search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பங்கேற்பு"

    • காங்கிரஸ் கட்சியினர் பேரணியில் ப.சிதம்பரம் எம்.பி. பங்கேற்றார்.
    • சிவகங்கை மாவட்ட தலைவர் சஞ்சய் காந்தி நன்றி கூறினார்.

    காரைக்குடி

    ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் பேரணி நடத்தினர்.காரைக்குடி பழைய பஸ் நிலையத்தில் தொடங்கிய இந்த பேரணியை முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் எம்.பி. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    கார்த்தி சிதம்பரம் எம்.பி., மாங்குடி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர். இதில் சிதம்பரம் எம்.பி. பேசுகையில், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் சிறப்பு வாய்ந்த தாகும். இந்த தேசத்தின் ஒற்றுமைக்காக காங்கிரஸ் கட்சி எப்போதும் பாடுபடும்.இந்து முஸ்லீம், இந்து கிறிஸ்தவர் இடையே ஒற்றுமை ஓங்க வேண்டும் என்றார்.

    இதில் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் சுப்புராம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகதாஸ், மாநில மகிளா காங்கிரஸ் துணை தலைவி ஸ்ரீவித்யா கணபதி, மாவட்ட மகளிரணி தலைவி இமய மடோனா, காரைக்குடி நகர தலைவர் பாண்டி, தேவகோட்டை நகர தலைவர் சஞ்சய், மாவட்ட துணை தலைவர் அப்பச்சி சபாபதி, நகர செயலாளர் குமரேசன்.

    மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரவீன், துணை தலைவர் பாலா, நகர்மன்ற உறுப்பினர்கள் ரத்தினம், அமுதா, அஞ்சலிதேவி, ஊராட்சி மன்ற தலைவர்கள் தேவி மாங்குடி, அண்ணா துரை, காமராஜ், ஒன்றிய கவுன்சிலர் கோவிலூர் அழகப்பன், வட்டார தலைவர்கள் கருப்பையா, செல்வம், வர்த்தக அணி ஜெயப் பிரகாஷ் உள்பட நிர்வா கிகள், மகளி ரணியினர், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து ராஜீவ் காந்தி சிலை அருகே நிறைவு பெற்றது. சிவகங்கை மாவட்ட தலைவர் சஞ்சய் காந்தி நன்றி கூறினார்.

    • தேவகோட்டை அருகே ஏழுவன்கோட்டை அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகத்தில் திரளானோர் பங்கேற்றனர்.
    • கோவில் கோபுரங்கள், பிரகாரங்கள் சீரமைக்கும் பணி நடந்தது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள ஏழுவன்கோட்டை கிராமத்தில் பழமையான அகிலாண்டேஸ்வரி அம்பாள்- விஸ்வநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபி ஷேகம் நடத்த சில மாதங்க ளுக்கு முன்பு பாலாலயபூஜை நடத்தப்பட்டு கோவில் கோபுரங்கள், பிரகாரங்கள் சீரமைக்கும் பணி நடந்தது.

    அந்த பணிகள் முடி வடைந்த நிலையில் கடந்த 4 நாட்களாக கோவில் அருகே உள்ள வளாகத்தில் யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று யாகசாலை பூஜைகள் முடிந்து சிவாச்சா ரியார்கள் புனித நீரை கோபுர கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி னர்.

    முன்னதாக சிவனடியார் கள் மேளதாள வாத்தியங்கள் முழங்க சிவகங்கை சமஸ்தான அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் மற்றும் தென்னிலை நாட்டார்கள் தலைமையில் ஊர்வலம் நடந்தது. அதனை தொடர்ந்து சுவாமி -அம்பாள் மூலஸ்தானங்க ளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்ட னர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • 1000-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு தங்களது பழைய பூணூலை மாற்றி புதிய பூணூலை போட்டுக்கொண்டனர்.
    • ஆவணி அவிட்ட தினத்தில் விரதம் இருந்து பூணூல் அணிந்து கொண்டால் குடும்பத்தில் எந்த துன்பமும் நெருங்காது என்பது ஐதீகம்.

    கோவை.

    ஆவணி மாதம் வரும் அவிட்ட நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி நாளில் ஆவணி அவிட்டம் கடைபிடிக்கப்படுகிறது.

    ஆண்டு சடங்கு உபநயனம் செய்து கொண்ட பிராமணர்கள் ஆவணி அவிட்டத்தன்று பழைய பூணூலை மாற்றி விட்டு புது பூணூலை அணிந்து கொள்வது வழக்கம்.

    கோவையில் ராஜா வீதியில் உள்ள சங்கர மடம், ராம் நகரில் உள்ள ராமர் கோவில், மற்றும் சித்தாபுதூரில் உள்ள அய்யப்பன் கோவிலில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு தங்களது பழைய பூணூலை மாற்றி புதிய பூணூலை போட்டுக்கொண்டனர்.

    விநாயகர் வழிபாட்டுடன் துவங்கிய நிகழ்ச்சியில் உபநயனம் பெற்ற பிராமணர்கள் தங்கள் பூணூல்களை மாற்றி வேத ஆகமங்களின் படி வழிபட்டனர். முன்னதாக வேத மந்திரங்கள் ஓத, கணபதி ஹோமமும் நடந்தது.

    ஆவணி அவிட்டம் என்பது ஆண்கள் மட்டுமே கடைபிடிக்கும் விரதமாகும். ஆவணி மாத பவுர்ணமி அன்று வரும் அவிட்ட நட்சத்திரத்தில் பிராமணர்கள் மற்றும் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த சிலர் மட்டுமே இந்த விரத்தை கடைபிடிக்கின்றனர்.

    முன்னோர்களின் வழி பாட்டிற்கு பிறகு பூணூலை மாற்றிக் கொண்டு தங்கள் வேதங்களை படிக்க தொடங்குவார்கள். இதுவே சமஸ்கிருதத்தில் உபகர்மா என்று அழைக்கப்படுகிறது. உபகர்மா என்பதற்கு தொடக்கம் என்று அர்த்தம். இந்த உபகர்மாவே தமிழில் ஆவணி அவிட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆவணி அவிட்ட தினத்தில் விரதம் இருந்து பூணூல் அணிந்து கொண்டால் குடும்பத்தில் எந்த துன்பமும் நெருங்காது என்பது ஐதீகம்.

    • தர்கா சந்தனக்கூடு விழாவில் திரளானோர் பங்கேற்றனர்.
    • சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

    பசும்பொன்

    கமுதியில் பிரசித்தி பெற்ற முஸாபர் அவுலியா தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா வருடா வருடம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருட சந்தனக்கூடு திருவிழா கடந்த 18-ந்தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நேற்று முன்தினம் நள்ளிரவு சந்தன கூடு திருவிழா நடைபெற்றது. முன்னதாக கமுதி- சுந்தரபுரம் தைக்கா வீட்டில் இருந்து இந்த சந்தன கூடு ஊர்வலம் புறப்பட்டது.தர்ஹா வின் நிர்வாக தலைவரும், பேரூராட்சி தலைவருமான அப்துல் வஹாப் சகாராணி மலர்களால் அலங்கரிக் கப்பட்ட சந்தன குடத்தை, அலங்கார மின் விளக்கு களால் அலங்கரிக்கப்பட்ட சந்தன கூட்டில் வைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.

    ஏராளமான முஸ்லிம் மற்றும் இந்துக்கள் கலந்து கொண்ட இந்த ஊர்வலத்தின் முன்பு இளைஞர்கள் தீப்பந் தாட்டம் சுற்றி கொண்டே சென்றனர். இரவு முழுவதும் முஸ்லிம் பஜார் மற்றும் முஸ்லிம் தெருக்கள் வழியாக சென்ற இந்த சந்தனக்கூடு ஊர்வ லம் அதிகாலை தர்ஹாவை வந்தடைந்தது. இந் நிகழ்ச்சியில் சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

    • மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் பங்கேற்றார்.
    • அரசு மானியத்துடன் கூடிய பல்வேறு கடனுதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    மதுரை

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டம் பேய்குளம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில் கலெக்டர் சங்கீதா கலந்து கொண்டு பல்வேறு துறைகளின் சார்பில் 250 பயனாளி களுக்கு ரூ.1 கோடியே 1 லட்சத்து 6 ஆயிரத்து 394 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் கலெக்டர் பேசியதாவது:-

    ஊரக பகுதிகளை தன்னி றைவு பெற்ற கிராமங்களாக மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்க ளுக்கு அத்தியாவசிய அடிப்படைத் தேவைகளான கல்வி, உணவு, சுகாதாரம் ஆகிய திட்டப்பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன.

    விவசாயிகள் தங்களது வேளாண் உற்பத்தி பொருட்களை மதிப்புக்கூட்டு செய்வதன் மூலம் அதிக வருவாய் பெறலாம். இதற்காக அரசு மானியத்துடன் கூடிய பல்வேறு கடனுதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சாந்தி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சவுந்தர்யா, மாவட்ட சமூக நல அலுவலர் பரமேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போட்டியில் பங்கேற்க வரும் போது ஆதாா் அட்டை கொண்டுவர வேண்டும்.
    • போட்டிகள் அனைத்தும் நாக்-அவுட் முறையில் நடத்தப்படும்.

    திருப்பூர்,ஆக.21-

    கோவை ஈஷா யோகா மையம், திருப்பூா் மாவட்ட அமெச்சூா் கபடி கழகம் சாா்பில் நடைபெற உள்ள மாவட்ட அளவிலான கபடிப் போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட அமெச்சூா் கபடிக் கழகத்தின் செயலாளா் ஜெயசித்ரா ஏ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கோவை ஈஷா யோக மையம், திருப்பூா் மாவட்ட அமெச்சூா் கபடிக்கழகம் சாா்பில் மாவட்ட அளவிலான கபடிப் போட்டி வருகிற 26-ந் தேதி காயத்ரி மஹாலில் நடைபெறுகிறது. இதில், திருப்பூா் மாவட்டத்தில் உள்ள ஆண்கள், பெண்கள் கபடி அணிகள் கீழ்க்கண்ட விதிகளின்படி பங்கேற்கலாம்.

    அகில இந்திய அமெச்சூா் கபடிக் கழகத்தின் விதிமுறைகளைப் பின்பற்றி நடைபெறும் போட்டியில் பங்கேற்க திருப்பூா் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். போட்டியில் பங்கேற்க வரும் போது ஆதாா் அட்டை கொண்டுவர வேண்டும். ஆண்கள் 85 கிலோவுக்கு மிகாமலும், பெண்கள் 75 கிலோவுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

    மத்திய, மாநில அரசு ஊழியா்கள், செட்டிங் அணி, நிறுவன அணிகள் பங்கேற்க இயலாது. போட்டிகள் அனைத்தும் நாக்-அவுட் முறையில் நடத்தப்படும். இதில், பங்கேற்கவுள்ள அணிகள் ஈஷா யோக மையத்தின் இணையதளத்தில் ஆகஸ்ட் 23 ந் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

    ஆண்கள் பிரிவில் முதலிடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.12 ஆயிரம் மற்றும் கோப்பை, 2-வது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.8 ஆயிரம் மற்றும் கோப்பை, மூன்று மற்றும் நான்காவது இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்படும்.

    பெண்கள் பிரிவில் முதலிடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பை, 2-வது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.6 ஆயிரம் மற்றும் கோப்பை, 3 மற்றும் 4-வது இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்படும்.

    இதில் சிறப்பாக விளையாடும் வீரா், வீராங்கனைகள் தலா 12 போ் தோ்வு குழுவினரால் திருப்பூா் மாவட்ட அணிக்கு தோ்வு செய்யப்படுவாா்கள். தோ்வு செய்யப்பட்ட வீரா், வீராங்கனைகளுக்கு பயிற்சி முகாம்கள் நடத்தி கோவையில் செப்டம்பா் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள மண்டல அளவிலான போட்டிக்கு மாவட்ட கபடிக் கழகத்தின் சாா்பில் அழைத்துச் செல்லப்படவுள்ளனா்.

    இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 83000-30999 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ம.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஆர்ப்பாட்டத்தில் அனைத்து சமுதாய மக்கள் மற்றும் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் மீதான தாக்கு தலை கண்டித்து ராமநாத புரம் மாவட்டம் தொண்டி யில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.

    த.மு.மு.க. மற்றும் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் தலைமை வகித்தார். த.மு. மு.க. மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஒன்றிய தலை வர் பீர் முகமது வரவேற்றார்.

    ம.ம.க. மாவட்ட செயலா ளர் வழக்கறிஞர் ஜிப்ரீ, த.மு.மு.க. மாவட்ட செயலா ளர் பொறியாளர் ஜாவித் அசாம், த.மு.மு.க. மாவட்ட துணை தலைவர் யான்பு இப்ராஹிம், ம.ம.க. மாவட்ட துணை செயலாளர்கள்.

    தொண்டி ராஜ் உபை துல்லா, நிசார் அஹமத், வட்டார ஐக்கிய ஜமாத் தலைவர் அயூப் கான், இந்து தர்ம பரிபாலன சபை நிர் வாகி ராஜா, தொண்டி பங்குத்தந்தை வியாகுல அமிர்தராஜ், தொண்டி ஐக்கிய ஜமாத் தலைவர் ஹிப்பத்துல்லா, மாவட்ட ஜமாத்துல் உலமா செயலா ளர் முகமது ஜலாலுதீன் அன்வாரி, பைத்துல் மால் தலைவர் சையது அலி ஒன்றிய ம.ம.க. செயலாளர் காமராஜ் ஜின்னா மலைராஜ் ஆகியோர் முன்னிலை வகித் தனர்.

    த.மு.மு.க. மாநில செய லாளர் தொண்டி சாதிக் பாட்சா த.மு.மு.க. தலைமை பிரதிநிதி மண்டலம் ஜெயி னுலாப்தின் த.மு.மு.க. தலைமைக் கழகத்தின் பேச் சாளர் சனாவுல்லா , இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் பாலசுப் பிரமணியன், விடுதலை சிறுத்தை கட்சி திருவாடனை ஒன்றிய செயலாளர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் பேசி னர்.

    ஆர்ப்பாட்டத்தில் அனைத்து சமுதாய மக்கள் மற்றும் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். த.மு.மு.க.வின் தொண்டி பேரூர் தலைவர் நன்றி கூறினார்.

    • உலக புலிகள் தினவிழா ஆண்டு தோறும் ஜூலை 29-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
    • ஒவ்வொரு பள்ளிகளும் ஒரு போட்டிக்கு வகுப்பு வாரியாக 3 பேர் தேர்வு செய்து அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

     உடுமலை:

    உலக புலிகள் தினவிழா ஆண்டு தோறும் ஜூலை 29-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உலக புலிகள் தின விழா சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டு உள்ளது. அப்போது புலிகளின் முக்கியத்துவம் குறித்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தெரிவிக்கும் வகையில் போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    இந்தப் போட்டிகள் ஊடுமலை-பழனி சாலையில் உள்ள ராஜலட்சுமி கெங்குசாமி நாயுடு மேல்நிலைப்பள்ளி, திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காங்கயம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.மாணவ- மாணவிகள் போக்குவரத்து வசதிக்கேற்ப இந்த மையங்களில் கலந்து கொண்டு போட்டிகளில் பங்கு பெறலாம்.

    இது குறித்து ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவேந்திர குமார் மீனா கூறி இருப்பதாவது:-

    ஓவியப்போட்டி காலை 10 மணி முதல் 12 மணி வரையில் நடக்கிறது. எல்.கே.ஜி. முதல் 1-ம் வகுப்பு வரையில் நமது தேசிய விலங்கு புலி என்ற தலைப்பிலும், 2-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை வனநிலப்பரப்பில் புலிகள் என்ற தலைப்பிலும், 6 - ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை புலி மற்றும் அதன் இரைவிலங்குகள் என்ற தலைப்பிலும், 9-ம் வகுப்பு முதல் 12- ம் வகுப்பு வரை புலிகள் அழிவிற்கான காரணிகள் மற்றும் அச்சுறுத்தல்கள் என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவர்களுக்கு புலிகள் வாழ்கின்ற பகுதியின் சூழ்நிலை என்ற தலைப்பிலும் நடக்கிறது.

    இதற்கான சாட் மற்றும் வண்ண உபகரணங்களை மாணவர்களே கொண்டு வர வேண்டும். கட்டுரைப்போட்டி மதியம் 12:15 மணி முதல் 1.30 மணி வரை நடைபெறும். இந்த போட்டியானது 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு புலிகள் ஏன் தேசிய விலங்கு என குறிப்பிடப்படுகிறது என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவர்களுக்கு வன நிலப்பரப்பில் புலிகளின் முக்கியத்துவம் மற்றும் அதன் பாதுகாப்பு என்ற தலைப்பிலும் நடக்கிறது. ஒவ்வொரு பள்ளிகளும் ஒரு போட்டிக்கு வகுப்பு வாரியாக 3 பேர் தேர்வு செய்து அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இந்தப் போட்டிக்கு உடுமலை வனச்சரக அலுவலர் சிவக்குமார்-9487987173 உயிரியலாளர் மகேஷ்குமார்- 6369269722,9486192183, திருப்பூர் வனச்சரக அலுவலர் சுரேஷ் கிருஷ்ணன்-9688414468 திருப்பூர் வனவர் முருகானந்தம்-9585563002 காங்கயம் வனச்சரக அலுவலர் தனபாலன்-7094639223.காங்கயம் வனக்காப்பாளர் செல்வராஜ் -8903428422) ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    போட்டிகள் தொடர்பாக மேலும் விவரம் தேவைப்படுவோர் மேலே உள்ள செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்குவது குறித்த இடம் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.   

    • அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்பு
    • முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய களரி அடிமுறை பாகம்-1 நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடை பெற்றது.

    கன்னியாகுமரி:

    தக்கலையில் இந்திய பாரம்பரிய கலை இலக்கிய பேரவை சார்பில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சி 15 நாட்கள் நடைபெறுகிறது. இதில் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய களரி அடிமுறை பாகம்-1 நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடை பெற்றது.

    விழாவுக்கு பேரவை தலைவர் சிவனி சதீஷ் தலைமை தாங்கினார். ராச கோகிலா அறக்கட்டளை தலைவர் வக்கீல் ராஜ கோபால், வேநாடு அகாடமி கவுரவ தலைவர் சுவாமி யார்மடம் கிறிஸ்துதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்த னர். அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தின ராக கலந்துகொண்டு நூலை வெளியிட களரி அடிமுறை உலக கூட்டமைப்பு செயல் அதிகாரி செந்தில் ராஜகுமார் பெற்று கொண்டார். களரி அடிமுறை உலக கூட்டமைப்பு நிறுவனர் ரமேஷ் ரத்தின குமார், முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் தமிழக கலை குறித்து பேசினார். கொல்லன்விளை மது நன்றி கூறினார். நிகழ்ச்சியை சமூக ஆர்வலர் கிரிஜா மணி தொகுத்து வழங்கினார்.

    • காரைக்குடி அருகே அரியநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • இதில் அமைச்சர்கள், எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

    காரைக்குடி

    காரைக்குடி அருகே கீழாநிலைக்கோட்டையில் உள்ள அரியநாயகி அம்மன் கோவில் மகாகும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி அருகே கீழாநிலைக்கோட்டையில் அரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து கடந்த

    25-ந்தேதி அனுக்ஜை, விக்னேசுவஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.வேத மந்திரங்களும் வேத பாராயணங்களும் முழங்க பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார் தலைமை யில் சிவாச்சாரியார்கள் 6 கால யாக பூஜைகளை நடத்தினர். பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது.

    விழாவில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எம்.பி., தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி, தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் துறை அமைச்சர் மெய்யநாதன், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, திருநாவுக்கரசர் எம்.பி., தொழிலதிபர் செல்லப் பன் அம்பலம், பி.எல்.படிக்காசு அம்பலம், செல்லப்பன் வித்யா மந்திர் தாளாளர் சத்தியன், தொழிலதிபர்கள் பி.எல்.பி. பாலசுப்பிரமணியன், பி.எல்.பி. பெரியசாமி, மாங்குடி எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புராம், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.ஆர்.ஆனந்த், பள்ளத்தூர் பேரூராட்சி சேர்மன் சாந்தி சங்கர், சங்கராபுரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாண்டியராஜன், ராஜேஷ்கண்ணன், சேகர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை 84 நாட்டு நாட்டார்கள், அம்பலக்காரர்கள், மற்றும் விழா கமிட்டியினர் செய்து இருந்தனர்.

    • ஒரு மாதம் நடக்கும் இப்போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 38 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.
    • ஜூலை 1-ந்தேதி முதல் ஒவ்வொரு போட்டிகளிலும் பங்கு பெறுகின்றனர்.

    திருப்பூர்:

    மாநில முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி வருகிற 30-ந் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் துவங்குகிறது. ஒரு மாதம் நடக்கும் இப்போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 38 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தடகளம் - 56, கூடைப்பந்து - 48, பேட்மின்டன் - 21, கிரிக்கெட் - 75, சதுரங்கம் - 2, கால்பந்து - 72, கபடி - 103, சிலம்பம் - 27, நீச்சல் - 6, டேபிள் டென்னிஸ் - 5, த்ரோபால் - 14, ஆக்கி - 72, வாலிபால் - 96, , பளு தூக்குதல் - 1, டென்னிஸ் - 2 பேர் என மொத்தம் 603 பேர் சென்னை செல்கின்றனர்.

    அதிகபட்சமாக பள்ளி மாணவ, மாணவிகள் 220 பேர், கல்லூரிகளை சேர்ந்த 207 பேர், பொதுமக்கள் 85 பேர், அரசு ஊழியர் 62 பேர், மாற்றுத்திறனாளி 29 பேர் பங்கேற்க உள்ளனர். இவர்கள் ஜூலை 1-ந்தேதி முதல் ஒவ்வொரு போட்டிகளிலும் பங்கு பெறுகின்றனர்.

    • மதுரையில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தமிழகத்தில் 3,600 பார்கள் லைசென்ஸ் இல்லாமல் நடந்துள்ளது.

    மதுரை

    தமிழகத்தில் நடைபெற்று வரும் ஊழல் முறைகேடுகள், அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் ஆகிய வற்றை கண்டித்தும், அமலாக்கத்து றையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் அ.தி.மு.க. சார்பில் மதுரையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்று பேசினர்.

    ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசுகையில் ''தமிழ கத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் இதய அறுவை சிகிச்சைகள் வெற்றி கரமாக நடைபெறு கிறது. ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. செந்தில் பாலாஜியை முதல்வர் ஸ்டாலின் காப்பாற்றி வருகிறார்.

    அ.தி.மு.க. இன்னும் ஒராண்டில் ஆட்சிக்கு வர போகிறது. தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்கள் தயாராக உள்ளனர் என்றார்''.

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

    அ.தி.மு.க.வில் இருந்து செந்தில் பாலாஜி சென்றார் எனும் தகுதியை இழந்து விட்டார். டாஸ்மாக்கில் ஒரு நாளுக்கு ஒரு கோடி என 2 வருடத்தில் ரூ.7,200 கோடியை ஊழல் செய்து உள்ளார். செந்தில் பாலாஜி, ஊழல் குறித்து கேட்ட நமக்கே நெஞ்சுவலி வருகிறது. ஊழல் செய்த செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி வராதா?, சென்னை மழை பாதிப்பை ஆய்வு செய்யாமல் முதல்வர் கலைஞர் கோட்டம் திறக்க திருவாரூர் சென்று விட்டார்.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை ராஜ்நாத் சிங் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் உறுதி செய்து விட்டார், அ.தி.மு.க. ஆட்சியில் 4 ஆண்டுகளில் ஒரு பைசா கூட மின்சார கட்டணம் உயர்த்தவில்லை. தி.மு.க. ஆட்சி வீட்டுக்கு போகும் வரை அதி.மு.க.வினர் உறங்க கூடாது. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-

    ஸ்டாலினுக்கு மக்கள் படும் துன்பங்கள் தெரிகிறதா? தெரியவில்லையா?, கருணாநிதி காலம் தொட்டு தி.மு.க. பொய்யை சொல்லியே ஆட்சிக்கு வந்துள்ளது, கருணாநிதி காலத்தில் நம்முடைய ஜீவாதார உரிமைகளை விட்டு கொடுத்தார், தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து உள்ளது,

    புதுவிதமாக கஞ்சா மிட்டாய் விற்பனைக்கு வந்துள்ளது. தமிழகத்தில் 3,600 பார்கள் லைசென்ஸ் இல்லாமல் நடந்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி வசமாக மாட்டி கொண்டார். செந்தில் பாலாஜி தன்னை பாதுகாத்து கொள்ள நெஞ்சுவலி என சொல்ல வில்லை.பைபாஸ் சர்ஜரிக்கு 3 நாள் ஓய்வு போதும். ஆனால் இவர்கள் 3 மாதம் ஓய்வு கேட்பதை பார்த்தால் சந்தேகமாக தான் இருக்கிறது.

    இந்த ஆட்சியில் சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றாகவும் இருக்கிறது, இந்த ஆட்சியில் கலெக்டருக்கு கூட பாதுகாப்பு இல்லை. அரசு அதிகாரிகள் கொலை செய்யப்படுகிறார்கள். இவர்களது ஆட்சியில் எந்த துறையும் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை.

    அதி.மு.க. ஆட்சி காலத்தில் மக்கள் சுதந்திரமாக செயல்பட்டு வந்தார்கள், நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும், ஆகஸ்ட் 20-ந் தேதி மதுரையில் நடைபெறும் மாநாடு அதி.மு.க.விற்கு புகழை சேர்க்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×