search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனுசரிப்பு"

    • காலை முதல் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டது.
    • நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள கிருஸ்துவ ஆலயங்களில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதற்காக அங்கு காலை முதல் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டது.

    தொடர்ந்து வால்பாறை திருஇருதய ஆலய கல்லறை தோட்டத்துக்கு சென்ற கிறிஸ்தவர்கள், அங்கு உள்ள கல்லறைகளுக்கு வர்ணம் பூசி மலர்களால் அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை நடத்தினர். தொடர்ந்து வால்பாறை திருஇருதய ஆலய பங்குதந்தை ஜெகன்ஆன்டனி தலைமையில் இறந்தோருக்கான விசேஷ திருப்பலி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

    இதேபோல வால்பாறை புனிதலூக்கா ஆலயத்தில் பங்கு தந்தை தலைமையில் விசேஷ பிரார்த்தனைகள் நடந்தன. மேலும் சி.எஸ்.ஐ ஆலயம், முடிஸ் புனித அந்தோணியார் ஆலயம், ரொட்டிக்கடை வனத்து சின்னப்பர் ஆலயம் மற்றும் சோலையார் அணைப்பகுதியில் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்திலும் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. 

    • மேற்கு தொடர்ச்சி மலையில் சுமார் 3122 வரையாடுகள் உள்ளதாக தகவல்
    • வரையாடுகளின் வாழிடத்தை பாதுகாத்து மேம்படுத்த வனத்துறை நடவடிக்கை

    ஊட்டி,

    அருவங்காடு கிளை நூலகத்தில் தமிழக வரையாடு தினம் அனுசரிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கிளைமாவட்ட வாசகர் வட்டம் செய்திருந்தது.

    நிகழ்ச்சியில் ஓங்கில் இயற்கை அறக்கட்டளை நிறுவனர் ஆசாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில்,"தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி வரையாட்டை பாதுகாக்கவும், வாழ்விடங்களை மேம்படுத்தவும் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் நீலகிரி வரையாடு பாதுகாப்பு திட்டம் சுமார் 25.14 கோடி செலவில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சுமார் 3122 வரையாடுகள் உள்ளன. அவை 1500 மீட்டர் உயரத்திற்கும் மேல் உள்ள மலைகளில் மட்டும்தான் வாழும். அந்நிய களைச்செடிகள் ஆக்கிரமிப்பு, காட்டுத்தீ ஆகியவை காரணமாக புல்வெளி பரப்புகள் மிகவும் குறைந்து உள்ளதால் வரையாடுகளின் வாழிடம் பாதிக்கப்பட்டு உள்ளது. அதை மேம்படுத்த வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். முடிவில்நூலகர் ஜெயஸ்ரீ நன்றி கூறினார்.

    • தேச பிரிவினை தினம் அனுசரிக்கப்பட்டது.
    • பா.ஜ.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தானில் பா.ஜ.க. சார்பில் பாரத தேச பிரிவினை தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட பொதுச் செயலாளர் கோசா பெருமாள் வரவேற்றார். மாவட்டத் தலைவர் ராஜசிம்மன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் முத்துராமன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கார்த்திக் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் சீனிவாசன், சோழவந்தான் மண்டல் தலைவர் கதிர்வேல் நன்றி கூறினார்.

    மண்டல் பொதுச் செயலாளர் அருண், பாண்டியன் மண்டல் பொருளாளர் ராஜ்குமார் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் சோழவந்தான் பகுதியை சேர்ந்த மாநில மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பேராலயத்தின் உள்ளே நுழைவாயில் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டு பக்தர்களால் வணங்கப்பட்டு வருகிறது.
    • கல்லறை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மெழுகுவர்த்தி ஏத்தி வைக்கப்பட்டிருந்தது.

    பூதலூர்:

    பூண்டி மாதா பேராலயத்தில் 1955 ஆம் ஆண்டு முதல் பங்கு தந்தையாக பணியாற்றியவர் லூர்து சேவியர் அடிகளார்.

    இவரது அருட்பணி காலத்தில் பூண்டி மாதாஆலயத்தின் புகழ் பரவ தொடங்கியது.

    தன்னை நாடி வந்தவர்களை எல்லாம் ஆதரித்து அன்னையிடம் ஜெபியுங்கள் எல்லாம் நலமாக முடியும் என்று ஆறுதல் அளித்தவர் லூர்து சேவியர் அடிகளார்.

    இவர் 1972 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி மறைந்தார்.

    அவரது உடல் பூண்டி மாதா பேராலயத்தின் உள்ளே நுழைவாயில் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டு பக்தர்களால் வணங்கப்பட்டு வருகிறது.

    மறைந்த லூர்து சேவியர் அடிகளாரின் 52- வதுநினைவு நாள் பூண்டி மாதா பேராலயத்தில் அனுசரிக்கப்பட்டது.

    பூண்டி பேராலயத்தின் உள்ளே அமைந்திருக்கும் லூர்து சேவியர் அடிகளாரின் கல்லறை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு , மெழுகுவர்த்தி ஏந்தி வைக்கப்பட்டிருந்தது .

    இதனை பேராலய அதிபர் சாம்சன் புனிதம் செய்தார் . துணை அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர் , உதவி பங்கு தந்தையர் தாமஸ், அன்புராஜ், ஆச்சனூர் பங்குத்தந்தை சந்தியாகு, ஆன்மீக தந்தை அருளானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.

    திரளான பக்தர்கள் லூர்து சேவியர் அடிகளார் கல்லறைக்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி வணங்கினார்கள்.

    • பேராவூரணி தீயணைப்பு சார்பில் தீத்தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டது.
    • பணியின் போது வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு வீரவணக்கம்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில்தீ த்தொண்டு நாள் அனுசரிக்க ப்பட்டது. மீட்பு பணிகளில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் வீரர்களை கௌ ரவிக்கும் விதமாகவும், பணியின் போது வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாகவும் ஏப்ரல் 14ம் நாள் தீ தொண்டு நாளாக அனுசரிக்கப்ப டுகிறது.

    இதைத் தொடர்ந்து நிலைய அலுவலர் (போக்கு வரத்து) ராமச்சந்திரன் தலைமையில், சமூக ஆர்வலர் மருத்துவர் நீலகண்டன் முன்னிலையில், தீயணைப்பு வீரர்கள் ரஜினி, சுப்பையன், விக்னேஷ், ஆகாஷ் கண்ணன், வினோத், நிரஞ்சன், விமல் ராஜ், வெங்கடேசன், செல்வகுமார், குமரேசன், சாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வீர வணக்கம் செலுத்தினர்.

    • கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.
    • மேற்கண்ட தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்/ கொத்தடிமை தொழிலாளர்) ஒருங்கிணைப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் பிப்ரவரி 9-ந் தேதி அன்று அனுசரிக்க அரசாணை வெளியிடப்பட்டது.இதையடுத்து சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் ஆணையின்படி மதுரை மாவட்டத்தில் கலெக்ட்ர் அனீஷ்சேகர் தலைமையில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி தீபா, தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன், துணை ஆணையர் லிங்கம்,, உதவி ஆணையர் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) மலர்விழி மற்றும் கொத்தடிமை தொழிலாளர் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள், "ONE STOP CRISIS TEAM" உறுப்பினர்கள் ஆகியோர் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    மதுரை மாவட்ட கலெக்டர் தலைமையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டு, பொது மக்கள் அதிகம் கூடும். இடங்களான கலெக்டர் அலுவலக வளாகம், மாட்டுத்தாவணி பஸ் நிலையம், கடைவீதிகள் மற்றும் ெரயில் நிலையம் ஆகிய இடங்களில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டு பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    முன்னதாக 30.1.2023 முதல் 4.2.2023 வரை வருவாய் கோட்டாட்சியர்களின் தலைமையில் தொழிலாளர் துறை மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், வருவாய்த்துறை சார்ந்த அலுவலர்கள், கொத்தடிமை தொழிலாளர் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் அடங்கிய குழுக்களால் செங்கல் சூளைகள் மற்றும் அரிசி ஆலைகளில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.

    கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகள் மதுரை மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகங்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், பொது இடங்கள், ெரயில்வே மற்றும் பஸ் நிலையங்கள், கடைகள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் பார்க்கும் வகையிலும் காட்டிவைக்கப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள். தன்னாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்க ளிடையே கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மேலும் உள்ளுர் தொலைக்காட்சிகளில் விழிப்புணர்வு வாசகம் மற்றும் உதவி எண் குறித்து தற்போதைய செய்தியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. கொத்தடிமை தொழிலாளர் எவரேனும் பணிக்கு அமர்த்தப்பட்டது கண்டறியப்பட்டால் நீதிமன்ற நடவடிக்கையுடன், 3 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கபட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேற்கண்ட தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்/ கொத்தடிமை தொழிலாளர்) ஒருங்கிணைப்பு அலுவலர் மைவிழிச்செல்வி தெரிவித்துள்ளார்.

    • பரமக்குடியில் அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
    • ஊர்வலமாக புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து முத்தாலம்மன் கோவில் திடலை வந்தடைந்தனர்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அ.தி.மு.க. ஓ.பி.எஸ் அணி சார்பில் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. தர்மர் எம்.பி. தலைமை தாங்கினார்.

    பரமக்குடி நகர செயலாளர் வின்சென்ட் ராஜா முன்னிலை வகித்தார். எம்.ஜி.ஆர். படத்திற்கு நிர்வாகிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். பின்பு ஊர்வலமாக புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து முத்தாலம்மன் கோவில் திடலை வந்தடைந்தனர். அங்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இதில் பரமக்குடி சட்டமன்ற தொகுதி செயலாளர்-வக்கீல் நவநாதன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செய லாளர் திசை நாதன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திலகர், மாவட்ட பொருளாளர் பால சுப்பிரமணியன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ரமேஷ், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் முத்தரசு, பரமக்குடி நகர ஐ.டி.பிரிவு செயலாளர் ஜாவா பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் லாட.செல்வம், சுரேஷ், வாணியவல்லம் ஊராட்சி மன்ற தலைவர் நாகநாதன், வெங்கலக்குறிச்சி செந்தில்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் சிவா தேவன், வர்த்தக அணி செயலாளர் பாபு, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் விஜய் கார்த்திக், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் பழனிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • எம்.ஜி.ஆரின் 35 -ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
    • கட்சியினர் மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், கட்சியின் நிறுவனரும், முன்னாள் தமிழக முதல்-அ மைச்சருமான எம்.ஜி.ஆரின் 35 -ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

    முன்னதாக ஓசூர்- பாகலூர் சாலையில், அடகோ பகுதியில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் உருவப்படத்துக்கு, மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ண ரெட்டி மாலை அணிவித்து, பூஜைகள் செய்து,மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து, ஓசூர்- ராயக்கோட்டை சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு , பாலகிருஷ்ணரெட்டி தலைமையில் கட்சியினர் மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினர்.

    இந்த நிகழ்ச்சிகளில், மாவட்ட துணை செயலாளர் கே.மதன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் எஸ்.நாராயணன், ஓசூர் கிழக்கு பகுதி செயலாளர் ராஜி, ஓசூர் ஜெயப்பிரகாஷ் மற்றும் மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள், கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    • அம்பேத்கர் 66-வது நினைவு நாள் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் அனுசரிக்கப்பட்டது.
    • அவரது சிலைக்கு மாரிமுத்து எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் 66- வது நினைவு நாள் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் அனுசரிக்கப்பட்டது.

    இதனை முன்னிட்டு அவரது சிலைக்கு மாரிமுத்து எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்நிக ழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், ஒன்றிய பெருந்தலைவர் பாஸ்கர், தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் வையாபுரி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சந்திரராமன், நகர செயலாளர் சுந்தர், ஒன்றிய செயலாளர் ஜவகர், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், முன்னாள் நகர செயலாளர் முருகேசன், முத்துக்குமார், பக்கிரிசாமி, விவசாய தொழிலாளர் சங்க நகர செயலாளர் வாசுதேவன் , தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்புவனத்தில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
    • ஓ.பி.எஸ். அணியினர் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர்கள் கணேசன், சோனைரவி தலைமையில் அ.தி.மு.க.வினர் ஜெயலலிதா நினைவுநாளையொட்டி அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைச் செயலாளர் மணலூர் மணிமாறன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராஜாங்கம், ஒன்றிய பேரவை செயலாளர் பாண்டி, ஒன்றிய மகளிர் அணி செயலாளர் மனோன்மணி மதிவாணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மருது பாண்டியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பாலசந்தர், கிளைச் செயலாளர்கள் மணலூர் பிரபு, ராஜ், பீசர் பட்டினம் ராமசந்திரன், கீழடி சதாசிவம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இளையான்குடி ஒன்றியத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், ஒன்றிய செயலா ளர்கள் பாரதிராஜன், ஜெகதீசுவரன், கோபி, நகர் செயலாளர் நாகுர்மீரா ஒன்றிய மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ஜெயல லிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    மானாமதுரை ஒன்றி யத்தில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஸ்ரீதரன் தலைமையிலும் காளையார்கோவில் ஒன்றியத்தில் பஸ்நிலையம் முன்பு ஜெயலலிதா படத்திற்கு ஒன்றிய செயலாளர் சிவாஜி, மாவட்ட இலக்கிய அணி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பாசறை இணைச்செ யலாளர் மோசஸ், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பலர் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    சிவகங்கை ஓ.பி.எஸ். அணி

    சிவகங்கை அ.தி. மு.க., (ஓ.பன்னீர் செல்வம் அணி) சார்பில் மாவட்ட செயலாளர் கே.ஆர்., அசோகன் தலைமையில் ஜெயலலிதா படத்திற்கு ஊர்வலமாக வந்து மலர்

    தூவி மரியாதை செலுத்தி னர். நகர் செயலாளர் கே.வி., சேகர், மாவட்ட துணை செயலாளர் என்.எம்., ஜெயச்சந்திரன், மாவட்ட இளைஞரணி செயலா ளர் சுந்தரபாண்டியன், தொகுதி செயலாளர் நாக ராஜன், நகர் துணை செய லாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
    • கட்சி நிர்வாகிகள் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    சிவகங்கை

    மறைந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வின் 6-ம் ஆண்டு நினைவு நாள் சிவகங்கை மாவட்டத்தில் அனுசரிக்கப்பட்டது.

    சிவகங்கை நகர அ.தி.மு.க. சார்பில் செயலாளர் என்.எம்.ராஜா.தலைமையில் நிர்வாகிகள் அரண்மனை வாயில் வழியாக மவுன ஊர்வலமாக வந்து பஸ் நிலையம் முன்புள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    இதில் ஒன்றிய செயலா ளர்கள் ஸ்டிபன்அருள்சாமி, செல்வமணி, நகர் அவைத்தலைவர் பாண்டி, முன்னாள் கவுன்சிலர்கள் காஜா, சக்தி, மாரிமுத்து, கவுன்சிலர்கள் தாமு, ராபர்ட், கிருஷ்ணகுமார், நிர்வாகிகள் மோகன், கேபி.முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஜெயலலி தாவின் 6-ம் ஆண்டு நினைவு நாள் அ.தி.மு.க. மாவட்ட அவை தலைவர் ஏ.வி. நாகராஜன் மாவட்ட சேர்மன் பொன்மணி பாஸ்கரன் ஆகியோரது தலைமையில் அனுசரிக்கப்பட்டது.

    காந்தி சிலையில் இருந்து அண்ணா சிலை வரை ஊர்வலமாக நடந்து சென்று ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் பொதுக்குழு உறுப்பினர் கரு.சிதம்பரம், பேரவை மாவட்ட இணை செயலாளர் சி.எம். முருகேசன், தெற்கு ஒன்றிய செயலாளர் சிவமணி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் அழகர்சாமி, மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் பிரேம்குமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் ராஜா முகமது, நகர துணை செயலாளர் ரவீந்திரன், ஒன்றிய துணை செயலாளர்கள் சின்னையா, ஆறுமுகம், கவுன்சிலர்கள் பழனியப்பன், சையது ராபின் பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பத்தூர் நகரில் ஓ.பி.எஸ். அணி மாவட்ட செயலாளரும், ஆவின் சேர்மனுமான கே.ஆர். அசோகன் தலைமையில் நகரச் செயலாளர் முருகேசன்,ஒன்றிய கழக செயலாளர்கள் நாகராஜன், தேவேந்திரன் கணேசன், சிவா, தொகுதி செயலாளர் பத்மநாதன் முன்னிலையில் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

    அவரது படத்திற்கு மலர் தூவி மவுனஅஞ்சலி செலுத்தியதோடு, அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.இதில் கல்லல் ஒன்றிய செயலாளர்கள் தென்கரை சுப்பிரமணியன், முருகேசன் பொதுக்குழு உறுப்பினர் செந்தில் வேல், மாவட்ட துணை செயலாளர் தமிழரசி, காரைக்குடி பெருநகர செயலாளர் பாலா, சிங்கம்புணரி ஒன்றிய செயலாளர்கள் உதயகுமார், விஜயராஜ்,மாவட்ட பேரவை இணைச்செ யலாளர் திருஞானம், திருப்பத்தூர் நகர் நிர்வாகிகள், ராம ராஜன், ஆனந்த்ராஜ், ராமகிருஷ்ணன், மலைச்சாமி, சரவணன், கணேசன், வெள்ளைக்கண்ணு,விஜயா, மோகன் காதர், ஜோதிபாசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி எம்.ஜி.ஆர். சிலை அருகே ஜெயலலிதாவின் படத்திற்கு அ.தி.மு.க.வினர் முன்னாள் எம்.எல்.ஏ.-முன்னாள் நகர்மன்ற தலைவர் கற்பகம் இளங்கோ தலைமையில் மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

    இதில் மாவட்ட பேரவை ஊரவயல் எஸ்.பி.ராமு, மாவட்ட விவசாய அணி செயலாளர் சிவானந்தம் போஸ், மாவட்ட பேரவை துணை செயலாளர் இயல் தாகூர், மாவட்ட மகளிரணி இணை செயலாளர் சோபியா பிளாரன்ஸ், நகர்மன்ற உறுப்பினர்கள் குருபாலு, பிரகாஷ், அமுதா, நகர மகளிரணி செயலாளர் சுலோசனா, வட்ட செயலாளர்கள் சீனிவாசன், சரவணன், விஜய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சாக்கோட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க.வினர் ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் என்.ஜி.ஓ. காலனி மற்றும் பர்மா காலனி பகுதிகளில் ஜெயலலிதாவின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் சுப்பி ரமணியன், தேவிமீனாள், ஒன்றிய துணை செயலாளர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஓ.பன்னீர் செல்வம் அணியினர் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் ஜெயலலிதா படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். இதில் நகர செயலாளர் பாலா, சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் மாத்தூர் பாண்டி, நிர்வாகி திருஞானம், மாவட்ட பாசறை செயலாளர் அங்கு ராஜ், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் பாலமுருகன், மாவட்ட பிரதிநிதி மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், ராமநாதபுரம் சிவகங்கை மாவட்ட ஆவின் சேர்மன் கே ஆர் அசோகன் தலைமையில் ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை மற்றும் மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்றனர்.

    தேவகோட்டை, காரைக்குடியை தொட ர்ந்து திருப்பத்தூரில் மாவட்ட செயலாளர் தலைமையில் திருப்பத்தூர் நகர செயலாளர் முருகேசன், ஒன்றிய செயலா ளர்கள் நாகராஜன் தேவேந்திரன் கணேசன், சிவா, தொகுதி செயலாளர் பத்மநாபன் ஏற்பாட்டில் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

    இதில் கல்லல் ஒன்றிய செயலாளர்கள் தென்கரை சுப்பிரமணியன், முருகேசன் பொதுக்குழு உறுப்பினர் செந்தில் வேல், மாவட்ட துணை செயலாளர் தமிழரசி, காரைக்குடி பெருநகர செயலாளர் பாலா, சிங்கம்புணரி ஒன்றிய செயலாளர்கள் உதயகுமார் விஜயராஜ், மாவட்ட பேரவை இணைச்செ யலாளர் திருஞானம் மற்றும் பலர் பங்கேற்றனர். 

    • ஊர்வலமாக காவேரிப்பட்டினம் பேருந்து நிலையம் முன்பு வந்தடைந்தனர்.
    • மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அசோக்குமார் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    காவேரிப்பட்டினம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் ஒன்றிய செயலாளர் பையூர் ரவி, நகர செயலாளர் விமல் ஆகியோர் தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

    காவேரிப்பட்டினம்- பாலக்கோடு பிரிவு சாலையில் இருந்து ஜெயலலிதா உருவ படத்தை கையில் ஏந்தி ஊர்வலமாக காவேரிப்பட்டினம் பேருந்து நிலையம் முன்பு வந்தடைந்தனர்.

    பிறகு அங்கு அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா உருவ படத்திற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அசோக்குமார் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கே.பி.எம். சதீஷ்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மனோரஞ்சிதம் நாகராஜ், முனிவெங்கடப்பன், முன்னாள் நகர செயலாளர் வாசுதேவன், மாவட்ட ஆவின் தலைவர் குப்புசாமி, மாவட்ட அக்ரோ தலைவர் விக்ரம் குமார், கவுன்சிலர் சங்கீதா கேசவன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×