search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோரிக்கை"

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சத்தி யநாராயணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பேசியதாவது:-கள்ளக்குறிச்சி மாவட்ட த்தில் விவசாயிகளின் கோரிக்கைகளை நேரடியாக கேட்டும் மனுவாக பெறுவதற்கும், ஒவ்வொரு மாதத்திலும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதி களுடான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் அளிக்கும் கோரிக்கைகள் மீது விரைந்து தீர்வு காணப்பட்டு வருகிறது. இதேபோல்இக்கூட்டத்தில் விவசாயிகள் கரும்பு லாரிகளில் கொண்டு செல்லு ம்போது வழித்தடங்களில்

    மின்கம்பங்கள் மோதாமல் இருப்பதற்கு ஏதுவாக மின்கம்பிகளை உயர்த்திடவும், விளை நிலங்களில்பயிர்களை அதிகமாக சேதப்படுத்தும் காட்டுபன்றிகளை சுடு வதற்கு விவசாயிகளுக்கு ஆணையும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கள்களில் பயிர்கடன்களில் விதை உரம் மற்றும் இதரஇடுபொருட்கள் வழங்குவதற்கு பதிலாக பணமாக வழங்கிடவும், கறவை மாடுகள் வளர்ப்ப தற்கு தேசியவங்கிகள் மூலம் கடன் வழங்கிடவும் கோரிக்கை வைத்தனர்.விவசாய நிலங்களில் கழிவு நீர் வெளியேற்றுவதை தடுத்திடவேண்டும் உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் பரிசீலனை செய்து, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார்.கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் சுந்தரம், தோட்டக்கலை துணை இயக்குநர் சசிகலா, மேலாண்மை இயக்குநர் கள்ளக்குறிச்சி 2 கூட்டுறவு சர்க்கரை ஆலை முருகேசன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருணகிரி, தமிழ்நாடு நுகர்பொருள்வாணிப கழகம் முதுநிலை மண்டல மேலாளர் நந்தகுமார், தமிழ்நாடு மின்சார வாரியம்மேற்பார்வைப் பொறியாளர்(பொறுப்பு) கணேசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தியாகராஜன், கண்காணிப்பு பொறி யாளர் தமிழ்நாடு மின்சார வாரியம்(பொறுப்பு)கிருஷ்ணமூர்த்தி, விவசாய சங்க பிரதிநிதிகள், விவ சாயிகள் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள்கலந்து கொண்டனர்.

    • சீர்காழி தாசில்தார் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் 14-அம்ச கோரிக்கையை தமிழக முதல்வர் உடனடியாக நிறைவேற்றக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வட்டத்தலைவர் இளம்வழுதி தலைமையில் நடை பெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் கருணை அடிப்படையில் வேலை வழங்கி வந்ததை ரத்து செய்ய ப்பட்டுள்ளது, எரிபொருள் படி மாதம் ரூ.2500 வழங்கியது ரத்து செய்யப்பட்டுள்ளது.

    சி.பி.எஸ் பிடித்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது ஆகியவற்றை மீண்டும் நடைமுறைப்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 14அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    இதில் 60க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

    • பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பாலப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
    • நேற்று மாலை 4 மணி முதல் சாலையின் இரு புறமும் வாகனங்கள் அதிகரித்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    ஆலங்குளம்:

    நெல்லை - தென்காசி நான்கு வழிச் சாலைப் பணிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 70 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன.

    பாலப்பணிகள்

    ஆலங்குளம் தொட்டி யான்குளம் கரைப் பகுதியில் பாலப் பணிகள் மற்றும் பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பாலப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாகவும், பாலம் வேலை நடைபெறும் இடங்களில் வாகனங்கள் சென்று வர நெடுஞ்சாலைத்துறையினர் போதிய முன் ஏற்பாடுகள் செய்யாததால் இரு இடங்களிலும் அடிக்கடி, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

    இப்பகுதியில் சாலையை சீரமைத்து போக்குவரத்தை எளிதாக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் நெடுஞ்சாலைத்துறையினர் பொதுமக்களின் கோரிக்கை களைக் கண்டு கொள்ளவில்லை என கூறினர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை இப்பகுதியில் பெய்த கன மழையால் தொட்டியான்குளம் கரைப் பகுதியில் சாலை வலுவிழந்து சேதமடைந்தது. இதனால் இரு வாகனங்கள் சென்று வர வேண்டிய இடத்தில் ஒரு வாகனம் மட்டுமே சென்று வந்ததால் சாலை முழுவதும் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் நேற்று மாலை 4 மணி முதல் சாலையின் இரு புறமும் வாகனங்கள் அதிகரித்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    தகவல் அறிந்து வந்த ஆலங்குளம் போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் சாலையில் மண் மற்றும் ஜல்லிக்கற்கள் போட்டு ஒரு புறமாக வாகனங்கள் செல்ல வழி செய்தனர்.

    சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக 5 கி. மீ தூரத்திற்கு வாகனங்கள் காத்திருந்து சென்றதால் நெல்லை மற்றும் தென்காசி ரயில் நிலையத்திற்கு சென்ற பயணிகள், மருத்துவமனைக்கு சென்ற நோயாளிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இரவானதால் சாலையை சீரமைப்பதில் தொய்வு ஏற்பட்டது.

    தொடர்ந்து இரவில் போலீசார் அப்பகுதியில் நின்று போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    நெடுஞ்சாலைத்துறை யின் பெரும் அலட்சியத்தால் ஆலங்குளத்தில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் பயணிகளும் கடும் அவதிக்குள்ளாயினர் என வாகன ஓட்டுனர்கள் புகார் தெரிவித்தனர்.

    • வயல்களில் மழைநீர் புகுந்து வெங்காயம்-மக்காசோள பயிர்கள் சேதமடைந்தது.
    • எம்.ரெட்டியபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகள் அனைவரும் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் பெய்த பருமழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்த நிலையில் விவசாய பணிகளை மும்முரமாக மேற்கொண்டு தங்களது நிலங்களின் தன்மைக்கு ஏற்ப நெல், சோளம், பருத்தி, வெங்காயம், மக்காச்சோளம் போன்ற பல்வேறு வேளாண் பயிர்களை ஏக்கர் கணக்கில் பயிரிட்டுள்ளனர்.மேலும் மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களில் தற்போது களையெடுத்தல், உரமிடுதல் போன்ற பணிகள் முடிவடைந்துள்ளது. மேலும் விவசாய பணிகளுக்காக தங்களது நகைகளை அடகு வைத்தும், கூடுதல் வட்டிக்கு வெளியில் கடன் வாங்கியும் பல்வேறு சிரமத் திற்கு இடையே விவசாய பணி களை மேற் கொண்டு வரு கின்றனர்.

    இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள எம்.ரெட்டியபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையினால் அப்பகுதியிலுள்ள பல்வேறு ஓடைகள் நிரம்பி அதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மறவர் பெருங்குடி, எம்.மீனாட்சிபுரம், கல்லுப்பட்டி, சலுக்கார்பட்டி, கஞ்சம்பட்டி, சுத்தமடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் சுமார் 200 ஏக்கருக்கும் மேலான பரப்பளவில் விவசாயிகள் பயிரிட்டுள்ள வெங்காயம், மக்காச்சோளம், பருத்தி, கம்பு போன்ற பல்வேறு பயிர்களின் விளை நிலங்களுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. பயிர்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கி அழுகிய நிலையில் மிகவும் சேதமடைந்தது. இதனால் கடன் வாங்கி விவசாய பணிகளை மேற்கொண்டு வந்ததால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். ஏக்கர் ஒன்றிற்கு சுமார் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விவசாயிகள் செலவழித்துள்ள நிலையில் இவ்வாறு அறுவடை நேரத்தில் மழை வெள்ளம் புகுந்து வெங்காயம் மற்றும் மக்காச்சோள பயிர்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கி முழுவதும் சேதமான தால் விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந் துள்ளனர்.

    மேலும் தற்போது 2023- 2024 க்கான நெல், சோளம், பருத்தி போன்ற பல்வேறு விளை பொருட்க ளுக்கு குறைந்த பட்ச பிரீமிய தொகையாக ரூ.120-ல் தொடங்கி அதிக பட்சமாக ரூ.500 வரை பயிர் காப்பீடு செய்துள்ள நிலையில் மழைநீரில் மூழ்கி சேதமடைந்து வீணாகிய விளை பொருட்களால் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ள விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய நிவாரணத்தை இழப்பீடு தொகையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென எம்.ரெட்டியபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகள் அனைவரும் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மானாமதுரை தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • அரசு டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பனிக்கனேந்தலில் பொது மக்கள் பயன்பாட்டிற்கு இருந்த பலகோடி ரூபாய் மதிப்புள்ள அரசுக்கு சொந்தமான நிலங்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனை மீண்டும் அரசு எடுத்து கொள்ள வேண்டும் என்று மனு கொடுக் கப்பட்டது. இந்த மனுவை ஏற்று கொண்ட வட்டாட்சி யர் ராஜா 3 மாதத்திற்குள் தனியார் வசம் ஒப்படைக் கப்பட்ட அரசு நிலங்களை மீண்டும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த 3 மாதத்திற்கு முன்பு கூறி இருந்தார்.

    அதேபோல் இந்த பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் இதுவரை அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என தெரிகிறது. இதை கண்டித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

    போராட்டம் நடத்தியவர்களிடம் வட்டாட்சியர் ராஜா தலைமையில் இன்ஸ் பெக்டர் முத்துகணேஷ். மானாமதுரை நகராட்சி ஆணையர் ரங்கசாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் 3 மாதங்களுக்குள் அனைத்து கோரிக்கைகளும் தீர்வு காணப்படும் என அவர்கள் எழுத்து பூர்வமாக கூறியதையடுத்து இந்த போராட்டம் கைவிடப் பட்டது.

    முன்னதாக போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கருப்புசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீரபாண்டி, முத்துராமலிங்க பூபதி, ஒன்றிய செயலாளர் ஆண்டி, அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சாந்தி, மாவட்ட துணை செயலாளர் சண்முகப் பிரியா மற்றும் வருவாயத் துறை அதிகாரிகள் உமா மீனாட்சி, கார்த்திகா, சீதாலெட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • என் குப்பை, என் பொறுப்பு என்ற தலைப்பில் திடகழிவு மேலாண்மை திட்டத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நகராட்சி ஆணையர் சியாமளா தலைமையில் நடை பெற்றது.
    • அதனால் சாலையில் வேக தடை அமைத்து தர வேண்டும் , அதே போல் தெருவிளக்குகள் கூடுதலாக அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டையில் நரிமேடு பகுதியில் உள்ள நகர் புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்கு மாடி குடியிருப்பில் தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் என் குப்பை, என் பொறுப்பு என்ற தலைப்பில் திடகழிவு மேலாண்மை திட்டத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நகராட்சி ஆணையர் சியாமளா தலைமையில் நடை பெற்றது.

    இதில் நகர் நல அலுவலர் பாஸ்கர் , ஆய்வாளர் பாபு, நகர்மன்ற கவுன்சிலர் பழனிவேல், மேஸ்திரி இள ங்கோவன் மற்றும் எஸ்.பி.எம். டீம் கலந்துக் கொ ண்டனர் . அப்போது அப்ப குதி மக்களிடம் குப்பைகளை எவ்வாறு மக்கும் குப்பை வகைகள், மக்காத குப்பை வகைகள், அபாயகரமான குப்பை வகைகள் குறித்து விவரிக்க ப்பட்டது. அப்போது ஆணையரிடம் அப்பகுதி மக்கள் சாலையில் இருச்சக்க ர வாகனங்களை அதிக வேகமாக சிலர் ஓட்டுகி ன்றனர் .

    அதனால் சாலையில் வேக தடை அமைத்து தர வேண்டும் , அதே போல் தெருவிளக்குகள் கூடுதலாக அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அப்போது நகராட்சி ஆணை யர் சியாமளா கூறுகையில்,

    இங்குள்ள 1920 வீடுகளுக்கு கடந்த 3 ஆண்டுகள் கணக்கில் எடுத்துக் கொண்டு வீட்டு வரி ரூ.5 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை மார்ச் மாதத்திற்குள் அனைவரும் செலுத்தி தங்க ள் பெயரில் வீட்டு வரியை மாற்றிகொள்ள வேண்டும் என்றார். மேலும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சி.சி.டி.வி. அமைப்பது போன்ற பணிகளை மேற்கொள்ளலாம்.

    அதற்கு மக்கள் பங்களிப்போடு நகராட்சியும் அதிகளவில் பங்களிப்பை தரும் என்றார். வீட்டு வரி செலுத்தி விட்டால் அரசின் அனைத்து வசதிகளையும் முழுமையாக பெறலாம் என்றார்.

    • அய்யப்பன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, தேனி சாலை யில் முன்னாள் முதல்வர், ஓ.பன்னீர்செல்வம் உத்தரவுப்படி உசிலம்பட்டி 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க கோரியும், தி.மு.க. அரசை கண்டித்தும் ஓ.பி.எஸ்.அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தெற்கு மாவட்ட செயலாளர் அய்யப்பன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். இளைஞர் அணி மாநில செயலாளர் வி.ஆர்.ராஜ்மோகன் முன்னிலை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன், நகர் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. கோபால கிருஷ்ணன் ஆகியோர் வரவேற்று பேசினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டது. மேலும் அய்யப்பன் எம்.எல்.ஏ. பேசுகையில், 58 கிராம கால்வாயில் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும். இல்லையென்றால் தொடர் உண்ணாவிரதப் போ ராட்டம் நடத்துவோம். கடையடைப்பு, மறியல் போராட்டத்திலும் ஈடுபடுவோம் என்றார்.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் பாரப்பத்தி முத்தையா, காசிநாதன், மாவட்ட ஓட்டுநர் அணி செயலாளர் பிரபு, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கார்த்திகைசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. பாண்டியம்மாள், அவைத்தலைவர் வேலுச்சாமி, நகர செய லாளர் சசிக்குமார், உசிலம் பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் ஜான்சன், வடக்கு ஒன்றிய செயலாளர் கோஸ்மீன், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர்கள் போத்திராஜன், அய்ய னார்குளம் ஜெயக்குமார், திருமங்கலம் ஒன்றிய செய லாளர் சிவா, சேடப்பட்டி ஒன்றிய செயலாளர்கள் அய்யர், கார்த்திகேயன், செல்லம்பட்டி சவுந்திர பாண்டி, வேங்கைமார்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேவர்குளத்தை அடுத்த மேல இலந்தைகுளம் பகுதியில் குளத்தில் உடைப்பு ஏற்பட்டு தரைப்பாலங்கள் மூழ்கின.
    • வெள்ளத்தின் நடுவே டிராக்டர் மூலமாக பொதுமக்கள் கரையின் இருபுறத்திற்கும் சென்று வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களின் எல்லை பகுதிகளாக அமைந்துள்ள மூவிருந்தாளி, சுண்டங்குறிச்சி, பன்னீர் ஊத்து மற்றும் தென்காசி- நெல்லை மாவட்ட எல்லை பகுதியான தேவர்குளம் பகுதியில் அமைந்துள்ள மேல இலந்தை குளம் மற்றும் அதன் பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக ஏராளமான குளங்கள் நிரம்பின.

    தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் ஒரு பகுதியாக தேவர்குளத்தை அடுத்த மேல இலந்தைகுளம் பகுதியில் குளத்தில் உடைப்பு ஏற்பட்டு தரைப்பாலங்கள் மூழ்கின.

    சங்கரன்கோவில், நெல்லை நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் அமைந்துள்ள இந்த தரை பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் செல்வதால் போக்குவரத்து பாதிக்க ப்பட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்தை நெல்லை ஆர்.டி.ஓ. ஷேக் அய்யூப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தற்போது இந்த வெள்ளத்தின் நடுவே டிராக்டர் மூலமாக பொதுமக்கள் கரையின் இருபுறத்திற்கும் சென்று வருகின்றனர். லாரி, வேன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மட்டுமே தற்போது இந்த வழியாக செல்ல முடிகிறது.

    இந்த பகுதியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கும் நிலையில் நேற்று நள்ளிரவு 12.30 மணி முதல் கடுமையான வெள்ளப்பெருக்கு இருந்து வருவதாகவும், சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தரைப்பாலம் மூழ்கும் அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும், புதிதாக பாலம் கட்டுவதற்காக பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் கூறினர்.

    • திருவாடானை பெரிய கோவில் ராஜ கோபுரத்தில் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளது.
    • அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    திருவாடானை

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் சிநேகவள்ளி தாயார் -ஆதி ரெத்தினேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட 14 தலங்களில் 8-வது தலமாக விளங்குகிறது.

    இந்த கோவிலின் ராஜகோபுரம் 9 நிலைகளை கொண்டுள்ளது. இதில் ஆங்காங்கே ஆலமரம், அரசமரம். வேப்பமரம் போன்ற மரக்கன்றுகள் முளைத்திருப்பதால் கோபுரங்களில் உள்ள சுதை சிற்பங்கள் கீழே விழுந்து வருகின்றன. இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே கோவில் ராஜகோபுரத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வெளியூரில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்களில் வருகின்றனர்.
    • பாழடைந்த கட்டிடங்களை இடித்து பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைத்தால் வாகன நெரிசல்கள் குறைந்து விடும்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாபேரி கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜசேகர பாண்டியன் என்பவர் தென்காசி மாவட்ட கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    பிரசித்தி பெற்ற தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வெளியூரில் இருந்து தினமும் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் வாகனங்களில் வருகின்றனர். மேலும் இக்கோவிலை சுற்றி அதிக அளவில் வணிக நிறுவனங்கள் உள்ளன.

    எனவே இங்கு வரும் வாகனங்கள் அனைத்தும் நான்கு ரத வீதிகளில் சாலை யிலேயே நிறுத்துவதால் இப்பகுதியில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகின்றது.

    இப்பிரச்சினைக்கு தீர்வு காண இப்பகுதியில் பார்கிங் வசதி இல்லை. கோவிலுக்கு எதிராக உள்ள 2427 சதுர மீட்டர் கொண்ட நிலமானது தொடக்கத்தில் கோவிலுக்கு பாத்தியப்பட்ட நிலமாக இருந்து பின்னர் ஆங்கிலே யர் ஆட்சி காலத்தில் பொதுப்பணித்துறையால் கையகப்படுத்தப்பட்டு அதில் தென்காசி முதன்மை சார்பு நீதிமன்றம் மற்றும் முதன்மை மாவட்ட உரிமை யியல் நீதிமன்றம் இயங்கி வந்தது. நீதிமன்றங்கள் தற்போது புதிய கட்டிடம் கட்டப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப் பட்டு விட்டது. இதனால் அந்த நிலம் வெற்றிடமாக உள்ளது.

    எனவே மேற்படி நிலத்தில் உள்ள பாழடைந்த கட்டிடங்களை இடித்து அகற்றி அந்த நிலத்தில் பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைத்தால் கோவிலை சுற்றி ஏற்படும் வாகன நெரிசல்கள் முற்றிலுமாக குறைந்து விடும்.

    அதே நிலத்தில் பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்க வேண்டுமென மாவட்ட கலெக்டருக்கும், இந்து அறநிலைய துறைக்கும் மனு கொடுத்திருந்தேன்.

    மனுவிற்கு அந்த இடத்தில் நீதிபதிகள் குடியிருப்பு கட்ட அனுமதி அளித்து அரசின் நிதி ஒதுக் கீட்டிற்காக காத்திருப்பதாக பொதுப்பணித்துறையினர் பதில் அளித்துள்ளனர். குற்றாலத்திலோ, தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவல கம் அருகில் கட்டப்படயி ருக்கும் மாவட்ட நீதிமன்றம் அருகிலோ நீதிபதிகள் குடியிருப்பு கட்டினால் உகந்ததாக இருக்கும். கோவில் முன்பு உள்ள அந்த நிலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கார் பார்க்கிங் அமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஓசூரில் விவசாயிகள் போர்வையில் ரவுடித்தனம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
    • போலி அட்டைகள் வைத்திருப்பவர்களை அனுமதிக்க கூடாது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழக விவசாய சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாநிலத் தலைவர் ராமகவுண்டர் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில், ஓசூர் உழவர் சந்தையில் வெளியாட்கள் அட்டை இல்லாதவர்கள் போலியான அட்டை வைத்துள்ளவர்கள் சந்தைக்குள்வந்து வியாபாரம் செய்வது தடுக்கவேண்டும். உண்மையான விவசாயிகளுக்கு மட்டுமே உழவர் சந்தையில் அட்டை வழங்கவேண்டும். உழவர் சந்தையில் ரவுடிகள் கடைவைத்து மிரட்டுவதை தடுக்கவேண்டும். ஒரே கடையை பலவருடங்களாக ஆக்கிரமிப்பு செய்துள்ளதை மாற்றவேண்டும்.

    ஆடு, மாடுகள் சந்தைக்குள் வருவதை தடுக்க வேண்டும். குப்பைகளை, தினந்தோறும் அப்புறப்படுத்த வேண்டும். உழவர் சந்தைக்கு நவீன சி.சி.டி.வி கேமரா பொருத்தவேண்டும். உழவர் சந்தையின் கடைகளை, அதிகப்படுத்த வேண்டும். உழவர்சந்தையில் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும். உழவர் சந்தைக்கு வெளியில் நடைபாதையில் வைத்துள்ள கடைகளால் அதிகளவில் திருட்டு நடைபெறுகிறது, எனவே, கடைகளை அப்புறப்படுத்தி திருட்டுகளை தடுக்க வேண்டும். உழவர் சந்தைக்கு வரும் அலுவலர்கள் சரியான நேரத்திற்கு வந்து விலை மதிப்பீடு செய்து சந்தை முடியும் வரை இருக்க வேண்டும். என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • வரும் நிதியாண்டில் முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க நெடுஞ்சாலைதுறை கோட்டப்பொறியாளர் உத்தரவு
    • மத்திய-மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுகோள்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கூடலூர் தாலுகா, ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட சுண்ணாம்பு பாலம் அருகே பழுதடைந்து கிடக்கும் நெடுஞ்சாலையை சீரமைக்க வலியுறுத்தி ஓவேலி மக்கள் இயக்கம் சார்பில் நீலகிரி மாவட்ட கலெக்டர், தமிழக முதல்-அமைச்சர் மற்றும் பிரதமருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளது. அந்த மனுவில் அவர்கள் கூறி இருப்பதாவது:-

    நீலகிரி மாவட்டம் ஓவேலி பகுதியில் கூடலூரில் இருந்து ஆரோட்டுப்பாறை செல்லும் நெடுஞ்சாலையில், சுண்ணாம்பு பாலம் அருகே 500 மீட்டர் தொலைவுக்கு தார்சாலை குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.

    எனவே அவற்றை உடனடியாக சீரமைப்பு செய்ய வேண்டும் என அரசுக்கு பல முறை கோரிக்கை விடுத்து உள்ளோம். ஆனாலும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே கூடலூரில் இருந்து ஆரோட்டுப்பாறை செல்லும் அரசு பஸ்கள் மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மேற்கண்ட பழுதடைந்த சாலையின்வழியாகதான் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சென்று வருகின்றன.

    கூடலூர்-ஓவேலி நெடுஞ்சாலையில் பழுது ஏற்பட்ட பகுதிகளை மேம்படுத்த வரும் நிதியாண்டில் முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலைதுறை கோட்டப்பொறியாளர் தெரிவித்து உள்ளார்.

    ஆனால் பல மாதங்கள் கடந்தபிறகும் மேற்கண்ட பழுதான சாலைகள் சீரமைக்கப்படவில்லை. எனவே மத்திய-மாநில அரசுகள் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி ஓவேலி சுண்ணாம்பு பாலம் அருகே பழுதடைந்த நிலையில் உள்ள நெடுஞ்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    ×