search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாகனங்களை வழிமறித்த காட்டு யானையால் பரபரப்பு
    X

    வாகனங்களை வழிமறித்த காட்டு யானையால் பரபரப்பு

    • சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இரவு மற்றும் பகல் நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது
    • வாகனங்களை காட்டு யானை வழிமறித்து நின்றதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது

    ஈரோடு

    சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானை கள் வசித்து வருகின்றன. வனப்பகுதி வழியாக அமைந்துள்ள தமிழக- கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இரவு மற்றும் பகல் நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    இந்த வழியாக கரும்பு க்கட்டுகளை ஏற்று செல்லும் லாரிகளை வழிமறித்து கரும்புகளை சமீப காலமாக யானைகள் ருசித்து வருகின்றன.

    இந்நிலையில் நேற்று மாலை பண்ணாரி அம்மன் கோவில் அடுத்துள்ள அடர்ந்த வனப் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று தேசிய நெடு ஞ்சாலையில் நடமாடியது. அப்போது அந்த வழியாக சென்ற வாகனங்களை காட்டு யானை வழிமறித்து நின்றதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது.

    திடீரென சாலை நடுவே காட்டு யானை நட மாட்டத்தை பார்த்து வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து வாகனங்களை சிறிது தொலைவிலேயே வாகன ஓட்டிகள் நிறுத்தினர். சிறிது நேரம் தேசிய நெடுஞ்சாலை யில் அங்கும் இங்குமாக சுற்றிய காட்டு யானை பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது.

    இதனைத் தொடர்ந்து வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. சாலையோர வனப்பகுதியில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடும் போது வாகனங்களில் வனவிலங்குகள் அருகே சென்று புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதை தவி ர்க்குமாறு வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×