search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தே.மு.தி.க.வினர் 150 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்
    X

    முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ முன்னிலையில் தே.மு.தி.க.வினர் அ.தி.மு.க.வில் இணைந்தபோது எடுத்தபடம்.

    தே.மு.தி.க.வினர் 150 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

    • முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ முன்னிலையில் தே.மு.தி.க.வினர் 150 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
    • எம்.ஜி.ஆர். போல் வேடமிட்டு வந்த ராஜா என்பவரும் வி.பி.ஆர்.செல்வகுமாருடன் அ.தி.மு.க.வில் இணைந்தார்.

    மதுரை

    மதுரை கோரிப்பாளை யத்தில் உள்ள அ.தி.மு.க. மாநகர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. முன்னிலையில் தே.மு.தி.க. முன்னாள் மதுரை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் வி.பி.ஆர்.செல்வகுமார் தனது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க.வில் இணைந்தார்.

    அவருடன் தே.மு.தி.க. மதுரை முன்னாள் வடக்கு மாவட்ட துணைச்செயலா ளர்கள் சின்னச்சாமி, இளமி நாச்சி யம்மாள், மேரி ராஜேந்திரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் விஜயராஜா, ராஜேந்திரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் ஷேக்அப்து ல்லா, ராஜா, அண்ணாநகர் பகுதி அவைத் தலைவர்கள் கவிஞர் மணி கண்டன், ரஹமத் பீவி, பகுதி துணைச் செயலாளர் ஆனந்தராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் அனிதா ரூபி, மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர்கள் திவ்யபாரதி, சுமதி, மாணவரணி துணைச் செயலாளர் மணிகண்ட பிரபு, நெசவாளர் அணி மாவட்ட செயலாளர் பிரகாஷ், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ஜெய பாண்டி, தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் செல்வம் உள்பட 150-க் கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை 30-வது வட்ட செயலாளர் பாம்சி கண்ணன் மற்றும் இளைஞர்-இளம்பெண்கள் பாசறை மாவட்ட துணைச் செயலாளர் குறிஞ்சி குமரன் ஆகியோர் செய்திருந்தனர்.

    மேலும் எம்.ஜி.ஆர். போல் வேடமிட்டு வந்த ராஜா என்பவரும் வி.பி.ஆர்.செல்வகுமாருடன் அ.தி.மு.க.வில் இணைந்தார்.

    Next Story
    ×