search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காங்கிரஸ் அல்லது பா.ஜ.க.வுடன் கைகோர்க்கும் எந்த கூட்டணியும் வெற்றி பெறாது: கே.டி. ராமாராவ்
    X

    காங்கிரஸ் அல்லது பா.ஜ.க.வுடன் கைகோர்க்கும் எந்த கூட்டணியும் வெற்றி பெறாது: கே.டி. ராமாராவ்

    • கட்சிகளை அல்ல மக்களை ஒன்றிணைப்பதுதான் முக்கியம்.
    • 3-வது அணியே இப்போது தேவை.

    புதுடெல்லி :

    தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகனும், நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி மந்திரியுமான கே.டி. ராமாராவ் டெல்லியில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் குறித்து கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய 2 தேசிய கட்சிகளும் தேசத்திற்கு பெரும் பேரழிவை ஏற்படுத்தி உள்ளன. அவற்றை முழுமையாய் வைத்திருப்பதில் அர்த்தமில்லை. கட்சிகளை அல்ல மக்களை ஒன்றிணைப்பதுதான் முக்கியம். இதற்கு முன்னரும் கட்சிகள் ஒன்றிணைந்து தோல்வியடைந்தன. இந்த 2 தேசிய கட்சிகளுடன் மற்ற கட்சிகளும் இணைந்தால் நாட்டுக்கு எந்த பலனும் இல்லை. காங்கிரஸ் அல்லது பா.ஜ.க.வுடன் கைகோர்க்கும் எந்த கூட்டணியும் வெற்றி பெறாது. அந்த 2 கட்சிகளும் இல்லாத 3-வது அணியே இப்போது தேவை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×