என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பல்லடம் அருகே சாலையை அகலப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
- ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
- குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளி மற்றும் வேலைக்குச் செல்ல முடியாமல் பொதுமக்கள் திணறி வருகிறார்கள்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஆறுமுத்தாம்பாளையம் - சேடபாளையம் ரோடு சுமார் 16 அடி அகல ரோடாக உள்ளது. இந்த நிலையில், ஆறுமுத்தம்பாளையத்தில் இருந்து. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அந்த ரோட்டில் சென்ற வண்ணம் உள்ளது.
குறுகலான ரோடாக உள்ளதால் ஒரு வாகனம் மட்டும் செல்ல முடிகிறது. எனவே எதிரே வரும் வாகனம் ஒதுங்கி நின்று வழி விட்ட பின்னர் தான் அடுத்த வாகனம் செல்ல முடிகிறது. இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளி மற்றும் வேலைக்குச் செல்ல முடியாமல் பொதுமக்கள் திணறி வருகிறார்கள்.
எனவே குறுகலான அந்த ரோட்டை விரிவாக்கம் செய்து அகலப்படுத்தி இரண்டு வாகனங்கள் செல்லும் வகையில் அமைக்க வேண்டும் என ஆறுமுத்தாம்பாளையம் ஊர்ப்பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்