search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Heroic Death"

    • காவல்துறையினரும் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார்கள்.
    • வீரமரணம் அடைந்தவர்களுக்கு 21 குண்டுகள் 3 முறை முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் இன்று காவலர் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

    இதனை முன்னிட்டு உயிரிழந்த காவலர்களின் நினைவாக வைக்கப்பட்டுள்ள நினைவு தூண் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

    மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்க்கீஸ் , போலீஸ் சூப்பிரண்டு ஹரிஷ் சிங் ஆகியோர் நினைவு தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    தொடர்நது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு , துணை போலீஸ் சூப்பிரண்டுகள் , ஊர்க்காவல் படையினர் உட்பட அனைத்து நாகை மாவட்ட காவல்துறை யினரும் மலர் வளையம் வைத்து வீரவ ணக்கம் செலுத்தினார்கள்.

    பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் போலீசார் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் பின்பு ஆயுதப்படை காவல் ஆய்வாளரின் தலைமையில் ஆயுதப்படை காவலர்கள், வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு 21 குண்டுகள் 3 முறை முழங்க அஞ்சலி செலுத்தி, போலீசார் அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

    • திருவாரூரில் வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தீ தொண்டு நாள் நிகழ்வு நடைபெற்றது.
    • ஒரு வாரம் முழுவதும் தீ தடுப்பு மற்றும் தற்காப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறும்.

    திருவாரூர்:

    தீயணைப்பு பணி மற்றும் மீட்பு பணிகளின் போது வீர மரணம் அடைந்த தீயணைப்பு துறை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ம் தேதி தீ தொண்டு நாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் திருவாரூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தீ தொண்டு நாள் நிகழ்வு நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மாவட்ட அலுவலர் வடிவேலு மற்றும் உதவி மாவட்ட அலுவலர் இளஞ்செழியன் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    மேலும் தீ தொண்டு நாளை முன்னிட்டு ஒரு வாரம் முழுவதும் தீ தடுப்பு மற்றும் தற்காப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்தப் பிரச்சாரம் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் மக்கள் கூடும் இடங்களில் நடத்தப்படும் எனவும் அலுவலர்கள் தெரிவித்தனர்.

    • பேராவூரணி தீயணைப்பு சார்பில் தீத்தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டது.
    • பணியின் போது வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு வீரவணக்கம்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில்தீ த்தொண்டு நாள் அனுசரிக்க ப்பட்டது. மீட்பு பணிகளில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் வீரர்களை கௌ ரவிக்கும் விதமாகவும், பணியின் போது வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாகவும் ஏப்ரல் 14ம் நாள் தீ தொண்டு நாளாக அனுசரிக்கப்ப டுகிறது.

    இதைத் தொடர்ந்து நிலைய அலுவலர் (போக்கு வரத்து) ராமச்சந்திரன் தலைமையில், சமூக ஆர்வலர் மருத்துவர் நீலகண்டன் முன்னிலையில், தீயணைப்பு வீரர்கள் ரஜினி, சுப்பையன், விக்னேஷ், ஆகாஷ் கண்ணன், வினோத், நிரஞ்சன், விமல் ராஜ், வெங்கடேசன், செல்வகுமார், குமரேசன், சாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வீர வணக்கம் செலுத்தினர்.

    ×