search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை"

    • ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
    • குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளி மற்றும் வேலைக்குச் செல்ல முடியாமல் பொதுமக்கள் திணறி வருகிறார்கள்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஆறுமுத்தாம்பாளையம் - சேடபாளையம் ரோடு சுமார் 16 அடி அகல ரோடாக உள்ளது. இந்த நிலையில், ஆறுமுத்தம்பாளையத்தில் இருந்து. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அந்த ரோட்டில் சென்ற வண்ணம் உள்ளது.

    குறுகலான ரோடாக உள்ளதால் ஒரு வாகனம் மட்டும் செல்ல முடிகிறது. எனவே எதிரே வரும் வாகனம் ஒதுங்கி நின்று வழி விட்ட பின்னர் தான் அடுத்த வாகனம் செல்ல முடிகிறது. இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளி மற்றும் வேலைக்குச் செல்ல முடியாமல் பொதுமக்கள் திணறி வருகிறார்கள்.

    எனவே குறுகலான அந்த ரோட்டை விரிவாக்கம் செய்து அகலப்படுத்தி இரண்டு வாகனங்கள் செல்லும் வகையில் அமைக்க வேண்டும் என ஆறுமுத்தாம்பாளையம் ஊர்ப்பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மழை நீர் பள்ளங்களில் தேங்கி சேரும் சகதியுமாக உள்ளது.
    • பலர் சாலையில் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூர் ஊராட்சி பெருநாட்டான்தோப்பு நடுத்தெரு பகுதியில் சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பெருநாட்டான் தோப்பு நடுத்தெருவை இணைக்கும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக பெருநாட்டான்தோப்பு வந்து அங்கிருந்து திருவாரூர், நாகப்பட்டினம், திருக்கண்ணபுரம்,கங்களாஞ்சேரி,திருமருகல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வர இந்த சாலையை பயன்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் மழை நீர் பள்ளங்களில் தேங்கி சேரும் சகதியுமாக உள்ளது.இதனால் அப்பகுதி மக்கள் சாலையில் பயன்படுத்த முடியாத நிலை உள்ளனர்.மேலும் மழையில் பள்ளம் இருப்பது தெரியாமல் சாலையில் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு சேரும் சகதியுமான சாலையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பொதுமக்கள் அச்சம்-போக்குவரத்து பாதிப்பு
    • சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    களியக்காவிளை :

    நாகர்கோவில்-களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் குழித்துறை சந்திப்பு பகுதி போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். இந்த சாலையில் நேற்று இரவு திடீரென விரிசல் ஏற்பட்டது. இந்த விரிசல் சற்று நேரத்தில் 10 அடி ஆழமாக மாற அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் திடீரென ஏற்பட்ட பள்ளம் அந்தப் பகுதி மக்களை அச்சத்திற் குள்ளாக்கியது.

    அவர்கள் அந்த வழியாக சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கபட்டது. சாலையின் இரு புறமும் வாகனங்கள் நின்றதால் சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொது மக்களும், இளைஞர்களும் சேர்ந்து போக்குவரத்தை சரி செய்ய முயன்றனர். ஆனால் அவர்களது முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.

    எனவே களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் அந்த சாலை வழியாக வாகனங்கள் செல்லாதவாறு தடுப்பு வேலிகள் அமைத்தனர்.

    சாலை பணி நடைபெற்று சில மாதங்களே ஆன நிலையில் சாலையின் நடுவில் 10 அடி பள்ளம் ஏற்பட்ட சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • பழுதடைந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் கம்பன் நினைவிட சாலையை சரிசெய்ய கோரிக்கை எழுந்துள்ளது.
    • தற்போது இந்த சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    காளையார்கோவில்

    சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் உள்ள கம்பன் நினைவிடம் செல்லும் சாலை பல ஆண் டுகளாய் குண்டும், குழியு மாய் உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிய டைந்து வருகின்றனர். நாட் டரசன் கோட்டையிலிருந்து கருதுப்பட்டி, கண்டனிப் பட்டி வழியே காளையார் கோவில் செல்லும் சாலை உள்ளது.

    நாட்டரசன்கோட்டையி லிருந்து கண்டனிப்பட்டி வரை சுமார் 4 கி.மீ. தூரம் செல்லும் இந்த சாலை பின்னர் தொண்டி தேசிய நெடுஞ்சாலையுடன் இணை கிறது. நாட்டரசன்கோட்டை வழியே காளையார்கோவில் செல்லும் சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் இந்த சாலையை பயன்ப டுத்தி வருகின்றனர். 4 கி.மீ. தூரமுள்ள இந்த சாலை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது.

    மண் சாலையாக இருந்து முதன்முறையாக தார்ச்சா லையாக மாற்றப்பட்ட பின் னர் எவ்வித பராமரிப் பும் செய்யாமல் விடப்பட்டுள் ளது. நாட்டரசன்கோட்டை யிலிருந்து சுமார் 1 கி.மீ. தூரத்தில் உள்ள கம்பன் நினைவிடத்திற்கு இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். கம்பன் நினைவிடத்திற்கு சிறிது தூரம் முன்புவரை நாட்டர சன்கோட்டை பேரூராட்சி சாலையாகவும், எஞ்சிய 3 கி.மீ. தூரம் காளையார் கோவில் யூனியன் சாலையா கவும் உள்ளது.

    இதில் பேரூராட்சி எல் லைக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் புதிய சாலை அமைக்கப்பட்டது. எஞ்சிய 3 கி.மீ. தூரத்திற்கு புதிய சாலை அமைக்க காளையார் கோவில் யூனியன் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக் காததால் சாலை, போக்கு வரத்திற்கு லாயக்கற்ற நிலை யில் உள்ளது.

    மதுரை, தொண்டி சாலையில் செல்லும் சுற்று லாப்பயணிகள் நாட்டரசன் கோட்டை ஊருக்குள் வந்து கண்ணுடையநாயகி அம்மன் கோவில், கம்பன் நினைவி டம் சென்று மீண்டும் மதுரை, தொண்டி சாலை யில் இணைந்து கொள்ளும் வகையில் உள்வட்ட சாலை யாக இருந்தது. பல ஆண்டு களாய் சாலை பழுதால் தற்போது இந்த சாலை முற்றிலும் துண்டிக்கப்பட் டுள்ளது.

    இதுகுறித்து கிராம மக் கள் கூறுகையில், பிரதான சுற்றுலாத்தலமான கம்பன் நினைவிட சாலை பழுத டைந்து சுமார் 10 ஆண்டுக ளுக்கும் மேல் ஆகிவிட்டது. கடந்த 2013-ம் ஆண்டு சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு இச்சாலையை பார்வையிட் டது. சாலை பழுது குறித்து பல்வேறு புகார்கள் அனுப்பி யும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக புதிய சாலை அமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • பூவனூர் கிராமத்தின் பிரதான சாலையானது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.
    • பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள் தண்ணீருக்குள் தவறி விழுந்து விடுகின்றனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி ஊராட்சி பூவனூர் கிராமத்தின் பிரதான சாலையானது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.

    தற்போது குண்டும் குழியுமாக மிகவும் பழுதானதால் கனமழையின் காரணமாக பள்ளங்கள் முழுவதும் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. எனவே பூவனூர் கிராமத்திற்கு யார் வந்தாலும், கிராமத்தில் இருந்து வெளியே யார் சென்றாலும் குளம் போல் தேங்கிய மழை நீரின் வழியே செல்ல வேண்டி உள்ளது என அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.

    மேலும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகள் சைக்கிளில் இருந்து தண்ணீருக்குள் தவறி விழுந்து விடுகின்றனர்.

    இந்நிலையில் தேங்கிய தண்ணீரில் பொதுமக்கள் நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்களின் உடை மற்றும் பாட புத்தகங்கள் அனைத்தும் தண்ணீரில் நனைந்து விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட திப்பணம்பட்டி ஊராட்சி நிர்வாகத்திடம் புதிய சாலை அமைக்கப்படுமா என கேட்டதற்கு ஏற்கனவே 2 முறை தீர்மானம் வைத்து அனுப்பி உள்ளோம்.

    இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

    • நூற்றுக்கணக்கான வாகனங்களில் பொது மக்கள் மற்றும் மாணவ மாணவிகள் சென்று வரு கின்றனர்.
    • சுற்றுச்சுவரை கட்டி சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இரணியல் :

    சுங்கான்கடை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அம்பேத்கர் காலனி, இந்திரா காலனி மற்றும் சுங்கான் கடை சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் பொது மக்கள் மற்றும் மாணவ மாணவிகள் சென்று வரு கின்றனர்.

    இந்த நிலையில் சாலை யோரம் நின்ற மரம் மழையில் வேரோடு சாய்ந்து விழுந்தது. குறிப்பிட்ட ஒரு வளைவு பகுதியில் இந்த மரம் சரிந்து விழுந்ததால் கன மழையில் சாலை அரித்துச்செல்லப்பட்டு வருகிறது. தற்போது இந்த சாலை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.

    இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்பு கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன் நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் இந்த சாலையை சுற்றுச்சுவரை கட்டி சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 10-ந் தேதிக்கு பிறகு வாகனங்களை அனுமதிக்க நடவடிக்கை
    • கந்த சஷ்டி விழா 13-ந் தேதி நடப்பதால் அதிகாரிகள் மும்முரம்

    வடவள்ளி,

    கோவை மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் பக்தர்களால் 7-ம் படை வீடு என அழைக்கப்படுகிறது.

    இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    முக்கிய விழா நாட்கள், விஷேச தினங்களில் இந்த கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    மலைக்கோவில் பகுதியில் கடந்த 5-ந் தேதி லிப்ட் அமைப்பது, தார்சாலை அமைப்பது உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் தொடங்கியது.

    இதன் காரணமாக மலைப்பாதையில் வாகனங்கள் செல்வதற்கு ஒரு மாதத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் கோவிலுக்கு செல்பவர்கள் படிப்பாதை வழியாக கோவிலுக்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் படிப்பாதை வழியாக கோவிலுக்க சென்று வருகின்றனர்.

    தற்போது இந்த பணிகள் விறு, விறுப்பாக நடைபெற்று வருகிறது. மலைப்பாதையில் 2.27 கிலோ மீட்டர் சாலை அமைக்கும் பணி நடந்துள்ளது. மீதி 300 மீட்டர் தூரம் வரையிலான சாலை அமைக்கும் பணி மட்டுமே உள்ளது. அந்த பணியும் விறு, விறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வருகிற 13-ந் தேதி கந்த சஷ்டி விழா தொடங்க உள்ளது. இந்த விழாவில் கோவை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் அதிகளவில் கலந்து கொள்வார்கள். அன்றைய தினம் கோவிலில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    கந்த சஷ்டி விழா தொடங்குவதற்குள், மருத மலை மலைப்பாதையில் நடந்து வரும் பணிகள் அனைத்தும் முடிந்து, வருகிற 10-ந் தேதிக்குள், வாகனங்கள் மீண்டும் மலைப்பாதையில் இயக்கப்படலாம் என தெரிகிறது.

    இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கோவில் நிர்வாகம் சார்பில் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, சாலைபணி கள் விறு, விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடிந்து வாகனங்கள் செல்ல அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோரிக்கை
    • போக்குவரத்து நிறைந்து மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும்.

    அருமனை :

    குழித்துறை-ஆலஞ் சோலை சாலை நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமானதாகும். இந்த சாலை ஆலஞ்சோலை முதல் அருமனை மேலத் தெரு வரை, புண்ணியம் முதல் கழுவன்திட்டை வரை உள்ள சாலை சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்டது. ஆனால் மேலத்தெரு முதல் புண்ணியம் சந்திப்பு வரை சாலை சீரமைக்கப்பட்டு சுமார் 13 ஆண்டுகள் ஆகின்றது.

    இந்த சாலை எப்போதும் போக்குவரத்து நிறைந்து மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும். மேலும் சாலையின் இருபுற மும் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டு சாலை குறுகி கொண்டே வருகிறது. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. அருமனை மைய பகுதியில் அனைத்து அரசு அலுவல கங்கள், வங்கிகள், வர்த்தக ஸ்தாபனங்கள் மற்றும் அரசு பேருந்துகள் 100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி வாகனங்கள், கன ரக வாகனங்கள் (குவாரி) மற்றும் தனியார் வாகனங்கள் வந்து செல்லக்கூடிய பகுதியில் தற்போது சாலை குண்டும் குழிகளாக சேதமாகி உள்ளது.

    எனவே இச்சாலையை உடனே சீர்செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (டி.ஒய்.எப்.ஐ.) அருமனை வட்டா ரக்குழு சார்பாக நெடுஞ் சாலைதுறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த நிலை தொடர்ந்தால் போராட்டம் நடத்துவதாகும் கூறியுள்ளனர்.

    • இந்த சாலை அடிக்கடி போக்குவரத்து நெருக்கடியாகவே காணப்படும்.
    • போலீசார் சாலையை சீர்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பட்டுக்கோ ட்டை சாலையில் அரசு மருத்துவமனை எதிரில் ஒரு அரசு வங்கி மற்றும் தனியார் வங்கி மேலும் தனியாருக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட் மற்றும் பல வகையான கடைகள் இயங்கி வருகிறது. இதனால் இங்கு வரும் வாடிக்கையாளர்கள் அரசு மருத்துவமனை சாலையிலே வாகனங்கள் நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி யாகவே இருந்து வருகிறது.

    பேராவூரணி அருகே உள்ள முடச்சிக்காடு கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் ஸ்ரீமுகி (வயது 30). இவர் பேராவூரணி அண்ணா சிலை அருகில் உள்ள மருந்துக் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் கடையின் வேலையாக வங்கிக்கு சென்று வேலை யை முடித்துவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் கடைக்கு புறப்படும் போது அரசு பேருந்து ஒன்று பட்டுக்கோ ட்டையிலிருந்து அந்த மருத்துவமனை சாலையில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது வங்கி மற்றும் தனியார் கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை சாலையில் நிறுத்தியிரு ந்ததால் ஸ்ரீ முகி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சென்டர் மீடியனுக்கும் பேருந்துக்கும் இடையில் சிக்கிக் கொண்டது. இந்த விபத்தில் ஸ்ரீமுகி படுகாயம் அடைந்தார்.

    இதைத் தொடர்ந்து பேருந்தை டிரைவர் உடனே நிறுத்தியுள்ளார். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்தப் பெண்ணை மீட்டு தனியார் எலும்பு முறிவு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சாலையை ஆக்கிரமித்து வைத்திருந்த வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவ ரத்தை சரி செய்தனர்.

    பேராவூரணி நகர் பகுதியில் சாலை ஆக்கிரமிப்பு மற்றும் நடை பாதை ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அதிகாரிகள் உடனடியாக அப்புறப்படுத்தி மேலும் விபத்துகள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரூ.1கோடியே 72 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணியினை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.
    • ஊராட்சி மன்ற தலைவர் லதா ஏழுமலை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சின்னசெவலை - தி. மழவராயனூர் வரை உள்ள சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். மக்களின் கோரிக்கையினை ஏற்று அமைச்சர் பொன்முடி முதல்-அமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1கோடியே 72 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வீடு இல்லாத அனைவருக்கும் கட்சிப் பாகுபாடு இன்றி வீடு வழங்கப்படும் என பேசினார்.

    இதில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி, எம்.எல்.ஏ.,க்கள் புகழேந்தி, லட்சுமணன், தி.மு.க. மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ் மாவட்ட கவுன்சிலர் விசுவநாதன், ஒன்றிய குழு தலைவர் ஓம்சிவசக்திவேல், ஒன்றிய குழு துணை தலைவர் கோமதி நிர்மல்ராஜ், தாசில்தார் ராஜ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் கேசவலு, தி.மு.க நகர செயலாளர் பூக்கடைகணேசன், ஒன்றிய பொருளாளர் கிருஷ்ண மூர்த்தி, ஒன்றிய விவசாய அணி செயலாளர் வெங்கடேசன், பேரூராட்சி துணைதலைவர் ஜோதி, நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு கிருஷ்ணராஜ், தலைமை கழக பேச்சாளர் சிறுவானூர் பரசுராமன் சிறுமதுரைசெல்வம் ஊராட்சி மன்ற தலைவர் லதா ஏழுமலை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • விவசாயிகள், மாணவ- மாணவிகள் இந்த வழிதடத்தில் அதிக அளவில் பயணித்து வருகின்றனர்.
    • தெரு விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை தாலுக்கா விற்குட்பட்ட பெரியகுளம் 210 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளத்தின் மூலம் 600 ஏக்கர் நேரடி பாசன வசதி பெற்று கார், பிசான, பூமகசூல் என 3 சாகுபடிக்கும் இந்த குளத்தின் தண்ணீரை பெற்று மட்டுமே விவசாயிகள் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.

    இந்த குளத்து கரையின் வழியாக கிராமங்களை இணைக்கும் இணைப்பு சாலையில் குளத்து கரை மட்டுமே ஒரு கிலோமீட்டர் நீளம் கொண்டது. தென்காசியில் இருந்து இலத்தூர், திருவெட்டியூர், நெடுவயல், அச்சன்புதூர், வடகரை, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.

    விவசாயிகள், பள்ளி கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இந்த வழிதடத்தில் அதிக அளவில் பயணித்து வருகின்றனர். அவ்வாறு வரும் வாகனங்கள் முழுவதும் இலத்தூர் குளத்துகரை வழியாகத் தான் வந்து செல்ல முடியும். ஏற்கனவே இலத்தூர் குளம் முதல் அச்சன்புதூர் வரையிலான வழி தடங்களில் தெருவிளக்குகள் இல்லாத நிலையில் இரவு நேரங்களில் அதிகளவில் பாம்பு மற்றும் தேள் உள்ளிட்ட விஷ பூச்சிகள் காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் செல்வோர் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை சார்பில் இலத்தூர் குளத்து கரையை ஒட்டிய சாலையை விரிவுபடுத்தி தார்ச்சாலை அமைத்து கொடுத்துள்ளனர். தற்போது அந்த சாலையின் மைய பகுதியில் மேடு-பள்ளங்கள் காணப்படுகிறது. மேலும் ஜல்லிகள் பெயர்ந்தும் உள்ளது. சாலைகள் சேதம் மற்றும் தெரு விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

    எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இலத்தூர் கரையிலிருந்து அச்சன்புதூர் வரையிலான சாலையில் மின் விளக்கு அமைப்பதுடன், சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போக்குவரத்து நெருக்கடியால் பொதுமக்கள் அவதி
    • நாகர்கோவில் பால்பண்ணை சந்திப்பில் உள்ளது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் நகரில் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காகவும் குடிநீர் திட்ட பணிகளுக்காகவும் சாலை நடுவே பள்ளங்கள் தோண்டப்பட்டு பைப் லைன்கள் அமைக்கப் பட்டுள்ளது.

    நகரின் பிரதான சாலை களான கேப் ரோடு, அவ்வை சண்முகம் சாலை, மீனாட்சிபுரம் சாலை, செட்டிகுளம் சாலை மற்றும் நாகர்கோவில்- திருவனந்தபுரம் சாலை யிலும் குழிகள் தோண்டப் பட்டு பைப் லைன்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு செட்டிகுளம் சந்திப் பில் சாலை நடுவே மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டு அரசு பஸ் சிக்கியது. இதைத் தொடர்ந்து மாநக ராட்சி அதிகாரிகள் அந்த இடத்தை காங்கிரீட் கலவை களால் சரி செய்தனர்.

    இந்த நிலையில் நாகர் கோவில்- திருவனந்தபுரம் நெடுஞ்சாலை சந்திப்பில் நேற்று இரவு குடிநீர் குழா யில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்கு ஆளானார்கள். இதைத் தொடர்ந்து அதிகா ரிகள் அந்த பகுதியில் குடிநீர் விநியோகத்தை நிறுத்தி உடைப்பை சரி செய்தனர்.

    இந்த நிலையில் அந்த பகுதியில் இன்று காலை பாதாள சாக்கடை, குடிநீர் திட்டத்திற்காக தோண் டப்பட்டு மூடப்பட்ட பகுதி யில் சாலையின் நடுவே மிகப்பெரிய அள வில் பள்ளம் விழுந்தது. இதில் அந்த வழியாக வந்த ஆட்டோ சிக்கியது. மேலும் கார் ஒன்றும் அதில் சிக்கி யது.

    சாலையின் நடுவே கிடந்த பள்ளத்தை தொ டர்ந்து வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்காமல் இருக்க அந்த பகுதியில் சாலையின் ஓரமாக சென்ற னர். சாலையில் பள்ளம் ஏற்பட்டதையடுத்து சாலை ஓரமாக வாகனங்கள் சென் றன. இதனால் அந்த பகுதி யில் கடுமையான போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட் டது. காலை நேரம் என்ப தால் பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகளை இரு சக்கர வாகனங்களிலும் 4 சக்கர வாகனங்களில் அழைத்து சென்ற பெற்றோ ரும் போக்குவரத்து நெருக் கடியில் சிக்கித் தவித்தனர். அரசு பஸ்களும் போக்கு வரத்து நெருக்கடியில் சிக்கி தவித்ததால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளானார் கள்.

    சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இது பற்றி தகவல் அறிந்ததும் போக்குவரத்து பிரிவு போலீசார் சம்பவ இடத் திற்கு சென்று போக்கு வரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். சாலை நடுவே கிடந்த பள்ளத்தை சுற்றியும் கற்கள் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் வேறு வாகனங்கள் சிக்காத வகையில் மரக் கிளைகளையும் பொது மக்கள் முறித்து வைத்துள்ள னர்.

    மாநகராட்சி ஊழியர்கள் உடனடி நடவடிக்கையாக அந்த பகுதியில் உள்ள பள்ளத்தை சீரமைத்து சாலையை சரி செய்ய வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது. பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட பிரதான சாலைகளில் பள்ளங்கள் ஏற்படு வது வாடிக்கையாகி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பாதாள சாக்க டைக்காக தோண்டப்பட்ட பிறகு சாலைகள் மூடப்படும் போது சரியான காங்கிரீட் கலவைகள் அமைக்கப்படாமல் சாலைகள் அமைக்கப் படுவது தான் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    எனவே மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி மேயர் இதில் தனிக் கவனம் செலுத்தி பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்படும் பள்ளங் கள் மூடப்படும் போது அதற்கான விதிமுறைக் குட்பட்டு காங்கீரீட் தளம் அமைத்து மூடப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண் டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

    ×