search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீக்குளித்து"

    • உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
    • வீட்டில் இருந்த ராசையாவை காணவில்லை.

    என்.ஜி.ஓ.காலனி:

    சுசீந்திரம் அருகே உள்ள ஆண்டார்குளம் மேற்கு தெருவை சேர்ந்தவர் ராசையா (வயது 68), கூலித்தொழிலாளி. இவருக்கு கடந்த 5 வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று அவரது மனைவி மேரிலதா தனது மகளுடன் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தபோது வீட்டில் இருந்த ராசையாவை காணவில்லை.

    உடனே உள்ளே சென்று தேடிப்பார்க்கும்போது வீட்டின் குளியலறையில் மண்எண்ணை உடலில் ஊற்றி தீ வைத்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக ராசையாவை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ராசையா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மேரிலதா சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையா, சப்-இன்ஸ்பெக்டர் முத்து சாமி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செல்போன் பார்த்ததை தாயார் திட்டியதால் பரிதாபம்
    • காலை வழக்கம்போல் நிலா கல்லூரிக்கு சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு வந்தார்.

    கன்னியாகுமரி:

    பூதப்பாண்டி அருகே உள்ள மேல ஈசாந்திமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கேசவப்பிள்ளை. இவரது மகள் நிலா (வயது18).

    இவர் ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் நிலா கல்லூரிக்கு சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு வந்தார். பின்னர் வீட்டில் அவர் நள்ளிரவு செல்போன் பார்த்துக் கொண்டிருந்தார்.

    இதை பார்த்த அவரது தாயார் கண்டித்தார். இந்த நிலையில் இன்று காலை நிலா வீட்டின் பின்பகுதியில் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து பூதப்பாண்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசாரணையில், நிலா தீக்குளித்து தற்கொலை செய்து இருப்பது தெரியவந்துள்ளது. கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக மாணவிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்ட நிலாவின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடக்கிறது.

    • கணவர் கேரளாவில் கட்டிட வேலை பார்த்து வருகிறார்.
    • தக்கலை டி.எஸ்.பி. உதயசூரியன் சம்பவம் நடந்த இடத்தை பார்த்து ஆய்வு செய்தார்.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே நான்காம் திட்டுவிளை செறுகோல் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வி (வயது (57). இவர்களுக்கு ஸ்டாலின் ஜோஸ் (23) என்ற மகனும், ஷைனி (28) என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. ஸ்டாலின் ஜோஸ் கேரளாவில் கட்டிட வேலை பார்த்து வருகிறார். வாரம்தோறும் வீட்டுக்கு வருவது வழக்கம்.

    வீட்டில் செல்வராஜ் அவரது மனைவி செல்வி, மருமகள் பென்சிறோஸ் ஆகியோர் வீட்டில் வசித்து வந்தனர். சமீபகாலமாக செல்வி உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் நோய் குணமாகாததால் மன அழுத்ததில் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று காலையில் வீட்டின் பின்புற தோட்டத்தில் செல்வி தன் மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். தீ மளமளவென பிடித்து உடல் முழுவதும் பரவியது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் செல்வி உடல் கருகி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக திருவட்டார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் ஜானகி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரனை மேற்கொண்டனர்.

    மேலும் தக்கலை டி.எஸ்.பி. உதயசூரியன் சம்பவம் நடந்த இடத்தை பார்த்து ஆய்வு செய்தார். மேலும் போலீஸ் மோப்ப நாய் குக்கி வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. செல்வியின் கணவர் செல்வராஜ் திருவட்டார் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்வி தற்கொலை செய்தது ஏன்? என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சேலம் மணியனூர் பொடரன்காடு பகுதியைச் சேர்ந்த குழந்தையம்மாள் தீயில் கருகி இறந்து கிடந்தார்.
    • விசாரணையில் மூதாட்டி குழந்தையம்மாளுக்கு அடிக்கடி உடல் நலம் சரி இல்லாமல் இருந்து வந்துள்ளது.

    சேலம்:

    சேலம் மணியனூர் பொடரன்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி இவரது மனைவி குழந்தையம்மாள் (வயது 90). இவர் மேல்மாடியில் வசித்து வருகிறார். கீழ் மாடியில் மகன் மாதேஷ் வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை பேரன் பாட்டிக்கு காபி கொடுப்பதற்காக மாடிக்கு சென்றார். அப்போது குழந்தையம்மாள் தீயில் கருகி இறந்து கிடந்தார்.

    இது குறித்து அன்னதானப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மூதாட்டி குழந்தையம்மாளுக்கு அடிக்கடி உடல் நலம் சரி இல்லாமல் இருந்து வந்துள்ளது.

    இதனால் மன உடைந்த அவர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து இறந்தது தெரியவந்ததுள்ளது.

    • சிவகாமி வீட்டில் யாரும் இல்லாத போது அவரது உடலில் கடலெண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார்.
    • அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் பி.ஆர்.ஆர். நகரை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மனைவி சிவகாமி (74). இவர் உடல் நிைல சரியில்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    இதனால் அவர் வேதனை அடந்து மனம் உடைந்து வந்தார். இந்த நிலையில் சிவகாமி வீட்டில் யாரும் இல்லாத போது அவரது உடலில் கடலெண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார்.

    இதில் அவர் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக கோபி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிவகாமி இறந்தார்.

    இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மதுக்குடிக்க பணம் தராததால் மன வேதனையில் வாலிபர் தீ குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஜே.ஜே.நகர் பகுதியை சேர்ந்தவர் சிவா என்ற செந்தில்குமார்(48). கூலி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி(45). நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணையில் தங்கி வேலை பார்த்து வருகிறார். செந்தில்குமார் அவரது அம்மா பத்மாவுடன் வசித்து வந்தார்.

    செந்தில்குமாருக்கு மதுப்பழக்கம் இருப்பதால், கடந்த 3-ந் தேதி மதுகுடிக்க அவரது அம்மாவிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால், அவர் தர மறுத்ததால் மனவேதனை அடைந்த செந்தில்குமார் வீட்டில் இருந்த மண் எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

    செந்தில் குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • சென்னிமலை அருகே கடந்த 15 வருடமாக வள்ளியத்தாளுக்கு மூட்டுவலி இருந்து வந்துள்ளது. இருப்பினும் மூட்டு வலி குணமாக வில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டார்
    • இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அரச்சலூர் ரோடு, எம்.எஸ்.கே. நகரைச் சேர்ந்தவர் வள்ளியாத்தாள் (85). தனது மகன் குமாருடன் வசித்து வருகிறார். கடந்த 15 வருடமாக வள்ளியத்தாளுக்கு மூட்டுவலி இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் சிகிச்சை எடுத்து வந்தார். இருப்பினும் மூட்டு வலி குணமாக வில்லை என கூறப்படுகிறது.

    எனவே கடந்த சில மாதங்களாக வள்ளியாத்தாள் நடக்க முடியாமல் கடும் அவதி அடைந்து மன வருத்தத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வள்ளியாத்தாள் வீட்டின் கழிப்பறைக்கு சென்று மண் எண்ணை தனக்குத்தானே ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு மகன், மருமகள், பக்கத்து வீட்டு சேர்ந்தவர்கள் ஓடிவந்து மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கோவையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி வள்ளியாத்தாள் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×