search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெகன் மோகன் ரெட்டி"

    • பாலாற்றில் தடுப்பணை கட்ட ரூ.215 கோடி நிதி ஒதுக்கி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு
    • பாலாற்றின் குறுக்கே அணைகள் கட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் மதிமுக பொதுசெயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளனர்.

    பாலாற்றில் தடுப்பணை கட்ட ரூ.215 கோடி நிதி ஒதுக்கி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    ஆந்திராவின் குப்பம் தொகுதியில் பாலாறு குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு அறிவிப்பை சாந்திபுரம் அரசு நிகழ்ச்சியில் ஜெகன்மோகன் ரெட்டி வெளியிட்டார்.

    இதற்கிடையே, பாலாற்று பகுதியில் புதிய தடுப்பணை கட்டுவது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் எனத் தமிழக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஏற்கெனவே கட்டப்பட்ட 22 தடுப்பணைகளால் தமிழகத்தில் பாயும் பாலாறு நதி வறண்டு காணப்படும் நிலையில் கூடுதலாகப் புதிய தடுப்பணை ஒன்று கட்டினால் தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட இனி கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் புதிய தடுப்பணை பணிக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்நிலையில், ஆந்திர தடுப்பணைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை விரைந்து முடித்து, பாலாற்றின் குறுக்கே இனிவரும் காலங்களில் அணைகள் கட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் மதிமுக பொதுசெயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளனர். 

    • தடுப்பணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் ஏதேனும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறதா? என்ற ஐயம் எழுகிறது.
    • சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் என்ன நடந்தது? என்பது பற்றி அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணைக் கட்டுவதற்கு அம்மாநில முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

    அதைவிட அதிர்ச்சியளிக்கும் உண்மை, தடுப்பணை தொடர்பான தமிழக அரசின் வழக்கில் சிக்கல் தீர்ந்துவிட்டது என்று ஆந்திர அமைச்சர் கூறியிருப்பது தான்.

    அதனால் புதிய அணையை கட்டப்போவதாகவும் ஆந்திர அரசு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    அப்படியானால், ஆந்திராவில் தடுப்பணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் ஏதேனும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறதா? என்ற ஐயம் எழுகிறது. குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பாக இத்தகைய பின்னடைவு ஏற்பட்டிருந்தால் தான் ஆந்திர அரசால் புதிய தடுப்பணைக்கு இன்று அடிக்கல் நாட்ட முடியும். எனவே, ஆந்திராவில் புதிய தடுப்பணைகளை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் என்ன நடந்தது? என்பது பற்றி அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

    பாலாற்று நீரைப் பயன்படுத்துவது குறித்து அப்போதைய சென்னை மாகாணத்திற்கும், மைசூர் ராஜதானிக்கும் இடையே 1892-ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் கடைமடை பாசன மாநிலத்தின் ஒப்புதல் இல்லாமல் புதிய அணைகளைக் கட்டக்கூடாது என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.

    அதற்கு மாறாக ஆந்திர அரசு புதிய தடுப்பணைகளைக் கட்டுவதும், ஏற்கனவே கட்டப்பட்ட அணைகளின் உயரத்தை அதிகரிப்பதும் சட்டவிரோதமாகும். இதை அனுமதிக்கக்கூடாது.

    ஒரு காலத்தில் பால் போல் தண்ணீர் ஓடிய பாலாறு, இப்போது வறண்டு போய் காட்சியளிக்கிறது. இதனால் பாலாற்று தண்ணீரை நம்பி பாசனம் செய்து வந்த விவசாயிகளில் பெரும்பான்மையானோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில் பாலாற்றின் குறுக்கே உடனடியாக ஒரு தடுப்பணையும், தேர்தலுக்குப் பிறகு மேலும் இரு தடுப்பணைகளும் கட்டப்பட்டால், ஆந்திரத்தில் வெள்ளம் ஏற்பட்டால் கூட தமிழ்நாட்டிற்கு பாலாற்றில் தண்ணீர் வராது. அப்போது பாலாறு பாலைவனமாகவே மாறி விடக்கூடும்.

    பாலாற்றை நிரந்தர பாலைவனமாக்க ஆந்திரம் திட்டமிட்டு மேற்கொள்ளும் இந்த சதியை தமிழக அரசு முறியடிக்க வேண்டும். குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டுவதற்கான ஆந்திர அரசின் முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

    அதுமட்டுமின்றி, ஆந்திர தடுப்பணைகளுக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள வழக்குக்கு உயிர் கொடுப்பதுடன், அந்த வழக்கைப் பயன்படுத்தி பாலாற்றின் குறுக்கே இனிவரும் காலங்களில் அணைகள் கட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த 3 ஆண்டுகளாக நீங்கள் கொடுத்த பல்வேறு இடையூறுகளுக்கு இடையில் சிறப்பாக செயல்பட்டேன்.
    • எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து பதவி விலகி வரும் சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பதி:

    ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் நர்சாபுரம் எம்.பி. யாக இருப்பவர் ரகு ராமகிருஷ்ண ராஜி. இவர் தனது எம்.பி. பதிவையே ராஜினாமா செய்து முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டிக்கு கடிதம் அனுப்பினார்.

    நீங்கள் என்னை பதவி நீக்கம் செய்வதற்காக கஜினி முகமது போன்று பல்வேறு முயற்சிகளை செய்தீர்கள். அந்த முயற்சிகள் எதுவும் உங்களுக்கு பயன் தரவில்லை. என்னை எம்.பி.யாக தேர்ந்தெடுத்த நர்சாபுரம் தொகுதிக்காகவும், தொகுதி மக்களின் வளர்ச்சிக்காகவும் போற்றத்தக்க நேர்மையான செயல்களை செய்து இருக்கிறேன்.

    கடந்த 3 ஆண்டுகளாக நீங்கள் கொடுத்த பல்வேறு இடையூறுகளுக்கு இடையில் சிறப்பாக செயல்பட்டேன். இவ்வாறு அவர் தனது ராஜினாமா கடிதத்தில் கூறியிருந்தார்.

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்.பி.க்கள் முன்னாள் அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து பதவி விலகி வரும் சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒய்.எஸ்.ஆர் காங்கிரசிலிருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் சேர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • ஆந்திர அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சியில் உள்ள எம்.பி.க்கள் சிலருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக முக்கிய பிரமுகர்கள் ஏற்கனவே ஒய்.எஸ்.ஆர். காங்கிரசிலிருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தனர்.

    ஜெகன்மோகன் ரெட்டி கட்சியை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. வெமிரட்டி பிரபாகர் ரெட்டி மற்றும் நெல்லூர் எம்.பி. அட்லா பிரபாகர் ரெட்டியும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசிலிருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் சேர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதேபோல் ஆளூர் தொகுதியில் போட்டியிட்டு தொழிலாளர் துறை அமைச்சராக உள்ள கும்மனூர் ஜெயராம் 3 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு கேட்டார். ஆனால் அவருக்கு கர்னூல் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என கட்சி தலைமை தெரிவித்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கும்மனூர் ஜெயராம் கட்சியிலிருந்து விலக முடிவு செய்துள்ளனர்.

    ஜெயராம் காங்கிரஸ் கட்சியில் சேர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆளும் கட்சியில் இருந்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர் உள்ளிட்டோர் மாற்றுக் கட்சிக்கு தாவுவதால் ஆந்திர அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பல்வேறு கட்சியில் இருந்தும் காங்கிரஸ் கட்சிக்கு பல தலைவர்கள் இடம் பெயர்ந்தனர்.
    • சந்திரபாபு மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் நலன்களுக்காக-ஷர்மிளா செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர முதல் மந்திரியாக உள்ள ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா காங்கிரசில் சேர்ந்து கட்சியின் மாநில தலைவரானார்.

    அதன் பிறகு பல்வேறு கட்சியில் இருந்தும் காங்கிரஸ் கட்சிக்கு பல தலைவர்கள் இடம் பெயர்ந்தனர்.

    அவர்களில் முதல் ஆளாக மங்களகிரி தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. ஆலா ராமகிருஷ்ணன் முதலில் சேர்ந்தார்.


    முதல் மந்திரி ஜெகன் மோகனுக்கு நெருக்கமாக இருந்த ராமகிருஷ்ணா தனிப்பட்ட அதிருப்தியால், அக்கட்சியில் இருந்து விலகி, காங்கிரசில் சேர்ந்தார்.

    ஷர்மிளாவுடன் இணைந்து செயல்பட இருந்த ராமகிருஷ்ணா ஒரு மாதத்திலேயே முதல் மந்திரி ஜெகன் மோகனை சந்தித்து ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். சந்திரபாபு மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் நலன்களுக்காக-ஷர்மிளா செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

    • மக்களவை தேர்தலுடன் ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெறும்.
    • ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்க்கு எதிராக தெலுங்குதேசம், ஜனசக்தி கட்சிகள் களம் இறங்கும் நிலையில் கிண்டல்.

    ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும், பவன்கல்யாண் ஜனசேனா கட்சியும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சட்டசபை தேர்தலில் களம் காண இருக்கின்றன. மக்களவை தேர்தல் உடன் ஆந்திர மாநில சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.

    இதனால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவரும், முதல்-மந்திரியுமான ஜெகன்மோகன் ரெட்டி தெலுங்கு தேசம் கட்சியை எதிர்த்து பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.

    நேற்று இரவு அவர் அமராவதி மாவட்டத்தில் நடந்த பிரமாண்ட கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், "தெலுங்கு தேசம் கட்சியின் சின்னம் சைக்கிள். அதை நாம் வீட்டின் நடு அறையில் கொண்டு வைக்க முடியாது. வீட்டுக்கு வெளியில்தான் வைக்க வேண்டும்.

    ஜனசக்தியின் தேர்தல் சின்னம் டீ டம்ளர். பயன்படுத்திய டம்ளர் சமையறையின் சிங்க்-ல் (sink) வைக்க வேண்டும். ஆனால் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசின் சின்னம் மின் விசிறி. அது எப்போதும் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். அதுபோல ஒய்.எஸ்.ஆர். காங்கிரசை வீட்டுக்குள்ளே வைத்துக்கொள்ள மக்கள் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்க்கு ஆதரவாக வாக்களிப்பார்கள். தெலுங்குதேசம், ஜனசேனாவிற்கு எதிராக வாக்களிப்பார்கள்" என்று கிண்டல் செய்தார்.

    • அவர் கட்சியில் இருந்து விலகியதாகவும் தெரிவித்துள்ளார்.
    • கிருஷ்ண தேவராயலு எம்.பி.க்கு பதிலாக புதிய வேட்பாளரை நிறுத்த கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் நரசராவ்பேட்டை பாராளுமன்ற தொகுதி ஜெகன்மோகன் ரெட்டி கட்சியின் எம்.பி. கிருஷ்ண தேவராயலு திடீரென தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். மேலும் அவர் கட்சியில் இருந்து விலகியதாகவும் தெரிவித்துள்ளார்.

    வருகிற பாராளுமன்றத் தேர்தலில் கிருஷ்ண தேவராயலு எம்.பி.க்கு பதிலாக நரசராவ்பேட்டை தொகுதியில் புதிய வேட்பாளரை நிறுத்த கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. இதனால் விரக்தி அடைந்த கிருஷ்ண தேவராயலு பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    • மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் மாணிக்கம் தாகூரிடம் விண்ணப்பங்களை வழங்கலாம்.
    • பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக முன்னாள் முதல்-மந்திரி ராஜசேகர ரெட்டியின் மகளும் தற்போதைய முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையுமான சர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

    அவருக்கு அந்த மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. நேற்று அவர் ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

    நான் மதச்சார்பற்ற கண்ணோட்டத்தின் தீவிர ஆதரவாளர். ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

    ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்.


    வருகிற 24-ந் தேதி முதல் தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது.

    அவர்கள் மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் மாணிக்கம் தாகூரிடம் விண்ணப்பங்களை வழங்கலாம்.

    நாளை முதல் அனைத்து மாவட்டங்களிலும் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை சந்திக்க உள்ளேன்.

    இந்த சந்திப்பு வருகிற 31-ந் தேதி வரை தொடரும் ஒவ்வொரு நாளும் 3 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் சந்திப்பில் கலந்து கொள்வார்கள்.

    இதில் பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பண்ணை வீட்டில் கீழே விழுந்த கேசிஆருக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டது
    • ஜெகன் மோகன் ரெட்டியை கேசிஆர் இல்லத்தில் கேடிஆர் வரவேற்றார்

    கடந்த 2022 நவம்பர் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தெலுங்கானாவின் முன்னாள் முதல்வரும், பாரதிய ராஷ்ட்ரிய சமிதி (BRS) கட்சியின் தலைவருமான கே சந்திரசேகர் ராவ் (KCR) தோல்வியடைந்தார்.

    தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட சில தினங்களிலேயே 69 வயதான கேசிஆர், ஐதராபாத் நகரில் உள்ள தனது பண்ணை வீட்டில் கீழே விழுந்தார். அதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. காயத்திற்கு சிகிச்சை பெற்று வந்த அவர், பின்னர் பிரபல யசோதா மருத்துவமனைக்கு (Yashoda Hospital) மாற்றப்பட்டார்.

    அங்கு பல்வேறு பரிசோதனைகளில் கேசிஆருக்கு இடுப்பெலும்பில் முறிவு இருப்பதாக கண்டறியப்பட்டு முழு இடது இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. பின் நடை பயிற்சி மேற்கொண்ட அவருக்கு வலி வெகுவாக குறைந்து அனைத்து துறை மருத்துவ கண்காணிப்பில் சில நாட்கள் இருந்தார்.

    அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து கேசிஆர் மருத்துவர்களின் ஆலோசனையின்படி தனது வீட்டிலேயே ஓய்வெடுக்கிறார்.

    இந்நிலையில், ஓய்வில் உள்ள கேசிஆர்-ஐ ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவரது பஞ்சாரா ஹில்ஸ் (Banjara Hills) இல்லத்தில் சென்று பார்த்து நலம் விசாரித்தார்.

    முன்னதாக முதல்வர் ஜெகன் மோகனை பிஆர்எஸ் கட்சியின் தற்போதைய தலைவர் கேடி ராமா ராவ், எம்பி ஜே சந்தோஷ் ராவ் மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர்.

    விஜயவாடாவிற்கு திரும்பும் முன், கேசிஆர் இல்லத்தில் ஜெகன் மோகன் உணவருந்த உள்ளார் என தெரிகிறது.

    • நாயுடுவுக்காக தனது கட்சிப் பணியாளர்கள் உட்பட அனைத்தையும் தியாகம் செய்து வருகிறார்.
    • "ஆந்திராவில், எந்த ஒரு பெரிய அரசியல் கட்சியும் தனித்து போட்டியிட முடியாது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி பேசியதாவது:-

    நடிகர் பவன் கல்யாண் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மனைவியை மாற்றி வருகிறார். அவர் ஒரு கல்யாண ஸ்டார். அவரை போன்ற அரசியல்வாதியை எந்தப் பெண் குழந்தைகளின் பெற்றோராவது நம்ப முடியுமா? பவன் கல்யாண் எம்.எல்.ஏ.வாகவோ அல்லது முதல் மந்திரியாக அமர்ந்தால் சிறுமிகளின் எதிர்காலம் என்னவாகும்?

    "மிஸ்டர். பவன் கல்யாணுக்கு வாக்களிப்பது புத்திசாலித்தனமான முடிவு அல்ல பக்கத்து வீட்டுக்காரரான சந்திரபாபு நாயுடு ஒரு மாநிலத்தின் முதல்-மந்திரியாக வருவதற்காக அரசியல் கட்சியை நிறுவிய ஒரே அரசியல்வாதி பவன் கல்யாண் மட்டுமே.


    நாயுடுவுக்காக தனது கட்சிப் பணியாளர்கள் உட்பட அனைத்தையும் தியாகம் செய்து வருகிறார். ஒரு பேக்கேஜ்'க்காக மட்டுமே அவர் தியாகம் செய்து வருகிறார்.

    "ஆந்திராவில், எந்த ஒரு பெரிய அரசியல் கட்சியும் தனித்து போட்டியிட முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நடிகர் பவன் கல்யாணின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து முதல் மந்திரி விமர்சித்திருப்பது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தகவல்.
    • ஜென் மோகன் ரெட்டி அவருக்கு கட்சி துண்டை அணிவித்தார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்-இல் தன்னை இணைத்து கொண்டார்.

    ஆந்திர மாநில முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, துணை முதலமைச்சர் கே. நாராயணசாமி மற்றும் ராஜம்பேட்ட மக்களவை உறுப்பினர் பி. மிதுன் ரெட்டி ஆகியோர் முன்னிலையில் அம்பதி ராயுடு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

     


    இது தொடர்பான அறிவிப்பை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. கட்சியில் இணைந்த அம்பதி ராயுடுவை வரவேற்கும் விதமாக ஜென் மோகன் ரெட்டி அவருக்கு கட்சி துண்டை அணிவித்தார்.

    இந்திய கிரிக்கெட் அணி மட்டுமின்றி ஐ.பி.எல். தொடரில் அம்பதி ராயுடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும், பல்வேறு மாநிலங்களில் கிரிக்கெட் சங்கங்களிலும் விளையாடி இருக்கிறார்.

    • ஆந்திர அரசு சார்பில் முதல் அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்குகிறார்.
    • பிரமோற்சவ விழாக்களின் போது சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு 2 பிரமோற்சவ விழா நடைபெற உள்ளன.

    வருகிற செப்டம்பர் மாதம் 18-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை வருடாந்திர பிரமோற்சவம், அக்டோபர் மாதம் 15-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.

    பிரமோற்சவ விழா போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இதனை வெளியிட்ட திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி கூறியதாவது:-

    செப்டம்பர் மாதம் நடைபெறும் பிரமோற்சவத்தின் முதல் நாள் ஏழுமலையானுக்கு ஆந்திர அரசு சார்பில் முதல் அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பட்டு வஸ்திரங்களை காணிக்கை வழங்குகிறார்.

    வருடாந்திர பிரமோற்சவம் மற்றும் நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெறும் நாட்களில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படும். சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படமாட்டாது.

    மேலும் வாகன சேவைகள் மூலம் பக்தர்களுக்கு சிறந்த தரிசனம் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன. அறைகள் முன்பதிவு அன்னபிரசாதம் லட்டுகள் மற்றும் சாதாரண பக்தர்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்படும்.

    பிரமோற்சவ விழாக்களின் போது சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் கருட சேவை நடந்து வருகிறது. அதன்படி இன்று நடைபெற இருந்த கருட சேவை விகானச மகாமுனி ஜெயந்தியை ஒட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 71,132 பேர் சாமி தரிசனம் செய்தனர். 26 963 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.06 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 14 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ×