என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பஸ் கட்டண உயர்வு குறித்து கருத்து தெரிவிக்கலாம்- பொதுமக்களுக்கு அரசு அழைப்பு
    X

    பஸ் கட்டண உயர்வு குறித்து கருத்து தெரிவிக்கலாம்- பொதுமக்களுக்கு அரசு அழைப்பு

    • தபால் மூலமாகவோ தெரிவிக்கலாம்.
    • tc.tn@nic.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் 3 வார காலத்திற்குள் கருத்து தெரிவிக்கலாம்.

    சென்னை:

    பஸ் கட்டண உயர்வு குறித்து கருத்து கூற பொதுமக்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து போக்குவரத்து ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    தனியார் பஸ் உரிமையாளர்கள் கூட்டமைப்பு, சென்னை மற்றும் ஈரோடு பஸ் உரிமையாளர்கள் சங்கம் ஆகியோர் கட்டண உயர்வு கோரி வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுப்படி தமிழ்நாடு அரசு பஸ் கட்டண உயர்வு குறித்து ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க நிபுணர் குழு அமைத்துள்ளது.

    எனவே பஸ் கட்டண உயர்வு குறித்து அனைத்து நுகர்வோர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை போக்குவரத்து ஆணையர், கிண்டி, சென்னை-600032 என்ற முகவரிக்கு நேரில் அல்லது தபால் மூலமாகவோ தெரிவிக்கலாம். மேலும், tc.tn@nic.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் 3 வார காலத்திற்குள் கருத்து தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    தமிழ்நாட்டில் கடந்த 2018-ம் ஆண்டு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×