search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "observed"

    • காலை முதல் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டது.
    • நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள கிருஸ்துவ ஆலயங்களில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதற்காக அங்கு காலை முதல் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டது.

    தொடர்ந்து வால்பாறை திருஇருதய ஆலய கல்லறை தோட்டத்துக்கு சென்ற கிறிஸ்தவர்கள், அங்கு உள்ள கல்லறைகளுக்கு வர்ணம் பூசி மலர்களால் அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை நடத்தினர். தொடர்ந்து வால்பாறை திருஇருதய ஆலய பங்குதந்தை ஜெகன்ஆன்டனி தலைமையில் இறந்தோருக்கான விசேஷ திருப்பலி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

    இதேபோல வால்பாறை புனிதலூக்கா ஆலயத்தில் பங்கு தந்தை தலைமையில் விசேஷ பிரார்த்தனைகள் நடந்தன. மேலும் சி.எஸ்.ஐ ஆலயம், முடிஸ் புனித அந்தோணியார் ஆலயம், ரொட்டிக்கடை வனத்து சின்னப்பர் ஆலயம் மற்றும் சோலையார் அணைப்பகுதியில் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்திலும் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. 

    • மேற்கு தொடர்ச்சி மலையில் சுமார் 3122 வரையாடுகள் உள்ளதாக தகவல்
    • வரையாடுகளின் வாழிடத்தை பாதுகாத்து மேம்படுத்த வனத்துறை நடவடிக்கை

    ஊட்டி,

    அருவங்காடு கிளை நூலகத்தில் தமிழக வரையாடு தினம் அனுசரிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கிளைமாவட்ட வாசகர் வட்டம் செய்திருந்தது.

    நிகழ்ச்சியில் ஓங்கில் இயற்கை அறக்கட்டளை நிறுவனர் ஆசாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில்,"தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி வரையாட்டை பாதுகாக்கவும், வாழ்விடங்களை மேம்படுத்தவும் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் நீலகிரி வரையாடு பாதுகாப்பு திட்டம் சுமார் 25.14 கோடி செலவில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சுமார் 3122 வரையாடுகள் உள்ளன. அவை 1500 மீட்டர் உயரத்திற்கும் மேல் உள்ள மலைகளில் மட்டும்தான் வாழும். அந்நிய களைச்செடிகள் ஆக்கிரமிப்பு, காட்டுத்தீ ஆகியவை காரணமாக புல்வெளி பரப்புகள் மிகவும் குறைந்து உள்ளதால் வரையாடுகளின் வாழிடம் பாதிக்கப்பட்டு உள்ளது. அதை மேம்படுத்த வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். முடிவில்நூலகர் ஜெயஸ்ரீ நன்றி கூறினார்.

    ×