என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கேடி ராமாராவ்"
- 5 மாநில சட்டசபை தேர்தல் இன்றுடன் நிறைவு பெற்றது.
- வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று வெளியானது.
ஐதராபாத்:
மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்தது.
தெலுங்கானாவில் மாலை 5 மணி நிலவரப்படி 64 சதவீத வாக்குப்பதிவாகியுள்ள நிலையில் மொத்த வாக்குப்பதிவு விவரம் இன்னும் வெளியாகவில்லை.
இதற்கிடையே, 5 மாநில தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது. அதன்படி, தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு ஓங்கும் என தெரிகிறது.
இந்நிலையில், தெலுங்கானா மந்திரி கே.டி.ராமாராவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கருத்து கணிப்புகள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. 70 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். மீண்டும் சந்திரசேகர ராவ் முதல் மந்திரி ஆவார். கடந்த 2018- தேர்தலின் போது இதேபோன்று எங்களுக்கு பாதகமான கருத்து கணிப்புகள் வெளியாயின. ஆனால் முடிவு எங்களுக்கு சாதகமாக அமைந்தது. அதேபோல் இம்முறையும் கருத்து கணிப்புகளை பொய்யாக்கி வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்.
- தெலுங்கானாவில் வரும் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
- அங்கு ஆட்சியைப் பிடிக்க பிஆர்எஸ் கட்சி தீவிரமாக தேர்தல் வேலை செய்துவருகிறது.
ஐதராபாத்:
தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதனால் தேசிய தலைவர்கள் தெலுங்கானாவில் சூறாவளி பிரசாரம் செய்ய இருக்கிறார்கள்.
தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க பிஆர்எஸ் கட்சி தீவிரமாக தேர்தல் வேலை செய்து வருகிறது.
இந்நிலையில், ஊழலில் மூழ்கித் திளைக்கும் காங்கிரஸ் கட்சி ஊழல் பற்றி பேசலாமா? என ராகுல் காந்திக்கு முதல் மந்திரி மகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ராகுல் காந்திக்கு வரலாறு தெரியாது, அவர் 'பப்பு'. இன்று ராகுல் காந்தி வந்திருந்த இடம், அதே நிஜாமாபாத் தான். ராகுல் காந்தியின் பெரியப்பா நேரு அவர்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானா இடையே கட்டாயத் திருமணம் செய்து வைத்தார். இங்குள்ள மக்களுக்கு காங்கிரசின் வரலாறு முழுமையாக தெரியும். தெலுங்கானா வரலாறு பற்றி ராகுல் காந்திக்கு இருக்கும் அறிவிற்காக வருத்தப்படுகிறேன். இன்று ஊழல் பற்றி ராகுல் காந்தி பேசினால் மக்கள் சிரிப்பார்கள். ஏனெனில் காங்கிரஸ் கட்சி ஊழலில் மூழ்கி கிடக்கிறது என கடுமையாக சாடினார்.
- தெலுங்கானாவில் வரும் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
- அறிவிப்பு வெளியானது முதல் அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும். வேட்புமனுவை வாபஸ் பெற நவம்பர் 15-ம் தேதி இறுதி நாளாகும்.
தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் கஜ்வெல் தொகுதியில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியைச் சேர்ந்தவரும், தொழில்நுட்பத்துறை அமைச்சருமான கே.டி.ராமாராவ் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
நிஷமாபாத் மாவட்டம் அர்மூர் பகுதியில் பிரசாரம் செய்வதற்காக அவர் வேனில் சென்றார் அப்போது, வேன் டிரைவர் திடீரென பிரேக்கை பிடித்தார்.
இதை எதிர்பாராத அமைச்சர் கே.டி.ராமாராவ் மற்றும் அவருடன் நின்றிருந்தவர்களின் சிலர் கீழே விழுந்தனர். இதில் அமைச்சர் கே.டி.ராமாராவ் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
- கட்சிகளை அல்ல மக்களை ஒன்றிணைப்பதுதான் முக்கியம்.
- 3-வது அணியே இப்போது தேவை.
புதுடெல்லி :
தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகனும், நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி மந்திரியுமான கே.டி. ராமாராவ் டெல்லியில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் குறித்து கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய 2 தேசிய கட்சிகளும் தேசத்திற்கு பெரும் பேரழிவை ஏற்படுத்தி உள்ளன. அவற்றை முழுமையாய் வைத்திருப்பதில் அர்த்தமில்லை. கட்சிகளை அல்ல மக்களை ஒன்றிணைப்பதுதான் முக்கியம். இதற்கு முன்னரும் கட்சிகள் ஒன்றிணைந்து தோல்வியடைந்தன. இந்த 2 தேசிய கட்சிகளுடன் மற்ற கட்சிகளும் இணைந்தால் நாட்டுக்கு எந்த பலனும் இல்லை. காங்கிரஸ் அல்லது பா.ஜ.க.வுடன் கைகோர்க்கும் எந்த கூட்டணியும் வெற்றி பெறாது. அந்த 2 கட்சிகளும் இல்லாத 3-வது அணியே இப்போது தேவை.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்