search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குளம் தன்னார்வளர்களுக்கு விருது
    X

    விருது வழங்கப்பட்டபோது எடுத்தபடம்.

    ஆலங்குளம் தன்னார்வளர்களுக்கு விருது

    • முன்னாள் போலீஸ் அதிகாரி வால்டர் தேவாரம் கலந்து கொண்டு விருதினை வழங்கினார்.
    • 12 தன்னார்வளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் வெங்கடாம்பட்டி டிரஸ்ட் சார்பில் வால்டர் தேவாரம் விருது வழங்கும் நிகழ்சி வெங்கடாம்பட்டியில் நடைபெற்றது.

    முன்னாள் போலீஸ் அதிகாரி வால்டர் தேவாரம் கலந்து கொண்டு விருதினை வழங்கினார். இயற்கை விஞ்ஞானி விஜயலெட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் ஆலங்குளத்தில் செயல்பட்டு வரும் பூ உலகை காப்போம் மன்றம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் மரக்கன்று நடுதல், பராமரித்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தல் போன்ற பணிகளை செய்து வருகிறார்கள். இவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக குழுவினருக்கு விருது வழங்கப்பட்டது.சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் பூ உலகை காப்போம் மன்ற தலைவர் ராஜா, அதியப்பன், முருகன், சிவா மற்றும் ஆலோசகர் இளங்கோ உட்பட 12 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

    விழா ஏற்பாடுகளை டிரஸ்ட் நிர்வாகி திருமுருகன் செய்திருந்தார்.

    Next Story
    ×