search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரம் அருகே சாலையை சீரமைக்க கோரி நாற்று நட்டு பெண்கள் போராட்டம்
    X

    மழைநீர் தேங்கிய சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.  

    பாவூர்சத்திரம் அருகே சாலையை சீரமைக்க கோரி நாற்று நட்டு பெண்கள் போராட்டம்

    • பூவனூர் கிராமத்தின் பிரதான சாலையானது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.
    • பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள் தண்ணீருக்குள் தவறி விழுந்து விடுகின்றனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி ஊராட்சி பூவனூர் கிராமத்தின் பிரதான சாலையானது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.

    தற்போது குண்டும் குழியுமாக மிகவும் பழுதானதால் கனமழையின் காரணமாக பள்ளங்கள் முழுவதும் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. எனவே பூவனூர் கிராமத்திற்கு யார் வந்தாலும், கிராமத்தில் இருந்து வெளியே யார் சென்றாலும் குளம் போல் தேங்கிய மழை நீரின் வழியே செல்ல வேண்டி உள்ளது என அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.

    மேலும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகள் சைக்கிளில் இருந்து தண்ணீருக்குள் தவறி விழுந்து விடுகின்றனர்.

    இந்நிலையில் தேங்கிய தண்ணீரில் பொதுமக்கள் நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்களின் உடை மற்றும் பாட புத்தகங்கள் அனைத்தும் தண்ணீரில் நனைந்து விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட திப்பணம்பட்டி ஊராட்சி நிர்வாகத்திடம் புதிய சாலை அமைக்கப்படுமா என கேட்டதற்கு ஏற்கனவே 2 முறை தீர்மானம் வைத்து அனுப்பி உள்ளோம்.

    இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

    Next Story
    ×