search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அய்யப்பன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம்
    X

    உசிலம்பட்டியில் ஓ.பி.எஸ். அணி சார்பில் அய்யப்பன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அருகில் இளைஞரணி மாநில செயலாளர் ராஜ்மோகன், முன்னாள் எம்.பி.கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் உள்ளனர்.

    அய்யப்பன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம்

    • அய்யப்பன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, தேனி சாலை யில் முன்னாள் முதல்வர், ஓ.பன்னீர்செல்வம் உத்தரவுப்படி உசிலம்பட்டி 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க கோரியும், தி.மு.க. அரசை கண்டித்தும் ஓ.பி.எஸ்.அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தெற்கு மாவட்ட செயலாளர் அய்யப்பன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். இளைஞர் அணி மாநில செயலாளர் வி.ஆர்.ராஜ்மோகன் முன்னிலை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன், நகர் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. கோபால கிருஷ்ணன் ஆகியோர் வரவேற்று பேசினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டது. மேலும் அய்யப்பன் எம்.எல்.ஏ. பேசுகையில், 58 கிராம கால்வாயில் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும். இல்லையென்றால் தொடர் உண்ணாவிரதப் போ ராட்டம் நடத்துவோம். கடையடைப்பு, மறியல் போராட்டத்திலும் ஈடுபடுவோம் என்றார்.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் பாரப்பத்தி முத்தையா, காசிநாதன், மாவட்ட ஓட்டுநர் அணி செயலாளர் பிரபு, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கார்த்திகைசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. பாண்டியம்மாள், அவைத்தலைவர் வேலுச்சாமி, நகர செய லாளர் சசிக்குமார், உசிலம் பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் ஜான்சன், வடக்கு ஒன்றிய செயலாளர் கோஸ்மீன், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர்கள் போத்திராஜன், அய்ய னார்குளம் ஜெயக்குமார், திருமங்கலம் ஒன்றிய செய லாளர் சிவா, சேடப்பட்டி ஒன்றிய செயலாளர்கள் அய்யர், கார்த்திகேயன், செல்லம்பட்டி சவுந்திர பாண்டி, வேங்கைமார்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×