search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆலங்குளம்"

    • மாணவ-மாணவிகளை ஊக்கப் படுத்தும் வகையில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
    • போங் விசேட் பைத்தூன், ஸ்மார்ட் வகுப்பறையை தொடங்கி வைத்து பேசினார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே சிவலார்குளத்தை சேர்ந்தவர் வெங்கடாச்சலம். இவர் ஆந்திராவில் சி.பி.எப். நிறுவனத்தின் விற்பனை பிரிவு துணை தலைவராக உள்ளார். இவர் தான் படித்த பள்ளிக்கு உதவிடும் வகையில் தான் பணிபுரிந்து வரும் நிறுவனத்தின் சார்பில் நல்லூர் மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை உருவாக உதவி செய்துள்ளார்.

    நல்லூர் மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப்பள்ளியில் சி.பி.எப். இந்தியா நிறுவனம் சார்பில் ஸ்மார்ட் வகுப்பறைக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் கல்வியில் சிறந்த மாணவ-மாணவிகளை ஊக்கப் படுத்தும் வகையில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் ஆல்வின் பாலன் தலைமை தாங்கினார். நெல்லை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். சி.பி.எப். நிறுவனத்தின் சேர்மன் போங் விசேட் பைத்தூன், ஸ்மார்ட் வகுப்பறையை தொடங்கி வைத்து ஸ்மார்ட் வகுப்பறைக்கு தேவையான உபகரணங்களை வழங்கி பேசினார்.

    இந்த விழாவில் சி.பி.எப். நிறுவனத்தின் துணை சேர்மன் குவான் சைபிரேம், சி.பி.எப். நிறுவனத்தின் தலைவர் சிரபோங்க் பொங்சா, துணை தலைவர் சைரட் அன்சரி பைக்கான், சீனியர் துணை தலைவர் சித்திசாய் சீஹோ, ஆந்திரா விற்பனை பிரிவு துணை தலைவர் வெங்கடாச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் வசந்தி ஜான்சி ராணி வரவேற்றார். பள்ளியில் ரிப்பன் வெட்டி ஸ்மார்ட் வகுப்பறையை தொடங்கி வைத்து பார்வையிட்டனர். பள்ளி மாணவ -மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    • 10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் தினமும் அசன உணவு வழங்கப்பட்டது.
    • தேர்பவனி முக்கிய வீதிகளின் வழியாக சுற்றி வந்து ஆலயத்தை வந்தடைந்தது.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பழமை வாய்ந்த உலக மீட்பர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் தினமும் மாலை சிறப்பு திருப்பலி, இறைமக்களுக்கு அசன உணவும் வழங்கப் பட்டது. நேற்று முன்தினம் நற் கருணை பவனி நடை பெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று மாலை பங்கு ஆலயத்தில் வெய்கா லிப்பட்டி புனித ஜோசப் கல்வியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரி செயலர் அருட்பணி சகாய ஜான், பண்டாரகுளம் பங்குத் தந்தை அருட்பணி மிக்கேல் ஆகியோர் திருவிழா சிறப்பு திருப்பலியை நிறைவேற்றி னர்.

    இதைதொடர்ந்து திருத்தேர் அர்ச்சிக்கப்பட்டது. உலக மீட்பர் திரு உருவ தேர் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட தேர்பவனி ஆலங் குளம்-தென்காசி சாலை வழியாக அண்ணாநகர் மற்றும் ஆலங் குளத்தின் முக்கிய வீதிகளின் வழியாக சுற்றி வந்து ஆலயத்தை வந்தடைந்தது. தேர் பவனியில் இறைமக்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை ஆலங்குளம் உலக மீட்பர் ஆலயம் பங்குத்தந்தை அருட்பணி எஸ்.எம்.அருள் ராஜ் மற்றும் வின்சென்ட் தே பவுல் சபை இறை மக்கள் செய்திருந்தனர்.

    • குற்றாலத்தில் இருந்து வரும் சிற்றாறு நீரானது மாயமான்குறிச்சி வழியாக மாறாந்தை குளத்திற்கு செல்கிறது.
    • மாயமான்குறிச்சியில் ஒரு மடை அமைக்கப்பட்டு அதன் மூலம் பணிக்கர் ஊரணிக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு நிரப்பப்படுகிறது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள மாயமான்குறிச்சி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.14.39 லட்சத்தில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஊரணி அமைக்கப்பட்டது. குற்றாலத்தில் இருந்து வரும் சிற்றாறு நீரானது மகிழ்வண்ணநாதபுரம் அருகே உள்ள நாகல்குளம் வந்தடைந்து அங்கிருந்து மானூர் கால்வாய் மூலம் தண்ணீர் பல கிராமங்களை கடந்து மாயமான்குறிச்சி வழியாக மாறாந்தை குளத்திற்கு செல்கிறது. இந்த மாறாந்தை கால்வாய் வழியாக செல்லும் தண்ணீர் மாயமான்குறிச்சியில் ஒரு மடை அமைக்கப்பட்டு அதன் மூலம் சில மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பணிக்கர் ஊரணிக்கு கொண்டு வரப்பட்டு நிரப்பபடுகிறது.

    இந்த ஊரணியில் தண்ணீர் தேக்குவதால் அருகில் உள்ள சுமார் 100 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் விடிய, விடிய பெய்த மழையால் இந்த ஊரணிக்கு மாறாந்தை கால்வாய் மடையில் இருந்து தண்ணீர் அதிகளவில் வந்துள்ளது. இதனால் ஊரணி கரையின் வடபுறம் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. ஊரணி சுற்றி கட்டப்பட்ட கரையின் சுவர் தரமில்லாததால் உடைப்பு பெரியளவில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தண்ணீர் அருகில் உள்ள மானூர் கால்வாய் வழியே வீணாக வெளியேறியது. இது குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து மாறாந்தை கால்வாய் மடை அடைக்கப்பட்டு உடைந்த ஊரணி கரையை சரி செய்யும் பணி தொடங்கி உள்ளது.ரூ.14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊரணி கரை தரமில்லாமல் 2 மாதத்தில் உடைந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தரமில்லாமல் ஊரணி கட்டியவர்கள் மீதும் அதற்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டி அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊரணிக்கு இருபுறமும் கால்வாய் செல்வதால் கரை உடைப்பால் நடவுக்காக பயிரப்பட்ட நெல் நாற்றுகள் சேதம் ஆகி உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

    • பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பாலப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
    • நேற்று மாலை 4 மணி முதல் சாலையின் இரு புறமும் வாகனங்கள் அதிகரித்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    ஆலங்குளம்:

    நெல்லை - தென்காசி நான்கு வழிச் சாலைப் பணிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 70 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன.

    பாலப்பணிகள்

    ஆலங்குளம் தொட்டி யான்குளம் கரைப் பகுதியில் பாலப் பணிகள் மற்றும் பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பாலப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாகவும், பாலம் வேலை நடைபெறும் இடங்களில் வாகனங்கள் சென்று வர நெடுஞ்சாலைத்துறையினர் போதிய முன் ஏற்பாடுகள் செய்யாததால் இரு இடங்களிலும் அடிக்கடி, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

    இப்பகுதியில் சாலையை சீரமைத்து போக்குவரத்தை எளிதாக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் நெடுஞ்சாலைத்துறையினர் பொதுமக்களின் கோரிக்கை களைக் கண்டு கொள்ளவில்லை என கூறினர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை இப்பகுதியில் பெய்த கன மழையால் தொட்டியான்குளம் கரைப் பகுதியில் சாலை வலுவிழந்து சேதமடைந்தது. இதனால் இரு வாகனங்கள் சென்று வர வேண்டிய இடத்தில் ஒரு வாகனம் மட்டுமே சென்று வந்ததால் சாலை முழுவதும் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் நேற்று மாலை 4 மணி முதல் சாலையின் இரு புறமும் வாகனங்கள் அதிகரித்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    தகவல் அறிந்து வந்த ஆலங்குளம் போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் சாலையில் மண் மற்றும் ஜல்லிக்கற்கள் போட்டு ஒரு புறமாக வாகனங்கள் செல்ல வழி செய்தனர்.

    சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக 5 கி. மீ தூரத்திற்கு வாகனங்கள் காத்திருந்து சென்றதால் நெல்லை மற்றும் தென்காசி ரயில் நிலையத்திற்கு சென்ற பயணிகள், மருத்துவமனைக்கு சென்ற நோயாளிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இரவானதால் சாலையை சீரமைப்பதில் தொய்வு ஏற்பட்டது.

    தொடர்ந்து இரவில் போலீசார் அப்பகுதியில் நின்று போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    நெடுஞ்சாலைத்துறை யின் பெரும் அலட்சியத்தால் ஆலங்குளத்தில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் பயணிகளும் கடும் அவதிக்குள்ளாயினர் என வாகன ஓட்டுனர்கள் புகார் தெரிவித்தனர்.

    • முகாமில் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு, பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கின்றனர்.
    • ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள எலும்பு ஸ்கேன் பரிசோதனை முகாமிற்கு வருபவர்களுக்கு இலவசமாக அளிக்கப்படுகிறது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், ஸ்ரீ சக்தி மருத்துவமனை மருத்துவர் வெங்கடேஷ் பாபு ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் திவ்யா மணிகண்டன் ஏற்பாட்டில், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலகம், நெல்லை ஸ்ரீ சக்தி மருத்துவமனை இணைந்து நடத்தும், இலவச எலும்பு ஸ்கேன் பரிசோதனை முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிறபகல் 2 மணி வரை நடைபெறுகிறது.

    இதில் ஸ்ரீ சக்தி மருத்து வமனை மருத்துவர்கள் வெங்கடேஷ் பாபு, சுமதி ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு, பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கின்றனர்.

    முகாமில் மூட்டு தேய்மானம், மூட்டு வீக்கம், இடுப்பு மற்றும் கழுத்து வலி, தண்டுவட மற்றும் வாதநோய் பிரச்சனை, தோள்பட்டை அல்லது மணிக்கட்டு வலி, உடல் எடை குறைவு மற்றும் கூன் விழுதல், முதுகு வலி உள்ளிட்ட அனைத்து விதமான எலும்பு சம்பந்தப்பட்ட நோய்க ளுக்கும் தீர்வு காணலாம்.

    மேலும், வருங்காலங்க ளில் எலும்பு பலவீனத்தால் எலும்பு முறிவு பாதிப்புக்குள்ளாகாமல் இருக்கும் வகையில், முகாமிற்கு வருபவர்களுக்கு ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள எலும்பு ஸ்கேன் பரிசோதனை முற்றிலும் இலவசமாக அளிக்கப்படுகிறது.

    எனவே, முன்பதிவு செய்துகொள்ள விரும்புவோர் 94425 91760, 94878 10000 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அனைத்து கட்சியினர் சார்பில் சங்கராய்யா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சிறப்பு அழைப்பாளர்களாக நெல்லை முன்னாள் எம்.பி. ராமசுப்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் போலீஸ் நிலையம் அருகே மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர் சங்கராய்யா உருவப்படத்திற்கு அனைத்து கட்சியினர் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆலங்குளம் இடைகமிட்டி செயலாளர் பாலு தலைமை தாங்கினார்.

    இதில் நெல்லை முன்னாள் எம்.பி. ராமசுப்பு, தி.மு.க. நகர செயலாளர் நெல்சன், நகர காங்கிரஸ் தலைவர் வில்லியம் தாமஸ், ஆலங்குளம் பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் தங்கசெல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் வசந்தகுமார், திராவிடர் கழகம் நகர செயலாளர் பெரியார் குமார், ஆதி தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் பொதிகை ஆதவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சங்கரய்யா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா உறுப்பினர்கள் வெற்றிவேல், நல்லையா, பரமசிவன், கிளை செயலாளர்கள் சந்தனகுமார், பத்திரகாளி, ஆறுமுகம். ராசையா ஆதி விநாயகம், சாமுவேல் ராஜா, லிவிங்ஸ்டன் விமல், பி.எஸ்.என்.எல். ராஜேந்திரன், வேலாயுதம், ஏசுராஜா, பொன்னுத்துரை, குணசேகரன் பொன்னுசாமி. காமராஜர் மக்கள் முன்னேற்ற பேரவை நிறுவனர் தலைவர் ராஜா, மார்க்சிஸ்ட் ராமசாமி, பி.எஸ்.மாரியப்பன், வள்ளியம்மாள், வள்ளி மயில், வி.சி.க. அய்யனார்குளம் மாடசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மருதம்புத்தூர் ஊராட்சியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன.
    • பருவமழையால் குளங்களுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.

    நெல்லை:

    ஆலங்குளம் யூனியன் மருதம்புத்தூர் ஊராட்சியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இந்த குளங்கள் மற்றும் கிணறுகள் மூலமாக இங்கு பாசனம் நடைபெற்று வருகிறது. சமீப காலமாக குளங்களுக்கு தண்ணீர் வரும் ஓடைகள் தூர்ந்து போன காரணத்தினால் தண்ணீர் ஓட்டம் தடைபட்டு கடந்த 2 ஆண்டுகளாகவே குளங்கள் வறண்டு காணப்படுகிறது.

    இந்நிலையில் இந்த ஆண்டு பெய்துவரும் வடகிழக்கு பருவமழையால் குளங்களுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. ஊருக்கு மிக அருகாமையில் அமைந்துள்ள ஊரடி குளம் என்றழைக்கப்படும் உருண்டைகுளத்திற்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த குளத்தின் வழியாக மின்கம்பங்கள் செல்கிறது.

    இதில் ஒரு மின்கம்பம் சரிந்த நிலையில், எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் நிலையில் இருந்து வருகிறது. அதனை சரிசெய்ய வேண்டும் என்று கடந்த சில மாதங்களாக பஞ்சாயத்து தலைவர் பூசத்துரை, ஒன்றிய கவுன்சிலர் சங்கீதா சுதாகர், உறுப்பினர் சேர்மன்ராஜா ஆகியோர் மின்வாரி யத்திற்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    ஆனால் இதுவரையிலும் மின்கம்பம் சரி செய்யப்படாத நிலையில், தற்போது குளத்தில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் மின்கம்பம் சரிந்து நீருக்குள் விழும் நிலை இருக்கிறது. அவ்வாறு சாய்ந்தால் குளத்தின் நீரில் மின்சாரம் பரவி விவசாயிகள், பொதுமக்கள், கால்நடைகளுக்கு பெரிய ஆபத்து நேரிடும் என்று அப்பகுதியினர் புகார் கூறுகின்றனர்.

    எனவே மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக அந்த குளத்திற்கு சென்று ஆய்வு செய்து, மின்கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனிடம் அந்த கிராம மக்கள் புகார் மனு அளிக்க முடிவு செய்துள்ளனர்.

    • ஆலங்குளத்தில் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் எப்போதும் அதிகரித்து காணப்படும்.
    • போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் பேரிகார்டுகள் உடனடியாக வைக்கப்பட்டன.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் எப்போதும் அதிகரித்து காணப்படும். இதன்காரணமாக அங்கு ஏற்படும் விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் ஆங்காங்கே பேரிகார்டுகள் வைக்க போலீசார் முடிவு செய்தனர்.

    இதையடுத்து போலீசாரின் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் ஆலங்குளத்தில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனம் சார்பில் பேரிகார்டுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கார்த்திகா ஸ்டோர்ஸ் உரிமையாளர் எஸ்.எம்.டி. ரத்தினசாமி தலைமை தாங்கினார்.

    வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தென்காசி மாவட்டத் தலைவர் டி.பி.வி. வைகுண்டராஜா, செயலாளர் வி.கணேசன், பொருளாளர் ஐ.வி.என்.கலைவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆலங் குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபால் பர்ணபாஸ், இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது ஆகியோரிடம் 8 பேரிகார்டுகள் ஒப்படைக்கப்பட்டன.

    இதைத் தொடர்ந்து, ஆலங்குளம் பிரதான சாலை மற்றும் அம்பாசமுத்திரம் சாலை ஆகியவற்றில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் பேரிகார்டுகள் உடனடியாக வைக்கப்பட்டன.

    • விடுதியில் வழங்கப்படும் உணவுகள் தரமற்றதாக இருக்கிறது என மாணவர்கள் புகார் கூறி வந்தனர்.
    • மாணவர்களின் போராட்டத்தால் கல்லூரி நிர்வாகிகள் தலைமறைவாகி விட்டனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள புதூரில் கேரள மாநிலத்தை சேர்ந்த தம்பி என்பவர் நர்சிங், பாலிடெக்னிக் கல்லூரிகள் நடத்தி வருகிறார். இங்கு பயிலும் சுமார் 500 மாணவ-மாணவிகளில் 400-க்கும் மேற்பட்டோர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

    இவர்களுக்கு ஆலங்குளம் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் வழங்கப்படும் உணவுகள் தரமற்றதாக இருக்கிறது. நர்சிங் கல்லூரிக்கும் அவர்கள் தங்கும் விடுதிக்கும் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவு உள்ளதால் செல்வதற்கு சிரமமாக இருப்பதாகவும் மாணவர்கள் புகார் கூறி வந்தனர்.

    மேலும் பெண்கள் விடுதி காப்பாளர் இரவு நேரத்தில் பெண்களை போட்டோ எடுத்து ஆண் விடுதி காப்பாளருக்கு அனுப்புகின்றனர் என்றும் அவர்கள் புகார் கூறிவந்த நிலையில், நேற்று மாணவ, மாணவிகள் அவர்களுடைய பெற்றோருடன் இணைந்து ஆலங்குளத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மாணவர்களின் போராட்டத்தால் கல்லூரி நிர்வாகிகள் தலைமறைவாகி விட்டனர்.

    தகவல் அறிந்த ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபால் பர்ணபாஸ் மற்றும் ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். இப்போராட்டத்தை தொடர்ந்து நர்சிங் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

    • பூத்கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் ஆலங்குளத்தில் அனைத்து வார்டுகளிலும் நடைபெற்றது.
    • கூட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் பேரூராட்சி யில் 15 வார்டுகள் உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல்

    வருகிற பாராளுமன்ற தேர்தலையொட்டி பேரூர் அ.தி.மு.க. சார்பில் இளைஞர்கள் இளம்பெண்கள், மகளிர் பாசறை, அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பம் மற்றும் கட்சி நிர்வாகிகளை கொண்டு வார்டுகளில் பூத்கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பொறுப்பாளர்களும் நியமிக்கப் பட்டுள்ளனர்.

    இந்த பூத்கமிட்டி உறுப்பி னர்கள் மற்றும் நிர்வாகி களுக்கான ஆலோசனை கூட்டம் ஆலங்குளத்தில் அனைத்து வார்டுகளிலும் நடைபெற்றது. பூத்கமிட்டி ஆலோசனை கூட்டத்திற்கு ஆலங்குளம் பேரூர் அ.தி.மு.க. செயலாளர் கே.பி. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் எஸ்.கே. சண்முக சுந்தரம், தென்காசி தெற்கு மாவட்ட துணை செயலாளர் பசுவதி, கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் இருளப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பூத் கமிட்டி பணிகள்

    தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் சிறப்புரை ஆற்றினார். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற செய்ய வேண்டிய பணிகள், தேர்தல் களப்பணிகள், வாக்காளர்களை சந்தித்தல் உள்ளிட்ட பூத்கமிட்டியின் பணிகள் குறித்து விளக்கி பேசினார்.

    ஆலங்குளம் பேரூராட்சி 13- வது வார்டு, 14-வது வார்டு, 15-வது வார்டு மற்றும் சந்தனமாரியம்மன் கோவில் திடல், நத்தம் மாரியம்மன் கோவில் திடல், நாடார் திருமண மண்டபம், அண்ணாநகர், பரும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நடைபெற்ற பூத்கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலங்குளம் நகர துணைசெயலாளர் சால மோன்ராஜா, பேரூராட்சி துணை தலைவர் ஜான்ரவி, கவுன்சிலர் அன்னத்தாய் சொரிமுத்து, தகவல் தொழில்நுட்பம் நிக்சன் சத்தியராஜ், சிறுபான்மை பிரிவு ஐசக்சேகர், முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் தமிழரசன், ஜெயலலிதா பேரவை தனபால், விவசாய அணி தங்கசாமி மாரியப்பன், நகர இணை செயலாளர் நடராஜன், சுமோ சூரியன், இளைஞரணி கேபி குமரன் தேவதாஸ் சுரேந்திரன். சொரிமுத்து சொக்கலிங்கம்.செந்தில் தீப்பொறி பெரிய பாண்டியன், 11-வது வார்டு தங்கராஜ் தேவதாஸ், நகர மகளிர் அணி முத்து லெட்சுமி, விஜி வனிதா வசந்தி உள்பட அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 41-வது விளையாட்டு விழா நடைபெற்றது.
    • போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு டி.எஸ்.பி. பர்ணபாஸ், டாக்டர் சிவக்குமார் ஆகியோர் பரிசு வழங்கினர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 41-வது விளையாட்டு விழா நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு, பள்ளித் தாளாளர் செந்தில்குமரன் தலைமை தாங்கினார். கலை நிகழ்ச்சிகள், கராத்தே, டேக்வாண்டோ, சிலம்பாட்டம், மனித பிரமீடு ஆகியவற்றை மாணவர்கள் நிகழ்த்தினர். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆலங்குளம் டி.எஸ்.பி. பர்ணபாஸ், ராஜபாளையம் டாக்டர் சிவக்குமார் ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர். விழாவில் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • கீழப்பாவூர் பேரூராட்சியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் தீப்பொறி அப்பாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    ஆலங்குளம் தொகுதி கீழப்பாவூர் பேரூராட்சியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் முன்னாள் எம்.பி.யும், அமைப்புச் செயலாளருமான அன்வர்ராஜா, தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் செல்வமோகன் தாஸ்பாண்டியன் , முன்னாள் எம்.பி.யும், தென்காசி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளருமான கே.ஆர்.பி.பிரபாகரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் சண்முகசுந்தரம், பேரூர் செயலாளர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தலைமை கழக பேச்சாளர் தீப்பொறி அப்பாதுரை, ஒன்றிய செயலாளர்கள் அமல்ராஜ்,இருளப்பன், காளிமுத்து, விவேகானந்தர், கவுன்சிலர் பவானி, மகளிர் அணி செயலாளர்கள் விஜய ராணி, இசக்கியம்மாள், பூத் பொறுப்பாளர்கள், வார்டு செயலாளர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    ×