துமீறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி அந்த சிறுமி தனது தாயாரிடம் கூறி அழுது உள்ளார்.

    இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் சம்பவம் குறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் பள்ளி மாணவன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட பள்ளி மாணவனுக்கு 16 வயது என்பதால் அவரை நெல்லை மாவட்டத்தில் உள்ள சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

    • திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • இதுகுறித்து திலகர்திடல் போலீசில் அவரது பெற்றோர் புகார் செய்தனர்.

    மதுரை

    மதுரை கீழ அண்ணாதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்குமார் (வயது 22). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவியும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியிடம் மனோஜ்குமார் நெருங்கி பழகினார்.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மனோஜ்குமார் மாணவியை சந்திப்பதை தவிர்த்து வந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.

    ஆனால் மனோஜ்குமார் மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவி இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த அவர்கள் திலகர் திடல் போலீசில் மகளை பலாத்காரம் செய்ததாக புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் சுஜாதா 

    • நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, மாணிக்கம்பாளையம் அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
    • பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அருண் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அவரது தாய் ஜெயா ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, மாணிக்கம்பாளையம் அருகே உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி ஜெயா (வயது 38). இவர்களது மகன் அருண் (20) கூலித்தொழிலாளி. இவர், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அந்த சிறுமி பரமத்திவேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அருண் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அவரது தாய் ஜெயா ஆகியோர் மீது புகார் செய்தார். அதன்பேரில் பரமத்திவேலூர் போலீசார் விசாரணை நடத்தி, அருண், ஜெயா ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • சேலம் வீராணம் அருகே உள்ள சுக்கம்பட்டி அடுத்த ஆச்சான் குட்டப்பட்டி, கத்திரிப்பட்டி பகுதியில் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வாலிபர் மீது வழக்கு செய்தனர்.
    • இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வத்தை தேடி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் வீராணம் அருகே உள்ள சுக்கம்பட்டி அடுத்த ஆச்சான் குட்டப்பட்டி, கத்திரிப்பட்டி பகுதியை சேர்ந்த ஸ்ரீரங்கன் மகன் செல்வம் என்பவர் சிறுமி ஒருவரை அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த பெற்றோர், செல்வத்தை கண்டித்தனர். ஆனால் அவர் கேட்கவில்லை. இந்த நிலையில் அந்த சிறுமி குளித்து கொண்டிருந்ததை செல்வம் மறைவாக நின்று பார்த்துக் கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வத்தை தேடி வருகிறார்கள்.

    • மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் ஜெகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    சாத்தூர் அருகே வல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் பனையடிப்பட்டிக்கு செல்வதற்காக பஸ்சுக்கு காத்திருந்தார். அந்த பஸ் முன்னதாக சென்று விட்டதால் அவர் குறுக்குப்பாதையில் நடந்து சென்றுள்ளார்.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஜெகன் என்ற வாலிபர் மாணவியை வழிமறித்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். மாணவி சத்தம் போட்டதால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.

    இதுபற்றி பாதிக்கப்பட்ட மாணவி பள்ளி ஆசிரியை பாண்டியம்மா தேவியிடம் தெரிவித்துள்ளார்.

    அவர் உனது பெற்றோரை அழைத்துச் சென்று போலீசில் புகார் செய் என்று தெரிவித்துள்ளார். அதன்படி சாத்தூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவி புகார் செய்தார்.

    அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் ஜெகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    • பாலியல் துன்புறுத்தல்: பெண்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்தது.
    • மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல் மற்றும் தற்கொலை மரணங்கள் தொடர்பான சட்டங்களை கடுமையாக்க வேண்டும்.

    மதுரை

    எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மதுரை வடக்கு மாவட்ட அலுவலகத்தில், பெண்கள் இந்தியா அமைப்பின் பொதுக்குழு கூட்டம் நடந்தது.

    புதிய நிர்வாகிகளாக தலைவர் கதீஜா, பொதுச்செயலாளர் சையது அலி பாத்திமா, பொருளாளர் கனகவள்ளி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல் மற்றும் தற்கொலை மரணங்கள் தொடர்பான சட்டங்களை கடுமையாக்க வேண்டும், சமையல் எரிவாயுக்கான கூடுதல் வரியை ரத்து செய்து, விலை குறைப்பு செய்ய வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.
    • தலை மறைவாக இருந்த ஜெரின் நேற்று இரவு வீட்டுக்கு வந்த போது போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர்.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் அருமனை வலியவிளையை சேர்ந்தவர் ஜெரின் (வயது22).

    இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் யாரும் இல்லாத நேரம் புகுந்து உள்ளார். அங்கு தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.

    இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் மார்த்தா ண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையில் ஜெரின் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் தலை மறைவாக இருந்த ஜெரின் நேற்று இரவு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர்.

    பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தனர்.

    பாலியல் குற்றம், போக்சோ சட்டம் பற்றி ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையின் சார்பில் பள்ளிகளில் மாணவிகளுக்கு பாடம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
    ராமநாதபுரம்:

    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த காலங்களில் இதுபோன்ற வன்கொடுமைகள் ஆங்காங்கே நடைபெற்றாலும் பஞ்சாயத்து என்ற பெயரில் மூடிமறைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சமீப காலங்களாக நடைபெற்றுவரும் கொடூர சம்பவங்களால் அடுத்தடுத்து வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்துள்ளன. குழந்தைகளை பாலியல் கொடுமைகளில் இருந்து பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள போக்சோ எனப்படும் சட்டத்தில் கடுமையான தண்டனைகளை சேர்த்து தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதன்காரணமாக தற்போது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். இந்த சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பாலியல் தொந்தரவு எந்தெந்த வகைகளில் ஏற்படுகிறது என்பதை விளக்கி கூறும் வகையிலும் அதனை தடுப்பது குறித்தும், உடனடியாக தகவல் தெரிவிப்பது குறித்தும் மாவட்ட காவல்துறை சார்பில் பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா உத்தரவின்பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் அந்தந்த போலீஸ் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் தினந்தோறும் மாலையில் ஒருமணி நேரம் பாலியல் குற்றங்கள் குறித்தும், போக்சோ சட்டம் பற்றி பாடம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வ ருகிறது. நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் என்பது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்து வதோடு, பாலியல் தொல்லைகள் எந்தெந்த வழிகளில் யார் மூலம் ஏற்படுகிறது என்பதை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பள்ளிகளில் மாணவிகளுக்கு விளக்கி கூறுகின்றனர்.

    மேலும், போக்சோ சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவங்கள் குறித்தும் தெளிவாக விளக்கி கூறி வருகின்றனர். நாள்தோறும் ஒவ்வொரு பள்ளியாக சென்று பாலியல் குற்றங்கள் குறித்து விளக்கி கூறி வருவதோடு அதுதொடர்பான கேள்விகளை மாணவிகளிடம் கேட்டு தயார்படுத்தி வருகின்றனர். இதனை மாவட்டத்தில் தொடர்ந்து நடத்தி பாலியல் குற்றங்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
    ×