search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Raayan"

    • செல்வராகவன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
    • ஒட்டுமொத்த குழுவிற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.

    தனுஷ் இயக்கி நடித்துள்ள புதிய படம் ராயன். இது தனுஷின் 50 ஆவது படம் ஆகும். இன்று (ஜூலை 26) வெளியாகும் நிலையில், ராயன் படம் பார்த்து விட்டதாக இயக்குநர், நடிகருமான செல்வராகவன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இது தொடர்பான பதிவில், "ராயனை பார்த்துவிட்டேன். அற்புதமாக இருக்கிறது. நடிகராகவும், இயக்குநரகாவும் தனுஷ் மிளிர்கிறார். உன்னை நினைத்து பெருமையாக இருக்கு தம்பி. அனைத்து நடிகர்களின் பணியையும் ரசித்தேன். ஏஆர் ரகுமான் சார் நம்மை புது உலகிற்கு அழைத்து செல்கிறார். ஒட்டுமொத்த குழுவிற்காக மகிழ்ச்சி அடைகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ராயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிசன், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
    • கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிரச் செய்துள்ளது. அவரின் 50 ஆவது படமான இதை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

    இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிசன், துஷாரா விஜயன் என நட்சத்திர பட்டாளத்தையே களமிறக்கியுள்ளார் தனுஷ்.

    ஏ.ஆர்.ரகுமான் இசையமைதுள்ளார். படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இப்படத்திற்கு தணிக்கை குழு A சான்றிதழை அளித்துள்ளனர். இந்நிலையில், தனுஷிற்கு நடிகர் கார்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நடிகர் கார்த்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    50வது படத்திற்கு வாழ்த்துகள் தனுஷ். உங்களின் அயராத உழைப்புக்கும், சினிமா மீதான ஆர்வத்துக்கும் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகள். ராயன் குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ராயன் திரைப்படம் ஜூலை மாதம் 26-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்திற்கு தணிக்கை குழு A சான்றிதழை அளித்துள்ளனர்.

    நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் ராயன் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிரச் செய்துள்ளது. அவரின் 50 ஆவது படமான இதை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிசன், துஷாரா விஜயன் என நட்சத்திர பட்டாளத்தையே களமிறக்கியுள்ளார் தனுஷ்.

    ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது. படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    இதற்கிடையில் கடந்த ஜூலை 16 ஆம் தேதி படத்தின் அதிரடியான டிரைலர் வெளியானது. கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படம் ஜூலை மாதம் 26-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கு தணிக்கை குழு A சான்றிதழை அளித்துள்ளனர்.

    இந்நிலையில் 'ராயன்' திரைப்படம் வரும் 26ம் தேதி வெளியாவதை ஒட்டி, ஆண்டிப்பட்டியில் உள்ள குலதெய்வ கோயிலில் நடிகர் தனுஷ் தனது குடும்பத்துடன் இன்று  சாமி தரிசனம் செய்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்நிலையில் எஸ்.ஜே சூர்யா அடுத்ததாக பகத் பாசிலுடன் இணைந்து படத்தில் நடிக்கவுள்ளார்.
    • அனைத்து கதாப்பாத்திரத்திலும் அவருடைய பெஸ்டை கொடுத்து மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தற்பொழுது இயக்குனர் எஸ்.ஜே சூர்யா என்ற அடையாளத்தை மறைத்துவிட்டு நடிகர் எஸ்.ஜே சூர்யாவாக ஆகிவிட்டார். நடிக்கும் அனைத்து கதாப்பாத்திரத்திலும் அவருடைய பெஸ்டை கொடுத்து மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.

    நீண்ட இடைவேளைக்கு பிறகு கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவந்த இறைவி படத்தில் தனுது அபாரமான நடிப்பின் திறமையை வெளிப்படுத்தி இருந்தார். அதைதொடர்ந்து ஸ்பைடர், மெர்சல், மான்ஸ்டர், மாநாடு, டான் போன்ற பல படங்களில் நடித்து  மக்கள் மனதில் மீண்டும் ஒரு இடத்தை பிடித்தார்.

    கடந்த ஆண்டு வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் மார்க் ஆண்டனி திரைப்படம் வசூலில் மாபெரும் உச்சத்தை தொற்றது. தமிழ் மற்றும் தெலுங்குவில் பல திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

    வீர தீர சூரன், இந்தியன் 3, ராயன், கேம் சேஞ்சர், எல்.ஐ.சி, சூர்யாஸ் சாட்டர்டே பல சுவாரசிய லைன் அப்ஸ்களை கையில் வைத்துள்ளார் எஸ்.ஜே சூர்யா.

    இந்நிலையில் எஸ்.ஜே சூர்யா அடுத்ததாக பகத் பாசிலுடன் இணைந்து படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை விபின் தாஸ் இயக்கவுள்ளார். இப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.

     

    இதற்கு முன் மலையாளத்தில் ஜெய ஜெய ஜெய ஹே மற்றும் குருவாயூர் அம்பலநடையில் படங்களை இயக்கியவர் விபின் தாஸ், இந்த இருப்படமும் மாபெரும் வெற்றியை பெற்றது. பகத் பாசிலின் நடிப்பில் சளைத்தவர் கிடையாது.

    பகத் ஃபாசில் சமீபத்தில் நடித்து வெளியான ஆவேசம் திரைப்படம் பார்த்து எஸ்.ஜே சூர்யா அவரின் மிகப்பெரிய ஃபேன் ஆகியதாக கூறியுள்ளார். இந்த உச்சக்கட்ட நடிகர்கள் இருவரும் இணைந்து ஒரே படத்தில் நடிக்க இருப்பதால் இப்படத்தின் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் ராயன் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிரச் செய்துள்ளது.
    • திரைப்படம் இன்னும் 7 நாட்களில் வெளியாகவுள்ளது.

    நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் ராயன் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிரச் செய்துள்ளது. அவரின் 50 ஆவது படமான இதை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிசன், துஷாரா விஜயன் என நட்சத்திர பட்டாளத்தையே களமிறக்கியுள்ளார் தனுஷ். ஏ.ஆர்.ரகுமான் இசையமைதுள்ள படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது.

    படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கிடையில் கடந்த ஜூலை 16 ஆம் தேதி படத்தின் அதிரடியான டிரைலர் வெளியானது. கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படம் ஜூலை மாதம் 26-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    படத்திற்கு தணிக்கை குழு A சான்றிதழை அளித்துள்ளனர். இந்நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள ஓ ராயா பாடலின் லிரிக் வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது. இந்த பாடலுக்கு தனுஷ் பாடல் வரிகளை எழுதியுள்ளார். ஏ.ஆர் ரகுமானுடன் கனவ்யா துரைசாமி ஆகியோர் இந்த படலை இணைந்து பாடியுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் வருகிற 26-ந்தேதி ரிலீஸ் ஆகிறது.
    • ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

    தனுஷ் நடித்து இயக்கியுள்ள படம் ராயன். கலாநிதிமாறனின் சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் உலகம் முழுவதும் வருகிற 26-ந்தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.

    டிரைலர் தொடக்கத்தில் செல்வராகவன் தனுஷிடம் காட்டுல ஆபத்தான மிருகம் எது தெரியுமா? என கேட்பது போல் டிரைலர் தொடங்குகிறது. அதன்பின் வெட்டுக்குத்து என நகர்கிறது. எஸ்ஜே சூர்யா தைரியம் இருந்தால் எனது இடத்தில் வந்து செய்யப்பட்டும் என கர்ஜிக்க, அதன்பின் தனுஷ் ரவுடி கூட்டத்தை வேட்டையாடுவது போன்று முடிவடைகிறது.

    டிரெய்லரில் எஸ்ஜே சூர்யா கேங்ஸ்டாராக வருகிறார். பிரகாஷ் ராஜ், சரவணன், சந்திப் கிஷாண், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் வருகின்றனர்.

    படத்தில் எஸ்.ஜே. கேங்ஸ்டாராக படம் மூலம் மிரட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ், சந்திப் கிஷாண், காளிதாஸ் ஜெயராம் ஆகியோருக்கும் எஸ்.ஜே. சூர்யாவுக்கும் இடையிலான பிரச்சனை படமாக நகரும் என எதிர்பார்க்கலாம்.

    பருத்திவீரனில் சரவணன் கேரக்டர் பேசப்பட்டது போன்று, இந்த படத்திலும் சரவணன் கேரக்டர் பேசப்படலாம்.

    புதுப்பேட்டை, வட சென்னை போன்று கேங்ஸ்டார் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தனுஷ் தனது 50 வது படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார்.
    • சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    நடிகர் தனுஷ் தனது 50 வது படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். இப்படத்துக்கு 'ராயன்' என பெயரிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிசன், துஷாரா விஜயன் என நட்சத்திர பட்டாளத்தையே களமிறக்கியுள்ளார் தனுஷ். இப்படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.

    படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது. படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ளது.

    இந்நிலையில், கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படம் ஜூலை மாதம் 26-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கு தணிக்கை குழு A சான்றிதழை அளித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகமான எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    படத்தின் டிரைலர் குறித்து தற்பொழுது அப்டேட் வெளியாகியுள்ளது. படத்தின் டிரைலர் வரும் ஜூலை 16 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கவிருக்கிறார்.
    • ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் `தேரே இஷ்க் மெயின்’ புதிய இந்தி படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார்.

    கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக தனது 50-வது படமான ராயன் படத்தை இயக்கி நடித்துள்ளார்.

    தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கவிருக்கிறார்.

    அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இளையராஜா வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகும் படத்தில் இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார்.

    இதையடுத்து ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் `தேரே இஷ்க் மெயின்' புதிய இந்தி படம் ஒன்றில் தனுஷ் நடிக்க உள்ளார்.

    படத்தில் அவருக்கு ஜோடியாக டிரிப்தி டிம்ரி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    டிரிப்தி டிம்ரி, ரன்பீர் கபூர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அனிமல் படத்தில் மாறுபட்ட கதா பாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் டிரிப்தி டிம்ரி மற்றும் ரன்பீர் கபூருக்கும் இடையே உள்ள காதல் ,ரொமான்ஸ் காட்சிகள் கடுமையான விமர்சனங்களும் எதிர்ப்புகளும் எழுந்தன. இந்த விமர்சனங்களும் எதிர்ப்புகளும் அவரை இந்திய திரையுலகில் மேலும் பிரபலமடைய செய்தது குறிப்பிடத்தக்கது.

    சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த பாட் நியூஸ் திரைப்படத்திலும் இதுப்போன்ற கவர்ச்சி காட்சிகளில் நடித்துள்ளார். அந்த காட்சி தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இதனால் ஆனந்த் எல் ராய் இயக்கும் தேரே இஷ்க் மெயின் திரைப்படத்தில் எம்மாதிரியான கதாப்பாத்திரத்தில் நடிக்க போகிறார் என ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.
    • இசை வெளியீட்டு விழாவில் பலர் ராயன் படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டனர்.

    தனுஷ் அவரது ஐம்பவதாவது திரைப்படமான ராயன் திரைப்படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. இசை வெளியீட்டு விழாவில், ஏ.ஆர் ரகுமான், துஷரா, காளிதாஸ் ஜெயராம், அபர்னா பாலமுரளி, செல்வராகவன், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்,

    இசை வெளியீட்டு விழாவில் பலர் ராயன் படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டனர். தனுஷ் அவர்களது இன்ஸிபிரேஷன் எனவும் அவரிடம் நிறைய விஷயத்தை கற்றுக் கொண்டோம் என நடிகர்கள் கூறினர். அதைத்தொடர்ந்து தனுஷ் இசை வெளியீட்டு விழாவில் பேசினார். அதில் அவர் ஏன் போயஸ் கார்டனில் வீடு வாங்கினார் என்ற காரணத்தை அவர் கூறினார்.

    சென்னை: நடிகர் தனுஷுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ரஜினிகாந்த் வீட்டில் மரியாதை கிடைக்கவில்லை என்கிற வெறியில் தான் அவர் போயஸ் கார்டனில் வீடு கட்டினார் என செய்யாறு பாலு உள்ளிட்ட பலர் வீடியோக்களில் பேசி வந்த நிலையில், அதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதத்தில் தனுச் பதிலளித்துள்ளார்.

    `தலைவர் வீட்டை பார்க்க வேண்டும் என போயஸ் கார்டனுக்கு சென்றேன். போலீஸ் அண்ணன்கள் சிலர் இருந்தனர். அவர்களிடம் கேட்டதற்கு அங்க தான் இருக்கு சைலன்ட்டா பார்த்து விட்டு போயிடணும்னு சொன்னாங்க, நானும் தலைவர் வீட்டை பார்த்து விட்டு சந்தோஷமாக திரும்பினால், அங்கே இன்னொரு வீட்டுக்கு முன் ஜே ஜேன்னு கூட்டம். அது யாரு வீடுன்னு கேட்டதற்கு ஜெயலலிதாம்மா வீடுன்னு சொன்னாங்க, அப்படியே வியந்து போய் விட்டேன். இந்த பக்கம் ரஜினி சார் வீடு, அந்த பக்கம் ஜெயலலிதாம்மா வீடு நடுவில் நம்ம வீடு கட்டினா எப்படி இருக்கும் என தனுஷ் சொல்வதற்கு முன்பாகவே ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து விட்டனர்.

    அதைத்தொடர்ந்து சினிமா பிரபலங்களுக்கு விவாகரத்து ஆனாலும் அதற்கு தனுஷ் தான் காரணம் என்கிற அளவுக்கு யூடியூபர்கள் பேச ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் " நான் யாருன்னு எனக்கு தெரியும், ன்னை படைச்ச அந்த சிவனுக்குத் தெரியும், என் அப்பா, அம்மாவுக்குத் தெரியும், என் பசங்களுக்குத் தெரியும், என் ரசிகர்களுக்குத் தெரியும்" என பேசி தனுஷ் அவரை பற்றி தவரான விமர்சனம் வைக்கும் பல நபர்கலின் வாயை அடைத்துள்ளார்.

    தனுஷ் பேசிய இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தனுஷின் ஐம்பதாவது படமான இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்துள்ளார்.
    • படம் வருகின்ற ஜூலை 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

    தனுஷின் ஐம்பதாவது படமான இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் வருகின்ற ஜூலை 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நேற்று (ஜூலை 6) சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதற்காக மிகப்பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்நிகழ்ச்சியில் தனுஷ், ஏ ஆர் ரகுமான், பிரகாஷ்ராஜ், சந்தீப் கிஷன், உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது பேசிய பிரகாஷ்ராஜ், "10 கிலோ சதை, 15 கிலோ எலும்பை வெச்சிட்டு துள்ளிக்கிட்டு இருக்கியேன்னு நான் ஒரு டயலாக் சொல்லுவேன். இன்னும் துள்ளிக்கிட்டு தான் இருக்காரு. அவரை பார்த்து எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு இப்போ ஒரு இயக்குனரா இருக்காருன்னு. அசுர வளர்ச்சி. அழகான வளர்ச்சி" என்று கலகலப்பாக பேசி தனுஷை பாராட்டினார்.

    துஷாரா விஜயன் பேசுகையில், "ராயன் படத்தில் நடித்த அனுபவத்தை வார்த்தைகளால் என்னால் விவரிக்க முடியவில்லை. நிறைய திட்டு வாங்கி இருக்கேன். இது எனக்கு மிகப்பெரிய பொறுப்பு" என்று பேசினார்.

    காளிதாஸ் ஜெயராம், "நான் தனுஷ் சாரை ஒரு வழிகாட்டியாக பார்க்கிறேன். யாருக்கு தான் தனுஷ் சாரை பிடிக்காது" என்று பேசினார்.

    அபர்ணா பாலமுரளி பேசும்போது, "ராயன் திரைப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். என்னை தேர்ந்தெடுத்ததற்கு தனுஷ் சாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் தான் என் இன்ஸ்பிரேஷன்" என்று தெரிவித்தார்.

    அடுத்ததாக சந்தீப் கிஷன் பேசும் போது, "தனுஷ் அண்ணாவுடன் இது எனக்கு இரண்டாவது படம். அவர்தான் என் அண்ணா, என்னுடைய வழிகாட்டி. நான் கதை கேட்காமல் நடித்த முதல் படம் இதுதான். தனுஷ் அண்ணா எல்லோருக்கும் பிடித்தவர். அவர் ஒரு நல்ல மனிதர். அனைவருக்கும் அவர் ஒரு அடையாளம். அது வேறு நடிகராக இருந்திருந்தால் என்னுடைய கதாபாத்திரத்திற்கு இரட்டை வேடங்களில் நடித்திருக்கலாம். அது வலுவான கதாபாத்திரம். அதை தனுஷ் அண்ணா எனக்கு கொடுத்தார். லவ் யூ அண்ணா. என்னை நம்பியதற்கு நன்றி" என்று பேசினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் தனுஷ் தனது 50 வது படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார்.
    • இப்படம் ஜூலை மாதம் 26-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    நடிகர் தனுஷ் தனது 50 வது படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். இப்படத்துக்கு 'ராயன்' என பெயரிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

    இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிசன், துஷாரா விஜயன் என நட்சத்திர பட்டாளத்தையே களமிறக்கியுள்ளார் தனுஷ். இப்படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. மேலும் கடந்த மே 9 ஆம் தேதி இப்படத்தில் ஏர்.ஆர் ரகுமான் இசையில் தனுஷ் பாடிய 'அடங்காத அசுரன்' என்ற முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படம் ஜூலை மாதம் 26-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் புதிய போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியாகியது.

    படத்தின் அடுத்த பாடலான ராயன் ரம்பில் என்ற பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடல் இரு ராப் பாடலாக அமைந்துள்ளது. இப்பாடலை ஏ.ஆர் ரகுமான் இசையில் அறிவு எழுதி பாடியுள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை ஜூலை 6 ஆம் தேதி தனியார் பொறியியல் கல்லூரியில் மிக பிரம்மாண்டமாக நடைப்பெறவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ராயன் படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளனர்.
    • இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

    தனுஷ் நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. ஆனால் அந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

    தனுஷின் 50-வது படமாக உருவாகும் ராயன் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். படம் வட சென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

     

    இந்த படம் ஜூலை 26 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதையொட்டி ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 6 ஆம் தேதி நடைபெறும் என்று படக்கிழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

    ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள ராயன் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×