search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒய்எஸ்ஆர் கட்சி"

    • ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் வரை காங்கிரஸ் கட்சி அயராது போராடும்.
    • சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் சந்திரபாபு பச்சோந்தி போல் நிறம் மாறியுள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா அம்மாநில காங்கிரஸ் தலைவராக உள்ளார். இவர் அண்ணன் என்று கூட பார்க்காமல் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

    திருப்பதியில் நடந்த பிரசாரத்தில் ஷர்மிளா பேசியதாவது:-

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் வரை காங்கிரஸ் கட்சி அயராது போராடும். இந்திரம்மா அபயஹஸ்தம்' என்ற பெயரில், ஒவ்வொரு ஏழை வீட்டுக்கும், பெண்களின் கணக்கில் மாதம் ரூ .5 ஆயிரம் வழங்கப்படும். வறுமையை ஒழிக்கவும், ஏற்றத்தாழ்வுகளை அகற்றவும் கரம் கொடுக்கப் போகிறோம்.

    ஜெகன்மோகன் ரெட்டி 3 தலைநகரங்கள் நாடகம் ஆடினார். ஜெகன்மோகன் ரெட்டி ஒரு தலை நகரையாவது வளர்த்திருக்கிறாரா? நமக்கு வெட்கமாக இல்லையா?


    சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் சந்திரபாபு பச்சோந்தி போல் நிறம் மாறியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெகனண்ணா அந்தஸ்து கேட்டு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.

    அந்தஸ்துக்காக ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வேன் என்று கூறிய அவர், முதல்-மந்திரி ஆன பிறகு கொடுத்த வார்த்தையை காப்பாற்றவில்லை. ஏன் இதுவரை ஒரு எம்.பி கூட ராஜினாமா செய்யவில்லை.

    ஜெகன்மோகன் ரெட்டி பா.ஜ.க.வை ஏன் எதிர்க்கவில்லை? இப்போது ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில் புலி, டெல்லி போனால் பூனையாக மாறிவிடுகிறார்.

    ஒரு எம்.பி., எம்.எல்.ஏ., சீட் இல்லாவிட்டாலும், நம் மாநிலத்தை பா.ஜ.க. ஆட்சி செய்கிறது. ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் பா.ஜ.க.வைச் சுற்றியே வருகின்றன. ஆந்திர அரசியலில் முக்கோண காதல் கதை நடக்கிறது".

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஒய்.எஸ்.ஆர் காங்கிரசிலிருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் சேர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • ஆந்திர அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சியில் உள்ள எம்.பி.க்கள் சிலருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக முக்கிய பிரமுகர்கள் ஏற்கனவே ஒய்.எஸ்.ஆர். காங்கிரசிலிருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தனர்.

    ஜெகன்மோகன் ரெட்டி கட்சியை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. வெமிரட்டி பிரபாகர் ரெட்டி மற்றும் நெல்லூர் எம்.பி. அட்லா பிரபாகர் ரெட்டியும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசிலிருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் சேர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதேபோல் ஆளூர் தொகுதியில் போட்டியிட்டு தொழிலாளர் துறை அமைச்சராக உள்ள கும்மனூர் ஜெயராம் 3 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு கேட்டார். ஆனால் அவருக்கு கர்னூல் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என கட்சி தலைமை தெரிவித்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கும்மனூர் ஜெயராம் கட்சியிலிருந்து விலக முடிவு செய்துள்ளனர்.

    ஜெயராம் காங்கிரஸ் கட்சியில் சேர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆளும் கட்சியில் இருந்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர் உள்ளிட்டோர் மாற்றுக் கட்சிக்கு தாவுவதால் ஆந்திர அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பல்வேறு கட்சியில் இருந்தும் காங்கிரஸ் கட்சிக்கு பல தலைவர்கள் இடம் பெயர்ந்தனர்.
    • சந்திரபாபு மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் நலன்களுக்காக-ஷர்மிளா செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர முதல் மந்திரியாக உள்ள ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா காங்கிரசில் சேர்ந்து கட்சியின் மாநில தலைவரானார்.

    அதன் பிறகு பல்வேறு கட்சியில் இருந்தும் காங்கிரஸ் கட்சிக்கு பல தலைவர்கள் இடம் பெயர்ந்தனர்.

    அவர்களில் முதல் ஆளாக மங்களகிரி தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. ஆலா ராமகிருஷ்ணன் முதலில் சேர்ந்தார்.


    முதல் மந்திரி ஜெகன் மோகனுக்கு நெருக்கமாக இருந்த ராமகிருஷ்ணா தனிப்பட்ட அதிருப்தியால், அக்கட்சியில் இருந்து விலகி, காங்கிரசில் சேர்ந்தார்.

    ஷர்மிளாவுடன் இணைந்து செயல்பட இருந்த ராமகிருஷ்ணா ஒரு மாதத்திலேயே முதல் மந்திரி ஜெகன் மோகனை சந்தித்து ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். சந்திரபாபு மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் நலன்களுக்காக-ஷர்மிளா செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

    ×