அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றம்

கடந்த 3 நாட்களுக்கு முன்பு வைத்தனர் போலீஸ் பாதுகாப்புடன் நடவடிக்கை
அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றம்
Published on

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுக்காநல்லூரில் உள்ள புறம்போக்கு இடத்தில் காட்டுக்காநல்லூர் கிராமத்தில் ஆதி திராவிடர் நலத்துறை மூலம் நில எடுப்பு செய்யப்பட்டிருந்தது.

இங்கு அருந்ததியர் இன மக்களுக்கு வீட்டுமனைகள் வழங்கப்பட்டு அவர்கள் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.

இங்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு அதிகாலை விநாயகர் சிலையை அனுமதியின்றி வைத்திருந்தனர்.

இதனை அவர்களே அகற்றும்படி தெரிவித்தும் மேற்படி இடத்தில் பிள்ளையார் சிலையை அகற்றவில்லை.

இதனையடுத்து ஆரணி தாசில்தார் மஞ்சுளா தலைமையில் அளவீடு செய்யப்பட்டதில் அந்த இடம் தெரு என்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து வருவாய்த்துறையினர் கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் ஊராட்சி நிர்வா கத்தினருடன் இணைந்து விநாயகர் சிலையை அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com