search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bus fare"

    • சென்னையில் இருந்து வெளியூர் செல்ல 35 ஆயிரம் பேருக்கு மேல் பதிவு செய்துள்ளனர்.
    • பயணிகளுக்கு புதிய அனுபவமாக இருப்பதால் சிரமப்படுகிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே இருப்பதால் அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு விறு விறுப்பாக நடந்து வருகிறது. வழக்கமாக செல்லும் ரெயில், சிறப்பு ரெயில் அனைத்தும் நிரம்பி விட்ட நிலையில் ஆம்னி பஸ்களிலும் பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன.

    குறிப்பாக 12, 13, 14 ஆகிய தேதிகளில் பயணம் செய்வதற்கு பஸ், ரெயில்களில் இடமில்லை. பொங்கல் பண்டிகை சனி, ஞாயிறு (13, 14-ந்தேதி) விடுமுறை நாட்களோடு சேர்ந்து 15-ந்தேதியும், அதனை தொடர்ந்து மாட்டு பொங்கல், உழவர்தினம், 16, 17-ந்தேதி அரசு விடுமுறை என்பதால் தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இதனால் வெளியூர் பயணம் இந்த ஆண்டு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து 3 நாட்களுக்கு அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்ய 50 ஆயிரம் பேருக்கு மேல் முன்பதிவு செய்துள்ளனர். தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பஸ்களில் அனைத்து இடங்களும் நிரம்பி விட்டதால் முன்பதிவுக்கு பிற போக்குவரத்து கழக பஸ்களை இணைத்து உள்ளனர்.


    மதுரை, திருநெல்வேலி, சேலம், கோவை, கும்பகோணம் போக்குவரத்துக் கழகங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பஸ்களில் தற்போது முன்பதிவு நடந்து வருகிறது. சென்னையில் இருந்து வெளியூர் செல்ல 35 ஆயிரம் பேருக்கு மேல் பதிவு செய்துள்ளனர்.

    விரைவில் சிறப்பு பஸ்கள் அறிவிப்பை அமைச்சர் சிவசங்கர் வெளியிட இருப்பதால் அதற்கான முன்பதிவு தொடங்கும். இந்த ஆண்டு அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்பவர்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டும்.

    இதற்கான தகவல் முன்பதிவு செய்த பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரசு விரைவு பஸ்கள் அனைத்தும் அங்கிருந்து இயக்கப்படுவதால் பயணிகள் பல பஸ்கள் மாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. மின்சார ரெயில்களில் பயணம் செய்து கிளாம்பாக்கத்திற்கு செல்ல வேண்டும்.

    இது பயணிகளுக்கு புதிய அனுபவமாக இருப்பதால் சிரமப்படுகிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஆம்னி பஸ்கள் பொங்கலுக்கு பிறகு கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும்.
    • அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு கடந்த வாரம் திறக்கப்பட்டது.

    இதையடுத்து கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்ட அனைத்து அரசு விரைவு பஸ்களும் 31-ந்தேதி முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்பட்டு செல்கின்றன.

    ஆம்னி பஸ்கள் பொங்கலுக்கு பிறகு கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும். அதுவரையில் கோயம்பேட்டில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    கிளாம்பாக்கத்திற்கு அரசு விரைவு பஸ்கள் மட்டும் முழு அளவில் மாற்றப்பட்டு இயக்கப்படுவதால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். பிற போக்குவரத்துக்கழக பஸ்கள் இன்னும் கோயம்பேட்டில் இருந்துதான் இயக்கப்படுகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்து சென்னை வரும் பயணிகள் மட்டும் சிரமப்படுகின்றனர்.

    அவர்கள் பல பஸ்கள் மாறி தங்கள் பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை இருப்பதாக தெரிவிக்கின்றனர். தற்போது உள்ள சூழ்நிலையில் ஆம்னி பஸ்களில் பயணம் செய்யக்கூடியவர்கள் தான் கோயம்பேடு வரை வர முடிகிறது.

    அரசு பஸ்களில் பயணிப்பவர்கள் கிளாம்பாக்கத்தில் இறங்கி மாநகர பஸ் மற்றும் மின்சார ரெயில்களுக்கு மாறி வருவதால் காலதாமதம் ஏற்படுகிறது.

    இந்த நிலையில் பொங்கலுக்கு பிறகு ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என்று அறிவித்து இருந்த நிலையில் அங்கிருந்து இயக்குவதற்கு வாய்ப்பு இல்லை என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

    850 ஆம்னி பஸ்கள் தென்மாவட்ட பகுதிகளுக்கு தினமும் சென்னையில் இருந்து இயக்கப்படுகிறது. இந்த பஸ்களை பராமரிப்பதற்கு தேவையான வசதிகள் கிளாம்பாக்கத்தில் செய்து தரப்படவில்லை என்று அவர்கள் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

    இது குறித்து அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் அன்பழகன் கூறியதாவது:-

    கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் ஆம்னி பஸ்களுக்கு பார்க்கிங் பகுதி ஒதுக்கப்படவில்லை. இது தவிர பஞ்சர், வீல் அலைண்ட்மென்ட் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு அங்கு வசதி இல்லை. அவற்றை செய்து கொடுத்தால்தான் ஆம்னி பஸ்களை கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க முடியும்.


    ஆம்னி பஸ்களை இயக்க தேவையான அடிப்படை வசதிகள் இருந்தால்தான் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்க முடியும். இல்லையென்றால் கோயம்பேட்டிற்கு பஸ்களை கொண்டு வர வேண்டும்.

    எனவே எங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தால்தான் மாற்ற முடியும். அது வரையில் கோயம்பேட்டில் இருந்துதான் பஸ்கள் செல்லும். இதுபற்றி அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆம்னி பஸ்களை கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு உடனே மாற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் காலதாமதம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையில் ஆம்னி பஸ்களை மட்டும் கோயம்பேட்டில் இருந்து இயக்க அனுமதிப்பதற்கு அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    தென்மாவட்டங்கள், சேலம், கோவை உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலையில் இயக்கக்கூடிய எல்லா பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள் அனைத்தையும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கினால்தான் போக்குவரத்து நெரிசல் குறையும். அரசு பஸ்களை மட்டும் மாற்றினால் போதாது.

    மேலும் இதனால் மக்கள் குழப்பம் அடைகிறார்கள். அனைத்து பஸ்களையும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கினால் மட்டும்தான் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • முன்பதிவு செய்த மற்றும் செய்யாத பயணிகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டது.
    • கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் 32 கி.மீ தொலைவில் இருப்பதால், அதற்கேற்ப கட்டணக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் நவீன வசதிகளுடன் 88 ஏக்கர் பரப்பில் ரூ.400 கோடி செலவில் பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை அன்று திறந்து வைத்தார். இதையடுத்து பேருந்து முனையம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தது.

    கோயம்பேட்டில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் முன்பதிவு செய்த மற்றும் செய்யாத பயணிகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டது.

    இந்நிலையில், கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் ரூ.20 முதல் ரூ.35 வரை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதாவது கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் 32 கி.மீ தொலைவில் இருப்பதால், அதற்கேற்ப கட்டணக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

    கோயம்பேட்டில் இருந்து திருச்சிக்கு அரசு விரைவுப் பேருந்துகளில் ரூ.460 வரை அதிகபட்சமாக வசூலிக்கப்பட்ட நிலையில், கிளாம்பாக்கத்தில் இருந்து செல்லும் அதே பேருந்துக்கு அதிகபட்ச கட்டணம் ரூ.430 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பஸ்களில் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க தேவையில்லை.
    • பஸ்களில் 5 வயதுக்கு மிகாத குழந்தை கணக்கிடப்படாது. கட்டணமும் வசூலிக்கப்படாது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் 20 ஆயிரத்துக்கும் அதிகமாக பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இதில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இந்த பஸ்களில் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க தேவையில்லை. கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம்.

    இதை தற்போது 5 வயது வரை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதுகுறித்து அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பஸ்களில் 5 வயதுக்கு மிகாத குழந்தை கணக்கிடப்படாது. கட்டணமும் வசூலிக்கப்படாது.

    மாவட்ட விரைவு பஸ்களில் 3 வயது முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இருந்த அரை டிக்கெட் அனுமதி தற்போது 5 வயது முதல் 12 வயதாக உயர்த்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • திருத்தியமைக்கப்பட்ட கட்டணம் நாளை (மார்ச் 29) முதல் அமலாகும்
    • கூடுதல் கட்டணம் வசூலித்தால் போக்குவரத்து துறையிடம் புகார் தெரிவிக்கலாம்

    கோவை,

    சாய்பாபா கோவில் புதிய பஸ் நிலையத்தை (ஸ்டேஜ்) அடிப்படையாகக் கொண்டு, கோவை-மேட்டுப்பாளையம் இடையே இயங்கும் பஸ்களில் திருத்தியமைக்கப்பட்ட கட்டணம் நாளை (மார்ச் 29) முதல் அமலாகும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கோவை காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்திலிருந்து பல ஆண்டுகளாக மேட்டுப்பாளையம், ஊட்டிக்கு அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இதனால், நகருக்குள் ஏற்படும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில், சாய்பாபா கோவில் அருகே புதிய பஸ் நிலையம் 2010-ம் ஆண்டு கட்டப்பட்டது. 'புதிய பஸ் நிலையத்திலிருந்து பஸ்களை இயக்கினால், காந்திபுரம் செல்வதற்கு நகர பஸ் அல்லது வேறு வாகனங்களை பொதுமக்கள் நாட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

    இது தங்களது வசூலைப் பாதிக்கும் என்று கருதிய தனியார் பஸ் உரிமையாளர்கள், காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்திலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு பஸ்களை இயக்கும் வகையில் ஐகோர்ட்டில் உத்தரவு பெற்றனர்.

    இருப்பினும் சாய்பாபா கோவில் பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல வேண்டுமென கோர்ட்டு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, சாய்பாபா கோவில் அருகில் உள்ள பஸ் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் சென்றாலும், காந்திபுரத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்வதற்கான கட்டணத்தையே வசூலித்து வந்தனர்.

    இந்நிலையில் புதிய பஸ் நிலையத்திலிருந்து மேட்டுப்பாளையம் சென்றால், பயண தூரம் குறைவதால், புதிய ஸ்டேஜ் உருவாக்கி, அதற்கேற்ப கட்டணத்தை குறைக்க வேண்டும்" என முந்தைய மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டனர். ஆனால், அந்த உத்தரவுகளை எதிர்த்து தனியார் பஸ் உரிமையாளர்கள் மாநில போக்குவரத்து மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் (எஸ்டிஏடி) மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.

    இதன் காரணமாக, தனியார் பஸ் திருத்தி யமைக்கப்பட்ட கட்டணத்தை வசூலிக்காமல் பழைய கட்டணத்தையே பல ஆண்டுகளாக வசூலித்து வந்தனர்.

    இந்நிலையில், 2022-ம் ஆண்டு அப்போதைய ஆட்சியர் சமீரன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, பஸ் உரிமையாளர்கள் மாநில போக்குவரத்து மேல்மு றையீட்டு தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த தீர்ப்பாயம், கடந்த பிப்ரவரி 3-ம் தேதி அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்தும், திருத்தியமைக்கப்பட்ட கட்டணத்தை தனியார் பஸ் உரிமையாளர்கள் வசூலிக்கவில்லை.

    இந்நிலையில், கோவை-மேட்டுப்பாைளயம் வழித்தடத்தில் இயங்கும் அனைத்து பஸ் உரிமையாளர்கள், தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தி னர், ேகாவை அரசுப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றுக்கு கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் (ஆர்டிஓ) கடந்த 15-ம் தேதி ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    அந்த உத்தரவில், "பொதுமக்கள் பயணிக்காத தூரத்துக்கும் சேர்த்து கட்ட ணத்தை செலுத்துவதை தவிர்க்கும் வகை யில், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பஸ் நிலையத்தை ஒரு ஸ்டேஜாக மாவட்ட கலெக்டர் நிர்ணயம் செய்தார். அதை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்களை எஸ்டிஏடி தள்ளுபடி செய்துள்ளது. எனவே, கலெக்டரின் உத்தரவுப்படி தங்கள் வழித்தடத்தில் புதிய ஸ்டேஜ் உருவாக்கி, கடந்த 2018-ல் திருத்தியமைக்கப்பட்ட கட்டணத்தையே வசூலிக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

    இருப்பினும், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 12 நாட்களாகியும் அமலாகவில்லை. இது தொடர்பாக கோவை வடக்கு வட்டார போக்கு வரத்து அலுவலர் சிவகுருநாதனிடம் கேட்ட போது "திருத்தியமைக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே இனிமேல் வசூலிக்க வேண்டும் என பஸ் உரிமையாளர்கள், அரசுப் போக்கு வரத்துக்கழகத்துக்கு அறிவுறுத்தியுள்ளோம். அதன்படி, கட்டணத்தை குறைத்து நாளை முதல் பஸ்கள் இயக்கப்படும். யாரேனும் கூடுதல் கட்டணம் வசூலித்தால் போக்குவரத்து துறையிடம் புகார் தெரிவிக்கலாம் என்றார்.

    அதன்படி திருத்தி அமைக்கப்பட்ட பஸ் கட்டணம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. காந்திபுரத்தில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு செல்ல வழக்கமான கட்டணம் ரூ.23 வசூலிக்க ப்படும். சாய்பாபா கோவில் புதிய பஸ்நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்ல ரூ.20 மட்டுமே பயணி களிடம் பெற வேண்டும்.

    அதேபோல புதிய பஸ்நிலையத்தில் இருந்து காரமடைக்கு ரூ.15-ம், மத்தம்பாளையத்துக்கு ரு.12-ம்,

    ஜோதி மில்ஸ்சுக்கு ரூ.10-ம், பெரியநாயக்கன் பாளையத்துக்கு ரூ.9-ம், புதுப்பாளையத்துக்கு ரூ.7-ம் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    டீசல் நஷ்டத்தை சரிகட்ட வெளியூர்களுக்கு செல்லும் சாதாரண பஸ்களுக்கு டீலக்ஸ் மற்றும் எக்ஸ்பிரஸ் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
    சென்னை:

    தினமும் அதிகரித்து வரும் டீசல் விலை உயர்வால் அரசு போக்குவரத்து கழகங்கள் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. ஜனவரி மாதம் 20-ந்தேதி ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.62.94 ஆக இருந்தது.

    இன்று ஒரு லிட்டர் ரூ.79.50 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.11 கோடி நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. ஜனவரி மாதம் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு ஒரு லிட்டர் டீசல் ரூ.17 வரை உயர்ந்துள்ளது.

    இதனால் அரசு போக்குவரத்து கழகங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. ஏற்கனவே பஸ் கட்டண உயர்வால் பயணிகள் கூட்டம் குறைந்து வருவாய் குறைந்து இருந்த நிலையில் இப்போது வரலாறு காணாத டீசல் விலை உயர்வால் கடும் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றன.

    இந்த இழப்பை சரிகட்டுவதற்காக வெளியூர்களுக்கு செல்லும் அரசு பஸ்களின் கட்டணம் மறைமுகமாக மீண்டும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் தவிர விழுப்புரம், கோவை, சேலம், மதுரை, திருநெல்வேலி, கும்பகோணம் ஆகிய 6 போக்குவரத்து கழகங்கள் மூலமாக இயக்கப்படும் சுமார் 2500 சாதாரண பஸ்களின் கட்டணம் எக்ஸ்பிரஸ் மற்றும் டீலக்ஸ் கட்டணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சாதாரண பஸ் கட்டணம் கிலோ மீட்டருக்கு 58 பைசா எனவும், எக்ஸ்பிரஸ் கட்டணம் கிலோ மீட்டருக்கு 85 பைசாவும் அரசு நிர்ணயித்துள்ளது. வெளியூர்களுக்கு 6850 புறநகர் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இதுதவிர 2500 சாதாரண பஸ்களும் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. சாதாரண கட்டணத்தில் இயக்கப்பட்டு வந்த இந்த பஸ்கள் எக்ஸ்பிரஸ் கட்டணத்திற்கு (வழித் தடத்திற்கு) மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனால் தற்போது சாதாரண பஸ்கள் அனைத்திலும் டீலக்ஸ் மற்றும் எக்ஸ்பிரஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    இதன்படி சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சாதாரண பஸ் கட்டணம் ரூ.120 ஆகும். தற்போது இந்த பஸ்கள் டீலக்ஸ் ஆக மாற்றப்பட்டதால் ரூ.175 கட்டணமும், அல்ட்ரா டீலக்ஸ் கட்டணமாக ரூ.200 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

    அரசு பஸ்களில் திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை கோயம்பேட்டில் இருந்து காஞ்சீபுரம், விழுப்புரம், புதுச்சேரி, ஆற்காடு, சேலம், தர்மபுரி, ஓசூர் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பஸ்களில் தற்போது பயணிகள் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.

    மேலும் பூந்தமல்லியில் இருந்து வேலூருக்கு செல்லும் அரசு பஸ்களில் பயணம் செய்தால் கோயம்பேட்டில் இருந்து புறப்பட்தாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பூந்தமல்லி- வேலூருக்கு ரூ.100 கட்டணமாகும். கோயம்பேடு- வேலூர் டிக்கெட் கட்டணம் ரூ.125 வசூலிக்கப்படுகிறது. எந்த இடத்தில் இருந்து பயணம் செய்கிறோமோ அதற்குதான் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். ஆனால் பயணம் செய்யாத இடத்திற்கும் சேர்த்து அதிகமாக கட்டணம் வசூலிப்பது ஏழை மக்களை வதைக்கும் செயல் என்று தெரிவிக்கின்றனர்.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டக்டர் இல்லாமல் டிரைவர்களை மட்டும் வைத்து பஸ்களை கடந்த சில மாதங்களாக இயக்கி வருகின்றனர். குறிப்பிட்ட இடங்களில் மட்டும் நின்று செல்லும் இந்த பஸ்களில் டிரைவரே டிக்கெட் கொடுத்து விடுவார்.

    இந்த திட்டத்திற்கு பயணிகளிடம் வரவேற்பு இல்லாததால் விலக்கி கொள்ளப்படுகிறது. சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்ட கண்டக்டர் இல்லாத பஸ் சேவை தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது. #Tamilnews
    கழிவறை, ஏசி, படுக்கை வசதியுடன் நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட அரசு சொகுசு பேருந்துக்கான கட்டண விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. #TNSTC #SETC #TransportDept
    சென்னை:

    அரசு பஸ்களில் இருக்கை வசதிகள், கைபிடிகள், கூரைகள், பக்கவாட்டு கண்ணாடிகள் போன்றவை உடைந்து காணப்பட்டதால் பொதுமக்கள் பயணம் செய்ய தயங்கினர். இதனால் அரசு போக்குவரத்து கழகத்துக்கு டீசல் செலவை ஈடுகட்ட முடியாத அளவுக்கு நஷ்டம் அதிகரித்து வந்தது.

    புதிய பஸ்களை அறிமுகம் செய்தால் மட்டுமே போக்குவரத்து கழகத்துக்கு வருவாயை பெருக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. ஆதலால் முதலில் 2 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்குவதற்கு அரசு நிதி ஒதுக்கியது.

    இதையடுத்து புதிய பஸ்களின் கட்டுமானப் பணிகள் முடுக்கிவிடப்பட்டு நேற்று முதல் கட்டமாக 515 புதிய பஸ்களை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். புதிய பஸ்களில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளனர். தனியார் ஆம்னி பஸ்சுக்கு இணையான அனைத்து வசதிகளும் இவற்றில் உள்ளன.

    படுக்கை வசதி, கழிப்பிட வசதி, சி.சி.டி.வி. கேமரா, சொகுசு இருக்கைகள், உள்ளிட்ட பல வசதிகள் பயணிகளுக்கும், டிரைவருக்கும் பயனுள்ள வகையில் அமைக்கப்பட்டுள்ளது.


    புதிய பஸ்கள் 8 போக்குவரத்து கழகங்களுக்கும் பிரித்து ஒதுக்கப்பட்டன. அதில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு 40 பஸ்கள் முதல் கட்டமாக வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் சென்னையில் இருந்து 18 பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன.

    சென்னையில் இருந்து ஏ.சி. படுக்கை வசதி பஸ்கள் 6 நகரங்களுக்கு விடப்பட்டுள்ளது. புதிய சொகுசு பஸ்களுக்கு 3 வகையான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஏ.சி. படுக்கை வசதி பஸ்களுக்கு கிலோ மீட்டருக்கு ரூ.2 வீதம் கட்டணமும், குளிர்சாதன வசதி அல்லாத படுக்கை வசதிக்கு கிலோ மீட்டருக்கு ரூ.1.55-ம், அல்ட்ரா டீலக்ஸ் ஏ.சி இருக்கை வசதி பஸ்களுக்கு கிலோ மீட்டருக்கு ரூ.1.30-ம், ஏ.சி. வசதி அல்லாத அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களுக்கு கிலோ மீட்டருக்கு ஒரு ரூபாய் வீதமும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து மதுரைக்கு ஏ.சி. படுக்கை கட்டணம் ரூ.975, சேலம் ரூ.725, போடிநாயக்கன்பட்டி ரூ.1110, ஈரோடு ரூ.905, கரூர் ரூ.820 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோவை-பெங்களூர் இடையே இயக்கப்படும் ஏ.சி. படுக்கை வசதி பஸ்சுக்கு ரூ.805 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 6 நகரங்களுக்கு ஏ.சி. படுக்கை வசதி பஸ் நேற்று முதல் இயக்கப்படுகிறது.

    சென்னை-மதுரை ஏ.சி வசதி அல்லாத படுக்கை வசதிக்கு ரூ.725, சென்னை- திண்டுக்கல் இடையே விடப்பட்டுள்ள கழிப்பிட வசதியுள்ள அல்ட்ரா டீலக்ஸ் பஸ்சுக்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


    இதுகுறித்து விரைவு போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், விரைவு போக்குவரத்து கழகத்துக்கு 100 புதிய பஸ்கள் ஒதுக்குகிறார்கள். அதில் 40 ஏ.சி. படுக்கை வசதி பஸ்களாகும், 50 அல்ட்ரா டீலக்ஸ் (யூ.டி) பஸ்களில், 10 கழிவறை வசதி கொண்ட அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களாகும். இவற்றில் முதல் கட்டமாக 40 பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    ஆகஸ்டு மாதத்துக்குள் மீதமுள்ள பஸ்கள் வந்து விடும். நீண்டதூரம் செல்லக்கூடிய பஸ்களில் பயணிகளுக்கு வசதிகளை செய்து கொடுத்தால் அதிகளவு பயணிப்பார்கள். புதிய சொகுசு பஸ்கள் விடப்பட்டதால் இனி பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார். #TNSTC #SETC #TransportDept
    ×