என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ் கட்டணம்"

    • டவுன் பஸ்களின் பயணக் கட்டணம் கடந்த திங்கட்கிழமை முதல் கணிசமாக உயர்த்தப்பட்டது.
    • சாலைப் போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் நிர்வாக மேலாளரிடம் மனு அளிக்க முடிவு செய்திருந்தனர்.

    ஐதராபாத்:

    தெலங்கானா மாநிலத்தில் சுமார் 2,800 டீசல் பஸ்களை மின்சார பஸ்களாக மாற்றுவதற்கு நிதி திரட்டும் நோக்கில் 'பசுமை வரி' விதிக்கப்படுவதாக தெலங்கானா போக்குவரத்துக் கழகம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, டவுன் பஸ்களின் பயணக் கட்டணம் கடந்த திங்கட்கிழமை முதல் கணிசமாக உயர்த்தப்பட்டது.

    இந்த பஸ் டிக்கெட் கட்டண உயர்வை கண்டித்து, சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் அலுவலகத்தை நோக்கி இன்று காலை பேரணி நடத்தப்படும் என்று எதிர்க்கட்சியான பாரதிய ராஷ்டிரிய சமிதி அறிவித்திருந்தது.

    பாரதிய ராஷ்டிரிய சமிதியின் செயல் தலைவர் சந்திரசேகரராவின் மகன் கே.டி. ராமா ராவ், முன்னாள் அமைச்சர் ஹரீஷ் ராவ் உள்ளிட்டோர் ரெதிஃபைல் பஸ் நிறுத்தத்தில் இருந்து சாலைப் போக்குவரத்துக் கழகம் வரை பஸ்சில் பயணிக்கும் வகையில் போராட்டம் திட்டமிடப்பட்டிருந்தது.

    தொடர்ந்து, சாலைப் போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் நிர்வாக மேலாளரிடம் மனு அளிக்க முடிவு செய்திருந்தனர்.

    இந்த நிலையில், ஐதராபாத் மற்றும் ரங்காரெட்டி மாவட்டங்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். கச்சிபவுலியில் உள்ள இல்லத்தில் கே.டி. ராமா ராவ், கோகபேட்டில் உள்ள இல்லத்தில் ஹரீஷ் ராவையும் காவல்துறையினர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

    மேலும், முன்னாள் அமைச்சர் பி. சபிதா இந்திரா ரெட்டி, குத்புல்லாபூர் எம்எல்ஏ விவேகானந்த கவுட், எம்எல்சி ஷம்பிர்பூர் ராஜு உள்ளிட்டோரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தமிழகத்தில் அவ்வப்போது போக்குவரத்து கட்டண உயர்வு என வதந்தி பரவுவது வழக்கமாக உள்ளது.
    • அ.தி.மு.க.வை முழுவதும் ஆக்கிரமித்து அந்த இடத்தை நிரப்புவதே பா.ஜ.க.வின் கனவு.

    அரியலூர்:

    போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அரியலூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் அவ்வப்போது போக்குவரத்து கட்டண உயர்வு என வதந்தி பரவுவது வழக்கமாக உள்ளது. ஒவ்வொரு முறையும் வதந்தியை நாங்கள் மறுத்து வருகிறோம். பஸ் கட்டண உயர்வு குறித்து எந்தவித திட்டமும் தற்போதைக்கு இல்லை.

    இப்பொழுதும் அதையே உறுதிப்படுத்துகிறோம். சாதாரண ஏழை, எளிய மக்களிடம் கட்டணச் சுமையை உயர்த்தக் கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

    பஸ் கட்டண உயர்வுக்கான சூழல் ஏற்பட்டபோதும், கட்டண உயர்வை மக்கள் மீது திணிக்காமல் அரசே ஏற்ற நிலையில் போக்குவரத்து கழகங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

    எனவே பஸ் கட்டண உயர்வு என்பது நிச்சயம் இருக்காது. மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம்.

    அ.தி.மு.க.வை முழுவதும் ஆக்கிரமித்து அந்த இடத்தை நிரப்புவதே பா.ஜ.க.வின் கனவு. எனவே தி.மு.க.வின் வாக்குகளை பிரிக்கலாம் என்ற எண்ணத்தில் பல்வேறு புதிய கட்சிகளை பா.ஜ.க. ஒவ்வொரு முறையும் தேர்தல் நேரத்தில் களத்தில் இறக்குவது வழக்கம். இப்பொழுதும் அந்த தந்திரத்தை புதுப்புது முயற்சிகளில் எடுத்துள்ளது. அனைத்தையும் முறியடித்து முதலமைச்சர் தலைமையில் தி.மு.க. வெற்றி பெறும்.

    எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு முறையும் ஒன்றை பேசுவார். ஆனால் நடைமுறைக்கு வரும் பொழுது வேறு விதமாக இருக்கும். 2036 வரை பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்ற எடப்பாடி பழனிச்சாமி, அமித்ஷாவுடன் மேடையில் அமர்ந்திருக்க இவர் வாய் கட்டி, வாய்மூடி மவுனியாக அமர்ந்திருந்தார். இப்பொழுது ஒன்றை பேசுகிறார். இன்னும் சில காலம் கழித்து என்ன பேசுவார் என்று காலம் நமக்கு உணர்த்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தபால் மூலமாகவோ தெரிவிக்கலாம்.
    • tc.tn@nic.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் 3 வார காலத்திற்குள் கருத்து தெரிவிக்கலாம்.

    சென்னை:

    பஸ் கட்டண உயர்வு குறித்து கருத்து கூற பொதுமக்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து போக்குவரத்து ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    தனியார் பஸ் உரிமையாளர்கள் கூட்டமைப்பு, சென்னை மற்றும் ஈரோடு பஸ் உரிமையாளர்கள் சங்கம் ஆகியோர் கட்டண உயர்வு கோரி வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுப்படி தமிழ்நாடு அரசு பஸ் கட்டண உயர்வு குறித்து ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க நிபுணர் குழு அமைத்துள்ளது.

    எனவே பஸ் கட்டண உயர்வு குறித்து அனைத்து நுகர்வோர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை போக்குவரத்து ஆணையர், கிண்டி, சென்னை-600032 என்ற முகவரிக்கு நேரில் அல்லது தபால் மூலமாகவோ தெரிவிக்கலாம். மேலும், tc.tn@nic.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் 3 வார காலத்திற்குள் கருத்து தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    தமிழ்நாட்டில் கடந்த 2018-ம் ஆண்டு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழக முதலமைச்சர் ஏற்கனவே சட்டசபையில் அறிவித்தபடி 1,000 புதிய பஸ்கள் வாங்குவதற்கு ரூ.420 கோடி ஒதுக்கி தற்போது அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
    • பொதுமக்களுக்கு பாதிப்பு வரக்கூடாது என்று முதலமைச்சர் பஸ் கட்டணம் உயர்வு கிடையாது என ஏற்கனவே அறிவித்திருக்கிறார்.

    நாமக்கல்:

    நாமக்கல் அருகே உள்ள பொம்மைக்குட்டைமேட்டில், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக முதலமைச்சர் ஏற்கனவே சட்டசபையில் அறிவித்தபடி 1,000 புதிய பஸ்கள் வாங்குவதற்கு ரூ.420 கோடி ஒதுக்கி தற்போது அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. விரைவில் டெண்டர் விடப்பட்டு, புதிய வாகனங்கள் வாங்கி, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். பொதுமக்களுக்கு பாதிப்பு வரக்கூடாது என்று முதலமைச்சர் பஸ் கட்டணம் உயர்வு கிடையாது என ஏற்கனவே அறிவித்திருக்கிறார். மினி பஸ் உரிமையாளர்கள், முதலமைச்சரை சந்தித்து, தங்களது கோரிக்கையை வலியுறுத்தி உள்ளனர். அதுகுறித்து அரசு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி இருக்கிறோம். விரைவில் அதற்கு ஒரு தீர்வு கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருத்தியமைக்கப்பட்ட கட்டணம் நாளை (மார்ச் 29) முதல் அமலாகும்
    • கூடுதல் கட்டணம் வசூலித்தால் போக்குவரத்து துறையிடம் புகார் தெரிவிக்கலாம்

    கோவை,

    சாய்பாபா கோவில் புதிய பஸ் நிலையத்தை (ஸ்டேஜ்) அடிப்படையாகக் கொண்டு, கோவை-மேட்டுப்பாளையம் இடையே இயங்கும் பஸ்களில் திருத்தியமைக்கப்பட்ட கட்டணம் நாளை (மார்ச் 29) முதல் அமலாகும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கோவை காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்திலிருந்து பல ஆண்டுகளாக மேட்டுப்பாளையம், ஊட்டிக்கு அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இதனால், நகருக்குள் ஏற்படும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில், சாய்பாபா கோவில் அருகே புதிய பஸ் நிலையம் 2010-ம் ஆண்டு கட்டப்பட்டது. 'புதிய பஸ் நிலையத்திலிருந்து பஸ்களை இயக்கினால், காந்திபுரம் செல்வதற்கு நகர பஸ் அல்லது வேறு வாகனங்களை பொதுமக்கள் நாட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

    இது தங்களது வசூலைப் பாதிக்கும் என்று கருதிய தனியார் பஸ் உரிமையாளர்கள், காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்திலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு பஸ்களை இயக்கும் வகையில் ஐகோர்ட்டில் உத்தரவு பெற்றனர்.

    இருப்பினும் சாய்பாபா கோவில் பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல வேண்டுமென கோர்ட்டு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, சாய்பாபா கோவில் அருகில் உள்ள பஸ் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் சென்றாலும், காந்திபுரத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்வதற்கான கட்டணத்தையே வசூலித்து வந்தனர்.

    இந்நிலையில் புதிய பஸ் நிலையத்திலிருந்து மேட்டுப்பாளையம் சென்றால், பயண தூரம் குறைவதால், புதிய ஸ்டேஜ் உருவாக்கி, அதற்கேற்ப கட்டணத்தை குறைக்க வேண்டும்" என முந்தைய மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டனர். ஆனால், அந்த உத்தரவுகளை எதிர்த்து தனியார் பஸ் உரிமையாளர்கள் மாநில போக்குவரத்து மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் (எஸ்டிஏடி) மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.

    இதன் காரணமாக, தனியார் பஸ் திருத்தி யமைக்கப்பட்ட கட்டணத்தை வசூலிக்காமல் பழைய கட்டணத்தையே பல ஆண்டுகளாக வசூலித்து வந்தனர்.

    இந்நிலையில், 2022-ம் ஆண்டு அப்போதைய ஆட்சியர் சமீரன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, பஸ் உரிமையாளர்கள் மாநில போக்குவரத்து மேல்மு றையீட்டு தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த தீர்ப்பாயம், கடந்த பிப்ரவரி 3-ம் தேதி அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்தும், திருத்தியமைக்கப்பட்ட கட்டணத்தை தனியார் பஸ் உரிமையாளர்கள் வசூலிக்கவில்லை.

    இந்நிலையில், கோவை-மேட்டுப்பாைளயம் வழித்தடத்தில் இயங்கும் அனைத்து பஸ் உரிமையாளர்கள், தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தி னர், ேகாவை அரசுப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றுக்கு கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் (ஆர்டிஓ) கடந்த 15-ம் தேதி ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    அந்த உத்தரவில், "பொதுமக்கள் பயணிக்காத தூரத்துக்கும் சேர்த்து கட்ட ணத்தை செலுத்துவதை தவிர்க்கும் வகை யில், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பஸ் நிலையத்தை ஒரு ஸ்டேஜாக மாவட்ட கலெக்டர் நிர்ணயம் செய்தார். அதை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்களை எஸ்டிஏடி தள்ளுபடி செய்துள்ளது. எனவே, கலெக்டரின் உத்தரவுப்படி தங்கள் வழித்தடத்தில் புதிய ஸ்டேஜ் உருவாக்கி, கடந்த 2018-ல் திருத்தியமைக்கப்பட்ட கட்டணத்தையே வசூலிக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

    இருப்பினும், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 12 நாட்களாகியும் அமலாகவில்லை. இது தொடர்பாக கோவை வடக்கு வட்டார போக்கு வரத்து அலுவலர் சிவகுருநாதனிடம் கேட்ட போது "திருத்தியமைக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே இனிமேல் வசூலிக்க வேண்டும் என பஸ் உரிமையாளர்கள், அரசுப் போக்கு வரத்துக்கழகத்துக்கு அறிவுறுத்தியுள்ளோம். அதன்படி, கட்டணத்தை குறைத்து நாளை முதல் பஸ்கள் இயக்கப்படும். யாரேனும் கூடுதல் கட்டணம் வசூலித்தால் போக்குவரத்து துறையிடம் புகார் தெரிவிக்கலாம் என்றார்.

    அதன்படி திருத்தி அமைக்கப்பட்ட பஸ் கட்டணம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. காந்திபுரத்தில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு செல்ல வழக்கமான கட்டணம் ரூ.23 வசூலிக்க ப்படும். சாய்பாபா கோவில் புதிய பஸ்நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்ல ரூ.20 மட்டுமே பயணி களிடம் பெற வேண்டும்.

    அதேபோல புதிய பஸ்நிலையத்தில் இருந்து காரமடைக்கு ரூ.15-ம், மத்தம்பாளையத்துக்கு ரு.12-ம்,

    ஜோதி மில்ஸ்சுக்கு ரூ.10-ம், பெரியநாயக்கன் பாளையத்துக்கு ரூ.9-ம், புதுப்பாளையத்துக்கு ரூ.7-ம் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பஸ்களில் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க தேவையில்லை.
    • பஸ்களில் 5 வயதுக்கு மிகாத குழந்தை கணக்கிடப்படாது. கட்டணமும் வசூலிக்கப்படாது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் 20 ஆயிரத்துக்கும் அதிகமாக பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இதில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இந்த பஸ்களில் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க தேவையில்லை. கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம்.

    இதை தற்போது 5 வயது வரை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதுகுறித்து அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பஸ்களில் 5 வயதுக்கு மிகாத குழந்தை கணக்கிடப்படாது. கட்டணமும் வசூலிக்கப்படாது.

    மாவட்ட விரைவு பஸ்களில் 3 வயது முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இருந்த அரை டிக்கெட் அனுமதி தற்போது 5 வயது முதல் 12 வயதாக உயர்த்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ×