search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனுஷ்"

    • 2004ம் ஆண்டு நடைபெற்ற திருமணத்தை ரத்து செய்யக் கோரி இருவரும் மனு தாக்கல்.
    • விவாகரத்து கோரிய வழக்கில் சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு.

    நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் அக்டோபர் 7ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரிய வழக்கில் சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    2004ம் ஆண்டு நடைபெற்ற திருமணத்தை ரத்து செய்யக் கோரி இருவரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    திருமண வாழ்வில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில், இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரிய வழக்கில் சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • 2017 ஆம் ஆண்டு வெளியான பவர் பாண்டி படத்தை தனுஷ் இயக்கினார்.
    • அவரின் 50 வது படமான ’ராயன்’ திரைப்படத்தை அவரே இயக்கி நடித்து இருக்கிறார்.

    நடிகர் , பாடகர் , பாடலாசிரியர் , தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என தனுஷ் பன்முகத்தன்மையுடையவர். 2017 ஆம் ஆண்டு வெளியான பவர் பாண்டி படத்தை தனுஷ் இயக்கினார். ராஜ் கிரண் மற்றும் ரேவதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். படம் வெளியாகியபோது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர் என்று தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்தார் தனுஷ். தற்பொழுது அவரின் 50 வது படமான 'ராயன்' திரைப்படத்தை அவரே இயக்கி நடித்து இருக்கிறார்.

    சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

    ராயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு போஸ்டருடன் அறிவித்து வெளியிட்டது.

    இந்நிலையில் ராயன் படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளனர். தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறி படத்தின் முதல் பாடல் இன்னும் சில நாட்களில் வெளியிடுவதாக தெரிவித்து போஸ்டர் ஒன்றை எக்ஸ் பக்கத்தில் தனுஷ் வெளியிட்டுள்ளார்.

    அதில் தனுஷ், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் போட்டோவுக்கு போஸ் கொடுப்பது போல் நின்றுக் கொண்டு இருக்கின்றனர். இப்பட போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் நடிகர் தனுஷ் தங்களது மகன் என்று மேலூர் நீதிமன்றத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு மனுத் தாக்கல் செய்தனர்
    • தனுஷ் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே வீட்டைவிட்டு ஓடிவிட்டதாகவும், அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர்

    தனுஷ் தனது மகன் என வழக்கு தொடுத்த மேலூர் கதிரேசன் (79) உடல் நலக்குறைவு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று காலமானார்.

    மதுரை மேலூர் பகுதியைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் நடிகர் தனுஷ் தங்களது மகன் என்று மேலூர் நீதிமன்றத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு மனுத் தாக்கல் செய்தனர். அப்போது இந்த வழக்கு பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

    தனுஷ் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே வீட்டைவிட்டு ஓடிவிட்டதாகவும், அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

    மேலும், இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் வளர்ப்பு மகனாக இருந்து நடிகரானது பிறகே தெரிய வந்தது என்று அவர்கள் தெரிவித்தனர்.

    நடிகர் தனுஷ் எங்களது மகன் என்ற முறையில் பெற்றோரான எங்களது பராமரிப்பு செலவிற்காக மாதாமாதம் உதவித்தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என அவர்கள் நீதிமன்றத்தில் முறையிட்டனர். பல ஆண்டுகளாக இந்த சட்டப்போராட்டம் நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கை மேலூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன்பின்பு, சென்னை உயர்நீதிமன்றத்தில் கதிரேசன் தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனு மீது கடந்த மார்ச் 13 ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம், தவறான உள்நோக்கத்தில் மனுதாரர்களான கதிரேசன் மீனாட்சி தம்பதி இந்த மனுவை தாக்கல் செய்தது மட்டுமின்றி குற்றச்சாட்டுகளை நிரூபிக்க உரிய ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை என வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கதிரேசன் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். கதிரேசனின் வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் தற்போதும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தெலுங்கு , இந்தி , மலையாள சினிமாவிலும் ஓம் பிரகாஷ் பணியாற்றியுள்ளார். 500-க்கும் மேற்பட்ட விளம்பர படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்
    • களவாணி, நாணயம், அனேகன், மாரி, நீதானே என் பொன்வசந்தம், திருச்சிற்றம்பலம் போன்ற பல பிரபலமான படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளரில் ஒருவர் ஓம் பிரகாஷ். தெலுங்கு , இந்தி , மலையாள சினிமாவிலும் ஓம் பிரகாஷ் பணியாற்றியுள்ளார். 5௦௦-க்கும் மேற்பட்ட விளம்பர படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 15 வருடங்களாக சினிமா துறையில் பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    களவாணி, நாணயம், அனேகன், மாரி, நீதானே என் பொன்வசந்தம், திருச்சிற்றம்பலம் போன்ற பல பிரபலமான படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    திருச்சிற்றம்பலம் படத்தில் வரும் மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே பாடலின் மிகவும் ஹிட்டானது. பாடல் ஹிட்டாவதற்கு ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவும் ஒரு காரணம்.

    தனுஷ் நடிப்பில் வெளிவந்த நானே வருவேன் படத்தில் பெரும்பாலும் காட்சிகள் காட்டுக்குள் இரவு நடப்பது போன்று அமைந்து இருக்கும்.அக்காட்சிகளை ஓம் பிரகாஷ் மிகவும் திறமையுடன் கையாண்டு இருப்பார்.

    இந்நிலையில் ஓம் பிராகாஷ் ஒளிப்பதிவாளர் அவதாரத்தில் இருந்து இயக்குனர் அவதாரத்திற்கு மாறியுள்ளார்.

    தனுஷை கதாநாயகனாக வைத்து படத்தை இயக்கவிருக்கிறார். தனுஷின் வுண்டர்பார் பில்ம்ஸ் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் கதையை தனுஷ் எழுதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை பற்றிய அதிகாரப் பூர்வத் தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது.
    • இந்தியா உட்பட 9 நாடுகளில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது.

    தனுஷ் மற்றும் அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் கேப்டன் மில்லர். இந்த படம் கடந்த பிப்ரவரி 9-ம் தேதி அமோசன் பிரைம் தளத்தில் வெளியானது. சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது.

    நடிகர் தனுஷின் நடிப்பில் உருவான "கேப்டன் மில்லர்" திரைப்படம், 40 நாட்களை கடந்தும், உலகளவில் 9-க்கும் மேற்ப்பட்ட நாடுகளில் டாப் 5 வரிசையில் இடம் பிடித்து, டிரெண்டிங்கில் புதிய சாதனை படைத்து வருகிறது. மேலும் இந்தியா உட்பட 9 நாடுகளில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது.

     


    வரலாற்றுப் பின்னணியில், ஆங்கிலேயர் காலகட்டத்தில் நடக்கும் கதையை மையப்படுத்திய இந்த படத்தில், தனுஷ், பிரியங்கா மோகன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய பாத்திரங்களில் இணைந்து நடித்திருந்தனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்தபடத்தில் இளையராஜா வேடத்தில் தனுஷ் நடிக்கிறார்.
    • நான் இரண்டு பேருடைய வாழ்க்கை வரலாறை படமாக எடுத்து நடிக்க ஆசைப்பட்டேன்.

    இசைத் துறையில் 47 வருடங்களாக யாரும் தொட முடியாத உச்சத்தில் இருப்பவர் இசைஞானி இளையராஜா. இதுவரை 7000 பாடல்களுக்கு மேல் இசையமைத்து இருக்கிறார்.

    இளையராஜாவை இசைஞானி என்றும், மேஸ்ட்ரோ என்றும் அழைப்பர். பல விருதுகளை வென்று இருக்கிறார் இளையராஜா. பத்ம பூஷன், பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளை வென்றுள்ளார்.வசீகரிக்கும் மெல்லிசைகளை உருவாக்குவதில் புகழ்பெற்ற இசை மேதை இளையராஜா, இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் இசை ஆர்வலர்கள் மத்தியில் பிரபலமானவர்.





    இப்போது, அவரது பணியை நினைவுக்கூரும் வகையில்,அவரது வாழ்க்கை பற்றிய 'பயோபிக்' உருவாகிறது.இந்தபடத்தில் இளையராஜா வேடத்தில் தனுஷ் நடிக்கிறார். இப்படத்தில் இளையராஜா இசையமைப்பாளர் ஆவதற்கு முன் அவர் பயணித்த வாழ்க்கை குறித்த சம்பவங்கள் இடம்பெறுகிறது.

    இந்தப்படத்தை சாணிக்காயிதம், ராக்கி, கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்க இருக்கிறார். இந்தப்படம் தொடர்பான தொடக்க விழா சென்னையில் இன்று நடந்தது. இதில் நடிகர் கமல்ஹாசன், வெற்றிமாறன், இளையராஜா, தனுஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் இதில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. விழாவில் பேசிய தனுஷ், "நான் இரண்டு பேருடைய வாழ்க்கை வரலாறை படமாக எடுத்து நடிக்க ஆசைப்பட்டேன். ஒன்று இசைஞானி இளையராஜா மற்றொருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று தெரிவித்தார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 47 வருடங்களாக இசைத் துறையில் யாரும் தொட முடியாத உச்சத்தில் இருப்பவர் இசைஞானி இளையராஜா
    • பத்ம பூஷன், பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளை வென்று இருக்கிறார் இளையராஜா

    47 வருடங்களாக இசைத் துறையில் யாரும் தொட முடியாத உச்சத்தில் இருப்பவர் இசைஞானி இளையராஜா. இதுவரை 7000 பாடல்களுக்கு மேல் இசையமைத்து இருக்கிறார். இளையராஜாவை இசை ஞானி என்றும் , மேஸ்ட்ரோ என்றும் அழைப்பர். பல விருதுகளை வென்று இருக்கிறார் இளையராஜா. பத்ம பூஷன், பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளை வென்றுள்ளார்.

    வசீகரிக்கும் மெல்லிசைகளை உருவாக்குவதில் புகழ்பெற்ற இசை மேஸ்ட்ரோ இளையராஜா, இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் இசை ஆர்வலர்கள் மத்தியில் பிரபலமானவர். இப்போது, அவரது பணியை நினைவுகூரும் வகையில், அவரது வாழ்க்கை பற்றிய பயோபிக் உருவாகிறது.

    இப்படத்தில் இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாகவும், இத்திரைப்படத்தில் இளையராஜா இசையமைப்பாளர் ஆவதற்கு முன் அவர் பயணித்த வாழ்க்கையை எடுத்துக்காட்டும் விதமாக இருக்கும் என கூறப்படுகிறது. படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குவார் என சொல்லப்படுகிறது.

    சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படத்தை இவர் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மார்ச் 20 ஆம் தேதி லீலா பேலசில் படப்பிடிப்பை துவங்கவுள்ளனர். 2025 ஆம் ஆண்டு வெளியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், நாளை மதியம் 12.30 மணிக்கு ஒரு அற்புத பயணம் தொடங்குகிறது என்னு தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது இளையராஜா பயோபிக் படமாக தான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • . பத்ம பூஷன், பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளை வென்றுள்ளார்.
    • இப்படத்தில் இளையராஜா கதாப்பாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார்

     47 வருடங்களாக இசைத் துறையில் யாரும் தொட முடியாத உச்சத்தில் இருப்பவர் இசைஞானி இளையராஜா.. இதுவரை 7000 பாடல்களுக்கு மேல் இசையமைத்து இருக்கிறார். இளையராஜாவை இசை ஞானி என்றும் , மேஸ்ட்ரோ என்றும் அழைப்பர். பல விருதுகளை வென்று இருக்கிறார் இளையராஜா. பத்ம பூஷன், பத்ம விபூஷன் போன்ற  உயரிய விருதுகளை வென்றுள்ளார்.

    வசீகரிக்கும் மெல்லிசைகளை உருவாக்குவதில் புகழ்பெற்ற இசை மேஸ்ட்ரோ இளையராஜா, இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் இசை ஆர்வலர்கள் மத்தியில் பிரபலமானவர். இப்போது, அவரது பணியை நினைவுக்கூரும் வகையில்,அவரது வாழ்க்கை பற்றிய பயோபிக் உருவாகிறது.

    இப்படத்தில் இளையராஜா கதாப்பாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். திரைப்படத்தில் இளையராஜா  இசையமைப்பாளர் ஆவதற்கு முன் அவர் பயணித்த வாழ்க்கையை எடுத்துக்காட்டும் விதமாக இருக்கும் என கூறப்படுகிறது. படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார்.

    சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படத்தை இவர் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மார்ச் 20 ஆம் தேதி லீலா பேலசில் படப்பிடிப்பை துவங்கவுள்ளனர். 2025 ஆம் ஆண்டு வெளியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • கடந்த ஆண்டு ஜி. வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான அடியே படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இப்போது தனது 25 ஆவது படமாக உருவாகி வரும் கிங்ஸ்டன் படத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்து வருகிறார்

    ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் மட்டுமல்ல நடிப்பிலும் அசுரனாக வளர்ந்து வருகிறார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான அடியே படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கு முன்பு வெளியான பேச்சுலர் படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

    இப்போது தனது 25 ஆவது படமாக உருவாகி வரும் கிங்ஸ்டன் படத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்து வருகிறார். இந்நிலையில், மார்ச் 22 ஆம் தேதி இவரின் அடுத்த படமான "ரெபெல்" வெளியாக உள்ளது. அரசியல் ஆக்சன் டிராமா கதைக்களம் கொண்ட இந்த படத்தை நிகேஷ் இயக்கியுள்ளார்.

    கேரளாவில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இப்படம் எடுக்கபட்டுள்ளது. தமிழுக்காக போராடும் ஒரு இளைஞனாக ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ளார். பிரேமலு படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி புகழ் பெற்ற மமிதா பைஜு இப்படத்தில் நாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகவுள்ளார்.

    இந்த படத்தின் டிரைலரை இன்று நடிகர் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், மார்ச் 22-ம் தேதி வெளியாகும் ரெபல் படத்தின் படக்குழு மற்றும் அன்புக்குரிய ஜி.வி. பிரகாஷ் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

    மேலும் இப்படத்தின் பாடல்களும் இன்று வெளியாகும் என்று படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜி. வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    • தனது 25 ஆவது படமாக உருவாகி வரும் கிங்ஸ்டன்-இல் ஜி.வி. பிரகாஷ் நடித்து வருகிறார்.
    • மார்ச் 22 ஆம் தேதி இவரின் அடுத்த படமான “ரெபெல்” வெளியாக உள்ளது.

    ஜி.வி. பிரகாஷ் சமீபத்தில் வெளிவந்த கேப்டன் மில்லர் படத்திற்கு இசையமைத்து இருந்தார். கேப்டன் மில்லர் படத்திற்கு கூடுதல் போனசாக இருந்தது ஜி. வி. ப்ரகாஷின் இசை. மக்கள் அனைவராலும் பாராட்டு பெற்றது.

    இவர் இசையமைத்த வா வாத்தி, கருப்பு நெரத்தழகி, மார்க் ஆண்டனி மற்றும் அடியே படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மக்கள் மனதில் எப்போழுதும் கேட்டுக் கொண்டே இருக்கும். சூரரைப் போற்று படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர்கான தேசிய விருதை பெற்றார்.

    இசையில் மட்டுமல்ல நடிப்பிலும் இவர் அசுரனாக வளர்ந்து வருகிறார். கடந்த ஆண்டு வெளியான அடியே படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கு முன்பு வெளியான பேச்சுலர் படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

    இப்போது தனது 25 ஆவது படமாக உருவாகி வரும் கிங்ஸ்டன்-இல் ஜி.வி. பிரகாஷ் நடித்து வருகிறார். மார்ச் 22 ஆம் தேதி இவரின் அடுத்த படமான "ரெபெல்" வெளியாக உள்ளது.அரசியல் ஆக்சன் டிராமா கதைக்களம் கொண்ட இந்த படத்தை நிகேஷ் இயக்கியுள்ளார்.

    கேரளாவில் நடைப்பெற்ற உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இப்படம் எடுக்கபட்டுள்ளது. தமிழுக்காக போராடும் ஒரு இளைஞனாக ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ளார். பிரேமலு படத்தில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி புகழ் பெற்ற மமிதா பைஜு இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    மமிதா பைஜூ இந்த படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். மார்ச் 22-ம் தேதி வெளியாகும் இந்த படத்தின் டிரைலரை நாளை மாலை 5 மணிக்கு நடிகர் தனுஷ் வெளியிடுகிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

    ஜி. வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.




     


    • நடிகர் தனுஷ் இயக்குனர் சேகர் கம்முலாவுடன் D-51-வது படத்தில் நடிக்கிறார்.
    • படத்திற்கு "குபேரா" என்று பெயரிடப்பட்டுள்ளது.

    நடிகர் தனுஷ் இயக்குனர் சேகர் கம்முலாவுடன் D-51-வது படத்தில் நடிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராக உள்ளது.

    இப்படத்தில் தனுஷ்,நாகார்ஜூனா,ராஷ்மிகா மந்தனா,சவுரவ் கண்ணா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. படத்திற்கு "குபேரா" என்று பெயரிடப்பட்டுள்ளனர்.

    தனுஷ் இதில் சிவன் பார்வதி படத்தின் முன் நின்றிப்பது போல் போஸ்டர் வடிவமைத்து இருக்கின்றனர். இந்த படத்தில் தனுஷ் என்ன கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    • தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராக உள்ளது
    • இந்த படம் ஒரு கேங்க்ஸ்டரைப் பற்றியது படத்தின் கதை மும்பை மாபியாவை மையமாக அமைந்துள்ளது

    நடிகர் தனுஷ் இயக்குனர் சேகர் கம்முலாவுடன் D-51-வது படத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராக உள்ளது. இப்படத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப், சவுரவ் கண்ணா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

    இந்த படத்துக்கு கடந்த ஆண்டு பூஜை போடப்பட்டது. படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. 

    படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை (கிளிம்ப்ஸ்) நாளை ( 8- ந்தேதி) மகா சிவராத்திரி, மகளிர் தினத்தில் வெளியிடப்படுகிறது.'இந்த படம் ஒரு கேங்க்ஸ்டரைப் பற்றியது என்றும், படத்தின் கதை மும்பை மாபியாவை மையமாக வைத்து அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

    இந்நிலையில் தனுஷ் தனது 50-வது படமான 'ராயன்' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாக உள்ளார். இப்படத்தில் தனுஷ், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், வரலட்சுமி சரத்குமார் மற்றும் சுந்தீப் கிஷன் ஆகியோர் நடித்து உள்ளனர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து உள்ளார்.

    தனுஷிடம் இன்னும் 2 திட்டங்கள் உள்ளன. ஆனந்த் எல்.ராய் இயக்கிய 'தேரே இஷ்க் மே' என்ற பாலிவுட்டில் நடிக்கிறார். அதைத் தொடர்ந்து அவர் 3-வது முறையாக 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தை இயக்குகிறார்.

    ×