search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீர்ப்பு"

    • 8 பேரை கொலை செய்த சைக்கோ கொலையாளிக்கு வாழ்நாள் சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளது
    • திருச்சி நீதிமன்றத்தில் அதிரடி தீர்ப்பு

    திருச்சி,

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே வேங்கூர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் தங்கதுரை (34). கடந்த, 2016ம் செப்டம்பர் மாதம், 7ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. பின்னர்ஒரு வாரம் கழித்து, கிருஷ்ண சமுத்திரம் பகுதியில் உள்ள ஒரு வாய்க்காலின் கரையில் தங்கதுரையின் உடல் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் மதன் போலீஸார், தங்கதுரை உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.அப்போது, தங்கதுரையின் மொபைல்போனை கிருஷ்ண சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த, அவரது பள்ளிப்பருவ காலத்து நண்பரான சப்பாணி (35) என்பவர் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.அவரைப் பிடித்து விசாரித்தபோது, நகைக்கு ஆசைப்பட்டு தங்கதுரையைக் கொலை செய்ததாக சப்பாணி ஒப்புக்கொண்டார்.இதுபோலவே, நகைக்காக தன் தந்தை தேக்கன் (75), திருவெறும்பூர் மேல குமரேசபுரத்தைச் சேர்ந்த கோகிலா (70), பாப்பாக்குறிச்சியைச் சேர்ந்த அற்புதசாமி (70), கீழ குமரேசபுரத்தைச் சேர்ந்த விஜய் விக்டர் (27), கூத்தப்பாரைச் சேர்ந்த சத்தியநாதன் (45), பெரியசாமி (75), வடகாடு விஸ்வம்பாள் சமுத்திரத்தைச் சேர்ந்த அதிமுக கவுன்சிலர் குமரேசன் (50) ஆகிய, 7 பேரையும் கொலை செய்ததாக சப்பாணி வாக்குமூலம் அளித்தார். பின்னர் கொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இவ்வழக்கு விசாரணை, திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் தங்கதுரை, சத்யநாதன் ஆகியோர் கொலைக்கான வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிபதி அறிவித்திருந்தார். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட சப்பானி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். பின்னர் நீதிபதி பாபு குற்றம் சாட்டப்பட்ட சப்பாணி குற்றவாளி என தீர்ப்பளித்தார். மேலும் அதற்கான தண்டனை விவரங்களை பிற்பகல் அறிவிப்பதாக கூறினார். பிற்பகலில் நீதிபதி பாபு தனது தீர்ப்பில், சப்பாணிக்கு அதிகபட்ச தண்டனையாக வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    • திருமானூர் அருகே தம்பியை வெட்டி கொலை செய்த அண்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது
    • அரியலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தீர்ப்பு

    அரியலூர்,

    திருமானூர் அடுத்த கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்தவர்விவசாயி ரவி(48). இவரது அண்ணன் ராஜேந்திரன்(50). இருவருக்கும் சொத்துதகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ரவிவீட்டு தென்னை மரத்திலிருந்து தேங்காய் ஒன்று ராஜேந்திரன் வீட்டின்கூரையில் விழுந்துள்ளது. இதனால், இரு குடும்பத்தாருக்கும் தகராறுஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த ராஜேந்திரன், தம்பி ரவியைஅரிவாளால் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரவி, தஞ்சைமருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து,ரவியின் மனைவி செல்வி அளித்த புகாரின் பேரில் திருமானூர்காவல்துறையினர் வழக்குப் பதிந்து ராஜேந்திரனை கைது செய்து சிறையில்அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மாவட்ட முதன்மைநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  வழக்கை விசாரித்து வந்த மாவட்டமுதன்மை நீதிபதி கிறிஸ்டோபர், குற்றவாளி ராஜேந்திரனுக்கு 7 ஆண்டுகள்சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதம் விதித்து தீா்ப்பளித்தார். இதையடுத்து ராஜேந்திரன் திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

    • ஆத்திரம் அடைந்த பிரபு, அங்கு கிடந்த சவுக்கு கட்டையை எடுத்து பூபதியை தாக்கினார்.
    • புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரும்பார்த்த புரம் பாரதி நகரை சேர்ந்தவர் பூபதி (வயது 50), பெயிண்டர். இவரது நண்பர் பிரபு (36) தொழிலாளி. இவர்கள் இருவரும் கடந்த 2021-ம் ஆண்டு மணவெளி பகுதியில் உள்ள சாராயக்கடைக்கு சென்று சாராயம் குடித்தனர். பின்னர் பூபதி அவரது சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

    அப்போது பிரபு அவரிடம் கூடுதலாக சாராயம் வாங்கி தரும்படி கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பிரபு, அங்கு கிடந்த சவுக்கு கட்டையை எடுத்து பூபதியை தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே பூபதி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி தலைமை கோர்ட்டில் நீதிபதி செல்வநாதன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு கூறப்பட்டது.

    இதில் குற்றம் சாட்டப்பட்ட பிரபுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து, அதனை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ரவீந்திரன் ஆஜரானார்.

    • ஆசிரியரிடம் ரூ.500 லஞ்சம் வாங்கிய கருவூல ஊழியருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கப்பட்டது
    • திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

    திருச்சி,

    திருச்சி மண்ணச்சநல்லூர் சிறுகாம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றியவர் சே. நல்லையன். இவர் தனது பணி முதுர்வின்போது அவரது கணக்கில் இருக்கும் விடுப்பை பணமாக்க திருச்சி லால்குடி சார்ந்த கருவூ லத்தில் விண்ண ப்பித்தார். அப்போது கண க்காளர் கிருஷ்ணமூர்த்தி ரூ. 500 லஞ்சம் கேட்டார்.லஞ்சம் கொடுக்க மனமில்லாத நல்லையன் திருச்சி ஊழல் தடுப்பு காவல் பிரிவில் புகார் செய்தார். அதைத் தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி மீது கடந்த 2008 மார்ச் 15ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.பின்னர் இரு தினங்கள் கழித்து கையூட்டு பணம் ரூ. 500 கிருஷ்ணமூர்த்தி பெற்றுக் கொண்ட போது லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்இந்த வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதி கார்த்திகேயன் லஞ்சம் வாங்கிய லால்குடி சார் கருவூல முன்னாள் கணக்கர் கிருஷ்ணமூர்த்திக்கு லஞ்சப்பனம் கேட்டு பெற்ற குற்றத்திற்காக ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும், அதனை கட்ட தவறினால் 6 மாத சிறை தண்டனையும், அரசு பதவியை தவறாக பயன்படுத்தி கையூட்டு கேட்டுப் பெற்ற குற்றத்தி ற்காக மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் ஆறு மாத சிறை தண்டனை விதித்ததோடு மேற்கண்ட தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.

    • மத்திய அரசால் கடந்த 2012-ம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது.
    • குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் சாகும்வரை சிறை தண்டனை கொடுக்கவும் இந்த சட்டம் வழிவகுக்கிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    இன்றைய கால கட்டத்தில் பெண் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகிறார்கள். குறிப்பாக குழந்தைகள் பாலியல் தொல்லைகளால் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள்.

    இவர்களை பாதுகாக்கும் பொருட்டு மத்திய அரசால் கடந்த 2012-ம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது. 18 வயதுக்கு குறைவான பெண் குழந்தைகள் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டால் இதற்காக அமைக்கப்பட்ட போக்சோ நீதிமன்றம் மூலம் நிவாரணம் பெறலாம்.

    இங்கு வரும் பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தையிடம் 30 நாட்களுக்குள் சாட்சியம் பெறப்பட்டு வழக்கை ஒரு வருடத்திற்குள் முடிக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் சாகும்வரை சிறை தண்டனை கொடுக்கவும் இந்த சட்டம் வழிவகுக்கிறது.

    நாடு முழுவதும் மாவட்டம் தோறும் போக்சோ கோர்ட்டுகள் ஏற்படுத்தப்பட்டன. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் போக்சோ கோர்ட்டு செயல்பட்டு வருகிறது.

    இங்கு கடந்த ஆண்டு நீதிபதியாக பூரணஜெய் ஆனந்த் பொறுப்பேற்றார். அப்போதிருந்து மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் போக்சோ வழக்குகள் உடனுக்குடன் விசாரிக்கப்படுகிறது. சாட்சிகளின் உண்மை தன்மை மூலம் வழக்குகள் முடிக்கப்பட்டு தீர்ப்புகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தற்போது வரை ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதில் 90-க்கும் மேற்பட்ட வழக்குகளில் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

    • 14 நாட்களுக்குள் கோர்ட்டு விசாரணை முடிந்து 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து, மாஜிஸ்திரேட்டு தீர்ப்பு கூறினார்.
    • நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு துரிதமாக தண்டனை பெற்று போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் ஏ.பி.டி. ரோட்டில் கடந்த 9-ந் தேதி இரவு 8¼ மணிக்கு செல்போனில் பேசியபடி நடந்து சென்ற நபரிடம் இருந்து செல்போனை தட்டிப்பறித்து சென்ற சம்பவம் தொடர்பாக மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவம் தொடர்பாக தேனி மாவட்டம் அல்லிநகரம் பொம்மியகவுண்டம்பட்டியை சேர்ந்த திருப்பூர் வெள்ளியங்காட்டில் வசித்து வரும் கோகுல் (வயது 20) என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமுனா கைது செய்தார்.

    பின்னர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார். பின்னர் 2 நாட்களில் புலன் விசாரணையை முடித்து, குற்ற இறுதி அறிக்கை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்.3-ல் தாக்கல் செய்தனர். அதன்பின்னர் அந்த வழக்கில் முறையாக சாட்சிகளையும், சாட்சியங்களையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். 14 நாட்களுக்குள் கோர்ட்டு விசாரணை முடிந்து வழக்கில் சம்பந்தப்பட்ட கோகுலுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து, மாஜிஸ்திரேட்டு பழனிக்குமார் தீர்ப்பு கூறினார்.

    திருப்பூர் மாநகரத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சம்பந்தப்பட்ட வழக்கில் உடனடியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு துரிதமாக தண்டனை பெற்று சம்பந்தப்பட்டவர்களை சிறையில் இருந்து வெளியே வராமல் செய்ய வேண்டும் என்று திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு அறிவுறுத்தியிருந்தார்.

    அதன்படி சிறப்பாக பணியாற்றிய மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமுனா மற்றும் புலன் விசாரணைக்கு உதவியாக இருந்த போலீசார் ராஜசேகர்,ஜெகதீஷ், சூரியகலா, ஏட்டு அகஸ்டின் ஆகியோருக்கு திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு வெகுமதி அளித்து பாராட்டினார். அப்போது துணை கமிஷனர் வனிதா, உதவி கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • டெல்லியில் அதிகாரிகள் நியமன அதிகாரம்: மத்திய அரசு அவசர சட்டம் - ஆம்ஆத்மி குற்றச்சாட்டு
    • மத்திய அரசின் அவசர சட்டம் அரசியலைமைப்பு சட்டத்துக்கு விரோதமானவை.

    புதுடெல்லி:

    டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி அரசுக்கும், மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசுக்கும் இடையே அதிகார மோதல் நீடித்து வருகிறது.

    இதற்கு தீர்வு காணும் வகையில் டெல்லி அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமிக்கவும், இடமாற்றம் செய்யவும் மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது என்றும், துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும் கடந்த 11-ந்தேதி தீர்ப்பு வழங்கியது.

    அரசியல் சாசன அமர்வு, நிலம், காவல், பொது உத்தரவு ஆகியவை தவிர அனைத்து விவகாரங்களிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்குத்தான் உரிமை உள்ளது என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் டெல்லி அரசுக்கு அதிகாரிகள் நியமனத்தில் மத்திய அரசு அனுமதி அளிப்பதில்லை என்று தீர்ப்பு வெளியான மறுதினமே சுப்ரீம் கோர்ட்டில் ஆம் ஆத்மி அரசு வழக்கு தொடுத்தது.

    இந்த நிலையில் உயர் அதிகாரிகள் பணி நியமனம், பணியிட மாற்றத்துக்கு புதிதாக ஆணையம் அமைக்க மத்திய அரசு நேற்று அவசர சட்டம் பிறப்பித்தது.

    யூனியன் பிரதேச உயர் அதிகாரிகளான டானிக்ஸ் பிரிவு குரூப் ஏ அதிகாரிகளின் பணி நியமனம், பணியிட மாற்றம் செய்வதை முடிவு செய்வதற்கான தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இதில் டெல்லி முதல்-மந்திரி தலைமை செயலாளர், முதன்மை உள்துறை செயலாளர் ஆகியோர் இடம்பெறுவார்கள். பெரும்பான்மை வாக்குகள் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டெல்லி அரசின் பணி நியமன அதிகாரத்தை குறைக்கும் வகையில் இந்த அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாகவும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அவமதிப்பதாக உள்ளது என்றும் ஆம்ஆத்மி கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

    இதுதொடர்பாக ஆம் ஆத்மி மந்திரி அதிஷி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசின் அவசர சட்டம் அரசியலைமைப்பு சட்டத்துக்கு விரோதமானவை. டெல்லி அரசிடம் இருந்து அதிகாரத்தை பறிக்கும் முயற்சியாகும். சுப்ரீம் கோர்ட்டுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கும் நேரத்தில் மத்திய அரசு வேண்டுமென்றே இந்த அவசர சட்டத்தை கொண்டுவந்துள்ளது.

    முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை பார்த்து பிரதமர் நரேந்திர மோடி பயப்படுகிறார். அவர் (கெஜ்ரிவால்) அதிகாரம் பெற்றால் டெல்லிக்கு அசாதாரண பணிகளை செய்வார் என்று அவர்கள் பயப்படுவார்கள்.

    டெல்லி அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருப்பதை மத்திய அரசால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆணையத்தில் இருக்கும் தலைமை செயலாளர், முதன்மை உள்துறை செயலாளர் ஆகியோர் மத்திய அரசால் நியமிக்கப்படுவார்கள்.

    மத்திய அரசுக்கு பிடிக்காத எந்த ஒரு முடிவையும் எடுத்தால் அதை மாற்றுவதற்கு துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது. இந்த அவசர சட்டம் சுப்ரீம் கோர்ட்டை அவமதிப்பதாகும். இந்த அவசர சட்டம் சுப்ரீம் கோர்ட்டு மூலம் ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஜல்லிக்கட்டுக்கு போட்டிக்கு தடையில்லை என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது என ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் கூறினார்.
    • ஒத்த கருத்தோடு வாதாடி வெற்றி பெற்றனர்.

    மதுரை

    தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் பி.ராஜசேகரன் நிருபர்களிடம் கூறியதா வது:-

    ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தடையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. இதுகுறித்த தமிழக அரசின் அவசர சட்டம் செல்லும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒரே மாதிரியான தீர்ப்பை வழங்கியுள்ளது மகிழ்ச்சியை தருகிறது. இந்த வெற்றியை கொண்டாடி கொண்டிருக்கிறோம்.

    இதை மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறோம். இனி கால்நடைகளுக்கு எந்த தீங்கும் நடைபெறாமல் இன்னும் கூடுதல் கவனத்தோடு போட்டியை நடத்துவோம். மாநில அரசு கொண்டு வந்த சட்டம் செல்லாது என்று வழக்கு தொடர்ந்தார்கள். ஆனால் பாரம்பரிய போட்டியான ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்து ஜல்லிக்கட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த வழக்கில் மத்திய அரசு சார்பிலும் வாதாடினர். அவர்கள் அளித்த தகவல் வலுவாக இருந்தது. இது மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து செயல்பட்டதற்கு கிடைத்த வெற்றி. சத்தியம், உண்மை, உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாகும்.

    2007-ல் இருந்து வழக்கை நடத்துவதில் கவனத்துடன், வலுவான அமைப்பாக இருந்து வெற்றி பெற்றோம். நாங்கள் மத்திய-மாநில அரசுகளை கேட்டுக்கொண்டதன் பேரில் அமைச்சர் மூர்த்தி, வெங்கடேசன் எம்.பி. ஆகியோரிடம் இந்த வக்கீல்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அதன் பேரில் வக்கீல்கள் நியமிக்கப்பட்டு வாதாடினர். இதற்காக தமிழக அரசுக்கு நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    மத்திய-மாநில அரசுகள் இரு வேறு கொள்கையோடு செயல்பட்டாலும் ஜல்லிக்கட்டு வழக்கில் ஒத்த கருத்தோடு வாதாடி வெற்றி பெற்றனர்.

    பல காலக்கட்டங்களில் சர்ச்சைக்கு ஆளாகி இருந்த ஜல்லிகட்டு தற்போது சுப்ரீம் கோர்ட்டின் தீாப்பால் அக்னி பிரவேசம் செய்து வெளிவந்திருக்கிறது. இது மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது பொதுச்செயலாளர் நாராயணன், நிர்வாகிகள் வீரணசாமி, சிறாவயல் வேலுசாமி, பிரகாஷ், விராதனூர் நாகராஜ் ஆகிேயார் உடனிருந்தனர். முன்னதாக ஜல்லிக்கட்டு பேரவை சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்று பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    • ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
    • ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் இனிப்பு வழங்கினார்.

    சோழவந்தான்

    ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதை வரவேற்று சோழவந்தானில் பேரூர் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

    ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் இனிப்பு வழங்கினார். பேரூர் செயலாளர் சத்திய பிரகாஷ் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், துணைத்தலைவர் லதா கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், ஒன்றிய கவுன்சிலர் ரேகா வீரபாண்டி, முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராஜா, பேரூர் துணைச்செயலாளர்கள் ஸ்டாலின், கொத்தாளம் செந்தில், செல்வராணி ஜெயராமச்சந்திரன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதிகள் பேட்டை பெரியசாமி, சுரேஷ், ஒன்றிய நிர்வாகி நீலமேகம், பேரூர் நிர்வாகிகள் சங்கங்கோட்டை சந்திரன், இளைஞரணி காளி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சமரச வழக்கில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கு
    • 17ஆண்டுகளாக நடந்து வழக்கில் தீர்ப்பு

    திருச்சி , 

    திருச்சி அடுத்த சிறுகனூர் காவல் நிலையத்தில் 2006ம் ஆண்டு போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர் செல்வராஜ். அப்போது நடந்த உள்ளாட்சி தேர்தலில் அந்த பகுதியில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக சிறுகனூர் போலீசார் விசாரணை நடத்திவந்தனர்.அப்போது அந்த வழக்கில் சமரசம் செய்து வைக்க ஒருதரப்பினரிடம் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். பின்னர் ரூ.6 ஆயிரம் தருவதாக ஒப்புக்கொண்டனர். அதன்படி 2.11.2006 அன்று பணத்தை கொடுத்தபோது, அப்போதைய திருச்சி லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி அம்பிகாபதி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் போலீஸ் நிலையம் சென்று, லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் செல்வராஜியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சுமார் 17 வருடங்களாக நடந்து வந்த இந்த வழக்கில் இன்று நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பு அளித்தார். அதன்படி , லஞ்சம் பெற்ற இன்ஸ்பெக்டர் செல்வராஜிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.

    • ராகுல் காந்தி மேல்முறையீடு செய்த பிறகு தீர்ப்பு எப்படி வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
    • தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று போராட்டம் நடந்து வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பரப்புரை கூட்டம் கர்நாடக மாநிலத்தில் நடந்தது.

    அதில் மோடி என்ற வார்த்தையை பயன்படுத்தி ராகுல் காந்தி பேசினார்.

    இப்படி அவர் பேசியதற்கு அவர் மீது குஜராத் மாநிலத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வழக்கு தொடர்ந்தார்.

    ஆனால் சம்பவம் நடந்த கர்நாடக மாநிலத்தில் இருந்து யாரும் வழக்கு தொடுக்கவில்லை.

    மாறாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த வழக்கில் தீர்ப்பு கூறிய நீதிமன்றம் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை என தீர்ப்பு கூறியது.

    மேலும் மேல்முறையீடு செய்ய ஒரு மாத காலம் அவகாசமும் கொடுத்தது.

    இந்த சூழ்நிலையில் ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்தது ஜனநாயக விரோத செயல். இன்னும் மேல்முறையீடு செய்ய ஒரு மாத காலம் அவகாசம் உள்ளது.

    அதற்குள் அவரது எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து பலர் பேசி வருகின்றனர்.

    மத்திய அரசுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் மீது வழக்கு போடப்பட்டு வருகிறது.

    சட்டத்தின் முன் அனைவரும் சமம்தான்.

    ராகுல் காந்தி மேல்முறையீடு செய்த பிறகு அதன் பிறகு தீர்ப்பு எப்படி வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

    அதற்குள் மத்திய அரசு அவர் மீது பழிவாங்கும் நடவடிக்கையை எடுத்துள்ளது கண்டிக்கத்தக்கது.

    தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று போராட்டம் நடந்து வருகிறது. தமிழக அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று பிரதமரின் பொருளாதார ஆலோசகர் கூறி வருகிறார்.

    அப்படி அமல்படுத்தினால் பொருளாதார சிக்கல் ஏற்படும் எனவும் கூறுகிறார்.

    மத்திய அரசை இவ்வாறு கூறுவதன் மூலம் மாநில அரசு என்ன செய்ய முடியும்.

    இருந்தாலும் ஜாக்டோ- ஜியோ மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் , பொருளாதார நிலை சீரான பிறகு படிப்படியாக அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கூறினார்.

    அதனால் அவர் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரியலூர் மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
    • ரூ.4 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உடையார்பாளையம் அடுத்த மேலணிக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம் மகன் சுப்பிரமணியன் (வயது 40). கடந்த 2021 ஆம் ஆண்டு இவர், 15 மற்றும் 16 வயதுடைய 2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து, சிறுமிகளின் தாய் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர், சுப்பிரமணியனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பளித்தது. இதில் குற்றவாளி சுப்பிரமணியனுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.4 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார். இதையடுத்து குற்றவாளி சுப்பிரமணியன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் ம.ராஜா ஆஜராகினார்.

    ×