search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நினைவு தினம்"

    • இறந்த குழந்தைகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக மலர் தூவி அவர்களின் புகைப்படங்களுக்கு மரியாதை செலுத்தினர்.
    • மாலை அணிவித்து , புத்தாடைகள் வைத்து கண்ணீரை காணிக்கையாக செலுத்தினர்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி காசிராமன் தெரு ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் பள்ளியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அத்துடன் 19 குழந்தைகள் காயமடைந்தனர்.

    இந்த துயர சம்பவம் தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. ஆண்டுதோறும் இறந்த குழந்தைகளின் நினைவு தினம் ஜூலை 16-ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று 19 ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி குழந்தைகளை இழந்த பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் இறந்த குழந்தைகளின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து , புத்தாடைகள் வைத்து கண்ணீரை காணிக்கையாக செலுத்தினர்.

    பல தன்னார்வ அமைப்பினரும், அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் இறந்த குழந்தைகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக மலர் தூவி அவர்களின் புகைப்படங்களுக்கு மரியாதை செலுத்தினர்.

    இந்த துயர சம்பவம் நடந்து 19 ஆண்டுகள் ஆகினும், இன்னும் பிஞ்சு குழந்தைகளை இழந்த தாக்கம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மத்தியிலிருந்து இன்னும் விலகவில்லை.

    • குமரி தந்தை மார்சல் நேசமணியின் 55-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
    • ஆவின் என்பது பொதுத்துறை நிறுவனம் ஆகும்.

    கன்னியாகுமரி:

    குமரி தந்தை மார்சல் நேசமணியின் நினைவு தினம் இன்று அனு சரிக்கப்பட்டது. இதையடுத்து நாகர்கோவில் வேப்பமூடு மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    கலெக்டர் ஸ்ரீதர், பிரின்ஸ் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், மாநகராட்சி துணை மேயர் மேரிபிரின்சி லதா, நேச மணியின் பேரன் ரஞ்சித் அப்பல்லோஸ், தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து அமைச்சர் மனோதங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குமரி தந்தை மார்சல் நேசமணியின் 55-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைய வரலாற்று சிறப்புமிக்க போராட்டம் நடத்தி அதில் வெற்றி பெற்றவர் மார்சல் நேசமணி. அவருடன் பயணித்த பல்வேறு தலைவர்கள், துப்பாக்கி சூட்டில் பலியான தியாகங்கள், தியாக செம்மல்களை வணங்குகிறேன்.

    தமிழகத்தில் பால் உற்பத்தியை பெருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டந்தோறும் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆவின் என்பது பொதுத்துறை நிறுவனம் ஆகும்.

    இந்த நிறுவனத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியை பெருக்குவதுடன் பொதுமக்களுக்கு தரமான பால் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தமிழக முதல்- அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் ஆவின் விலை ரூ.30 குறைத்ததுடன் உற்பத்தியாளர்களுக்கு ரூ.3 அதிகமாக வழங்கினார். தற்பொழுது ஆவினில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    தமிழகம் முழுவதும் தட்டுப்பாடு இன்றி பால் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். ஆவின் நிர்வாகம் தற்போது நஷ்டத்தில் இயங்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிரதமர் மோடி குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு இருந்தார். அது குறித்து நிருபர்கள் கேட்டபோது கருத்து கூறுவது அவரவர் அடிப்படை உரிமை என்று கூறினார்.

    • தேர்தல் பிரச்சாரத்துக்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு குண்டு வைத்து கொல்லப்பட்டார்.
    • ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    டெல்லி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 32வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    முன்னதாக ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் மே 21-ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தில் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூருக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருவதாக தகவல் வெளியான நிலையில் அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தேர்தல் பிரச்சாரத்துக்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு குண்டு வைத்து கொல்லப்பட்டார் என்பது நினைவு கூறத்தக்கது.

    • நீத்தார் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
    • பொது மக்கள் கூடும் இடங்களில் தீ தடுப்பு குறித்தும், அதன் செயல்பாடுகள் விளக்கி காட்டப்படும்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தீயணைப்பு நிலைய அலுவலக வளாகத்தில் நீத்தார் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்து. மும்பை துறைமுகத்தில் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயணைக்கும் பணியின்போது உயர்நீத்த 66 தீயணைப்பு வீரர்கள் நினைவாக நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. கமுதி தீயணைப்பு நிலைய அலுவலர்கள் சந்திரசேகரன், பார்த்திபன் தலைமை தாங்கினர்.

    இன்ஸ்பெக்டர் விமலா, சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ், பேரூராட்சி தலைவர் அப்துல்வஹாப் சஹாராணி மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்துகொண்டு நீத்தார் நினைவாக வைக்கப்பட்ட நினைவு தூணுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் தீ தொண்டு வாரம் நேற்று முதல் ஒரு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. பள்ளிகள்,கல்லூரிகள், மருத்துவமனை, பஸ் நிலையம் ஆகிய பொது மக்கள் கூடும் இடங்களில் தீ தடுப்பு குறித்தும், அதன் செயல்பாடுகள் விளக்கி காட்டப்படும் என்று நிலைய அலுவலர் கூறினார்.

    • கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதி எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பாக சயீத் சாஹிப் ஓர் சகாப்தம் நினைவு தின உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தொகுதி தலைவர் ஷா நாவஸ்கான் தலைமை தாங்கினார். செயலாளர் பாபு வரவேற்புரை நிகழ்த்தினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதி எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பாக சயீத் சாஹிப் ஓர் சகாப்தம் நினைவு தின உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது தொகுதி தலைவர் ஷா நாவஸ்கான் தலைமை தாங்கினார். செயலாளர் பாபு வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட பொருளாளர் தாஹிர் அலி முன்னிலை வகித்தார்.

    கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் முகமத் ரபி கலந்து கொண்டு முன்னாள் தேசிய தலைவர் மறைந்த சயீத் சாஹிப் தியாகங்களையும், ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான போராட்ட களத்தில் முன்னின்று செயல்பட்ட துணிச்சலையும் நினைவுப் படுத்தி அவர் வழியில் மக்கள் உரிமைக்காக முன்னின்று போராட உறுதி ஏற்க வேண்டும் என எடுத்துரைத்தார். மூரார்பாது கிளை தலைவர் சிராஜ், பொருளாளர் பஷீர், சமூக ஆர்வலர் கண்ணன், அன்சர் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். தொகுதி பொருளாளர் ரகமத்துல்லா நன்றி கூறினார்.

    • நினைவு தின உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடக்கிறது.
    • மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நினைவேந்தல் உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    ராமநாதபுரம்

    எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் பெரியபட்டினம் ரியாஸ்கான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மறைந்த சயீத் சாஹிப் ஒரு சகாப்தம் என்ற தலைப்பில் நினைவு தின உறுதி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு நகரத் தலைவர் நவாஸ்கான் தலைமையில் நடக்கிறது. நகரச் செயலாளர் ஹாஜா குத்பு வரவேற்கிறார். மாவட்ட தொண்டரணி தலைவர் சகுபர் சாதிக்,எஸ்.டி.டி.யு. மாவட்டத் தலைவர் காதர்கனி, ராமநாதபுரம் மேற்கு தொகுதி செயலாளர் அக்பர் அலி, விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட தலைவர் ரம்ஜான் பீவி முன்னிலை வகிக்கின்றனர். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் பெரியபட்டினம் ரியாஸ் கான், பொதுச் செயலாளர் அப்துல் ஜமீல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ேபசுகின்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நினைவேந்தல் உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் கட்சியின் செயல்வீரர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
    • ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நகர செயலாளர் எல்.வி.ஆர்.வினோத் தலைமையில் நடைபெற்றது.

    சீர்காழி:

    சீர்காழியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

    சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நகர செயலாளர் எல்.வி.ஆர்.வினோத் தலைமையில் நடைபெற்றது.

    முன்னாள் நகர செயலாளர் பக்கரிசாமி, ஜெ.பேரவை செயலாளர் ஏவி.மணி, நிர்வாகிகள் அம்சேந்திரன் முன்னாள் தகவல் தொழில் நுட்பபிரிவு மாவட்ட செயலாளர் நாடி.செல்வமுத்துக்குமரன், வழக்குரைஞர்கள் ஸ்ரீதர், நெடுஞ்செழியன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம், இனிப்புகளை இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை பி.வி.பி. கார்த்தி மற்றும் நிர்வாகிகள் வழங்கினர். ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

    இதில் அதிமுக நிர்வாகிகள் இறைஎழில், கல்யாணசுந்தரம், சுரேஷ், பரணிதரன், ரவி சண்முகம், விஜயக்குமார், மாலினி, தெட்சிணாமூர்த்தி, ரத்தினவேல், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • கந்தர்வகோட்டையில் புல்வாமா நினைவு தினம் அனுசரிக்கபட்டது
    • 2019 பிப்ரவரி 14ல் தீவிரவாதிகளின் தற்கொலை படையால் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர்.

    கந்தர்வகோட்டை:

    ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் 2019 பிப்ரவரி 14ல் தீவிரவாதிகளின் தற்கொலை படையால் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். இதனை நினைவு கூறும் வகையில் கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் அருகே உயிர் நீத்த வீரர்களின் உருவப் படங்களை வைத்து அவர்களின் வீரத்தை போற்றும் வகையில் அப்பகுதி இளைஞர்கள் விக்னேஷ் குமார் தலைமையில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.காதலர் தினத்தை கொண்டாடும் இளைஞர்கள் மத்தியில் நாட்டின் தேசபக்தியை கொண்டாடும் இந்த இளைஞர்களை சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.


    • நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
    • குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலையில் கலெக்டர் அரவிந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நாகர்கோவில்:

    பொதுவுடமை வீரர் ஜீவானந்தம் நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. இதையடுத்து நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலையில் கலெக்டர் அரவிந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜேஷ், துணை மேயர் மேரி பிரின்சிலதா, மண்டல தலைவர் ஜவகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    மாநில போலிங் பூத் தலைவர் ராதாகிருஷ்ணன், மண்டல தலைவர்கள் சிவ பிரபு, செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மோகன் தலைமையில் அகமது உசேன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    • உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
    • 500 பேருக்கு அன்னதானம்

    அரக்கோணம்:

    அரக்கோணத்தில் சுதந்திரப் போராட்ட தியாகியும் முன்னாள் காங்கிரஸ் நிர்வாகியுமான அமரர் வி.ராஜகோபால் நினைவு நாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது. சுவால்பேட்டையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நிகழ்ச்சிக்கு நகர த.மா.கா. தலைவரும் முன்னாள் துணை சேர்மனுமான கே.வி.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.

    சமூக ஆர்வலர்கள் ஆர்.வெங்கட்ராமன் த.மா.கா. மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.ஜி. மோகன் காந்தி ஆகியோர் முன்னிலையில் தியாகி ராஜகோபால் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதில் த.மா.கா. மாவட்ட தலைவர் ஆர்.ஹரிதாஸ் தியாகி ராஜகோபால் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பொதுமக்கள் சுமார் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் த.மா.கா. நிர்வாகிகள் ஸ்ரீதரணி, முன்னாள் கவுன்சிலர் பி.உத்தமன், ஆறுமுகம், பாலகிருஷ்ணன், முனுசாமி, தேவேந்திரன், ரவி, அனந்தராமன், காங்கிரஸ் கட்சி மாவட்ட பிரதிநிதி சாமிதுரை, காங்கிரஸ் நகர தலைவர் பார்த்தசாரதி, காவேரிப்பாக்கம் நகர தலைவர் உதயகுமார், முன்னாள் திமுக கவுன்சிலர் மீனாட்சி சுந்தரம், உள்ளிட்ட ஏராளமான நகர பிரமுகர்கள் கலந்து கொண்டு தியாகி சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    • பரமக்குடியில் அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
    • ஊர்வலமாக புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து முத்தாலம்மன் கோவில் திடலை வந்தடைந்தனர்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அ.தி.மு.க. ஓ.பி.எஸ் அணி சார்பில் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. தர்மர் எம்.பி. தலைமை தாங்கினார்.

    பரமக்குடி நகர செயலாளர் வின்சென்ட் ராஜா முன்னிலை வகித்தார். எம்.ஜி.ஆர். படத்திற்கு நிர்வாகிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். பின்பு ஊர்வலமாக புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து முத்தாலம்மன் கோவில் திடலை வந்தடைந்தனர். அங்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இதில் பரமக்குடி சட்டமன்ற தொகுதி செயலாளர்-வக்கீல் நவநாதன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செய லாளர் திசை நாதன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திலகர், மாவட்ட பொருளாளர் பால சுப்பிரமணியன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ரமேஷ், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் முத்தரசு, பரமக்குடி நகர ஐ.டி.பிரிவு செயலாளர் ஜாவா பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் லாட.செல்வம், சுரேஷ், வாணியவல்லம் ஊராட்சி மன்ற தலைவர் நாகநாதன், வெங்கலக்குறிச்சி செந்தில்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் சிவா தேவன், வர்த்தக அணி செயலாளர் பாபு, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் விஜய் கார்த்திக், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் பழனிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • எம்.ஜி.ஆர்.நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
    • மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் சார்பில் எம்.ஜி.ஆர்.நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.

    இதையொட்டி கிருஷ்ணகிரி 5 ரோடுரவுண்டானா அருகில் உள்ள கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். படத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கோவிந்தராஜ் தலைமை தாங்கி, மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இதில் மாவட்ட அவைத் தலைவர் ஸ்ரீராமுலு, பொருளாளர் வெங்கடேசப்பா, நகரசெயலாளர் செல்வம், பொதுக்குழு உறுப்பினர்கள் சகாதேவன், ராமு,நாகரத்தினம், ஒன்றிய செயலளர்கள் முனியப்பன், கோவிந்தராஜ், ஆறுமுகம்,பிரேம்குமார், வடிவேல், தாமோதரன், நாகராஜ், ஜெயலலிதா பேரவை நிர்வாகி ராதாகார்த்திக், மாவட்ட சார்பு அமைப்பு செயலாளர்கள், இளைஞர் அணி மணிகண்டன்,மாணவர் அணி மோகன், அண்ணா தொழிற்சங்க பாபு, கணேசன், சரவணன், பாக்கியராஜ்,ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×