search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்கோள் விழா"

    • மாநாட்டு பணிக்காக நாளை கால்கோள் விழா நடந்தது.
    • மதுரை மாநகர் அ.தி.மு.க.வினர் திரளாக பங்கேற்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அழைப்பு விடுவிக்கிறார்.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரை பனகல் ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கி ஆலோசனை வழங்கினார்.

    கூட்டத்தில் துணை செயலாளர் வில்லாபுரம் ராஜா, பொருளாளர் குமார், நிர்வாகிகள் எம் எஸ் பாண்டியன், அண்ணா துரை, முன்னாள் மேயர் திரவியம், கவுன்சிலர்கள் கருப்புசாமி, சோலைராஜா, மாயத்தேவன், பரவை பேரூராட்சி செயலாளர் பரவை ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

    அ.தி.மு.க. இயக்கத்தின் வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு மதுரையில் அடுத்த மாதம் 20-ந்தேதி நடைபெறுகிறது. நாடே திரும்பி பார்க்கும் வகையில் மதுரையில் முத்திரை பதிக்கும் வகையில் அ.தி.மு.க. மாநாடு சீரும் சிறப்புமாக நடைபெற உள்ளது. தமிழ கத்தில் மக்கள் விரோத ஆட்சி நடத்தி வரும் தி.மு.க.வுக்கு முடிவு கட்டும் வகையில் முத்தாய்ப்பாக இந்த மாநாடு அமையும். எனவே மாநாட்டிற்கு அ.தி.மு.க. தொண்டர்களும் பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக பங்கேற்க வேண்டும்.

    அ.தி.மு.க. பாராட்டு பணிகளை தொடங்கும் வகையில் ரிங்ரோடு வலையங்குளம் பகுதியில் மாநாட்டிற்கான கால்கோள் விழா நாளை (ஞாயிற்றுக் கிழமை) காலை 7 மணி அளவில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செய லாளர்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    எனவே மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகி களும், தொண்டர் களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.

    அ.தி.மு.க. இயக்கத்தை மேலும் புத்துணர்ச்சியூட்டும் வகையில் இளைஞர்கள், இளம்பெண்கள் அதிக அளவில் சேர்ந்து வருகிறார்கள். பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழிகாட்டுதல் படி மதுரை மாநகர் மாவட்டம் அதிக உறுப்பி னர்களை சேர்த்து சாதனை படைக்கும்.

    கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக அரசு மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் கூடுதலாக வரி சுமைகளையும், விலை வாசி உயர்வையும், திணித்துள்ளது.

    தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் அத்தி யாவசிய பொருள்களின் விலைகளையும் கட்டுப்படுத்த தவறிய திமுக அரசின் மீது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் தமிழ்நாட்டில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி மலர்ந்திட அனைவரும் ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளை மக்களிடம் எடுத்து கூறி வருகிற பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற நாம் அனைவரும் அயராது உழைத்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்

    • பா.ஜ.க. தமிழக தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேச உள்ளார்.
    • மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் கரையான்புதூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வரும் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பா.ஜ.க. தமிழக தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேச உள்ளார். பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தில் பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது.

    மாநில பொதுச்செயலாளர் ஏ. பி. முருகானந்தம், மாநிலத்துணைத்தலைவர் மலர்கொடி, திருப்பூர் வடக்கு மாவட்டத்தலைவர் செந்தில்வேல், மாவட்ட பொதுச் செயலாளர் சீனிவாசன், மாவட்ட துணைத்தலைவர்கள் ஜோதிமணி, வினோத் வெங்கடேஷ், விவசாய அணி ரமேஷ் குமார், நகரத்தலைவர் வடிவேல், நிர்வாகிகள் ரமேஷ், பன்னீர் செல்வகுமார், துரைக்கண்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×