search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எம்.ஜி.ஆரின் நினைவு நாள் அனுசரிப்பு
    X

    எம்.ஜி.ஆரின் நினைவு நாள் அனுசரிப்பு

    • எம்.ஜி.ஆரின் 35 -ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
    • கட்சியினர் மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், கட்சியின் நிறுவனரும், முன்னாள் தமிழக முதல்-அ மைச்சருமான எம்.ஜி.ஆரின் 35 -ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

    முன்னதாக ஓசூர்- பாகலூர் சாலையில், அடகோ பகுதியில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் உருவப்படத்துக்கு, மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ண ரெட்டி மாலை அணிவித்து, பூஜைகள் செய்து,மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து, ஓசூர்- ராயக்கோட்டை சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு , பாலகிருஷ்ணரெட்டி தலைமையில் கட்சியினர் மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினர்.

    இந்த நிகழ்ச்சிகளில், மாவட்ட துணை செயலாளர் கே.மதன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் எஸ்.நாராயணன், ஓசூர் கிழக்கு பகுதி செயலாளர் ராஜி, ஓசூர் ஜெயப்பிரகாஷ் மற்றும் மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள், கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×