search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நினைவு தின உறுதி ஏற்பு நிகழ்ச்சி
    X

    நினைவு தின உறுதி ஏற்பு நிகழ்ச்சி

    • நினைவு தின உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடக்கிறது.
    • மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நினைவேந்தல் உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    ராமநாதபுரம்

    எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் பெரியபட்டினம் ரியாஸ்கான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மறைந்த சயீத் சாஹிப் ஒரு சகாப்தம் என்ற தலைப்பில் நினைவு தின உறுதி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு நகரத் தலைவர் நவாஸ்கான் தலைமையில் நடக்கிறது. நகரச் செயலாளர் ஹாஜா குத்பு வரவேற்கிறார். மாவட்ட தொண்டரணி தலைவர் சகுபர் சாதிக்,எஸ்.டி.டி.யு. மாவட்டத் தலைவர் காதர்கனி, ராமநாதபுரம் மேற்கு தொகுதி செயலாளர் அக்பர் அலி, விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட தலைவர் ரம்ஜான் பீவி முன்னிலை வகிக்கின்றனர். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் பெரியபட்டினம் ரியாஸ் கான், பொதுச் செயலாளர் அப்துல் ஜமீல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ேபசுகின்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நினைவேந்தல் உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் கட்சியின் செயல்வீரர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×