என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "KTRama Rao"
- தெலுங்கானாவில் வரும் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
- அறிவிப்பு வெளியானது முதல் அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும். வேட்புமனுவை வாபஸ் பெற நவம்பர் 15-ம் தேதி இறுதி நாளாகும்.
தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் கஜ்வெல் தொகுதியில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியைச் சேர்ந்தவரும், தொழில்நுட்பத்துறை அமைச்சருமான கே.டி.ராமாராவ் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
நிஷமாபாத் மாவட்டம் அர்மூர் பகுதியில் பிரசாரம் செய்வதற்காக அவர் வேனில் சென்றார் அப்போது, வேன் டிரைவர் திடீரென பிரேக்கை பிடித்தார்.
இதை எதிர்பாராத அமைச்சர் கே.டி.ராமாராவ் மற்றும் அவருடன் நின்றிருந்தவர்களின் சிலர் கீழே விழுந்தனர். இதில் அமைச்சர் கே.டி.ராமாராவ் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்