search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோரிக்கை"

    • பெரியாறு கால்வாயில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும்.
    • நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் மேலூர் தொகுதி எம்.எல்.ஏ. பெரியபுள்ளான் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலூர்

    மேலூர் பகுதி விவசா யத்திற்கு பெரியார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் மேலூர் தொகுதி எம்.எல்.ஏ. பெரிய புள்ளான் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம் மேலூர் பகுதி விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க கோரி நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை சட்டமன்ற சட்டசபை அரங்கில் சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்துள்ளார். அதில் கூறியருப்பதாவது:-

    மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் விவசாயம் சார்ந்த பகுதியாகும். முல்லைப் பெரியாறு கால்வாயில் இருந்து மேலூர் ஒருபோக பாசன விவசாயம் சாகுபடி செய்து வருகிறோம். தற்போது முல்லைப் பெரியாறு அணையில் 133 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பு உள்ளது. மேலும் இருபோக பாசனப்பகுதியில் அதிக விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாறிவிட்டன. தற்போது அணையில் இருக்கும் தண்ணீர் ஒருபோக பாச னத்திற்கு போதுமானதாக இருக்கும். எனவே மேலூர் ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • லாந்தை ெரயில்வே சுரங்கப்பாதையை மேம்பாலமாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை அளித்தனர்.
    • மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய நிதிய மைச்சர் நிர்மலா சீதாரா மன் வருகை தந்தார். அப்போது திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் லாந்தை கிராம பொதுமக்கள் சார்பில் கிராம தலைவர் தங்கவேல் அளித்த கோரிக்கை மனுவில் கூறியி ருந்ததாவது:-

    லாந்தை, கண்ணணை, பெரியதாமரைக்குடி, சின்ன தாமரைக்குடி, திருப்பனை என ஐந்து கிராமங்களை உள்ளடக்கி, சுமார் 600 குடும்பங்களைக் கொண்ட 2,500-க்கும் மேற் பட்ட மக்கள் பயன்படுத்தும் இந்த ஒரு வழிச் சாலையில் தான் தற்போது ெரயில்வே சுரங்கப்பாதை அமைய பெற்றி ருக்கிறது. இந்த கிராமங்களை நகரத்துடன் இணைக்க வேறு எந்த பாதையும் இல்லை.

    மேலும் மேற்கில் 6 கி.மீ. தூரத்திலும், வடமேற்கில் 10 கி.மீ. தூரத்திற்கு அப்பாலும் தெற்கில் 7 கி.மீ. அளவில் இருந்து கிழக்கு நோக்கி வரும் மழை நீர் ராமநாதபுரம் பெரிய கண்மாயின் தென்கலுங்குக்கு சென்று கடலில் கலக்கும் ஆற்று வழித்தடக் கால்வாயை மறைத்து தான் தடுப்பணை போல தான் இந்த சுரங்கப் பாதை அமைந்திருக்கிறது.

    ெரயில்வே தண்டவாளத் தின் இருபுறமும் வரும் உபரிநீர் நேராக சென்று கடலில் கலப் பதை தடுக்கும் விதமாக தடுப் பணை போல் இந்த பாலம் அமைந்துள்ளது. பாலத் தின் இரு முகப்புகளும் இரு வாக னங்கன் ஒன்றாக ஒரே நேரத் தில் கடந்து செல்ல இயலாத வகையில் குறுகலாக அதாவது வெறும் 15 அடியிலிருந்து 20 அடி தான் உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படு கிறது. தேசிய நெடுஞ்சா லைக்கும், ெரயில்வே தண்டவா ளத்திற்கும் இடையே மிக குறைந்த 30 மீட்டருக்குள் தூரம் இருப்பதால் மேற்கில் இருந்து வரும் தண்ணீர் முழுவதும் அங்கேயே தேங்கி விடுகிறது. இதனால் சுரங்கப்பாதையில் இருந்து 100 மீ. தூரத்திற்கு மற்றும் இருக்கும் மெக்கா நகர் 60 வீடுகளும், செய்யது அம் மாள் பொறியியல் கல்லூரியும் நீரில் மிதக்கிறது.

    மேற்கண்ட ஐந்து கிராமங் களை சுற்றிலும் கிழக்கில் பெரிய கண்மாய் கலுங்கும், தெற்கில் திருப்பனை கண்மாய், மேற்கில் லாந்தை கண்மாய் கலுங்கின் ஆற்று கால்வாயும் மற்றொரு தெற்குப் பகுதியில், பெரிய தாமரைக்குடி, சின்ன தாமரைக்குடி கண்மாயிகளும், வடக்கில் ராமநாதபுரம் பெரிய கண்மாய் அமைந்திருப்பதால் மாற்று வழித்தடமோ, சாலையோ இல்லை. எனவே இந்த சுரங் கப்பாதையில் தான் பள்ளி வாகனங்கள், டெம்போக்கள், ஆட்டோ, விவசாய பொருட் களை எடுத்துச் செல்லும் லாரி கள், இருசக்கர வாகனங் கள், அவசரத் தேவைக்கு ஆம்பு லன்ஸ், நகரப்பேருந்து என இந்த வழியில் தான் செல்கிறது.

    சிறிய மழை பெய்தால்கூட சுற்றியுள்ள அனைத்து வழித–டங்களில் இருந்தும் தண்ணீர் வந்து சுரங்கப்பாதைக்குள் தேங்குவதால் மழைநீரை வெளியேற்ற 6 மணி முதல் 7 மணி நேரம் வரை ஆகிறது. அதுவரை இருசக்கர வாகனம் உட்பட எந்தவித போக்குவரத்து இல்லாமல் ஊருக்குள்ளேயே அந்த பகுதி மக்கள் முடங்கும் நிலை உள்ளது. மேலும் 7 கீ.மீ தொலைவில் உள்ள ராமநாத புரம் நகரத்திற்கும் பிற ஊர்க ளுக்கும் செல்ல முடியாமல் எவ்வித தொடர்பின்றி தீவு போல ஆகிவிடுகிறது.

    பிற மாவட்டங்களை போல இல்லாமல் பூலோக ரீதியாக கடற்கரை பகுதி என்பதாலும் அனைத்து கண்மாய்களின் உபரிநீர் வந்து சேரும் கடைநிலைப் பகுதியாக இருப்பதாலும் பாலம் அமைந்து இருப்பது தாழ்வாகவும் அதன் தண்ணீர் வெளியேரும் பகுதி உயர்வாக இருப்பதாலும் பெரிய கண்மாய் கலுங்கு திறந்தால் பாலத்தை முழ்கடிக் கும் அளவுக்கு தண்ணீர் வரும் பகுதி என்பதாலும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் தண் ணீரை வெளியேற்ற இயல வில்லை.தொடர்ந்து மேற்கண்ட கிராம மக்கள் பெரும் துயரங்க ளையும், துன்பங்களை யும் சந்தித்து வருவதால் அன்றாட வாழ்க்கையே பெரும் பாதிப் புக்கு உள்ளாகிறது.

    மேலும் நெடுஞ்சாலைத் துறை நான்குவழி சாலை அமைக்க இந்த பாலம் அமைந்து இருக்கும் பகுதியை யும் கையகபடுத்தி உள்ளார்கள். அதனை தொடர்ந்து இந்த பாலத்திற்கு நேரே உள்ள லாந்தை காலணி பகுதியில் உள்ள 30 வீடுகளையும் கைய கப்படுத்தி உள்ளனர். இதனால் இந்த மக்களின் வாழ்வாதாரமும் கேள்வி குறியாக உள்ளது. இவ்வாறு கையகப்படுத்தி உள்ளதால் எதிர்காலத்தில் நான்குவழி சாலை வந்தால் இந்த பாலத்திலிருந்து கிராம மக்கள் வெளியேரும் பொழுது விபத்து ஏற்படும் பகுதியாக மாறும் சூழல் உள்ளது.எனவே சமூகம் தயவு கூர்ந்து இப்பி ரச்சனையில் சிறப்பு கவனம் செலுத்தி சுரங்கபா தைக்கு மாற்றாக ஆள் உள்ள கேட்டா கவோ அல்லது மேம்பாலமா கவோ தரம் உயர்த்தி கொடுத்து பெரும்பான்மையாக விவசாய பெருங்குடி மக்கள் மட்டுமே வாழ்ந்து வரும் இப்பகுதி மக்களுக்கு மறுவாழ்வு அளித்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடன் மாவட்ட பா.ஜ.க. தலைவர் தரணி ஆர்.முருகேசன், விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில சேவா துணைத்தலைவர் பிரபாவதி, விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் முகவை சிவா (எ) சிவசாமி உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.

    • நகை இல்லாமல் பயிர்க்கடன் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
    • கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகளால் வழங்கப்பட்ட மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை கள் குறித்து வேளாண்மை துணை இயக்குநர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் எடுத்துக் கூறினார். உழவன் செய லியை பதிவிறக்கம் செய்ய வும், அதன் பயன்பாடு குறித்து எடுத்துரைக்கவும் அனைத்து வேளாண்மை உதவி இயக்குநர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டது.

    தோட்டக்கலை துறையின் கீழ் இருக்கும் அனைத்து பண்ணைகளிலும் நன்றாக விளைந்த நாற்றாங்கால்கள் உரிய நேரத்தில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மிளகாய் மற்றும் தக்காளி நாற்றுக்கள் பருவ காலத்தில் கிடைக்க வழிவகை செய்யப் பட்டுள்ளதாகவும், வரும் காலங்களில் வருவாய் துறை அலுவலர்களால் வழங்கப் படும் அடங்கலுடன், ஒப்பம் செய்யப்பட்ட நகலும் சேர்த்து விவசாயிகளுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் கொப்பரைத் தேங்காய் உலர்த்தும் கருவி, வெட்டும் கருவி, மரம் ஏறும் கருவி ஆகியவற்றை மானி யத்தில் வழங்க வேண்டி அரசுக்கு பரிசீலனை அனுப்பப்பட உள்ளது என்றும் கூட்டுறவுத் துறை மூலம் அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்களிலும் தேவையான அளவில் யூரியா உரம் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக் கப் பட்டது.

    கூட்டுறவுத்துறையில் நகை இல்லாமல் பயிர்க் கடன் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதற்கு வழி வகை செய்யப்படும் என்று அவர் பதிலளித்தார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், வேளாண்மை இணை இயக்குநர் கோ.பத்மாவதி, மாவட்ட கலெக்டரிடன் நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
    • குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் பழுதாகி குப்பைமேடாக காட்சியளித்து வருகிறது.

    தென்காசி:

    பாவூர்சத்திரத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் பஸ் நிலையத்திற்கு ஏராளமான கிராம பகுதிகளை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் மட்டும் இன்றி பாவூர்சத்திரத்தில் இயங்கி வரும் மிகப்பெரிய காய்கறி சந்தைக்கு உள்ளூர், அண்டை மாநிலமான கேரளா உள்ளிட்ட பகுதியில் இருந்தும் அதிகளவில் வியாபாரிகள், விவசாயிகள் தினமும் வந்து செல்கின்றனர்.

    சுத்திகரிப்பு எந்திரம்

    இந்நிலையில் பஸ் நிலையத்தில் புதிய குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி என அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக பழுதாகி குப்பைமேடாக காட்சியளித்து வருகிறது. இலவச கழிப்பிட கட்டிடம் பழுது பார்க்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்டு அதுவும் மூடப்பட்டு அருகில் இருக்கும் கட்டண கழிப்பிடம் செல்லும் நிலையில் அதுவும் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வருகிறது.

    மழைக்காலங்களில் பஸ் நிலையத்தினுள் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளிப்பதோடு குப்பைகள் அகற்றப்படாமலும், மதுக்குடிப்போரின் கூடாரமாகவும் பஸ் நிலையம் காட்சியளிக்கிறது. இதனால் பயணிகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் எழுந்துள்ளது.

    பயணிகள் கோரிக்கை

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் மற்றும் அரசு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு தரப்பினரும் புகார் செய்தும், அதனை கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே சுகாதார சீர்கேட்டுடன் காணப்படும் பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தை சுத்தப்படுத்தி அங்கு குடிநீர், கழிப்பிட வசதிகளை ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சூரசம்ஹாரம் நாளை (18-ந் தேதி) கோவில் கடற்கரை பகுதியில் நடைபெறுகிறது.
    • கந்த சஷ்டி திருவிழாவில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த முருக பக்தர்கள் குடும்பத்துடன் வழிபாடு செய்வார்கள்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனை அவரது அலுவலகத்தில் பழனி நாடார் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை 18-ந் தேதி (சனிக்கிழமை) கோவில் கடற்கரை பகுதியில் நடைபெறுகிறது. இந்த கந்த சஷ்டி திருவிழாவில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த முருக பக்தர்கள் குடும்பத்துடன் வழிபாடு செய்வார்கள்.

    நாளை தமிழகம் முழுவதும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் தென்காசி மாவட்ட முருக பக்தர்கள் வழி பாடு செய்யமுடியாத சூழ்நிலை யில் உள்ளனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி வருகிற 25-ந் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவித்து நாளை (சனிக்கிழமை) மாவட்டத்திற்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    நிகழ்ச்சியின் போது மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி, துணைத்தலைவர் உதய கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வேளாங்கண்ணி செல்ல வாராந்திர சிறப்பு ரயில் தேவையை வலியுறுத்தினார்.
    • கொரோனா காலத்திற்கு முன் இருந்தது போன்று ரெயில் நிறுத்தங்களை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.

    திருவனந்தபுரம் ரெயில்வே கோட்ட மேலாளர் சர்மா நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்தில் ஆய்வுக்காக வருகை தந்த போது அவருடன் விஜய்வசந்த் எம்.பி.யும் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கன்னியாகுமரி மக்கள் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்.

    வேளாங்கண்ணி செல்ல வாராந்திர சிறப்பு ரயில் தேவையை வலியுறுத்தினார். ஐதராபாத் சென்னை சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயிலை நாகர்கோவில் வரை நீட்டிப்பது, திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிப்பது போன்ற ரெயில் நீட்டிப்பிற்கான கோரிக்கைகளை முன் வைத்தார்.

    கொரோனா காலத்திற்கு முன் இருந்தது போன்று ரெயில் நிறுத்தங்களை மீண்டும் செயல்படுத்த வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ராணுவ வீரர்கள் அதிகமாக பயணம் செய்யும் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் தற்போது நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் மட்டுமே நின்று செல்வதால் கூடுதலாக ஒரு நிறுத்தம் தேவை என்றும் கேட்டு கொண்டார். நாகரகோவில் சந்திப்பு மற்றும் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் எனவும் இந்த ரயில் நிலையங்களை நவீன மயமாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் விஜய்வசந்த் எம்.பி. கேட்டுக்கொண்டார்.

    • 13-ம் நூற்றாண்டில் கட்டபட்ட சிவாலயத்திற்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.
    • அரசுக்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியமான முடுக்கன்குளம் சிவகாமி அம்மன் சமேத அம்பல வாண சுவாமி கோவில் 13-ம் நூற்றாண்டில் அப்போதைய மன்னர் மாறவர்மன் சுந்தரபாண்டியன் என்பவரால் கட்டப்பட்டது என்பது வரலாறு. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

    இந்த கோவிலில் முற்கால பாண்டியர்கள் காலத்தில் கட்டப்பட்டதை உறுதி செய்யும் வகையில் கோவி லில் முன் மீன் சின்னங்கள் காணப்படுகின்றன. மேலும் ராவணன் மனைவி மண்டோதரி தன்னுடைய திருமணத் தடை நீங்குவ தற்காக தாமரைகள் நிறைந்த குளத்தினைக் கொண்ட, இந்த சிவனை தரிசித்ததால் அவருடைய திருமணம் சிறப்பாக நடைபெற்ற இடம் என்ற பெருமையை உடைய கோவிலாகும்.

    இவ்வாறாக மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற தலமாக விளங்கி வரும் அம்பலவாணர் கோவிலில் கும்பாபிஷேகம் விழா நடத்தி பல வருடமாகி விட்டது.தற்போது இந்து சமய அறநிலைத்துறை கட்டுப் பாட்டில் உள்ள முடுக்கன் குளம் பழமை வாய்ந்த அம்பலவாணர் கோவிலுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
    • மதுரை கலெக்டருக்கு ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை வைத்துள்ளனர்.

    மதுரை

    சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் முன் னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதாவுக்கு இன்று அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேரையூர் பகுதி விவசாயிகள் டி.கல்லுப்பட்டி வேளாண்மை அலுவல கத்தில் அரசு மானியத்தில் வழங்கப்பட்ட குதிரைவாலி விதைகளை தங்களது விவசாய நிலங்களில் பயிர் செய்தனர். 2 மாதங்கள் காத்திருந்த அவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

    குதிரை வாலிக்கு பதிலாக மாட்டு தீவனப்புல் முளைத்து வளர தொடங்கி உள்ளது. இதனை பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து வேளாண்மை அலுவலகத்தில் முறையிட்டுள்ளனர். இதற்கு பதிலளித்த அதிகாரிகள் விதையை மாற்றி தந்து விட்டதாக கூறி விவசாயிகளிடம் சமரசம் செய்து உள்ளனர்.

    மேலும் இது தொடர்பாக உரிய நஷ்ட ஈடுபெற்று தருவதாகவும் உறுதி அளித்துள்ளனர். ஆனாலும் எவ்வித நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. விதை மாற்றி கொடுக்கப் பட்டதால் ஒவ்வொரு ஏக்கருக்கும் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளனர். இதன் மூலம் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.4 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    எனவே மாவட்ட கலெக்டர் உடனடியாக அந்த பகுதிகளில் உரிய ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • கூட்டத்தில் தலைமை கணக்காளர் முருகன் தீர்மானங்களை வாசித்தார்.
    • சாலைகள் சீரமைக்கும் பணி, கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சி சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சேர்மன் வள்ளி முருகன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சங்கரா தேவி முருகேசன், கமிஷனர் ரவிச்சந்திரன் (பொறுப்பு),பொறியாளர் முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை கணக்காளர் முருகன் தீர்மானங்களை வாசித்தார்.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் சுரண்டை செண்பக கால்வாயை சீரமைக்க வேண்டும், இரவு நேரங்களில் செண்பக கால்வாயில் கொட்டப்படும் கழிவுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மழை நேரம் என்பதால் சாலைகளை சீரமைத்து, தண்ணீர் தேங்காதபடி முன்னேற்பாடுகளை செய்து வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக ஒவ்வொரு பகுதியிலும் கொசு மருந்து அடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    தொடர்ந்து பதில் அளித்து சேர்மன் வள்ளி முருகன் பேசுகையில், சுரண்டை செண்பக கால்வாயை சீரமைத்து மேம்படுத்துவது தொடர்பாக அரசுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டு பரிசீலனையில் உள்ளது.சாலைகள் சீரமைக்கும் பணி மற்றும் கொசு மருந்து அடிக்கும் பணிகள் அனைத்து வார்டுகளிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து நகராட்சி முன்னெச்சரிக்கையுடன் செயல்படுகிறது என்றார். 

    • மருதம்புத்தூர் ஊராட்சியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன.
    • பருவமழையால் குளங்களுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.

    நெல்லை:

    ஆலங்குளம் யூனியன் மருதம்புத்தூர் ஊராட்சியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இந்த குளங்கள் மற்றும் கிணறுகள் மூலமாக இங்கு பாசனம் நடைபெற்று வருகிறது. சமீப காலமாக குளங்களுக்கு தண்ணீர் வரும் ஓடைகள் தூர்ந்து போன காரணத்தினால் தண்ணீர் ஓட்டம் தடைபட்டு கடந்த 2 ஆண்டுகளாகவே குளங்கள் வறண்டு காணப்படுகிறது.

    இந்நிலையில் இந்த ஆண்டு பெய்துவரும் வடகிழக்கு பருவமழையால் குளங்களுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. ஊருக்கு மிக அருகாமையில் அமைந்துள்ள ஊரடி குளம் என்றழைக்கப்படும் உருண்டைகுளத்திற்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த குளத்தின் வழியாக மின்கம்பங்கள் செல்கிறது.

    இதில் ஒரு மின்கம்பம் சரிந்த நிலையில், எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் நிலையில் இருந்து வருகிறது. அதனை சரிசெய்ய வேண்டும் என்று கடந்த சில மாதங்களாக பஞ்சாயத்து தலைவர் பூசத்துரை, ஒன்றிய கவுன்சிலர் சங்கீதா சுதாகர், உறுப்பினர் சேர்மன்ராஜா ஆகியோர் மின்வாரி யத்திற்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    ஆனால் இதுவரையிலும் மின்கம்பம் சரி செய்யப்படாத நிலையில், தற்போது குளத்தில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் மின்கம்பம் சரிந்து நீருக்குள் விழும் நிலை இருக்கிறது. அவ்வாறு சாய்ந்தால் குளத்தின் நீரில் மின்சாரம் பரவி விவசாயிகள், பொதுமக்கள், கால்நடைகளுக்கு பெரிய ஆபத்து நேரிடும் என்று அப்பகுதியினர் புகார் கூறுகின்றனர்.

    எனவே மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக அந்த குளத்திற்கு சென்று ஆய்வு செய்து, மின்கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனிடம் அந்த கிராம மக்கள் புகார் மனு அளிக்க முடிவு செய்துள்ளனர்.

    • நடையனூர் பகுதியில் மிகவும் சிதலமடைந்த நிலையில் நூலகத்தால் புத்தகங்கள் பாழடைகின்றன
    • நூலகத்தை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் நடையனூரில் அந்த பகுதி மாணவ, மாணவிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி ஊர் புற நூலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த கட்டிடம் பழுதடைந்துள்ளது. மழை நீர் தேங்கி நிற்பதால், கட்டிடத்தின் மேல் பகுதி காங்கிரீட் கீழே விழுந்து கம்பிகள் தெரிகிறது. கட்டிடமும் பழுதடைந்து வருகிறது.மழை நீர் கசிவதால் கட்டிடத்திற்குள் உள்ள நூல்கள் நனைந்து வீணாகி வருகிறது. இது குறித்து விரைந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கட்டிடத்தை சீரமைத்து நூல்களை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நடையனூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறும்போது:-

    எங்கள் பகுதியில் 1995ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நூலகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நூலகத்திற்கு ஏராளமான சென்று பயனடைந்து வருகின்றனர். கஷ்டப்பட்டு பெறப்பட்டு வாங்கி வைத்துள்ள நூல்கள் மழை நீரில் நனைந்து வீணாகி வருவது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு அரசு அதிகாரிகளிடமும் அரசியல்வாதிகளிடமும் புகார் சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க அனுமதிக்க கூடாது.
    • முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பெரியார் நகரை சேர்ந்த சமூக ஆர்வலர் டாக்டர்.மாடசாமி முதல்-அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்ப தாவது:-

    ராமநாதபுரம் மாவட்ட மத்திய பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மக்களின் கருத்துக்களை கேட்காமல் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2015-ம் ஆண்டு இது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

    அப்போது ஹைட்ரோ கார்பன் தொடர்பாக பாதிப்புகள், தீமைகள் குறித்து அதிகாரிகள் உரிய பதில் தெரிவிக்காததால் ரத்து செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை, முதுகுளத்தூர், பரமக்குடி, ராமநாதபுரம், கீழக்கரை ஆகிய பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க 20 கிலோ மீட்டர் முதல் 25 கி.மீ. வரை நிலம் கையகப்படுத்தப்படும். இதனால் குடியிருப்புகள், வரலாற்று சின்னங்கள், கோவில்கள், நீர் நிலைகள் பாதிக்கப்படும்.

    மாவட்ட மக்கள் 75 சதவீத நிலப்பரப்பை இழந்த வெளியேறும் சூழல் ஏற்படும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாய நிலங்கள் மலட்டு தன்மையாக மாறும். பெண்கள் கருவுற்றல் பாதிக்கப்படும். தொற்று நோய் ஏற்படும். நிலத்தடி நீர் மாசுபடும். இது போன்று பல்வேறு பாதிப்புகள் உருவாகும். எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×