search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தம்பியை வெட்டி கொலை செய்த அண்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறை
    X

    தம்பியை வெட்டி கொலை செய்த அண்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறை

    • திருமானூர் அருகே தம்பியை வெட்டி கொலை செய்த அண்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது
    • அரியலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தீர்ப்பு

    அரியலூர்,

    திருமானூர் அடுத்த கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்தவர்விவசாயி ரவி(48). இவரது அண்ணன் ராஜேந்திரன்(50). இருவருக்கும் சொத்துதகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ரவிவீட்டு தென்னை மரத்திலிருந்து தேங்காய் ஒன்று ராஜேந்திரன் வீட்டின்கூரையில் விழுந்துள்ளது. இதனால், இரு குடும்பத்தாருக்கும் தகராறுஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த ராஜேந்திரன், தம்பி ரவியைஅரிவாளால் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரவி, தஞ்சைமருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து,ரவியின் மனைவி செல்வி அளித்த புகாரின் பேரில் திருமானூர்காவல்துறையினர் வழக்குப் பதிந்து ராஜேந்திரனை கைது செய்து சிறையில்அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மாவட்ட முதன்மைநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து வந்த மாவட்டமுதன்மை நீதிபதி கிறிஸ்டோபர், குற்றவாளி ராஜேந்திரனுக்கு 7 ஆண்டுகள்சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதம் விதித்து தீா்ப்பளித்தார். இதையடுத்து ராஜேந்திரன் திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×