search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லஞ்சம் வாங்கிய கருவூல ஊழியருக்கு 3 ஆண்டு ஜெயில்
    X

    லஞ்சம் வாங்கிய கருவூல ஊழியருக்கு 3 ஆண்டு ஜெயில்

    • ஆசிரியரிடம் ரூ.500 லஞ்சம் வாங்கிய கருவூல ஊழியருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கப்பட்டது
    • திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

    திருச்சி,

    திருச்சி மண்ணச்சநல்லூர் சிறுகாம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றியவர் சே. நல்லையன். இவர் தனது பணி முதுர்வின்போது அவரது கணக்கில் இருக்கும் விடுப்பை பணமாக்க திருச்சி லால்குடி சார்ந்த கருவூ லத்தில் விண்ண ப்பித்தார். அப்போது கண க்காளர் கிருஷ்ணமூர்த்தி ரூ. 500 லஞ்சம் கேட்டார்.லஞ்சம் கொடுக்க மனமில்லாத நல்லையன் திருச்சி ஊழல் தடுப்பு காவல் பிரிவில் புகார் செய்தார். அதைத் தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி மீது கடந்த 2008 மார்ச் 15ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.பின்னர் இரு தினங்கள் கழித்து கையூட்டு பணம் ரூ. 500 கிருஷ்ணமூர்த்தி பெற்றுக் கொண்ட போது லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்இந்த வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதி கார்த்திகேயன் லஞ்சம் வாங்கிய லால்குடி சார் கருவூல முன்னாள் கணக்கர் கிருஷ்ணமூர்த்திக்கு லஞ்சப்பனம் கேட்டு பெற்ற குற்றத்திற்காக ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும், அதனை கட்ட தவறினால் 6 மாத சிறை தண்டனையும், அரசு பதவியை தவறாக பயன்படுத்தி கையூட்டு கேட்டுப் பெற்ற குற்றத்தி ற்காக மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் ஆறு மாத சிறை தண்டனை விதித்ததோடு மேற்கண்ட தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.

    Next Story
    ×