search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும்-செல்லூர் ராஜூ அறிக்கை
    X

    அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும்-செல்லூர் ராஜூ அறிக்கை

    • மதுரையில் நாளை நடைபெறும் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும்.
    • செல்லூர் ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக் கிணங்க மத்திய அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவியை உடனடியாக பறிக்க கோரி மதுரை மாநகர், புறநகர் கிழக்கு, புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் நாளை (புதன்கிழமை) காலை 10 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்று கிறார். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள், இன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நிர்வாகிகளும் பொதுமக்களும் திரளாக பங்கேற்று தமிழக ஆட்சியா ளர்களுக்கு எச்சரிக்கை மணியை அடிக்கும் வகையில் திரளாக பங்கேற்க வேண்டுமாறு வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×