search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரபரப்பு"

    • ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகளிர் திட்ட பணியாளராக பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
    • அதிகாரிகள் பணம் பெற்று கொண்டு பயனாளர்களை தேர்வு செய்வதாக மகளிர் திட்ட பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் மகளிர் திட்டத்தில் கிராமப்புறங்களில் ஒரு கிராமத்திற்கு நான்கு பேர் என 251 ஊராட்சிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகளிர் திட்ட பணியாளராக பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    மகளிர் திட்ட பெண்கள் மூலம் ஊராட்சிகளில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனரை கணக்கெடுப்பு செய்து அரசின் மூலம் வழங்கப்படும் திட்டங்க ளான ஆடு, மாடு பெறுவதற்கான பயனாளர் தேர்வு மற்றும் கிராமங்களுக்கு தேவையான திட்டங்களில் பயனாளிகளை தேர்வு செய்வது மகளிர் திட்ட பெண்களின் முக்கிய பணியாக உள்ளது.

    இவர்கள் அப்பகுதியில் உள்ள பயனாளர்களை தகுதியின் அடிப்படையில் சரியாக தேர்ந்தெடுத்து வட்டார அலுவலகம் மற்றும் மாவட்ட அலுவ லகங்களுக்கு அனுப்பி வைத்து அவர்க ளுக்கு அரசின் திட்டங்களை சரியாக சென்று அடைவதற்கு வழிவகை செய்து வருகின்ற னர்.

    குறிப்பாக மகளிர் திட்டத்தில் பணிபுரியும் பெண்களை அதிகாரிகள் தாங்கள் சொல்லும் பயனாளர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என தொடர்ந்து மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. அதிகாரிகள் சிலரிடம் பணம் பெற்று கொண்டு பயனாளர்களை தேர்வு செய்வதாக மகளிர் திட்ட பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இதனால் பல்வேறு பிரச்சனைகளை மகளிர் திட்டத்தில் பணிபுரியும் பெண்கள் சந்தித்து வருகின்றனர்.

    கிராமங்களில் மகளிர் திட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கு சம்பளம் வரவில்லை என்றால் பெரும்பாலும் பலர் வேலையை விட்டு நின்று விடுகின்றனர். ஒரு வருடம் வரை வேலை செய்திருந்தாலும் அவர்களுக்கான சம்பளத்தை வழங்குவதில்லை.

    தருமபுரி மாவட்டத்தில் மகளிர் திட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கு ஏற்படும் மிரட்டல்கள் மற்றும் இது போன்ற பிரச்சனைகளை தீர்த்து பாதுகாப்பு கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அதிகாரிகள் மிரட்டல் ஒரு பக்கம் இருக்க பாதுகாப்பில்லாத சூழலில் தற்கொலை செய்து கொள்வேன் என மகளிர் திட்ட பெண் பணியாளர்கள் கண்ணீர் விடும் ஆடியோக்கள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    தமிழக முதல்-அமைச்சர் தருமபுரி மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்ப பதிவேற்ற திட்டத்தை தொடங்கி வைத்து மகளிர் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பிற்கு தருமபுரி மாவட்டத்தில் விதைத்தால் தமிழகமெங்கும் விளையும் என தெரிவித்திருந்தார்.

    அவ்வாறு இருக்கையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள மகளிர் திட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கு அச்சுறுத்தலும் பாதுகாப்பு இல்லாத சூழலும் ஏற்பட்டு ள்ளது.

    • மண் எண்ணையை உடலில் சரசரவென ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
    • மேகராஜிடம் இருந்து கேனை பறித்து அவரது உடலில் தண்ணீர் ஊற்றினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    அப்போது திருவிடைமருதூர் அருகே உள்ள விஸ்வநாதபுரம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த தொழிலாளி மேகராஜ் (வயது 32) என்பவர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். திடீரென அவர் அலுவலகம் முன்பு மறைத்து வைத்திருந்த கேனை வெளியே எடுத்து மண் எண்ணெயை உடலில் சரசரவென ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அதிர்ச்சி அடைந்த போலீசார் ஓடி வந்து மேகராஜிடம் இருந்து கேனை பறித்து அவரது உடலில் தண்ணீர் ஊற்றினர்.

    எற்காக தற்கொலைக்கு முயன்றீர்கள் என மேகராஜிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அதற்கு மேகராஜ் கூறும்போது :-

    எனக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. எனக்கும் என் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் அவர் கோபித்துக் கொண்டு குழந்தையுடன் அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். திரும்ப சமதானபடுத்தி அழைப்பதற்காக வீட்டுக்கு சென்றேன். ஆனால் அவர்கள் குடும்பத்தினர் என்னை அவமானப்படுத்தி துரத்தி அனுப்பி விட்டனர். இது குறித்து நான் நாச்சியார் கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றேன். ஆனால் அங்கு பணிபுரியும் சில போலீசார், பொய் வழக்கு போட்டு விடுவோம் என கூறி என்னை மிரட்டினர். ஏற்கனவே என் மனைவி, குழந்தை என்னை விட்டு பிரிந்து சென்று விட்டனர். அந்த மன வேதனையில் இருக்கும் நான் போலீசார் தற்போது மிரட்டுவதால் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். இதனால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றேன் என்றார்.

    இதனை தொடர்ந்து மேகராஜிடம் மேலும் விசாரணை நடத்துவதற்காக அவரை அங்கிருந்து போலீசார் அழைத்து சென்றனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்ய போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
    • சோதனையில் ஏட்டு கோடீஸ்வரன் மது அருந்தி இருப்பது தெரியவந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் இரவு ஒரு பயணி நின்றார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட வெளிப்பாளையம் போலீஸ் ஸ்டேசன் ஏட்டு கோடீஸ்வரன்(33) அந்த பயணியிடம் ஏன் இங்கு நிற்கிறாய் என கேட்டார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஏட்டு கோடீஸ்வரன் அந்த பயணியை லத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார்.இதில் காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க ப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில் அந்த பயணியை லத்தியால் தாக்கி யது சமூக வலைதளங்களில் பரவியது. மேலும் பயணியை தாக்கியது குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங்கிற்கு தகவல் தெரிந்தது. உடனே இரவு ரோந்து பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜிடம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்ய எஸ்பி உத்தரவிட்டார். இதன்பே ரில் இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் போலீஸ் காரர் பயணியை தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து ஏட்டு கோடீஸ்வரனை சோதனை செய்ய நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர் குழுவினர் சோதனை செய்ததில் ஏட்டு கோடீஸ்வரன் மது அருந்தி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இரவு ரோந்து பணியில் மது அருந்தி ஒழூங்கீனமாக நடந்து கொண்டதற்காக ஏட்டு கோடீஸ்வரனை சஸ்பெ ண்ட் செய்து எஸ்பி ஹர்ஷ்சிங் உத்தரவிட்டார்.

    இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

    • பார் உரிமையாளர் வாங்கும் மது பாட்டில்களுக்கும் குவாட்டருக்கு 5 ரூபாயும் பீர் பாட்டில் ஒன்றிற்கு பத்து ரூபாயும் கட்டாய வசூல் செய்வதாக புகார் தெரிவித்தார்.
    • இது சம்பந்தமாக தருமபுரி டாஸ்மாக் மாவட்ட மேலாளரிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என தெரிவித்தார்.

    தருமபுரி,

    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபான வகைகளை நிர்ணயித்த விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் அதற்குரிய அபராதம் விதிப்பதுடன், சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

    மேலும் கடைகளில் மது பாட்டில்களின் விலைப்பட்டியலை பட்டியலிடுவதற்கு முன் பகுதியில் கட்டாயம் வைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இந்த நிலையில் அமைச்சரின் உத்தரவை காற்றில் பறக்கவிட்டு தருமபுரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குவாட்டருக்கு 5 ரூபாய் பீர்பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது.

    வாடிக்கையாளர்கள் மதுபாட்டில்களை வாங்கும் போது பாட்டிலின் விலையை விட கூடுதலாக பணம் வாங்குவதால் மது பிரியர்கள் பணத்தை கொடுத்து விட்டு மதுபாட்டில்களை வாங்கி செல்கின்றனர்.

    தருமபுரி அடுத்த பாலக்கோடு சாலை சோகத்தூர் பகுதியில் இரண்டு அரசு மதுபான கடைகள் இயங்கி வருகின்றன.

    இந்த கடையை ஒட்டி இடத்தின் உரிமையாளர் பார் நடத்தி வருகிறார்.

    பார் உரிமையாளர் வாங்கும் மது பாட்டில்களுக்கும் குவாட்டருக்கு 5 ரூபாயும் பீர் ஒன்றிற்கு பத்து ரூபாயும் டாஸ்மாக் கடை விற்பனையாளர் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சுய உதவி குழுவில் கடன் வாங்கி அதனை வீட்டில் வைத்துள்ளார்.
    • இளம்பெண் தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருவாரூர்:

    திருவாரூர் மணிகண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயமோகன். இவரது மனைவி சூர்யா (வயது 28).

    இருவரும் விவசாய தொழிலாளிகள்.

    சூர்யா மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கி அதனை வீட்டில் வைத்துள்ளார். இந்த பணத்தை மனைவி சூர்யாவுக்கு தெரியாமல் கணவர் ஜெயமோகன் எடுத்துச் சென்று செலவு செய்ததாக கூறப்படுகிறது.

    இதனால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    மகளிர் சுய உதவிக் கடன் தொகையினை கணவர் செலவு செய்து விட்டதால் எப்படி திரும்ப செலுத்துவது என்ற கவலையில் இருந்த சூர்யா கடந்த சிலதினங்களுக்கு முன்பு வீட்டில் யாருக்கும் தெரியாமல் மண்ணெண்ணெய் உடலில் ஊற்றிக் கொண்டு தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார்.

    தீயின் வெப்பத்தால் வலி தாங்க முடியாமல் சூர்யா அலறிக் கொண்டே கீழே விழுந்தார்.

    இவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சூர்யா சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது தொடர்பாக திருவாரூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மகளிர் சுய உதவிக் குழு கடன் பணத்தை கணவர் செலவு செய்து விட்டதால் எப்படி திரும்ப செலுத்துவது என்ற விரக்தியில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த 3 நாட்களுக்கு முன்பு வைத்தனர்
    • போலீஸ் பாதுகாப்புடன் நடவடிக்கை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுக்காநல்லூரில் உள்ள புறம்போக்கு இடத்தில் காட்டுக்காநல்லூர் கிராமத்தில் ஆதி திராவிடர் நலத்துறை மூலம் நில எடுப்பு செய்யப்பட்டிருந்தது.

    இங்கு அருந்ததியர் இன மக்களுக்கு வீட்டுமனைகள் வழங்கப்பட்டு அவர்கள் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.

    இங்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு அதிகாலை விநாயகர் சிலையை அனுமதியின்றி வைத்திருந்தனர்.

    இதனை அவர்களே அகற்றும்படி தெரிவித்தும் மேற்படி இடத்தில் பிள்ளையார் சிலையை அகற்றவில்லை.

    இதனையடுத்து ஆரணி தாசில்தார் மஞ்சுளா தலைமையில் அளவீடு செய்யப்பட்டதில் அந்த இடம் தெரு என்பது உறுதி செய்யப்பட்டது.

    இதனையடுத்து வருவாய்த்துறையினர் கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் ஊராட்சி நிர்வா கத்தினருடன் இணைந்து விநாயகர் சிலையை அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இரவு மற்றும் பகல் நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது
    • வாகனங்களை காட்டு யானை வழிமறித்து நின்றதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது

    ஈரோடு

    சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானை கள் வசித்து வருகின்றன. வனப்பகுதி வழியாக அமைந்துள்ள தமிழக- கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இரவு மற்றும் பகல் நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    இந்த வழியாக கரும்பு க்கட்டுகளை ஏற்று செல்லும் லாரிகளை வழிமறித்து கரும்புகளை சமீப காலமாக யானைகள் ருசித்து வருகின்றன.

    இந்நிலையில் நேற்று மாலை பண்ணாரி அம்மன் கோவில் அடுத்துள்ள அடர்ந்த வனப் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று தேசிய நெடு ஞ்சாலையில் நடமாடியது. அப்போது அந்த வழியாக சென்ற வாகனங்களை காட்டு யானை வழிமறித்து நின்றதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது.

    திடீரென சாலை நடுவே காட்டு யானை நட மாட்டத்தை பார்த்து வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து வாகனங்களை சிறிது தொலைவிலேயே வாகன ஓட்டிகள் நிறுத்தினர். சிறிது நேரம் தேசிய நெடுஞ்சாலை யில் அங்கும் இங்குமாக சுற்றிய காட்டு யானை பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது.

    இதனைத் தொடர்ந்து வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. சாலையோர வனப்பகுதியில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடும் போது வாகனங்களில் வனவிலங்குகள் அருகே சென்று புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதை தவி ர்க்குமாறு வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

    • தி.மு.க.கல்வெட்டில் பா.ஜ.க.வினர் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு
    • நகராட்சி தலைவருக்கு தகவல் கொடுத்தனர்

    கரூர்,

    கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சிக்குட்பட்ட ஹைஸ்கூல்மேடு பகுதியில் புகழூர் நகர திமுக சார்பில் திமுக கொடிகம்பம் மற்றும் உயரமான கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது.அந்த கல்வெட்டில் கரூரில் நடைபெறும் கரூர் மாற்றுத்திற்கான மாநாடு மற்றும் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்வதற்கான விளம்பர வால்போஸ்டரை பாஜகவினர் ஒட்டி இருந்தனர்.இதுகுறித்து புகழூர் நகராட்சித் தலைவரும், நகரக் கழக செயலாளருமான சேகர் என்கிற குணசேகரனுக்கு அப்பகுதியை சேர்ந்த திமுகவினர் தகவல் தெரிவித்தனர். உடனே ஏராளமான திமுகவினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அங்குள்ள திமுக கல்வெட்டில் பாஜகவினர் விளம்பர வால்போஸ்டர் ஒட்டி இருப்பது தெரிய வந்தது.இது குறித்து உடனடியாக மாவட்ட திமுக சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் நவாஸ்கான் மற்றும் திமுகவைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் திமுக நிர்வாகிகள் மூலம் உடனடியாக வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகள் மூலமாக கல்வெட்டில் வால் போஸ்டர்களை ஒட்டிய சம்மந்தப்பட்டவர்களை சம்பவ இடத்திற்கு வரவழைத்து அவர்கள் ஒட்டிய போஸ்டர்களை அவர்கள் மூலம் சுத்தம் செய்ய வைத்தனர். இதனால் அப்பகுதில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • கணவர் கேரளாவில் கட்டிட வேலை பார்த்து வருகிறார்.
    • தக்கலை டி.எஸ்.பி. உதயசூரியன் சம்பவம் நடந்த இடத்தை பார்த்து ஆய்வு செய்தார்.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே நான்காம் திட்டுவிளை செறுகோல் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வி (வயது (57). இவர்களுக்கு ஸ்டாலின் ஜோஸ் (23) என்ற மகனும், ஷைனி (28) என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. ஸ்டாலின் ஜோஸ் கேரளாவில் கட்டிட வேலை பார்த்து வருகிறார். வாரம்தோறும் வீட்டுக்கு வருவது வழக்கம்.

    வீட்டில் செல்வராஜ் அவரது மனைவி செல்வி, மருமகள் பென்சிறோஸ் ஆகியோர் வீட்டில் வசித்து வந்தனர். சமீபகாலமாக செல்வி உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் நோய் குணமாகாததால் மன அழுத்ததில் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று காலையில் வீட்டின் பின்புற தோட்டத்தில் செல்வி தன் மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். தீ மளமளவென பிடித்து உடல் முழுவதும் பரவியது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் செல்வி உடல் கருகி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக திருவட்டார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் ஜானகி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரனை மேற்கொண்டனர்.

    மேலும் தக்கலை டி.எஸ்.பி. உதயசூரியன் சம்பவம் நடந்த இடத்தை பார்த்து ஆய்வு செய்தார். மேலும் போலீஸ் மோப்ப நாய் குக்கி வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. செல்வியின் கணவர் செல்வராஜ் திருவட்டார் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்வி தற்கொலை செய்தது ஏன்? என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விவசாயி ரேஷன் கடை விற்பனையாளரை உள்ளே வைத்து கடையை இழுத்து பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது
    • விவசாயியான நடேசன் (வயது 45) என்பவர் எனது குடும்ப அட்டைக்கு அரிசி கொடுங்கள் என கேட்டுள்ளார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள மலையாளபட்டி கிராமத்தில் ரேஷன் கடை உள்ளது. இந்த ரேஷன் கடையில் சுமார் 900-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அந்த கடையின் விற்பனையாளர் ராஜா கடையை திறந்து வைத்து மண்எண்ணெய் விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது பூமிதானம் கிராமத்தை சேர்ந்த விவசாயியான நடேசன் (வயது 45) என்பவர் அங்கு வந்து எனது குடும்ப அட்டைக்கு அரிசி கொடுங்கள் என கேட்டுள்ளார். அப்போது விற்பனையாளர் ராஜா இந்த மாதம் வந்த அரிசி முழுமையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது. உங்களுடன் சேர்த்து 8 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி குறைவாக வந்துள்ளது. இதனை அடுத்த மாதம் முன்னுரிமை அடிப்படையில் முதலில் உங்களுக்கு வழங்குகிறோம். அப்போது வந்து வாங்கிக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார்.

    இதை ஏற்க மறுத்து ஆத்திரம் அடைந்த நடேசன் இப்போதே எனக்கு அரிசி வழங்க வேண்டும் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் யாருக்கும் எந்த பொருளும் வழங்கக்கூடாது எனக்கூறி விற்பனையாளரான ராஜாவை உள்ளே வைத்து ரேஷன் கடையின் கதவை இழுத்துப் பூட்டி உள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பந்தட்டை வட்ட வழங்கல் அலுவலர் பழனியப்பன், கிராம நிர்வாக அலுவலர் ரங்கராஜ் மற்றும் அரும்பாவூர் போலீசார் கடையை பூட்டிய நடேசனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அரிசி வந்தவுடன் உங்களுக்கு முதலில் வழங்கப்படும் என உறுதி அளித்தார்கள். இதனைத் தொடர்ந்து போராட்டத்தை நடேசன் கைவிட்டார். அதன் பின்னர் ரேஷன் கடையை திறந்து பொதுமக்களுக்கு மண்எண்ணெய் வழங்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


    • 8 அணை நீர் தேக்கமே தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்திடம் உள்ளது.
    • நீதிமன்ற தீர்ப்பின்படி பவானிசாகர் அணையின் மீன்பிடிப்பு உரிமையினை எங்கள் இரு மீனவர் கூட்டுறவு சங்க த்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலு வலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது பவானிசாகர் பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர்.

    அதில் அவர்கள் கூறியிரு ப்பதாவது:-

    நாங்கள் பவானிசாகர் அணையில் மீன் பிடிக்கும் மீனவர்கள். நாங்கள் எப்(பிஎல்) 10 பவானிசாகர் மீனவர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 322 உறுப்பினர்களும், பி.எப். 4 சிறுமுகை மீனவர்கள் கூட்டுறவு சங்கத்தில் 527 உறுப்பினர்கள் உள்ளோம்.

    மேலும் இணை உறுப்பின ர்களாக 586 உறுப்பினர்களும் என மொத்தம் 1435 நபர்கள் இரு சங்கங்களிலும் உறுப்பி னராக உள்ளோம். 622 சங்க உறுப்பினர்கள் அரசால் நியமனம் செய்யப்பட்ட பங்கு மீனவர்கள்.

    நேர்காணம் 622 பங்கு மீனவர்கள் தான் பவானி சாகர் அணையில் மீன் பிடித்து வருகிறோம். மேலும் சுமார் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மீன்பிடிப்பு சம்பந்தப்பட்ட தொழில்க ளில் ஈடுபட்டு வருகிறார்கள். எங்கள் மீன் பிடிப்புக்கு பரிசல், வலை மற்றும் இதர பொருட்களையும் எங்கள் சொந்த செலவில் செய்து வருகிறோம்.

    எங்கள் மீன் பிடிப்பு தொழிலுக்கு தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகமோ, குத்த கைதாரர்களோ எந்த உதவி யும் செய்வதில்லை.

    இதனால்தான் எங்களின் நிலைப்பாட்டை எடுத்துக் கூறி கடந்த வருடம் நவம்பர் மாதம் 21-ந் தேதி மற்றும் கடந்த மார்ச் மாதம் 6-ந் தேதி ஆகிய நாட்களில் 7 அம்ச கோரிக்கை வலி யுறுத்தி கடிதம் அளித்தோம்.

    தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் எவ்வித கோரி க்கைகளையும் நிறைவேற்ற முடியாது என்று கூறி விட்டார்கள்.

    எனவே பவானி சாகர் அணையின் மீன்பிடிப்பு குத்தகை உரிமையினை இரு கூட்டுறவு சங்கங்களுக்கும் வழங்கும் பட்சத்தில் பங்கு மீனவர்களின் 7 அம்ச கோரிக்கைகளை இரு கூட்டுறவு சங்கமும் வழங்கும் என்று கூறி யிருந்தோம்.

    அதற்கும் எந்தவித பதி லும் சொல்லவில்லை. இதனை அடுத்து நீதிமன்ற த்தில் வழக்கு தொடர்ந்து அரசாணை எண் 332-ன் படி சில நிபந்தனைகளுடன் கூட்டுறவு சங்கத்திற்கே மீன்பிடிப்பு உரிமையினை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

    தமிழ்நாட்டில் 56 அணை நீர் தேக்க மீன்பிடிப்பு, மீன் துறை வசம் உள்ளது. அதில் பெரும்பாலான நீர் தேக்க ங்கள் மீனவர் கூட்டுறவு சங்கமே நடத்துகிறது. உதாரணமாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணை மிகப்பெரிய நீர் சேர்க்கும் ஆகும். அதையே மீனவர் கூட்டுறவு சங்கமே நடத்து கிறது. இவ்வாறு இருக்க மொத்தம் 8 அணை நீர் தேக்கமே தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்திடம் உள்ளது.

    இந்நிலையில் தனியா ருக்கு மீன்பிடிக்க குத்தகை க்கு விடப்படுவதால் பங்கு மீன வர்களான நாங்கள் பெரிதும் பாதிக்கப்படு கிறோம்.

    எனவே பவானி சாகர் அணையின் மீன்பிடி ப்பினை நீதிமன்ற தீர்ப்பு ப்படி எங்கள் இரு மீனவர் கூட்டுறவு சங்கத்துடன் வழங்க வேண்டும். அல்லது பழைய முறைப்படி மீன் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.

    எனவே நீதிமன்ற தீர்ப்பின்படி பவானிசாகர் அணையின் மீன்பிடிப்பு உரிமையினை எங்கள் இரு மீனவர் கூட்டுறவு சங்க த்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஓராண்டு க்கு செலுத்த வேண்டிய மீன் பிடிப்பு குத்தகை தொகை, 5 ஆண்டுகள் செலுத்த வேண்டிய ராயல்டி தொகை, மீனவர் நல வாரியத்துக்கு செலுத்த வேண்டிய பங்கு தொகை, முன்வைப்பு தொகை ஆகியவற்றை எங்கள் இரு சங்கத்திடமும் பெற்றுக் கொண்டும் இதுவரை இடைக்காலமாக மீன் துறையோ அல்லது தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகமோ மீன்பிடிப்பினை நடத்தி எங்கள் பங்கு மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

    • மதுரை அரசு ஆஸ்பத்திரி முன்பு இடையூறாக இருந்த 11 கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது.
    • இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    மதுரை

    மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக் கானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். தென் மாவட்டங்களில் முக்கிய மருத்துவமனையாக உள்ள இங்கு விபத்து, தீக்காய சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் உள்ளன.

    இதன் காரணமாக அண்டை மாவட்டங்களான சிவகங்கை, தேனி, ராமநாதபு ரம், விருதுநகர், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்தும் நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்வதுண்டு. மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த சில ஆண்டுகளாக பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டிடங்கள் உரு வாக்கப்பட்டு சிகிச்சைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன.

    அதன்படி மருத்துவ மனையை விரிவாக்கம் செய்யும் நோக்கில் தற்போது அரசு ஆஸ்பத்திரி வளா கத்தில் புதிய டவுன் பஸ் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அந்த கட்டிடத்தி ற்கு சுற்றுச்சுவர் அமைப்ப தற்கு வெளிப்புறமாக இருந்த 10 கடைகள் இடையூறாக இருந்தது. இதையடுத்து கடைகளை காலி செய்யுமாறு கடந்த 6 மாதத்திற்கு முன்பு மாநகராட்சி சார்பில் உரிமையாளர்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது வரை கடைகளை காலி செய்யவில்லை.

    இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் இன்று போலீசார் பாதுகாப்புடன் அரசு ஆஸ்பத்திரி முன்பு இடையூறாக இருந்த 11 கடைகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ×