தக்கலையில் புத்தக கண்காட்சி

அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்புமுத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய களரி அடிமுறை பாகம்-1 நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடை பெற்றது.
தக்கலையில் புத்தக கண்காட்சி
Published on

கன்னியாகுமரி:

தக்கலையில் இந்திய பாரம்பரிய கலை இலக்கிய பேரவை சார்பில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சி 15 நாட்கள் நடைபெறுகிறது. இதில் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய களரி அடிமுறை பாகம்-1 நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடை பெற்றது.

விழாவுக்கு பேரவை தலைவர் சிவனி சதீஷ் தலைமை தாங்கினார். ராச கோகிலா அறக்கட்டளை தலைவர் வக்கீல் ராஜ கோபால், வேநாடு அகாடமி கவுரவ தலைவர் சுவாமி யார்மடம் கிறிஸ்துதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்த னர். அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தின ராக கலந்துகொண்டு நூலை வெளியிட களரி அடிமுறை உலக கூட்டமைப்பு செயல் அதிகாரி செந்தில் ராஜகுமார் பெற்று கொண்டார். களரி அடிமுறை உலக கூட்டமைப்பு நிறுவனர் ரமேஷ் ரத்தின குமார், முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் தமிழக கலை குறித்து பேசினார். கொல்லன்விளை மது நன்றி கூறினார். நிகழ்ச்சியை சமூக ஆர்வலர் கிரிஜா மணி தொகுத்து வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com