search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்லூர் ராஜூ"

    • முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ முன்னிலையில் தே.மு.தி.க.வினர் 150 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
    • எம்.ஜி.ஆர். போல் வேடமிட்டு வந்த ராஜா என்பவரும் வி.பி.ஆர்.செல்வகுமாருடன் அ.தி.மு.க.வில் இணைந்தார்.

    மதுரை

    மதுரை கோரிப்பாளை யத்தில் உள்ள அ.தி.மு.க. மாநகர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. முன்னிலையில் தே.மு.தி.க. முன்னாள் மதுரை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் வி.பி.ஆர்.செல்வகுமார் தனது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க.வில் இணைந்தார்.

    அவருடன் தே.மு.தி.க. மதுரை முன்னாள் வடக்கு மாவட்ட துணைச்செயலா ளர்கள் சின்னச்சாமி, இளமி நாச்சி யம்மாள், மேரி ராஜேந்திரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் விஜயராஜா, ராஜேந்திரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் ஷேக்அப்து ல்லா, ராஜா, அண்ணாநகர் பகுதி அவைத் தலைவர்கள் கவிஞர் மணி கண்டன், ரஹமத் பீவி, பகுதி துணைச் செயலாளர் ஆனந்தராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் அனிதா ரூபி, மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர்கள் திவ்யபாரதி, சுமதி, மாணவரணி துணைச் செயலாளர் மணிகண்ட பிரபு, நெசவாளர் அணி மாவட்ட செயலாளர் பிரகாஷ், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ஜெய பாண்டி, தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் செல்வம் உள்பட 150-க் கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை 30-வது வட்ட செயலாளர் பாம்சி கண்ணன் மற்றும் இளைஞர்-இளம்பெண்கள் பாசறை மாவட்ட துணைச் செயலாளர் குறிஞ்சி குமரன் ஆகியோர் செய்திருந்தனர்.

    மேலும் எம்.ஜி.ஆர். போல் வேடமிட்டு வந்த ராஜா என்பவரும் வி.பி.ஆர்.செல்வகுமாருடன் அ.தி.மு.க.வில் இணைந்தார்.

    • அ.தி.மு.க. மாநாட்டு புளியோதரை விவகாரத்தில் அஷ்டலட்சுமியே நேரில் வந்தாலும் குறை சொல்பவர்கள் சொல்லத்தான் செய்வார்கள்.
    • முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

    மதுரை

    மதுரையில் அ.தி.மு.க. வீர வரலாற்றில் எழுச்சி மாநாடு கடந்த 20-ந் தேதி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டு வெற்றிக்காக உழைத்த மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகி களுக்கு பாராட்டு விழாவும், சிறப்பு அசைவ உணவு வழங்கும் நிகழ்ச்சியும் நடை பெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, முட்டை, பீடா ஆகிய வற்றுடன் இரவு விருந்து வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித்தலைவி அம்மா கட்டி காத்த இயக்கத்தை இன்றைக்கு நமது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக தலைமையேற்று நடத்தி வருகிறார்.

    மதுரை மண்ணில் முதல் மாநாட்டை நடத்தி தி.மு.க. விற்கு சிம்ம சொப்பனமாக எடப்பாடி பழனிசாமி திகழு கிறார். இந்த ஆட்சி எப்போது முடியும். மு.க.ஸ்டாலின் எப்போது வீட்டுக்கு செல்வார் என்று தமிழக மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

    விரைவில் தமிழகத்தில் முதலமைச்சராக எடப்பாடி யார் பதவி ஏற்பார். அதற் காக நாம் அயராது உழைக்க வேண்டும். இன்றைக்கு 2 கோடி உறுப்பினர்களை கொண்ட மகத்தான இயக்க மாக அ.தி.மு.க. உருவெடுத்து உள்ளது. வருகிற பாராளு மன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை பெரும் வகை யில் இந்த மதுரை மாநாடு நமக்கு முதல் புள்ளியாக அமைந்திருக்கிறது .

    மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் லட்சோப லட்சம் தொண்டர்கள் திரண்டனர். பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆற்றிய வீர உரை தமிழக அரசியலில் முத்தாய்ப்பாக அமைந்துள்ளது. மக்கள் மத்தியிலும் பெரும் வர வேற்பு பெற்றுள்ளது.

    மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாடு இந்திய அரசியல் வரலாற்றில் முக்கி யத்துவம் பெற்றுள்ளது அந்த அளவுக்கு பல லட்சம் மக்கள் குவிந்து மதுரையில் அ.தி.மு.க.வுக்கு மிகப்பெரிய எழுச்சி அலையை உரு வாக்கி தந்துள்ளனர்.

    அஷ்டலட்சுமி

    மாநாட்டில் தொண்டர்க ளுக்கு பசியாற உணவு வழங்க வேண்டும் என்று எடப்பாடியார் சிறப்பாக ஏற்பாடு செய்தார். 300 கவுண்டர்களில் உணவு வழங்கப்பட்ட நிலையில் ஒரு கவுண்டரில் 10 அண்டா புளியோதரை மீதமானதை பெரிதாக பேசுகிறார்கள் குறை சொல்பவர்கள் என்றைக்குமே குறை சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். அதை பெரிது படுத்த தேவை யில்லை.

    அஷ்டலட்சுமியே நேரில் வந்து காட்சி அளித்தாலும் மூக்கு சரியில்லை, முடி சரியில்லை என்று குற்றம் கண்டுபிடித்து குறை கூறு பவர்கள் தமிழகத்தில் எப்போதுமே இருக்கத்தான் செய்கிறார்கள்.

    எனவே அ.தி.மு.க.வின் வெற்றி மாநாட்டை பொறுத்துக் கொள்ள முடியாதவர்களின் இது போன்ற நயவஞ்சக செயலை நாம் பெரிது படுத்தாமல் அ.தி.மு.க. மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அரியணையில் ஏறும் வகை யில் உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பாராட்டு கூட்டத்தில் ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் 9 பேர் பலியான சம்பவம் மனதுக்கு வேதனை அளிக்கிறது.
    • முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது அறிக்கை தெரிவித்துள்ளார்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது-

    உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து தென்னிந்தியாவில் சுவாமி தரிசனம் செய்வ தற்காக 90 க்கும் மேற்பட்டோர் கடந்த 17 தேதி யாத்திரைப் பயணிகள் ரெயில் மூலமாக தமிழ்நாட் டிற்கு வந்துள்ளனர்.

    இவர்கள் நேற்று நாகர்கோயில் பத்மநாப சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு இன்று அதிகாலை மதுரை வந்தடைந்தனர்.

    இவர்களின் ரெயில் பெட்டி மதுரை ரெயில் நிலையத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டி ருந்தது. அந்த நேரத்தில் ரெயில் பெட்டியில் இருந்த பக்தர்கள் சிலிண்டர் மூலம் சமைக்க முற்பட்டபோது, திடீரென்று தீப்பற்றி எரிந்தது. இந்த தீ விபத்தால் 9-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். தீக் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த கோரச்சம்பவம் மனதிற்கு வேதனை அளிக்கிறது. எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும்.

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தீ விபத்தில் மரணமடைந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, இந்த விபத்தில் மரணமடைந்த பக்தர்களின் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன்.மேலும் சிகிச்சை பெற்று வரும் நபர்கள் விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • எழுச்சி மாநாடு அ.தி.மு.க. தொண்டர்கள் குடும்பமாக திரண்டு வர வேண்டும்.
    • செல்லூர் ராஜூ அழைப்பு விடுத்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    கழகத்தின் பொது செயலாளர் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடியாரின் தலை மையில் கழகத்தின் வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு மதுரை வளையங் குளம் பகுதியில் நாளை காலை மிகப் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து கழக கண்மணிகள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மாவின் உண்மை விசுவாசிகள், தலைமைக் கழக நிர்வாகிகள், கடைகோடி தொண்டர்கள் அனைவரும் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி யாரின் சீரிய தலைமையில் பங்கேற்கிறார்கள்.

    இந்த எழுச்சிமிகு மாநாட்டில் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகி கள் அனைவரும் குடும்பம் குடும்பமாக பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறேன். மேலும் மாநாட்டின் காலை முதல் மாலை வரை அனைத்து நிகழ்ச்சிகளையும் கண்டு கழித்து மாநாட்டின் இறுதி வரை பங்கேற்கும் வகையில் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கட்டுக்கோப்போடு எடப்பாடியாரின் ஆணை யை நிறைவேற்றும் சிப்பாய் களாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அண்ணாமலை என்பவர் தமிழக பா.ஜனதாவின் தலைவர் அவ்வளவு தான் என்று கூறியிருந்தார்.
    • எனக்கு எல்லா பதவிகளும் படிப்படியாக தான் வந்தது. சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்வில் இருக்கிறேன்.

    மதுரை:

    தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கும், பா.ஜனதா கட்சிக்கும் இடையே கூட்டணி இருந்ததால் அவ்வப்போது சலசலப்புகளும் ஏற்பட்டுக்கொண்டே தான் இருக்கிறது.

    சமீபத்தில் மதுரையில் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, எங்களுக்கு பா.ஜனதா என்றால் மோடி ஜி, நட்டா ஜி, அமித்ஷா ஜி மட்டும் தான். அண்ணாமலை என்பவர் தமிழக பா.ஜனதாவின் தலைவர் அவ்வளவு தான் என்று கூறியிருந்தார்.

    இதற்கு பதிலளித்த பா.ஜனதா மாநிலத்தலைவர் அண்ணாமலை தன்னை அரசியல் விஞ்ஞானியாக நினைத்துக்கொண்டு பேசுகின்ற நபர்களுக்கு பதில் சொல்லி என்னுடைய தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை என்று கூறினார்.

    இந்த நிலையில் அண்ணாமலைக்கு மீண்டும் செல்லூர் ராஜூ பதிலடி கொடுக்கும் வகையில் கூறியதாவது:-

    பா.ஜனதா ஒரு தேசிய கட்சி. அந்த கட்சியின் கூட்டணி உள்பட முக்கிய முடிவுகளை எல்லாம் அதன் தேசிய தலைவர்கள் தான் எப்போதும் எடுப்பார்கள். அந்த அடிப்படையில் தான் எங்களுக்கு மோடி, நட்டா, அமித்ஷா முக்கியம் என்றேன். நான் அரசியல் விஞ்ஞானிக்கு எல்லாம் பதில் சொல்ல மாட்டேன் என்று அண்ணாமலை என்னை கூறுகிறார்.

    அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி என்பது எல்லோருக்கும் தெரியும். கட்சியில் சேர்ந்து ஒரு ஆண்டில் தலைவராக பதவியேற்று இருக்கிறார். ஆனால் நான் அப்படி அல்ல. ஆரம்பத்தில் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர், வட்ட செயலாளர், பகுதி செயலாளர், மாவட்ட செயலாளர் ஆனேன். அதே போல் மக்கள் பதவிகளில் கவுன்சிலர், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர், அதன்பின் அமைச்சர் ஆனேன். இன்றைக்கு அ.தி.மு.க.வின் அமைப்பு செயலாளராக பதவி வகிக்கிறேன். எனக்கு எல்லா பதவிகளும் படிப்படியாக தான் வந்தது. சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்வில் இருக்கிறேன்.

    என்னை பற்றியும், நான் மக்களுக்கு ஆற்றிய பணிகள் குறித்தும் மதுரை மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் நன்றாக தெரியும். என்னை பொறுத்தவரை அண்ணாமலையின் கருத்துகளைநான் பொருட்படுத்துவதில்லை. நீங்களும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நான் ஏற்கனவே தெளிவாக கூறியிருக்கிறேன், எங்கள் மீது துரும்பு எறிந்தால்கூட நாங்கள் பதிலுக்கு இரும்பை வீசுவோம்.

    தமிழகத்தில் அதிக நாள் ஆட்சியில் இருந்த கட்சி அ.தி.மு.க. தான். அதே போல் 2 கோடி தொண்டர்கள் கொண்ட ஒரே கட்சி அ.தி.மு.க. தான். எனவே அ.தி.மு.க.வை விமர்சிப்பவர்கள், தமிழக அரசியலில் தங்களுக்கான இடம் என்ன? என்பதை அறிந்து விமர்சித்தால் நன்றாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • செல்லூர் ராஜூவின் இந்த பேட்டி பா.ஜ.க.வினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
    • தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

    திருப்பத்தூர்:

    மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறுகையில், அண்ணாமலை பா.ஜ.க. மாநிலத் தலைவர் மட்டும் தான். எங்களுக்கு மோடி, அமித்ஷா, நட்டா ஆகியோர் மட்டுமே முக்கியம். டெல்லியில் நடந்த கூட்டணி கட்சியினர் கூட்டத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, மோடி அருகில் அமர வைத்தார். மோடிக்கு தெரிந்த எடப்பாடியின் அருமை அண்ணாமலைக்கு ஏன் தெரியவில்லை என்று கூறினார். செல்லூர் ராஜூவின் இந்த பேட்டி பா.ஜ.க.வினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் நேற்று இரவு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபயணம் மேற்கொண்ட பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். குடியிலும், கடனிலும் நம்பர் 1 மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. 30 சதவீதம் கமிஷன் கேட்பதால் எந்த ஒரு தொழிற்சாலையும் தமிழகத்திற்கு வருவதில்லை. பிரதமர் மோடி மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    உலகில் பொருளாதார வளர்ச்சியில் 5-வது நாடாக இந்தியா உருவாகியுள்ளது. இஸ்லாமியர்களுக்கும் மோடி எண்ணற்ற சலுகைகளை வாரி வழங்குகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது நிருபர்கள் செல்லூர்ராஜூ பேட்டி குறித்து அண்ணாமலையிடம் கேட்டனர். அதற்கு அவர் கூறுகையில், யார் பேச்சுக்கு பதில் சொல்வது என்று ஒரு தரம் உள்ளது. அரசியல் விஞ்ஞானியான செல்லூர் ராஜூக்கெல்லாம் பதில் சொல்லி எனது தரத்தை தாழ்த்தி கொள்ள முடியாது.மேலும்,நாங்கள் யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை. மக்களை நோக்கியே பயணித்துக் கொண்டிருக்கிறோம். மக்களே எங்களுக்கு எஜமானர்கள்.

    மெஜாரிட்டி, மைனாரிட்டி பாலிடிக்ஸ் தான் தமிழ்நாட்டில் அதிகம் உள்ளதாக தெரிவித்த அண்ணாமலை, மைனாரட்டி மெஜாரிட்டி என்பது ஒரு புரிதலுக்காக கொண்டு வரப்பட்டது என்றும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் மைனாரிட்டி என்ற வார்த்தைகளுக்கு மட்டும்தான் சிறப்பு சலுகைகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.

    • தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி விரைவில் கலைக்கப்படும் என்று செல்லூர் ராஜூ கூறினார்.
    • இந்த எழுச்சி மாநாடு வருகிற நாடாளு–மன்றத் தேர்தலுக்கு அச்சா–ரமாக அமையும்.

    மதுரை 

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி விரைவில் கலைக்கப் படும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

    தமிழகம் முழுவதும் விலை–வாசி உயர்வை கண் டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. மதுரை–யில் ஆரப்பாளையம் பெத் தானியாபுரம் பகுதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாநகர், புறநகர் கிழக்கு, புறநகர் மேற்கு மாவட்டங் களைச் சேர்ந்த அ.தி.மு.க.வினர் திரளாக பங்கேற்ற கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர்ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன கோஷங் களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து அங்கு கூடியி–ருந்த அ.தி.மு.க. நிர்வாகி–களும், தொண்டர்களும் கோஷங்களை எழுப்பினர்.

    இதில் பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, அண் ணாதுரை, திரவியம், எம்.எஸ்.பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் சரவணன், எஸ்.எஸ்.சரவ–ணன், மாணிக்கம், ராஜாங் கம், வெற்றிவேல்,நிலையூர் முருகன் கவுன்சிலர்கள் சோலைராஜா, சண்முக–வள்ளி, மாயத்தேவன், ரூபிணி குமார், பைக்காரா கருப்புசாமி, பரவைராஜா, முத்துவேல், கலைச் செல் வம், கே.வி.கே.கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல் லூர் ராஜூ பேசியதா–வது:-

    தி.மு.க. ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனால் இதுவரை மக்களுக்கு எந்த நன்மை–யான திட்டங்களையும் செய்யவில்லை. ஆனால் மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றி வருகிறார்கள். இத–னால் இந்த ஆட்சி எப்போது முடியும் என்று மக்கள் காத்துக் கொண்டிருக்கி–றார்கள்.

    தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கொண்டுவர மக்கள் ஆர்வத்துடன் இருக்கிறார் கள்.புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித்தலைவி அம்மாவுக்கு பிறகு மூன் றாவது சக்தியாக எடப்பாடி பழனிசாமி உருவெடுத்துள் ளார். அவரால் தி.மு.க. என்ற இயக்கத்தை அழிக்க முடியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு பேசும் போது, அமைச்சர்களோ, தி.மு.க.–வினரோ ஏதாவது பிரச் சினையை ஏற்படுத்தி விடு–வார்களோ என்று நினைத் துக்கொண்டு இருக்கிறேன், இதனால் தூக்கம் என்று தவிக்கிறேன் என்றார்.

    ஆனால் இப்போது மத்திய அரசின் அமலாக துறையின் சோதனை அவ–ருக்கு மிகப்பெரிய கலக் கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆனாலும் வெளியே வடி–வேல் பாணியில் பேசி சமாளிக்கிறார். ஆனால் மு.க.ஸ்டாலினுக்கு "பில்டிங் ஸ்ட்ராங், பேஸ் மட்டம் வீக்" என்ற வகையில் தி.மு.க. உள்ளது.

    எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். தி.மு.க. ஆட்சி விரைவில் கலைக்கப்படும். கருணாநிதி வழியில் மு.க.ஸ்டாலினின் இந்த அரசை விரைவில் கலைக்க நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன. தமிழக போலீஸ் மீது மத்திய அமலாக்க துறைக்கு நம் பிக்கை இல்லை. அந்த அள–வுக்கு தமிழக காவல்துறை சீரழிந்து விட்டது. அதனால் தான் மத்திய போலீஸ் பாதுகாப்புடன் அமலாக் கத்துறை தி.மு.க. அமைச் சர்கள் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறது.

    இந்த சோதனை இன்னும் தொடரும். 2016-ம் ஆண் டுக்குள் இன்னும் பல்வேறு சோதனைகள் நடத்தப்படும். அதைத் தொடர்ந்து கருணா–நிதி வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தி.மு.க. ஆட்சியும் கலைக்கப்படும். மதுரையில் அடுத்த மாதம் 20-ந்தேதி மாபெரும் எழுச்சி மாநாட்டை எடப்பா–டியார் தலைமையில் கூட்டி உள்ளோம்.

    இந்த மாநாட்டில் மது–ரையில் இருந்து 4 லட்சம் தொண்டர்கள் குடும்பம், குடும்பமாக பங்கேற்பார்கள். அ.தி.மு.க.வின் இந்த எழுச்சி மாநாடு வருகிற நாடாளு–மன்றத் தேர்தலுக்கு அச்சா–ரமாக அமையும்.

    இவ்வாறு அவர் பேசி–னார்.

    • மாநாட்டு பணிக்காக நாளை கால்கோள் விழா நடந்தது.
    • மதுரை மாநகர் அ.தி.மு.க.வினர் திரளாக பங்கேற்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அழைப்பு விடுவிக்கிறார்.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரை பனகல் ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கி ஆலோசனை வழங்கினார்.

    கூட்டத்தில் துணை செயலாளர் வில்லாபுரம் ராஜா, பொருளாளர் குமார், நிர்வாகிகள் எம் எஸ் பாண்டியன், அண்ணா துரை, முன்னாள் மேயர் திரவியம், கவுன்சிலர்கள் கருப்புசாமி, சோலைராஜா, மாயத்தேவன், பரவை பேரூராட்சி செயலாளர் பரவை ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

    அ.தி.மு.க. இயக்கத்தின் வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு மதுரையில் அடுத்த மாதம் 20-ந்தேதி நடைபெறுகிறது. நாடே திரும்பி பார்க்கும் வகையில் மதுரையில் முத்திரை பதிக்கும் வகையில் அ.தி.மு.க. மாநாடு சீரும் சிறப்புமாக நடைபெற உள்ளது. தமிழ கத்தில் மக்கள் விரோத ஆட்சி நடத்தி வரும் தி.மு.க.வுக்கு முடிவு கட்டும் வகையில் முத்தாய்ப்பாக இந்த மாநாடு அமையும். எனவே மாநாட்டிற்கு அ.தி.மு.க. தொண்டர்களும் பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக பங்கேற்க வேண்டும்.

    அ.தி.மு.க. பாராட்டு பணிகளை தொடங்கும் வகையில் ரிங்ரோடு வலையங்குளம் பகுதியில் மாநாட்டிற்கான கால்கோள் விழா நாளை (ஞாயிற்றுக் கிழமை) காலை 7 மணி அளவில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செய லாளர்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    எனவே மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகி களும், தொண்டர் களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.

    அ.தி.மு.க. இயக்கத்தை மேலும் புத்துணர்ச்சியூட்டும் வகையில் இளைஞர்கள், இளம்பெண்கள் அதிக அளவில் சேர்ந்து வருகிறார்கள். பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழிகாட்டுதல் படி மதுரை மாநகர் மாவட்டம் அதிக உறுப்பி னர்களை சேர்த்து சாதனை படைக்கும்.

    கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக அரசு மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் கூடுதலாக வரி சுமைகளையும், விலை வாசி உயர்வையும், திணித்துள்ளது.

    தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் அத்தி யாவசிய பொருள்களின் விலைகளையும் கட்டுப்படுத்த தவறிய திமுக அரசின் மீது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் தமிழ்நாட்டில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி மலர்ந்திட அனைவரும் ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளை மக்களிடம் எடுத்து கூறி வருகிற பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற நாம் அனைவரும் அயராது உழைத்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்

    • மதுரையில் நாளை நடைபெறும் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும்.
    • செல்லூர் ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக் கிணங்க மத்திய அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவியை உடனடியாக பறிக்க கோரி மதுரை மாநகர், புறநகர் கிழக்கு, புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் நாளை (புதன்கிழமை) காலை 10 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்று கிறார். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள், இன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நிர்வாகிகளும் பொதுமக்களும் திரளாக பங்கேற்று தமிழக ஆட்சியா ளர்களுக்கு எச்சரிக்கை மணியை அடிக்கும் வகையில் திரளாக பங்கேற்க வேண்டுமாறு வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு பல்லக்கு தூக்குவது தி.மு.க. தான்.
    • டாஸ்மாக் கடைகளில் கள்ளச்சாராயம் விற்பது கொடுமையானது.

    மதுரை :

    முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சி எப்போது வீட்டுக்கு போகும் என்று மக்கள் எண்ண தொடங்கி விட்டனர். எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆனால்தான் தமிழக மக்களுக்கு உண்மையான விடியல் கிடைக்கும். மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு பல்லக்கு தூக்குவது தி.மு.க. தான்.

    வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பா.ஜனதா கட்சிக்கு தி.மு.க. பல்லக்கு தூக்கி அமைச்சரவையிலும் இடம் பிடித்தது. அடுத்து வந்த மன்மோகன் சிங் ஆட்சியிலும் காங்கிரஸ் கட்சிக்கு பல்லக்கு தூக்கி முக்கிய துறைகளில் மந்திரி பதவி பெற்றது. அந்த சமயத்தில்தான் 2ஜி மூலம் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி வரை தி.மு.க ஊழல் செய்தது.

    பா.ஜனதாவுக்கு எதிராக தி.மு.க. தேசிய அளவில் கட்சிகளை திரட்டி வருகிறது. எனவே மு.க.ஸ்டாலின்தான் பிரதமர் என்று தி.மு.க.வினர் கூறி வருகின்றனர். ஏற்கனவே தமிழக மக்கள் அவர்களிடம் சிக்கி உள்ளனர். இது போன்று இந்திய மக்களும் சிக்க வேண்டுமா?.

    அ.தி.மு.க.விற்கு கூட்டணி என்பது துண்டு மாதிரி. ஒரு தேர்தலில் வாக்குகள் சிதற கூடாது என்பதற்காக கூட்டணி வைக்கிறார்கள். தி.மு.க. கடந்த தேர்தலில் தனித்து இருந்தால், எடப்பாடி பழனிசாமிதான் முதல்-அமைச்சராக இருந்து இருப்பார். 13 கட்சியுடன் தி.மு.க. கூட்டணி வைத்திருக்கிறது.

    போக்குவரத்து துறையில் ஊழியர்கள் பற்றாக்குறையால் அரசு பஸ்கள் டெப்போவில் முடங்கி கிடக்கிறது. அதே போல் ரேஷன் கடைகளிலும் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. ஒரே ஊழியர் 3 கடைகளில் பணியாற்றுகின்றனர்.

    நடிகர் விஜய், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏழை மக்களுக்கு உணவு அளிப்பது வரவேற்கதக்கது. இதே போல் மற்ற நடிகர்களும் உதவி செய்ய வேண்டும். ரஜினி அதிக சம்பளம் வாங்குகிறார். அவரும் மக்களுக்கும் அதிகம் செய்ய வேண்டும். சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. போதை மாநிலமாக தமிழகம் மாறி விட்டது. டாஸ்மாக் கடைகளில் கள்ளச்சாராயம் விற்பது கொடுமையானது.

    அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்கிறார். பள்ளி குழந்தைகளுக்கு தி.மு.க. அரசு சத்து இல்லாத உப்புமா, கிச்சடி போன்ற உணவுகளை தருகிறார்கள். தினமும் அதையே பள்ளி குழந்தைகள் எப்படி சாப்பிட முடியும். ஆனால் சிறை கைதிகளுக்கு சிக்கன், முட்டை என விதவிதமான உணவு வழங்குகிறார்கள். இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? தவறு செய்பவர்கள்தான் இந்த ஆட்சியில் நன்றாக வாழ்கிறார்கள். கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களுக்கே நிவாரணம் தந்த அரசு அல்லவா இது?.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூட்-கோட் அணிந்து விதவிதமான கெட்-அப்புகளில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலகம் சுற்றும் வாலிபன் பட எம்.ஜி.ஆர். போல் விதவிதமாக கோட்-சூட் போட்டுக் கலக்குகிறார்.

    வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூட்-கோட் அணிந்து விதவிதமான கெட்-அப்புகளில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

    இதுபற்றி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சுவாரஸ்யமாக குறிப்பிட்டார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலகம் சுற்றும் வாலிபன் பட எம்.ஜி.ஆர். போல் விதவிதமாக கோட்-சூட் போட்டுக் கலக்குகிறார். அதை பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது என்றார்.

    • ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.
    • ஒரு சில படங்கள் ஹிட் கொடுத்த விஷாலே அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லும் போது, பல படங்கள் ஹிட் கொடுத்த நடிகர் விஜய் தாராளமாக அரசியலுக்கு வரலாம்.

    மதுரை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளையொட்டி மதுரையில் உள்ள கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தொண்டர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார்.

    அமைச்சர் பி.டி.ஆரிடம் இருந்து நிதித்துறை பறிக்கப்பட்டதற்கு ஆடியோ தான் காரணமாகும். தவளை தன் வாயால் கெடும் என்பது போல பி.டி.ஆர். கெட்டுள்ளார். இப்போது அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கினால், ஆடியோ விவகாரம் உண்மையாகி விடும் என்பதால் சாதாரண இலாகாவை கொடுத்துள்ளனர்.

    நிதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள தங்கம் தென்னரசு சிறந்த நிர்வாகி. எந்த துறையிலும் அவர் முத்திரை பதிக்கக்கூடியவர். இன்றுள்ள அமைச்சர்களில், பிறரை தரக்குறைவாக பேசாதவர். நிதி துறையிலும் அவர் சிறப்பாக செயல்படுவார். அவருக்கு பாராட்டுக்கள்.

    ஓ.பி.எஸ்., இல்லாமல் எடப்பாடியால் முதலமைச்சர் ஆகியிருக்க முடியாது என்ற வைத்தியலிங்கத்தின் கருத்துக்கு, எதிர் முகாமில் உள்ளவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். பொறுத்திருந்து பாருங்கள். எடப்பாடி தலைமையில் தான் ஆட்சி அமைப்போம்.

    எங்களுடைய ஒரே அரசியல் எதிரி தி.மு.க. மட்டும் தான். பா.ஜ.க.வும், காங்கிரசும் எங்கள் நண்பர்கள் தான். எப்போது வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம்.

    நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா என்று கேட்கிறீர்கள். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஒரு சில படங்கள் ஹிட் கொடுத்த விஷாலே அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லும் போது, பல படங்கள் ஹிட் கொடுத்த நடிகர் விஜய் தாராளமாக அரசியலுக்கு வரலாம்.

    நடிகர் கமல் கூட மக்களுக்கு நல்லது செய்ய போவதாக சொல்லித்தான் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இப்போது நீதியும், மய்யமும் எங்கே போனது? என்று தெரியவில்லை.

    எனவே நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து தேர்தலை சந்திக்கட்டும். அதன் பின்னரே அவருடைய செயல்பாடுகள் குறித்தும், அவருடன் கூட்டணி வைப்பதா என்பது குறித்தும் சொல்ல முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×