search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உறுதியேற்பு"

    • கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதி எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பாக சயீத் சாஹிப் ஓர் சகாப்தம் நினைவு தின உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தொகுதி தலைவர் ஷா நாவஸ்கான் தலைமை தாங்கினார். செயலாளர் பாபு வரவேற்புரை நிகழ்த்தினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதி எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பாக சயீத் சாஹிப் ஓர் சகாப்தம் நினைவு தின உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது தொகுதி தலைவர் ஷா நாவஸ்கான் தலைமை தாங்கினார். செயலாளர் பாபு வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட பொருளாளர் தாஹிர் அலி முன்னிலை வகித்தார்.

    கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் முகமத் ரபி கலந்து கொண்டு முன்னாள் தேசிய தலைவர் மறைந்த சயீத் சாஹிப் தியாகங்களையும், ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான போராட்ட களத்தில் முன்னின்று செயல்பட்ட துணிச்சலையும் நினைவுப் படுத்தி அவர் வழியில் மக்கள் உரிமைக்காக முன்னின்று போராட உறுதி ஏற்க வேண்டும் என எடுத்துரைத்தார். மூரார்பாது கிளை தலைவர் சிராஜ், பொருளாளர் பஷீர், சமூக ஆர்வலர் கண்ணன், அன்சர் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். தொகுதி பொருளாளர் ரகமத்துல்லா நன்றி கூறினார்.

    ×