search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெலுங்கானா சட்டசபை தேர்தல்"

    • இரண்டு முறை பாரதிய ராஷ்டிரிய சமிதி ஆட்சியை பிடித்த நிலையில், 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க தீவிரம்.
    • இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் பல்வேறு வாக்குறுதிகள் அளித்துள்ளது.

    119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் சட்டசபை தேர்தலை நடத்த மத்திய தேர்தல் ஆணையம் அக்டோபர் மாதம் 9-ந்தேதி தேர்தல் தேதியை அறிவித்து, வாக்குப்பதிவுக்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தது.

    இன்று (நவம்பர் 30-ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவித்த நிலையில், நேற்று முன்தினத்துடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது. நேற்று காலையில் இருந்து வாக்கு எந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    இன்று காலை வாக்குச்சாவடி அதிகாரிகள், முகவர்கள் முன்னதாகவே வாக்குச்சாவடிக்கு வந்தனர். அவர்கள் முன்னிலையில் வாக்கு எந்திரங்கள் சரியாக வேலை செய்கிறதா? என பரிசோதித்து பார்க்கப்பட்டன. பின்னர், வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

    இந்தநிலையில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்து வருகிறார்கள். 119 தொகுதிகளில் 2290 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். பிஆர்எஸ், காங்கிரஸ், பா.ஜனதா இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அதன்பின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகும்.

    3.26 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க 35,655 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 106 தொகுதிகளில் மாலை ஐந்து மணி வாக்கப்பதிவு நடைபெறும். ஆயுதம் தாங்கிய குழுவால் பாதிக்கப்பட்டுள்ள 13 தொகுதிகளில் 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    3.26 வாக்காளர்களில் 1,63,13,268 பேர் ஆண் வாக்காளர்கள். 1,63,02,261 பெண் வாக்காளர்கள் ஆவார்கள்.

    முதல்வர் சந்திரசேகர ராவ், அவரது மகன் ராமராவ், மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, பா.ஜனதா எம்.பி. சஞ்சய் குமார் மற்றும் டி. அரவிந்த் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

    கடந்த அக்டோபர் மாதம் 9-ந்தேதி தேர்தல் தேதி அறிக்கப்பட்டதில் இருந்து தெலுங்கானாவில் தேர்தல் விதிமுறை நடைமுறைக்கு வந்தது.

    பிஆர்எஸ் 119 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பா.ஜனதா 111 தொகுதிகளிலும், கவன் கல்யாண் கட்சி 8 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்துள்ளது. காங்கிரஸ் சிபிஐ-க்கு ஒரு தொகுதியை விட்டுக்கொடுத்து 118 இடத்தில் போட்டியிடுகிறது.

    2.5 அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 77 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • சந்திரசேகர ராவ் கஜ்வெல் மற்றும் காமரெட்டி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறாா்.
    • பா.ஜ.க. 111 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான ஜனசேனா 8 இடங்களிலும் வேட்பாளா்களை நிறுத்தியுள்ளன.

    திருப்பதி:

    மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கா் மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டன. இதில் 4 மாநிலங்களுக்கு தேர்தல் முடிந்து விட்டது.

    தெலுங்கானா சட்டப்பேரவைக்கு நாளை ஒரே கட்டமாக தோ்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த சில நாள்களாக அனல் பறந்த பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது.

    சந்திரசேகர ராவ் தலைமையில் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) ஆட்சி நடைபெறும் தெலுங்கானாவில் 119 தொகுதிகள் உள்ளன. 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடக்கிறது.

    மாநிலத்தில் மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 3.26 கோடியாகும். 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் தோ்தல் பணியில் ஈடுபட உள்ளனா்.

    ஆளும் பி.ஆா்.எஸ்., முக்கிய எதிா்க்கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க. என மும்முனைப் போட்டி நிலவுகிறது. பி.ஆா்.எஸ். தலைவரும் முதல்-மந்திரியுமான சந்திரசேகர ராவ், அவரது மகனும் அமைச்சருமான கே.டி.ராம ராவ், தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவா் ரேவந்த் ரெட்டி, பாஜக எம்.பி.க்களான பண்டி சஞ்சய் குமாா், டி.அரவிந்த், சோயம் பாபு ராவ் உள்பட மொத்தம் 2,290 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

    சந்திரசேகர ராவ் கஜ்வெல் மற்றும் காமரெட்டி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறாா். அவரது தலைமையிலான பி.ஆா்.எஸ். கட்சி, அனைத்துத் தொகுதிகளிலும் களமறங்கியுள்ளது.

    பா.ஜ.க. 111 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான ஜனசேனா 8 இடங்களிலும் வேட்பாளா்களை நிறுத்தியுள்ளன. காங்கிரஸ் ஒரு தொகுதியை தனது கூட்டணி கட்சியான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு அளித்துள்ளது.

    மாநில காங்கிரஸ் தலைவா் ரேவந்த் ரெட்டி, கோடங்கல் மற்றும் காமரெட்டி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறாா். அசாதுதீன் ஒவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ் கட்சி, ஐதராபாத்தில் 9 தொகுதிகளில் களத்தில் இருக்கிறது.

    மிசோரம், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் அண்மையில் பேரவைத் தோ்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தெலுங்கானாவிலும் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.

    இந்த 5 மாநிலங்களிலும் டிசம்பா் 3-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. 2024, மக்களவைத் தோ்தலுக்கு முன்னோட்டமாக இந்த தோ்தல்கள் கருதப்படுகிறது. தெலுங்கானாவில் வெற்றி யாருக்கு? என்ற பெரும் எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

    தெலுங்கானாவில் முதல்முறையாக இந்த தோ்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதைக் கடந்த முதியவா்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

    மாநிலத்தில் தோ்தல் நடத்தை விதிகள் கடந்த மாதம் 9-ந் தேதி அமலுக்கு வந்தன. அப்போது முதல் நேற்று வரை, ரூ.737 கோடி மதிப்பிலான ரொக்கப்பணம், மதுபானங்கள், தங்கம், இலவசப் பொருள்கள் உள்ளிட்டவை பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேர்தலையொட்டி 3 நாட்களுக்கு மதுபான கடைகள் அடைக்கப்படுகின்றன.

    மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 45 ஆயிரம் போலீசார் மற்றும் 70 கம்பெனி ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • இறுதி நாளான இன்று தலைவர்கள் அனைவரும் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.
    • நாளை மறுதினம் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ம் தேதி எண்ணப்படுகின்றன.

    ஐதராபாத்:

    5 மாநில தேர்தலில் கடைசி கட்டமாக தெலுங்கானாவில் நாளை மறுதினம் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது.

    தெலுங்கானாவில் ஆட்சியைப் பிடிக்க பாரதிய ராஷ்டிர சமிதி, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக உழைத்து வருகின்றன. இதனால் அங்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    பிரசாரத்தின் இறுதி நாளான இன்று கட்சியின் முன்னணி தலைவர்கள் அனைவரும் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் தீவிரம் காட்டினர்.

    கரீம் நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி ஆளும் சந்திரசேகர் ராவ் அரசையும், காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக சாடினார்.

    ஐதராபாத் அருகே நடந்த பிரசார கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் பிரசாரம் மேற்கொண்டனர்.

    இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓயந்தது.

    நாளை மறுதினம் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ம் தேதி எண்ணப்படுகின்றன.

    • தெலுங்கானாவில் நாளை மறுதினம் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
    • இன்று மாலையுடன் அங்கு தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் நாளை மறுதினம் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அங்கு ஆளும் கட்சியான பி.ஆர்.எஸ், காங்கிரஸ், பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைவதால் தேசிய தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதற்கிடையே, கடைசி நாளான இன்று ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொள்கிறார். அவர் ஆட்டோ டிரைவர்கள், துப்புரவு தொழிலாளர்கள், டெலிவரி செய்யும் ஊழியர்கள் ஆகியோருடன் உரையாடினார்.

    இந்நிலையில், ஐதராபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    அவர்கள் ஒரே அணி...இங்கே பி.ஆர்.எஸ், பா.ஜ.க, ஏ.ஐ.எம்.ஐ.எம். ஒரு அணியாகச் செயல்படுகிறார்கள். முதல் மந்திரி கே.சி.ஆர். மீது எந்த வழக்கும் இல்லை. ஊழல் மிகுந்த அரசை நடத்துகிறார்.

    பிரதமர் மோடிக்கு உதவுவதால் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவரான அசாதுதீன் ஒவைசி மீதும் எந்த வழக்கும் இல்லை. சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத் துறையும் அவர்களுக்குப் பின்னால் இல்லை என தெரிவித்தார்.

    • ராகுல் காந்தி துப்புரவு தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்களுடன் உரையாடி ஓட்டு வேட்டை.
    • பா.ஜனதா தலைவர்கள், சந்திரசேகர ராவ் கடைசி நாள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரம்.

    119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் வருகிற 30-ந்தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநில தேர்தல் முடிவடைந்ததால் உள்ளூர் தலைவர்கள், தேசிய தலைவர்கள் தெலுங்கானா பக்கம் திரும்பினர்.

    கடந்த இரண்டு வாரங்களில் இரண்டு முறை தெலுங்கானாவில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அவர் பல்வேறு இடங்களில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்கள், கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட மாநில தலைவர்களும் பிரசாரம் மேற்கொண்டனர்.

    இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைவதால் தேசிய தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ராகுல் காந்தி நேற்று பிரசாரம் மேற்கொண்ட நிலையில், கடைசி நாளான இன்றும் பிரசாரம் மேற்கொள்கிறார். அவர் ஆட்டோ டிரைவர்கள், துப்புரவு தொழிலாளர்கள், டெலிவரி செய்யும் ஊழியர்கள் ஆகியோருடன் உரையாடினார். காங்கிரஸ் தேசிய தலைவர் மல்கார்ஜூன கார்கே, இன்றைய பிரசாரத்தின்போது கேசிஆர் மக்களை சந்திக்காமல் பண்ணை வீட்டில் வசிக்கிறார் என விமர்சித்தார்.

    நேற்று பா.ஜனதா தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித் ஷா, பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து ஓட்டு வேட்டை நடத்தினர். அப்போது, காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால், அது பிஆர்எஸ் கட்சிக்கு சென்றடையும். இதனால் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்றார். இன்று பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இதற்கிடையே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வகையில் சந்திரசேகர ராவ் கட்சியின் தலைவர்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். உள்ளூர் தலைவர்கள் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது.

    நாளை வாக்குப்பதிவுக்கான வேலைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு, வாக்கு இயந்திரங்கள் வாக்குமையத்திற்கு கொண்டு செல்லப்படும். நாளைமறுதினம் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 6 மணி வரை நடைபெறும்.

    • தெலுங்கானா தேர்தலில் சந்திரசேகர ராவ் முதலமைச்சராக காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்.
    • பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி பிரதமராக சந்திரசேகர ராவ் ஆதரவு அளிப்பார்.

    தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி (நாளைமறுதினம்) சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. 119 இடங்களுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. நேற்று மத்திய அமைச்சரும், பா.ஜனதாவின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது அமித் ஷா கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சிக்கும், சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சிக்கும் இடையில் ரகசிய புரிந்துணர்வு உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் பிஆர்எஸ் கட்சிக்கு செல்லும். இதனால் வாக்காளர்கள் பா.ஜனதாவுக்கு வாக்களிக்க வேண்டும்.

     பா.ஜனதா வேட்பாளர் ஈடால ராஜேந்தருக்கு அதிக அளவில் வாக்களிப்பதன் மூலம், அடுத்த தேர்தலில் பிஆர்எஸ் வேட்பாளர்களை பெற முடியாது என்ற தெளிவான தகவலை சந்திரசேகர ராவுக்கு அனுப்ப முடியும்.

     தெலுங்கானா தேர்தலில் சந்திரசேகர ராவ் முதலமைச்சராக காங்கிரஸ் ஆதரவளிக்கும். அதேபோல் பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி பிரதமராக சந்திரசேகர ராவ் ஆதரவு அளிப்பார். ஆனால், அந்த பதவிகள் காலியாக இல்லை. காங்கிரஸ், பிஆர்எஸ் கட்சிகள் குடும்ப கட்சிகள். ஊழல் மற்றும் குடும்ப ஆட்சிக்கு உறுதியளிக்கும் கட்சிகள்.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

    • பிரதமர் மோடி நேற்று தெலுங்கானாவில் பிரசாரம் மேற்கொண்டார்.
    • வருகிற 30-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் தீவிர பிரசாரம்.

    ஐந்து மாநில தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி தீவிரமாக ஈடுபட்டு, பா.ஜனதாவுக்கு வாக்கு சேகரித்து வருகிறார். சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிவடைந்து விட்டது.

    தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதனால் தெலுங்கானாவில் தேசிய தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

    அந்த வகையில் பிரதமர் மோடி நேற்று ஐதராபாத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஆயிரக்காணக்கான மக்கள் கூடியிருந்தனர். பிரதமர் மோடியை பார்ப்பதற்காக பல இளைஞர்கள் டவர் போன்ற கட்டமைப்புகள் மீது ஏறி பிரதமர் பேச்சை கேட்டுக்கொண்டிருந்தனர்.

    அப்போது பிரதமர் மோடி இதை கவனித்துக் கொண்டார். இளைஞர்கள் திடீரென கோபுரத்தில் இருந்து கீழே விழுந்தால் என்னவாகும்? என கவலையை அடைந்தார். இதனால் அவர்கள் கீழே இறங்கும் வகையில் தனது பேச்சை நிறுத்தினார்.

    இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு பிரதமர் மோடி "கோபுரத்தில் ஏறியவர்களை சுட்டிக்காட்டி, அவர்களை கீழே இறங்கும்படி கேட்டுக்கொண்டார். நீங்கள் என்னை பார்க்க முடியவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அதேவேளையில் நீங்கள் கீழே விழுந்தால் அது என்னை மிகவும் அப்செட் செய்துவிடும். தயது செய்து கீழே இறங்கவும்" எனத் தெரிவித்தார்.

    ஒரு சிறுமி தேசியக்கொடியுடன் வந்திருந்தார். அவரை பார்த்து, "ஒரு சிறுமி பாரத மாதவாக வந்திக்கிறார். வீரம்" என்றார்.

    இதேபோல் கடந்த 11-ந்தேதி இளம் பெண், மின்னொளிக்காக கட்டப்பட்டிருந்த டவரில் ஏறினார். அவர் பின்னர் கீழே இறக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஐந்து மாநில வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 3-ந்தேதி நடைபெறுகிறது.

    • நிதி உதவி வழங்கும் திட்டத்தை ஆளும் பி.ஆர்.எஸ். கட்சியின் எம்.எல்.ஏ.வும், வேட்பாளருமான ஹரிஸ்ராவ் விளம்பரப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
    • பயிர் நிதியுதவி வழங்கும் திட்டத்துக்கு அளித்த அனுமதியை தலைமை தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றது.

    தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் வருகிற 30-ந்தேதி நடக்கிறது. இதற்கான இறுதிகட்ட பிரசாரத்தை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி உள்ளன. இதற்கிடையே ராபி பயிர் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்கும் மாநில அரசின் திட்டத்துக்கு தேர்தல் கமிஷன் அனுமதி அளித்து இருந்தது.

    அதன்படி விவசாயிகளின் வங்கி கணக்குகளில் இன்று நிதி உதவி வரவு வைக்கப்படும் என்று முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் தெரிவித்து இருந்தார். நிதி உதவி வழங்கும் திட்டத்தை ஆளும் பி.ஆர்.எஸ். கட்சியின் எம்.எல்.ஏ.வும், வேட்பாளருமான ஹரிஸ்ராவ் விளம்பரப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதைத்தொடர்ந்து பயிர் நிதியுதவி வழங்கும் திட்டத்துக்கு அளித்த அனுமதியை தலைமை தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றது. விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்க தேர்தல் முடியும் வரை தற்காலிக தடை விதிப்பதாக தெரிவித்துள்ளது.

    • விமான நிலையம் வந்த பிரதமர் மோடிக்கு ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஏழுமலையான் சிலையை பரிசாக வழங்கி வரவேற்றார்.
    • பிரதமர் மோடி பதவி ஏற்ற பிறகு 4-வது முறையாக திருப்பதி வந்து ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி விமானம் மூலம் நேற்று இரவு 7.50 மணிக்கு ரேணிகுண்டா வந்தடைந்தார்.

    விமான நிலையம் வந்த அவருக்கு ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஏழுமலையான் சிலையை பரிசாக வழங்கி வரவேற்றார்.

    சாலை மார்க்கமாக திருப்பதி மலைக்கு வந்த பிரதமர் மோடிக்கு வழி நெடுகிலும் ஏராளமானோர் திரண்டு வந்து வரவேற்றனர். நேற்று இரவு திருமலையில் உள்ள ரச்சனா சிறப்பு விருந்தினர் மாளிகையில் பிரதமர் மோடி தங்கினார்.

    இன்று காலை 8 மணிக்கு ஏழுமலையான் கோவிலில் பிரதமர் மோடி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தார். நெற்றியில் பெரிய நாமமிட்டு பிரதமர் மோடி கோவிலுக்கு வந்திருந்தார்.

    சுமார் 45 நிமிடங்கள் கோவிலில் இருந்தார். பிரதமர் மோடிக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி, முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி உள்ளிட்டோர் ஏழுமலையான் படம் மற்றும் பிரசாதங்களை வழங்கி கவுரவித்தனர். 

    தரிசனம் முடிந்து 9.30 மணிக்கு வெளியே வந்தார். அவரை பார்த்து பக்தர்கள் கோஷம் எழுப்பினர்.

    இதனை தொடர்ந்து புறப்பட்டு ரேணிகுண்டா விமான நிலையம் சென்றார். அங்கிருந்து விமானம் மூலம் ஹக்கீம் பேட்டை விமான நிலையத்திற்கு சென்றார்.

    திருப்பதி கோவிலில் வழிபாடு செய்த புகைப்படங்களை பிரதமர் மோடி எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

    அதில் பிரதமர் மோடி 140 கோடி இந்தியர்களின் நல் ஆரோக்கியம், நலன் மற்றும் வளமான வாழ்வுக்காக திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் பிரார்த்தனை செய்தேன் என தெரிவித்துள்ளார்.

    • தெலுங்கானாவில் ஏழு வாக்குறுதிகளை அளித்து காங்கிரஸ் தேர்தலை சந்திக்கிறது.
    • கர்நாடகாவில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

    தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க பிஆர்எஸ் (சந்திரசேகர ராவ்) தீவிர பிரசாரம் செய்து வருகிறது. அதேவேளையில் காங்கிரஸ் முதல் முறையாக ஆட்சியை பிடிக்க வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளது.

    கர்நாடகா மாநிலத்தில் பா.ஜனதாவை வீழ்த்த முக்கியமான ஐந்து வாக்குறுதிகளை அளித்தது. மக்களும் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்தினர்.

    தற்போது காங்கிரஸ் கட்சி "கர்நாடகா மாடல்" என மற்ற மாநில தேர்தலின்போது பயன்படுத்தி வருகிறது. அந்த வகையில்தான் தெலுங்கானாவில் முக்கியமான ஏழு வாக்குறுதிகளை அளித்துள்ளது.

    ஆனால் சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்டிரிய சமிதி, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தேர்தலின்போது அளித்த முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. காங்கிரஸ் பொய் சொல்கிறது என பிரசாரம் செய்து வருகிறது. அதேபோல்தான் பா.ஜனதாவும் பிரசாரம் செய்து வருகிறது.

    நேற்று காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது சித்தராமையா கூறும்போது "செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளில், கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அளித்த முக்கிய ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனச் சொல்வதை நான் பார்த்தேன். 

    பா.ஜனதா தலைவர்கள், பிஆர்எஸ் தலைவர் மற்றும் மற்ற தலைவர்களும் சொல்கிறார்கள். இது உண்மை அல்ல. நாங்கள் மே மாதம் ஆட்சிக்க வந்தோம். நாங்கள் கேபினட் அறைக்குள் சென்றதும், ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முடிவை எடுத்தோம். அதே நாள் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதற்கு சற்று நேரம் எடுத்துக் கொண்டது. அவ்வளவுதான்" என்றார்.

    119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் பிஆர்எஸ்- காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. சந்திரகேசர ராவ் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். ஒரு தொகுதியில் காங்கிரஸ் வலுவான வேட்பாளரை நிறுத்தியுள்ளது.

    • தெலுங்கானாவில் வரும் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
    • அங்கு ஆட்சியைப் பிடிக்க பிஆர்எஸ் கட்சி தீவிரமாக தேர்தல் வேலை செய்துவருகிறது.

    ஐதராபாத்:

    தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதனால் தேசிய தலைவர்கள் தெலுங்கானாவில் சூறாவளி பிரசாரம் செய்ய இருக்கிறார்கள்.

    தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க பிஆர்எஸ் கட்சி தீவிரமாக தேர்தல் வேலை செய்து வருகிறது.

    இந்நிலையில், ஊழலில் மூழ்கித் திளைக்கும் காங்கிரஸ் கட்சி ஊழல் பற்றி பேசலாமா? என ராகுல் காந்திக்கு முதல் மந்திரி மகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ராகுல் காந்திக்கு வரலாறு தெரியாது, அவர் 'பப்பு'. இன்று ராகுல் காந்தி வந்திருந்த இடம், அதே நிஜாமாபாத் தான். ராகுல் காந்தியின் பெரியப்பா நேரு அவர்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானா இடையே கட்டாயத் திருமணம் செய்து வைத்தார். இங்குள்ள மக்களுக்கு காங்கிரசின் வரலாறு முழுமையாக தெரியும். தெலுங்கானா வரலாறு பற்றி ராகுல் காந்திக்கு இருக்கும் அறிவிற்காக வருத்தப்படுகிறேன். இன்று ஊழல் பற்றி ராகுல் காந்தி பேசினால் மக்கள் சிரிப்பார்கள். ஏனெனில் காங்கிரஸ் கட்சி ஊழலில் மூழ்கி கிடக்கிறது என கடுமையாக சாடினார்.

    • பா.ஜ.க.வாலும், மோடியாலும்தான் ராமர் கோவில் என்ற கனவு நிறைவேறி இருக்கிறது.
    • மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும், பல நகரங்களின் முந்தைய பெயர்கள் மீண்டும் சூட்டப்பட்டது.

    திருப்பதி:

    தெலுங்கானாவில் பா.ஜ.க.வைச் சேர்ந்த அசாம் மாநில முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

    தெலுங்கானாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து 30 நிமிடங்களில் ஐதராபாத்தின் பெயர் பாக்யாநகர் என மாற்றப்படும். இப்படி மாற்றினால் யாரும் எதுவும் செய்துவிட முடியாது.

    பாலஸ்தீனத்தை ஆதரிக்கிற இவர்கள் எல்லாம் (ஒவைசி கட்சி) அங்கேயே போய்விடட்டும். அவர்களுக்காக சண்டையிடட்டும். 

    ராமர் கோவில் கட்டப்பட்டு விடும் என்று யாரேனும் நினைத்தது உண்டா? ஜவகர்லால் நேருவுக்கோ, இந்திராவுக்கோ அந்தத் துணிச்சல் இருந்ததா?

    பா.ஜ.க.வாலும், மோடியாலும்தான் இப்போது ராமர் கோவில் என்ற கனவு நிறைவேறி இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும், பல நகரங்களின் முந்தைய பெயர்கள் மீண்டும் சூட்டப்பட்டது. அது தெலுங்கானா மாநிலத்திலும் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த வாக்குறுதி எல்லோரையும் அதிர வைத்துள்ளது.

    ×